தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்து, பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!
கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களை செய்து பார்த்தார்கள்.
“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
விடுதலைப் புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும், வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதென தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்ற, தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
தி.மு.க-வைப் பொருத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காக கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும்.
இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராக, காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டு காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்.
அரசியல்வாதிகளைப் பொருத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொருத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!
- இ.பு.ஞானப்பிரகாசன்
மனித நெஞ்சம் படைத்த யாராலும் உண்மையில் இப்படிப்பட்ட கருத்துக்களை எழுத முடியாது. ஈழத் தமிழர் ஆதரவு என்பது அடிப்படையில் ஒரு மனிதநேயக் கோரிக்கை. மிகவும் கொடூரமான முறையில் ஒடுக்கப்படுகிற, சித்திரவதைப்படு த்தப்படுகிற, கொன்று குவிக்கப்படுகிற மக்களைக் காப்பாற்றச் சொல்லும் அடிப்படை மனிதநேய வேண்டுகோள் அது. அதை இப்படி முழுக்க முழுக்க மக்கள் ஆதரவு எனும் வாக்குக் கணக்கின் பார்வையில் அணுக நெஞ்சில் ஈரம் என்பதே இல்லாத பிறவிகளால் மட்டுமே முடியும். உன்னைப் போன்றவர்களுக்கெ ல்லாம் மறுமொழி அளிப்பதே அருவெறுப்பானது. இருப்பினும் மறுமொழி அளிக்காவிட்டால் இதை மக்கள் நம்ப வாய்ப்பிருக்கிற து என்பதால் எழுதித் தொலைக்கிறேன்.
இராசீவு படுகொலைக்குப் பின் தமிழீழ விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் பார்வை மாறியது என்னவோ உண்மைதான். ஆனால் அது பழைய கதை. அதன் பின் 2009-இல் நடந்த இனப்படுகொலை தமிழ்நாட்டு மக்களை உலுக்கி விட்டது என்பதே உண்மை. இந்தக் காலத்தில் ஈழத்துக்கோ விடுதலைப்புலிகள ுக்கோ எதிராகப் பேசி விட்டு அவ்வளவு எளிதில் யாரும் தப்பி விட முடியாது. சில நாட்களுக்கு முன் மலையாளத் திரைப்படத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயரை நாய்க்கு வைத்த காட்சியை எதிர்த்து உள்ளூர்த் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை கொதித்தெழுந்தது இதற்கான மிக அண்மைய சான்று. ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள ் எனும் சொற்களைச் சொன்னாலே தமிழ் இளைஞர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படு கிறார்கள் என்பது இளைஞர்களோடு பழகுகிறவர்களுக் குத்தாம் தெரியுமே தவிர 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததையே வைத்து இன்னும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கிழவர்களுக்குப் புரியாது.
முதலில், ஈழத் தமிழருக்குத் தி.மு.க., வந்து ஆதரவு கொடுக்குமாறு குரலெழுப்பும்பட ி தூண்டுவதில்லை இந்தக் கட்டுரை. "ஈழத் தமிழருக்குத் தி.மு.க மீண்டும் ஆதரவு கொடுக்கத் துவங்கி விட்டது; எனவே இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி -ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வகையில் - அக்கட்சியை வழிக்குக் கொண்டு வருவோம்" என்றுதான் எழுதியிருக்கிறே ன். ஒரு கருத்தியலுக்கு ஆதரவாக வரும்படி குரல் எழுப்புவது வேறு; அந்தக் கருத்தியலுக்கு ஆதரவாக ஏற்கெனவே செயல்படத் தொடங்கி விட்டவர்களை அதே திசையில் வழிநடத்துவது வேறு.
