உயிர் போகும் தறுவாயில் கிடைத்த சஞ்சீவினி மூலிகையைச் சுருட்டிப் ‘பீப்பீ’ ஊதியிருக்கிறார்கள் தமிழ் மக்கள்! மாற்று அரசியல் முயற்சிகளுக்கு மக்கள் அளித்த தோல்வியைத்தான் சொல்கிறேன்.
மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடையும் என்பது ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்த அளவுக்கு இழிவான படுதோல்வியை அடையும் என்று யாருமே நினைக்கவில்லை. மேலும், புதிதாக யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், வழக்கம் போல அ.தி.மு.க தோற்று, தி.மு.க ஆட்சி அமையும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, முதன் முறையாக இந்த தடவை அரசியல் நோக்கர்களின் கணிப்பு பலித்துத் தொலைத்தது!
இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்ன? மக்களுக்கு உண்மையிலேயே கருணாநிதி, ஜெயலலிதா தவிர வேறு யாரையுமே பிடிக்கவில்லையா? அல்லது, மக்கள் நலக் கூட்டணியால் விளைந்த விபரீதமா இது?
தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தி.மு.க!
“வைகோ வாங்கிய கூலிக்குச் சரியாக வேலை பார்த்து விட்டார். தி.மு.க-வைத் தோற்கடித்து அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்து விட்டார்” என இணையம் முழுதும் பேச்சு. இணைய இதழ்கள், வலைப்பூக்கள், சமூக வலைத்தளங்கள் என எங்கு பார்த்தாலும் இதே கூச்சல்.
இப்பேர்ப்பட்ட அறிவாளிகள் எல்லாரும் எங்கிருந்துதான் புறப்பட்டு வருகிறார்கள் எனப் புரியவில்லை! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் சிறு பகுதியை அறிந்தவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். காரணம், முந்தைய பதிவிலேயே சொன்னது போல, இதற்கு முன் இரண்டு முறை தமிழ்நாட்டில் மூன்றாம் அணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபொழுது, அந்த இரண்டு முறையுமே ஆளுங்கட்சி ஆட்சியை இழக்கத்தான் செய்தது. அதிலும், அந்த இரண்டு தடவையில் ஒரு தடவை ஆட்சியை இழந்தவரே ஜெயலலிதாதான். அப்படியிருக்க, இந்த முறை மட்டும் ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் எனத் தேர்தலுக்கு முன்பே எந்த நம்பிக்கையில் அவர் ஒரேயடியாக 1500 கோடியை அள்ளிக் கொடுப்பார் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும்!
முதலில் சமூக வலைத்தளங்களில் இப்படியொரு பேச்சு அடிபடுவதாகச் சொன்னார்கள். பின்னர், தேநீர்க் கடைகளில் பேசுகிறார்கள், தெருமுக்குகளில் பேசுகிறார்கள், பட்டிதொட்டியெல்லாம் பேசுகிறார்கள் என்றார்கள். கடைசியில் பார்த்தால், இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்டதே தி.மு.க-தான் என உறுதியாகி இருக்கிறது. மே 19 அன்று தேர்தல் முடிவு பற்றிய தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க புள்ளி கம்பம் செல்வேந்திரன் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் இதை வெளிப்படையாகவே சொன்னார். பாருங்கள் அந்த விழியத்தை (video).
“மக்கள் நலக் கூட்டணியை நாங்கள் அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்று சொன்னோம். மக்கள் அதை நம்பினார்கள்” என்று வெட்கமே இல்லாமல் அவர் பேசியிருப்பதைப் பார்த்தீர்களா? ஆக, தங்களுக்கு மாற்றாக ஓர் ஆட்சி வந்துவிடக்கூடாது; அதற்குப் பதில் தங்கள் எதிரியே ஆட்சிக்கு வந்தாலும் வரட்டும் என்ற கேடுகெட்ட நோக்கத்தால் தி.மு.க-வே கட்டிவிட்ட கதைதான் இது. தேர்தல் என வரும்பொழுது ஒருவரைப் பற்றி இன்னொருவர் இப்படியெல்லாம் கதை கட்டிவிடுவது வழக்கம்தான். அதைப் போய் உண்மை என்று நம்பி மக்கள் நலக் கூட்டணியைப் புழுதி வாரித் தூற்றியதோடு இல்லாமல் அடிப்படைச் சான்று கூட இல்லாத இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து இன்னும் குறை சொல்லிக் கொண்டு திரிபவர்களே! நினைத்துப் பாருங்கள், மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீமா அல்லது நீங்கள் எல்லோரும் உங்களுக்கே தெரியாமல் தி.மு.க-வின் ‘பி’ டீமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா என்பதை!
