ஒலிகளை நிரப்பி
இரவினை அணைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.
மறுநாள் எழுந்து
பார்க்கையில் அவன்
காகிதங்களில்
எழுதிய காதல் கவிதைகள்
ஈரமாகி இருந்தன.
கோர்வையாக
ஒவ்வொரு வரியிலும்
ஈரத்துளிகள்.
யாரோ படித்துவிட்டு
போயிருக்கிறார்கள்.
0
“நீ தான் நான் காதலித்த
முதல் பெண்”
“எனக்கும் நீங்க தான்”
அன்னோன்யமாக
பேசிக் கொண்டிருந்தனர்
கடற்கரையில் ஒரு தம்பதி.
கரையைச் சேரும் அலைகள்
மொத்தம் இரண்டு.
கடலின் நடுவில் இறக்கும்
அலைகள் அவர்கள் கணக்கில் இல்லை.
0
கிளியைப் படத்தில்
பார்த்து மகிழ்ந்த பருவம்
கிளியை உண்டிக்கல்லில்
குறி பார்த்த பருவம்
கிளியை வாஞ்சையுடன்
வளர்த்த பருவம்
எல்லாம் முடிந்து
கிளியை நினைவில் நிறுத்தி
ஏங்கி
சிரித்து
மகிழும்
பருவம் தொடங்கியாயிற்று…
-
ஏங்கி
சிரித்து
மகிழும்
பருவம் தொடங்கியாயிற்று . . . "
ம்ம் . . . எப்போது, எப்படி, நாம் இந்த பருவத்தை கடக்கப் போகிறோமோ
RSS feed for comments to this post