மேலும் தி.மு.க-இன் ஒரே ஓர் அறிக்கையை வைத்துக் கொண்டு நான் ஒன்றும் இறும்பூதடைந்து விடவும் இல்லை; களிகூர்ந்து கூத்தாடவும் இல்லை. அறிக்கை மட்டுமில்லாமல் செயலளவிலும் ஈழத் தமிழர்களுக்காகத ் தி.மு.க., மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகளையும ் சுட்டிக்காட்டிய ே அவர்களுடைய நிலைப்பாடு மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ேன். தவிர, அந்த அறிக்கை உண்மையில் கட்சித் தொண்டர்கள் ஈழ விவகாரத்தில் தங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக விடுக்கப்பட்டதா அல்லது தொண்டர்கள் கண்டபடி பேசி ஈழத் தமிழர் ஆதரவு இளைஞர்களின் வாக்கு வங்கியைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதற்காக வெளியிடப்பட்டதா என்பது அதை முழுமையாகப் படித்தவர்களுக்க ுத் தெரியும். ஈழத் தமிழர்களுக்காகக ் கருணாநிதி காலத்திலிருந்து இப்பொழுது ஸ்டாலின் காலம் வரை தி.மு.க., எடுத்து வந்த நடவடிக்கைகளையெல ்லாம் விரிவாக எடுத்துரைத்து, எப்பொழுதும் தி.மு.க., ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுதான் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அப்போராட்டத்தைக ் கொச்சைப்படுத்து ம் வகையில் பேசுவதைத் தவிர்க்குமாறு தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்ட அந்த அறிக்கையை ஈழத் தமிழர் நலன் சார்ந்தது இல்லை, வெறுமே கட்சித் தொண்டர்களின் அரிய (!) நேரத்தைக் காப்பதற்கானது என்பது மிகக் கீழ்த்தரமான பச்சைப் பொய்! இதோ, தி.மு.க-இன் அந்த அறிக்கையுடைய இணைப்பு - facebook.com/.../...
படித்துப் பார்த்து மக்களே முடிவெடுக்கட்டு ம் யார் சொல்வது உண்மை என்பதை.
இவ்வளவு சொன்ன பிறகும் தி.மு.க., இறங்கியும் வரவில்லை, இங்கே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவும் இல்லை என்பதுதான் உமது கருத்தானால் நேராக உமது தலைவரிடம் சென்று "இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க., தலையிடாது; ஈழத் தமிழர்கள் குறித்துத் தி.மு.க-உக்கு எந்தக் கவலையும் கிடையாது; ஈழத்துக்காகவோ ஈழ மக்களுக்காகவோ இனி தி.மு.க., இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது" என முடிவாக ஓர் அறிக்கை விடச் சொல்லும். அப்படி மட்டும் ஓர் அறிக்கையைத் தி.மு.க., வெளியிட்டு விட்டால் தமிழ்நாட்டிலுள் ள அத்தனை ஈழ ஆதரவாளர்களும் இங்கே ஈழ மக்களுக்கு ஆதரவு இல்லை என்பதை ஒப்புக் கொண்டு விடுகிறோம். அதை விட்டுவிட்டு ஒவ்வோர் ஈழ ஆதரவாளனிடமும் வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்காதீர ்!
இராசீவ் காந்தி கொலைக்கு முன்(Before Rajeev Murder BRM)- கொலைக்குப் பின் (ARM) என இலங்கைத்தமிழர்- தமிழ்னாட்டுத்தம ிழர் உறவுகாலத்தைப் பிரிக்கலாம். இதைத்தாண்டி மூன்றாம் நிலை இல்லை.
முள்ளிவாய்க்கால ் படுகொலைகளைப் பொறுத்த மட்டும் - எப்படி ஒருவன் சாலையில் அடிபட்டுக்கிடப் பதை பார்த்து, அய்யோ பாவம்! - என பொதுமக்கள் கூடுகிறார்களோ - அப்படித்தான் தமிழ்மக்கள் பார்த்தார்கள். Altruism is an evolutionary trait in human beings - எப்போது முடியும் எனவும் எதிர்னோக்கினார் கள். முடிந்தது. நிம்மதி.
பிரபாகரன் பெயரைக் கொச்சைப்படுத்தி யதால் தமிழகமே கொந்தளித்தது என்பது சுகமான கற்பனை. எதற்கும் ஓர் கூட்டம் உண்டு. அதன்படி இதற்கும் ஓர் கூட்டம் - 8 கோடி தமிழக மக்கட்தொகையில் சில ஆயிரங்கள் இருக்குமல்லவா? அவ்வளவுதான். தமிழக மக்கள் கண்டு கொள்ளவில்லை.