மேற்கண்ட விழியத்தில் கம்பம் செல்வேந்திரன் தொடர்ந்து பேசுகையில், மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்று மக்கள் நம்பியதால், அவர்களுக்கு வாக்களிப்பதற்குப் பதில் அ.தி.மு.க-வுக்கே வாக்களித்து விட்டதாகக் கூறுகிறார். அதாவது, ம.ந.கூ-வுக்கு எதிராக இப்படியோர் இழிவேலையை இவர்கள் செய்யாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க பெற்றிருக்கும் வாக்குகள் வெகுவாகக் குறைந்திருக்கும் என்கிறார். ஆக, அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்ததே தி.மு.க-தான் என்பதில் என்ன தவறு? ம.ந.கூ-வைக் கறைப்படுத்தியதன் மூலம் ‘மாற்று என இங்கு ஏதும் இல்லை. இது மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தேர்தல்தான்’ என்று இவர்கள் மக்களை நம்ப வைத்து விட்டார்கள். அதனால், தி.மு.க பக்கம் காங்கிரசைத் தவிர வேறு பெரிய கட்சிகள் ஏதும் கூட்டணியில் இல்லாத நிலையில், கிட்டத்தட்ட தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக இது மாறி விட்டது. ஆகவே, தி.மு.க-வின் வாக்கு வங்கியை விடப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க மிகச் சிறிய வாக்கு வேறுபாட்டில் ஆட்சி வாய்ப்பைத் தட்டிச் சென்று விட்டது. இதுதான் தி.மு.க-வின் தோல்விக்கும் அ.தி.மு.க-வின் வெற்றிக்கும் உண்மையான காரணம்!
தேர்தலை நேர்மையாகச் சந்திக்க நெஞ்சுரம் இல்லாமல் எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவர்களைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதையே வழக்கமாக வைத்திருந்தால் ஒருமுறை இல்லாவிட்டாலும் ஒருமுறை இப்படித்தான் ஆகும். அரசியல் இராஜதந்திரம் என்பது இருபுறமும் குழல் கொண்ட துப்பாக்கி. சில சமயம் பின்னாடியும் சுடும்.
இப்படி, தி.மு.க-வினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதற்கு வைகோவோ மூன்றாம் அணியினரோ என்ன செய்ய முடியும்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
சரி, தி.மு.க இந்த ஒரே ஒரு பழியைச் சுமத்தியிராவிட்டால் மட்டும், ஆறு கட்சிகளும் சேர்ந்து ஆறே விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ள இவர்கள், ஒரேயடியாக வென்று ஆட்சியைப் பிடித்து விட்டிருப்பார்களா? அதையும் பார்க்கலாம் வாருங்கள்!
ம.ந.கூ-வின் தவறான அணுகுமுறையும் இணைய உலகின் எதிர்மறைப் போக்கும்
மக்கள் நலக் கூட்டணி மட்டுமில்லை, இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையும் எதிர்த்துக் களம் கண்ட அத்தனை கட்சிகளும் நம்பி இறங்கியது இளைஞர்களைத்தாம். ஆனால், அந்த இளைய வாக்காளர்களின் மனநிலை என்ன, அவர்களுடைய இடம் எது, அங்கு நடப்பது என்ன, அங்கே தங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று எதையுமே ம.ந.கூ-வினர் தெரிந்து கொள்ளவில்லை.
இளைய தலைமுறையினரின் விருப்பத்துக்குரிய இடமே இணையம்தான். ஆனால், நடந்த இந்தத் தேர்தலையொட்டி இணையத்தில் மிகுதியாகக் கிண்டலடிக்கப்பட்டவர்களே விஜயகாந்தும் வைகோவும்தான். விஜயகாந்தைக் கிண்டலடிக்க அவருடைய உடல்மொழியும் உளறல் பேச்சுகளும் காரணமாக இருந்தன என்றால், வைகோவைக் கிண்டலடிக்க முன்பு அவர் முதன்மைக் கட்சிகள் இரண்டுடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்ததே நம்மவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. கூடவே, தி.மு.க கிளப்பி விட்ட புரளி வேறு. இவற்றை வைத்துக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சித்திரப்பகடிகளும் (memes) நையாண்டிப் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இறக்கை கட்டிப் பறந்தன. இணையத்தில் இவற்றைப் பார்க்காதவர்களே இல்லை எனும் அளவுக்குப் பற்றிப் பரவின. ஆனால், ம.ந.கூ-வினர் இது பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை.
