பசிக்கு அழும் சிறுவன்

பால் கிடைக்காத குழந்தை

வேலையில்லா இளைஞன்

வீதிப் பிச்சைக்காரி

நிலமிழந்த விவசாயி

மனமுடைந்த தோழன்

கடைசியாய் பார்த்த விபத்து

காலுடைந்த நாய்க்குட்டி

தேசமிழந்த மக்கள்

 

அனைவரையும் தான் மறந்தேன்

உன் கடை விழி பார்வையில்.

 

அதனாலென்ன

உன்னையும் ஒருநாள்.....

 

என்றும் நட்புடன்

-பித்தன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.