பிரபாகரனால் தவறாக வழி நடாத்தப்பட்டதால ் ஒரு லட்சத்துக்கும் மேலாக இலங்கைத் தமிழர் பலியாக்கப்பட்டன ர் என்பதுதான் அவர்கள் கணிப்பு மட்டுமன்று; உலகத்தவரும் ஆகும். BRM ல் தமிழர் மட்டுமன்று; உலகமே இலங்கைத்தமிழரின ் மேல் கரிசனம் வைத்திருந்தது. ARMல் அது முற்றிலுமாகத் தகர்ந்தது. கொலைக்குக் கரணியங்கள் பலபல சொல்லலாம். செய்த முறை தவறு. அந்த முறை கடுங்கோபத்தையும ் உணர்வலைகளையும் பிரபாகரனுக்கும் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கும் எதிராக உருவாக்கிவிட்டத ு. இன்று வரை அப்படித்தான்.
அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர ஆசைப்படுகின்றன. ஓர் எதிர்கட்சியாகவா வது ஆசைப்படுகின்றன. எனவேதான், பிரபாகரனை மாபெரும் தலைவன் என போற்றும் திருமாவும், வைகோவும் - 'பிரபாகரன் ஒரு கொலைகாரன்' என்று சொல்லிய காங்கிரசோடும் ஜெயலலிதாவோடும் கூட்டுவைத்தார்க ள்.
வாக்குவங்கிகள் மட்டுமே கட்சிகளின் ஒரே நோக்கு. மாற்ற முடியா உண்மை. இலங்கைத்தமிழர் பிரச்சினை ஒரு வாக்கு வங்கியே இல்லை. திமுகவோ, மற்ற கட்சிகளோ அதைப்பற்றிப் பேசுவது, 'ஏதோ சொல்லிவைப்போம்! ' என்ற உணர்வுதானே ஒழிய, அதை வைத்து பேரோ, பிழைப்போ நடாத்த அல்ல. முடியாது என்றும் தெரியும். திமுகவும் அதைத்தான் செய்கிறது. அதன் நோக்கு அடுத்த ஆண்டு தேர்தல் மட்டுமே. மற்ற கட்சிகளின் நோக்கும் அதே.
கருனானிதி காலம் போய்விட்டது. அப்போது எடுத்த நிலைபாடுகள் அப்போதே காலமாகிவிட்டன. பார்ப்பன எதிர்ப்பு ஓர் எ.கா. எதிர்ப்பு நீர்த்து ஆதரவாகி, நாத்திகம் போய் 'நாங்களும் இந்துதான்!' என்ற ஆத்திகம் வந்தததைப் போல, இலங்கைத்தமிழர் பிரச்சினை நீர்த்தது ARM காலத்தில் தமிழக மக்கள் மனனிலை மாறியதை தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்த காலத்திலேயே நடந்துவிட்டது. வரலாற்றை நினைந்து நினைந்து ஏங்குபவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கி றான். 2020க்கு வாருங்கள்.
சில நாட்களாக இலங்கைத்தமிழர்க ளால் நடாத்தப்படும் தொலைக்காட்சிகளை ப் பார்த்துவருகிறே ன். அவர்கள் யாழ்ப்பாணம்; அதைச்சுற்றியுள் ள பகுதிகள் மக்களின் பேட்டிகளையும் காட்டுகிறார்கள் . அம்மக்கள் சொல்வதெல்லாம், "இதே அமைதியை நாங்கள் என்றும் விரும்புகிறோம்; எங்களுக்கு யுத்தம் வேண்டாம்!' எங்கள் தலைவர்கள் - கவனிக்க, திமுக, வைகோ அல்ல - எங்கள் யாழ்ப்பாணத்து பிரதினிதிகள் இலங்கை அரசிடம் எஙகள் வாழ்வை மீண்டும் ஒளியுறச்செய்யும ் உரிமைகளை, வளர்ச்சித்திட்ட ங்களைப் பெற்றுத் தந்தால் போதும்!''
எனவே, இலங்கைத்தமிழர் வாழ்வை இலங்கைத்தமிழரே - அவர்களோடு சேர்ந்து புலம்பெயர்ந்த அவர்களின் உறவுகளும் - கவனித்துக் கொள்ள வேண்டும்.