இதே பிரச்சினை முன்பு கருணாநிதிக்கும் வந்தது. ஆனால், அதை அவர் வெகு சாதுரியமாகக் கையாண்டார். ஈழத் தமிழர்களுக்கு அவர் துரோகம் செய்ததை அடுத்து இணையத்தில் இளைஞர்கள் அவரைக் கிழி கிழியெனக் கிழித்துத் தோரணம் கட்டியபொழுது அதற்கென்றே இரண்டு பேரைப் பணியமர்த்தி, தேடுபொறி உவப்பாக்க (SEO) நுட்பங்கள் மூலம் அத்தகைய பதிவுகள் மக்கள் கண்ணில் படாமல் பின்னுக்குப் போகும்படி செய்தார் கருணாநிதி. அப்படியெல்லாம் எதுவுமே செய்யாமல், தாங்கள் எந்த இளைஞர்களை நம்பித் தேர்தலில் நிற்கிறோமோ அந்த இளைஞர்களிடம், அதுவும் தேர்தல் நேரத்தில் தங்களைப் பற்றி இப்படி ஓர் அவதூறு தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டதை வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ம.ந.கூ-வினர்.
ஒன்றில்லை இரண்டில்லை, தமிழ்நாட்டின் முப்பது விழுக்காடு வாக்காளர்கள் முகநூலில் இருப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கப் போதுமான அளவு இது! இப்படிப்பட்ட ஒரு களத்தில் இவர்களைப் பற்றி இப்படி ஓர் எதிர்மறைப் பரப்புரை தொடர்ந்து மாதக்கணக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்தால், அந்த இடத்தைச் சேர்ந்தவர்களான இளைஞர்களிடமிருந்து இவர்களுக்கு எப்படி வாக்குகள் கிடைக்கும்?
அடுத்த காரணம், இவர்கள் முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வெகுவாகக் கிண்டலடிக்கப்பட்டு வந்தவர் விஜயகாந்த். கடந்த (2011) சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்பொழுது தன் கட்சி வேட்பாளரையே அவர் தாக்கியது முதலே பொதுமக்களால் எள்ளி நகையாடப்பட்டு வந்தார். இணையம் மட்டுமின்றித் தொலைக்காட்சி, திரைப்படம், இதழ்கள் எனப் பொது ஊடகங்களும் தொடர்ந்து அவரை நகைப்புக்குரிய மனிதராகவே காட்சிப்படுத்தி வந்தன. எந்த இடத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாமல் அவர் உளறிக் கொட்டியவையும் கோணங்கித்தனமான அவருடைய உடல்மொழிகளும் தொடர்ந்து விழியங்களாக (videos) வெளிவந்து இணையத்தில் சக்கைப் போடு போட்டன. இளைஞர்கள் அந்த விழியங்களைத் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கும் காட்டியும் பகிர்ந்தும் நகைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரைக் கூட்டி வந்து ‘இவர்தான் உங்கள் அடுத்த முதல்வர்’ என்று ம.ந.கூ-வினர் முன்னிறுத்தியது, இளைஞர்களை மட்டுமின்றி மாற்று அரசியலை எதிர்பார்த்த எல்லோரையுமே ஏளனப்படுத்துவது போல இருந்தது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேண்டா என்றால் இப்படிப்பட்ட ஒருவர்தான் உங்களுக்குக் கிடைப்பார் என்று முகத்திலடிப்பது போல அமைந்திருந்தது.
உண்மையில், மக்கள் நலக் கூட்டியக்கம் ‘மக்கள் நலக் கூட்டணி’யாக அறிவிக்கப்பட்ட பொழுது முரண்பாடான அணி என்று அதை மற்ற கட்சியினர் விமரிசித்தாலும் அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்கள் அதன் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத்தான் செய்தார்கள். அப்பொழுதே எழுத்தாளர் ஞானி அவர்கள் கூறியது போல ஐயா நல்லகண்ணு அவர்களை முதல்வர் வேட்பாளராக இவர்கள் அறிவித்திருந்தால் சமூக ஆர்வலர்கள், நாட்டு நடப்பில் ஆர்வம் உள்ளவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், அரசியல் நோக்கர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் என்று அறிவு சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரின் ஆதரவும் இந்தக் கூட்டணிக்கு அப்படியே கிடைத்திருக்கும். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பின்தொடரப்படுவதால் ம.ந.கூ பற்றிய இவர்களின் எழுத்துக்கள் வலையுலகம் எங்கும் பரவி, நடுநிலை வாக்காளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இவர்கள் மீது நம்பிக்கை பிறக்கச் செய்திருக்கும். மாறாக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் இருந்த இந்தப் பேராதரவையும் ம.ந.கூ இழந்தது. அதுவரை இவர்கள் மீது ஆர்வம் காட்டிய நடுநிலை ஆளுமைகள் பலரும் வெளிப்படையாகவே இது குறித்துத் தங்கள் ஆற்றாமையை இணையத்தில் வெளியிட்டனர்.
இப்படி இளைஞர்கள், மாணவர்கள், அறிவார்ந்த பெருமக்கள் என்று நடுநிலை வாக்காளர்கள் அத்தனை தரப்பினரையும் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிலைப்படுத்தினால் வைகோவோ திருமாவளவனோ மட்டுமில்லை காந்தியும் காமராசருமே வந்தாலும் தேர்தலில் வெல்ல முடியாது.
