அம்மா காலத்திலேயே
அம்மியில் அரைத்தல் நின்றுவிட்டது
உரலில் மாவாட்டவும்
உடம்பு ஒத்துழைக்கவில்லை
இரண்டுமே உடலுக்குக் கேடென்று
இன்னும் உணரவில்லை மக்கள்
இவைகளின  இடத்தை ஆக்கிரமித்தன
மிக்ஸியும் கிரைண்டரும்
வெளியேற்ற வழியில்லாமல்
வீடுகளின் ஓரத்தில் கிடக்கின்றன
அம்மியும் உரலும்
வீதிகளில் இன்னும் ஒலிக்கிறது
'அம்மி கொத்தலையோ' குரல்
பரிதாபமாய் நம்பிக்கையுடன்

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.