தமிழனாடு மக்களின் உணர்வுகளை ஒரேயடியாக எதிர்மறையாக மாற்றிய புலிகளின் தலைவர் கொஞ்சகாலம் பேசப்படுவார். பின் காலத்தால் மறக்கடிக்கப்படு வார். இறைவன் வகுத்த நியதி காலத்தோடு மனிதர்கள் கரைந்து கரைந்து காணாமல் போவதுத்தான்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது பழந்தமிழர் சொல்லியது.
//முள்ளிவாய்க்கால ் படுகொலைகளைப் பொறுத்த மட்டும் - எப்படி ஒருவன் சாலையில் அடிபட்டுக்கிடப் பதை பார்த்து, அய்யோ பாவம்! - என பொதுமக்கள் கூடுகிறார்களோ - அப்படித்தான் தமிழ்மக்கள் பார்த்தார்கள். Altruism is an evolutionary trait in human beings - எப்போது முடியும் எனவும் எதிர்னோக்கினார் கள். முடிந்தது. நிம்மதி// - தூ! அஃது உன்னைப் போன்றவர்களுக்கு . எங்களைப் போல் மனிதப்பிறவியாய் ப் பிறந்தவர்கள் அப்படி இல்லை. அன்றாடம் மக்கள் அங்கே கொத்துக் கொத்தாய்ச் செத்துக் கொண்டிருந்தபொழு து அதைக் கேள்விப்பட்டு துடித்த மக்கள் நாங்கள். தமிழர்கள் மட்டுமில்லை உலகில் பெரும்பான்மை மக்களும் அப்படித்தாம். அதனால்தான் ஈழத் தமிழர்களுக்காகத ் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகின் பற்பல நாடுகளிலும் சமுக ஆர்வலர்களும் அக்கறையாளர்களும ் அன்றும் துடித்தார்கள் இன்றும் பாடுபடுகிறார்கள ். பி.பி.சி-இன் பிரான்சசு ஆரிசன் முதல் ஊடகப்போராளி மேத்தியூ இலீ வரை அந்தப் பட்டியல் பெரிது. உலகில் எங்கே யாருக்கு எந்தக் கொடுமை நடந்தாலும் அதை வெறுமே உச்சுக்கொட்டி விட்டு மட்டும் கடப்பதும், பாதிக்கப்படுபவர ்கள் பற்றிய அந்தக் கொடூரச் செய்திகள் தன் செவிகளுக்கு வராமல் இருந்தால் போதும் என நினைப்பதும் உன்னைப் போல் குறிப்பிட்ட ஒரு கும்பலின் நடத்தை. உங்களைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என நினைக்க வேண்டா!
மற்றபடி உனது இந்த நீண்ட நெடிய - இரக்கமின்மையின் நெடியடிக்கிற - கருத்துரையின் மொத்தச் சாரம் ஒன்றுதான்-ஈழ விவகாரத்துக்குத ் தமிழ்நாட்டு மக்களிடம் செல்வாக்கோ அதற்கென ஒரு வாக்கு வங்கியோ இல்லை என்பதுதான் அது. இதற்கான மறுமொழியை நான் என் முந்தைய கருத்துரையிலேயே சொல்லி விட்டேன். அப்படி உண்மையிலேயே அதற்கு இங்கே செல்வாக்கோ வாக்கு வங்கியோ இல்லாவிட்டால் தி.மு.க-வோ வேறு ஏதாவது ஒரு தமிழ்நாட்டுக் கட்சியோ இனி ஈழ விவகாரத்தில் தாங்கள் தலையிட மாட்டோம்; ஈழத் தமிழர்கள் குறித்து தங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது; ஈழத்துக்காகவோ ஈழ மக்களுக்காகவோ இனி தாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என அறிக்கை விடட்டுமே பார்க்கலாம்! தப்பித் தவறிக் கூட இனி யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். காரணம், தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழத் தமிழர்களுடன் இருக்கும் உள்ளத்தளவிலான உறவு எப்படிப்பட்டது என்பதை இந்தப் பத்தாண்டுகளில் அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிற ார்கள். அதனால்தான் தேர்தல் நேரங்களில் ’தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்ப ை வலியுறுத்துவோம் ’ என்பதையும் தவறாமல் தங்கள் வாக்குறுதிகளில் ஒன்றாகச் சேர்க்கிறார்கள் . தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே சேர்க்கப்படுகிற ஒரு விதயத்துக்குத் தேர்தல் செல்வாக்கு இல்லை என நம்ப வைக்க முயல்வது கண்ணாடியை ஒளித்து வைத்து விட்டால் கைப்புண்ணை மறைத்து விட முடியும் என நினைக்கும் அறிவாளித்தனம். இப்பேர்ப்பட்ட அறிவாளியான உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது; நான் கிளம்புகிறேன்.
அறிக்கை ஏன் விடுவார்கள்? இலங்கைத்தமிழர் விடயம் ஒரு தேர்தல் விடயமே அல்ல என்ற பின், ஏன் அறிக்கை விடுவார்கள்? வேலையத்த வேலையல்லவா? ராசீவ் கொலக்கு முன் நடந்த தேர்தல்களில்தான ் அது ஒரு தேர்தல் பிரச்சார ஆயுதம். அதன் பிறகு இல்லவே இல்லை என்பது நான் சொல்லவில்லை; தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக காட்டின. Mr ஞானப்பிரகாசன் கண்ணை மூடிக்கொண்டு உலகைப்பார்க்கிற ார். எழுத்தாளர் அல்லவா!? கற்பனையில்தான் வாழவேண்டும்!
பத்தாண்டுகளுக்க ு முன் நடந்த இறுதிப்போரை தமிழக மக்கள் ஒரு முடிவாகத்தான் பார்த்தார்கள். உலகமும் அப்படித்தான் ஒவ்வொரு நாளாகப் பார்த்தது. முடிந்தது. நிம்மதி பெருமூச்சை உலகமே விட்டது. இன்று யாழ்ப்பாணத் தமிழர்களே அதைத்தான் சொல்கிறார்கள்.
தமிழ் நாட்டு மக்களுக்கு அவர்கள் பிரச்சினைகளே தலைக்கு மேலே. அவற்றைப்பற்றி அவர்கள் கவலைப்படட்டும். ஞானப்பிரகாசர் தமிழ்னாட்டில் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன என்று ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனிந்த கட்டுரை?
வைகோவும் சீமானும் இலங்கைத்தமிழர் பிரச்சினையை விட்டுவிட்டார்க ள். அவ்வப்போது அவர்கள் தொண்டர்களைக் குஷிபடுத்த பிரபாகரனைப் பற்றிப் பேசுவார்கள். மே 18 எப்போது வருமென்று பார்த்து, ஏதாவது பேச அது அடுத்த நாள் காற்றோடு போகும்.
பத்தாண்டுகளுக்க ு முன் நடந்தவையும் ராசீவின் கொலையும் பிரபாகரனும் இன்று வரலாறுகள் மட்டுமே. இதுதான் தமிழ்னாட்டில் நிலவரம்.
யாழ்ப்பாணத்தமிழ ர் உள்ளங்களில் வடுக்கள் ஆறாமல் இருக்கின்றன (அவர்கள் தொலக்காட்சி நிருபருக்கு சொன்னது) அதுவும் காலத்தால் மாறும். ஞானப்பிரகாசனைப் போன்றோர் தூண்டிவிடாமல் இருந்தால் அதுவும் சாத்தியம்.
மறப்பதுதான் வாழ்க்கை. நினைப்பது அவ்வாழ்க்கையை சிதைப்பது. சீக்கியர்கள் 1984 படுகொலையை மறந்து விட்டார்கள்; யூதர்களின் இன்றைய தலைமுறை ஹிட்லரைப்பற்றி நினைப்பதே இல்லை. வரலாற்றை வரலாற்று ஆய்வாளருக்கு விட வேண்டும்.
Mr ஞானப்பிரகாசன் முள்ளிவாய்க்கால ் படுகொலை என்ற வரலாறு நூலை எழுதினால் கொஞ்சம் வரலாறு மாணவர்களுக்கு உதவும்.
//பத்தாண்டுகளுக்க ு முன் நடந்த இறுதிப்போரை தமிழக மக்கள் ஒரு முடிவாகத்தான் பார்த்தார்கள். உலகமும் அப்படித்தான் ஒவ்வொரு நாளாகப் பார்த்தது. முடிந்தது. நிம்மதி பெருமூச்சை உலகமே விட்டது. இன்று யாழ்ப்பாணத் தமிழர்களே அதைத்தான் சொல்கிறார்கள்// - வெறுமே தொலைக்காட்சியில ் வரும் ஒன்றிரண்டு நேர்காணல் துண்டுகளைப் பார்த்து விட்டு ஏதோ ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரிய கருத்துக்கணிப்ப ே நடத்தி விட்டது போல் பேசும் உமது கருத்துக்கள் நகைப்பைத்தான் தூண்டுகின்றன. ஈழத் தமிழர்களின் மனநிலை அவர்களோடு உரையாடும் என்னைப் போன்றவர்களுக்கு த்தாம் தெரியும். இந்தக் கட்டுரைக்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்த வரவேற்பைக் கண்ணால் பார்த்து விட்டு உட்கார்ந்திருக் கிறேன். நீ என்னடாவென்றால் என்னிடமே கதையளக்கிறாய்! போதும் ஓட்டியது! உன் படச்சுருள் அறுந்து தொங்கி விட்டது. கிளம்பு!
//தமிழ் நாட்டு மக்களுக்கு அவர்கள் பிரச்சினைகளே தலைக்கு மேலே. அவற்றைப்பற்றி அவர்கள் கவலைப்படட்டும். ஞானப்பிரகாசர் தமிழ்னாட்டில் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன என்று ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனிந்த கட்டுரை?// - அட அறிவுக்கொழுந்தே ! நானே தமிழ்நாட்டுத் தமிழன்தான். எழுதப்படும் தமிழை வைத்து எழுதுபவன் தமிழ்நாட்டுத் தமிழனா ஈழத் தமிழனா என்று கூட அடையாளம் காணத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் குடியிருக்கவும் இல்லை. எங்கோ வெளிமாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ தமிழ்நாட்டு மக்களின் மனநிலையையே படம்பிடித்து விட்டது போல் வாய் மட்டும் கிழிகிறது.
//யாழ்ப்பாணத்தம ிழ ர் உள்ளங்களில் வடுக்கள் ஆறாமல் இருக்கின்றன (அவர்கள் தொலக்காட்சி நிருபருக்கு சொன்னது) அதுவும் காலத்தால் மாறும். ஞானப்பிரகாசனைப் போன்றோர் தூண்டிவிடாமல் இருந்தால் அதுவும் சாத்தியம்// - ஆமாம்! ஞானப்பிரகாசன் போன்றோர் தூண்டி விட்டுத்தான் ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களே தொடங்கின. மற்றபடி அங்கு அரசு நடத்தும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக ்கும் அதற்கும் எந்தத் தொடர்புமே இல்லை. இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களைக் காலங்காலமாகத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறது. ஆனால் அவர்களோ நாங்கள் இங்கு எழுதுகிற ஒன்றிரண்டு கட்டுரைகளைப் படித்து விட்டு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள், படை திரட்டுகிறார்கள ், போர் நடத்துகிறார்கள் . எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் இது? பி.எசு.வி போன்ற உணர்ச்சியையெல்ல ாம் அடக்கி விட்டு மரக்கட்டைகளாக உலவும் புத்தர் பேரன்கள் ஏதோ இப்படி அடிக்கடி கொஞ்சம் அறிவுரைகளை அருள்வதால்தான் ஈழத் தமிழர்கள் மட்டுமில்லை தமிழ்நாட்டுத் தமிழர்களான என்னைப் போன்றவர்களும் கொஞ்சம் அறிவு வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.
//மறப்பதுதான் வாழ்க்கை. நினைப்பது அவ்வாழ்க்கையை சிதைப்பது. சீக்கியர்கள் 1984 படுகொலையை மறந்து விட்டார்கள்; யூதர்களின் இன்றைய தலைமுறை ஹிட்லரைப்பற்றி நினைப்பதே இல்லை// - தொடர்பே இல்லாமல் பொய் முடிச்சுப் போடாதே! சீக்கிய இனப்படுகொலை அவர்களுக்கு எதிராக ஒரே ஒருமுறை நடந்த தாக்குதல் அவ்வளவுதான். அவர்களை இந்த நாடு தொடர்ச்சியாக இன அடிப்படையில் ஒடுக்கவோ ஒதுக்கவோ இல்லை. அதனால் அவர்கள் அதை மறந்து விட்டார்கள். இட்லர் கொல்லப்பட்டதோடு உயூத இனவெறுப்பும் ஒழிந்து விட்டது. அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பு கிடைத்து விட்டது. ஆனால் ஈழத் தமிழர்கள் விதயம் வேறு. அவர்கள் மீதான இனப்படுகொலை நின்றிருந்தாலும ் அவர்களுக்கு எதிரான இன அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. ஒருவேளை நடந்த குற்றத்துக்காக இராசபக்சவையே நாளை தூக்கில் போட்டு விட்டாலும் அதனால் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதமோ அதற்கு ஆதரவாக இருக்கும் அந்த சமுகத்தின் மனநிலையோ அங்குள்ள ஒடுக்குமுறைச் சட்டங்களோ அதனால் மாறிவிடப் போவதில்லை. ஒடுக்குமுறை என ஒன்று இருக்கும் வரை புரட்சி என்பது தொடரத்தான் செய்யும். இயற்கைப் போக்கு இது. இதை நீயோ நானோ மாற்றி விட முடியாது. புரிகிறதா? புரியாவிட்டாலும ் தேவலை. உன் உளறல்களை இத்தோடு நிறுத்து! தமிழ்நாட்டிலேயே தலைமுறை தலைமுறையாகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவனிடம் இங்குள்ள மக்கள் மனநிலை பற்றி எங்கோ உட்கார்ந்து பாடம் நடத்தும் உன் போக்கு முற்றிலும் பித்துக்குளித்த னமானது.
வரலாறு ஆராய்ச்சி, அதன் முடிவுகள் - எவருமே செய்யலாம. தமிழரின் வரலாறு தமிழர்களால்தான் எழுதப்படவேண்டும ென்பது குழந்தைத்தனம். உண்மையில் லோக்கல் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியவை உணர்வுகள் கலந்து ஒருதலைப்பட்சமாக வே இருக்கும். மதிப்பு கிடையாது. பிறராலேயே காய்தல் உவத்தல் இன்றி எழுத முடியும். எனவேதான், தமிழகத்தின் மன்னர் காலங்கள் என்று நாம் இன்று வாசிப்பது அம்மன்னர்களால் பயன்பெற்றோர் எழுதியவை. Biased and twisted ஞானப்பிரகாசன் தமிழ்னாட்டில் பிறந்து வாழ்வது அவருக்கு உணர்ச்சிகளைத் தரும்; சரியான பார்வையைத் தராது. 'பொற்காலங்கள்' என்ற சிறுனூலை ஆ சிவசுப்பிரமணியன ் எழதியிருக்கிறார ். வாசித்துப்பாருங ்கள். நீங்கள் எதை வரலாறு என்று நம்பினீர்களோ, அதிலுள்ள பித்தலாட்டங்களை அவர் காட்டுகிறார்.
போ, வா, நீ, என்றெழுதுவது உணர்ச்சிகள் பண்பையும் அழித்துவிடும் என்பதைக் காட்டும்.
சரி போகட்டும். தான் எழுதிய கட்டுரைக்கு இலங்கைத்தமிழரிட மிருந்து பாராட்டுகள் குமிகின்றன என்றெழுதிய ஞானப்பிரகாசன், தான் எழுதி ஒரு இனத்தைத் தூண்ட முடியுமா?என்றும ் நகைமுரணாக கேட்கிறார். முடியும். இக்கட்டுரையை வாசிப்பவர் பிரதிகளெடுத்து பரப்ப, வெகுவிரைவாக கோடானு கோடி பேருக்கு சில நொடித்துளிகளில் கொண்டு சேர்க்க இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. இக்கட்டுரை போல இன்னும் பல கட்டுரைகள் வந்தால், பரவல் க்ரோனா வைரசை விட வேகம்தான். வைரஸ் உடலைப் பாதிக்கும். இக்கட்டுரைகள் மனங்களைப் பாதிக்கும். Pen is mightier than sword. எனவே இனியாவது அமைதி கிட்டிய வாழவு தொடரட்டும் எனற நினைப்பில் ஞானப்பிரகாசன் மண்ணை அள்ளிப் போடுகிறார். ,,,cont'd
மானிஃபெஸ்டோவில் இருக்கிறது என்று சொன்னால், பாமர மக்களுக்குப் புரியா வாக்குறுதிகளும் இருக்கும். மேலும், எல்லா வாக்குறுதிகளும் பொது மக்கள் அனைவருக்குமே அல்ல. சில குழுக்களுக்காக இருக்கும். எ.கா: பள்ளர்களின் - அட்டவணை வெளியேற்றம் - வாக்குறுதியாக பா ம க போன்ற கட்சிகள் வைக்கும். ஆனால் அதை வைத்து பெரு வெற்றி அடையமுடியாது. பள்ளர்கள் மட்டுமே வாக்குகள் தருவார்கள்.
இலங்கைப் பிரச்சினை தமிழ்னாட்டு அரசியலில் கருவேப்பிலை போல என்று கூட சொல்ல முடியாது. பத்தோடு இத்தொன்று. அவ்வளவுதான். ஆனால், அகதிகள் பிரச்சினை மக்களை ஈர்க்கலாம். காரணம், பொதுமக்கள் வாழ்க்கையும் அதனுடன் சிக்கியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தமிழ ர் பிரச்சினைகள் தமிழ்னாட்டு தமிழர்கள் நினைப்பிலேயே இல்லை. தமிழ்னாட்டுத்தம ிழர்களை ஞானப்பிரகாசன் புரியவேயில்லை. அவர்கள் தன்னலமே பொதுனலம் என்று வாழ்பவர்கள். க்ரொனா வைரசில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும், அது ஊருக்குள் இல்லையென்றால், தனக்கு வராது என்று மகிழ்ச்சியும் அவர்கள் வாழ்க்கை. தான், தன் குடும்பம், தன் ஜாதி என்று வாழும் மக்கள். எனவேதான், சாதிச்சண்டைகள். நூறு பிளவுகள். பட்டப்பகலில் நடு சாலையில் வெட்டுகிறார்கள் ; குடிசைகளைக் கொழுத்துகிறார்க ள். பின்னர் அவை தர்மமே என்று பேசுகிறார்கள். பாரதியார் சொன்ன ''நாயும் பிழைக்கும் இந்த பொழைப்பு'' என்பது தமிழ்னாட்டுத்தம ிழர்களுக்கு பொருந்தும். இதை அறிந்து அரசியல்வாதி தன் காய்களை நகர்த்தி வெற்றி பெறுகிறான். இதையும் தாண்டி ஒன்றுகூடும் நிலை வரும் கட்டங்களை இறைவன் உருவாக்கியிருக் கிறான். அதுதான் அல்ட்ரூயிசம். ஏற்கனவே சுட்டிக்காட்டிய படி altruism is the evolutionary trait in human beings. என்று பூமியில் உருவானோ அன்றிலிருந்து, என்று மறைகிறானோ அதுவரை, அல்ட்ரூயிசம் இருக்கும். அது 1983 படுகொலைகள் தந்தது. ஆனால் அது ராசீவ் படுகொலையால் முற்றிலும் தகர்க்கப்பட்டது ..
யாழ்ப்பாணத்தமிழ ர் மேல் சிங்களர்கள் வைக்கும் இனத்துவேச நடவடிக்கைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். ஞானப்பிரகாசன், உலகமெங்கும் உள்ள இலங்கைத்தமிழர்க ளிடையே பரப்புரை செய்யலாம். அவர்களும் யாழ்ப்ப்பாணத்தம ிழர்களும் சேர்ந்து நிறுத்த வேண்டியது. தமிழ்னாட்டுத்தம ிழர் முன் கூறியபடி, வாழ்பவராதலால், யாழ்ப்பாணத்தமிழ ர் அவர்களை நம்பவே முடியாது. வீண் விரயம். (Finish)
RSS feed for comments to this post