இவை தவிர, சில பிரச்சினைகளை ம.ந.கூ-வினர் எதிர்கொண்ட விதமும் தவறாக இருந்தது.
ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதாகச் சொல்லப்படுவது பற்றிப் பாலிமர் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டதை, தன்னைக் கூப்பிட்டு வைத்து இழிவுபடுத்தும் முயற்சியாகப் பார்த்தார் வைகோ. மாறாக, அந்தக் குற்றச்சாட்டுக்கு மக்கள் முன்னிலையிலேயே பதிலடி கொடுக்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணிச் செயல்பட்டிருந்தால் அந்தப் பெரும் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், பதிலளிக்காமல் பாதியிலேயே எழுந்து போய்த் தான் மானமுள்ள தலைவன் என்பதை நிறுவ முயன்றார். ஆனால், அஃது அப்படிப் பார்க்கப்படவில்லை. வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு மெல்லுங்கோந்து (Chewing Gum) கொடுத்த கதையாக, “கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எழுந்து போனார்” என்றுதான் பேசப்பட்டது. அந்தச் செய்திக்கான தலைப்பே அப்படித்தான் வைக்கப்பட்டது.
இதே போல, இவர்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்த அன்று மாலையே “வைகோ, விஜயகாந்த், ஜி.இராமகிருஷ்ணன் என இது மொத்தமும் தெலுங்கர் கூட்டணி” என்று நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சாடினர். உடனே வைகோ, ‘ஒருவர் தமிழரா தெலுங்கரா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவருடைய பிறப்பா நடத்தையா’ என்று பதில் கேள்வி கேட்டிருக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் இனத்துக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தான் செய்தவற்றைப் பட்டிலிட்டு, இப்படிப்பட்ட தான் தமிழன் இல்லையா என்று மக்கள் மன்றத்தில் விவாதத்தைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். ஆனால், ‘சீமான் நேற்று வந்தவர்தானே! அவர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்’ என்றெண்ணி இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாமலே புறந்தள்ளினார்.
உண்மையில், இணையத்திலும் சரி, இன்றைய இளைஞர்களிடத்திலும் சரி வைகோ, திருமா ஆகியோரை விடச் சீமானுக்குப் பன்மடங்கு செல்வாக்கு. திராவிட எதிர்ப்பு, தமிழ் தேசியம் போன்ற அவருடைய கருத்துக்கள் இணையத்துக்கு உள்ளும் புறமும் மிகப் பெரும்பாலோரைக் கவர்ந்துள்ளன. அப்படிப்பட்ட ஒருவரைச் சரியாக மதிப்பிடாதது, தமிழ் உணர்வாளர்களின் வாக்கு வங்கி முழுமையாகச் சீமான் பக்கமே செல்லும்படி செய்து விட்டது. அதனால்தான், தே.மு.தி.க-வைத் தவிர இவர்களில் வேறு யாரும் தலா ஒரு விழுக்காடு கூட வாக்குகளை எட்ட முடியாத நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்றே அதை சாதித்திருக்கிறது.
இத்தனைக்கும், முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் அடுத்தபடியாக மூன்றாம் அணியை உயர்த்திப் பிடித்த ஊடகங்கள் ‘நாம் தமிழ’ரைக் கண்டு கொள்ளவேயில்லை. பத்தோடு பதினொன்றாகத்தான் பார்த்தன. ஆனாலும், மூன்றாம் அணிக் கட்சிகளில் தே.மு.தி.க தவிர்த்த, மற்ற கட்சிகளின் தனிப்பட்ட வாக்குகளை விடக் கூடுதல் வாக்குகளை இணையத்தை மட்டுமே பயன்படுத்தி ‘நாம் தமிழர்’ வென்றெடுத்திருக்கிறது! இணையம் எந்த அளவுக்குத் தேர்தலில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதற்கு இது சரியான எடுத்துக்காட்டு.
ஆனால், இந்தத் தேர்தலில் இணைய உலகம் எவ்விதத் தாக்கமும் செலுத்தவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். இணையத்தின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரம் செய்தும் தி.மு.க தோற்றிருப்பதையும், அந்த அளவுக்கு இணையத்தில் ஏதும் செய்யாமலே அ.தி.மு.க வென்றிருப்பதையும் வைத்து இப்படிச் சொல்லப்படுகிறது. ஆனால், இணைய உலகின் அடிப்படை இயல்பையே புரிந்து கொள்ளாத கருத்து இது!
இணையத்தின் நம்பகத்தன்மையே அதில் வரும் எல்லாச் செய்திகளும் கருத்துக்களும் தனி மனிதர்கள் மூலமாகவே தனி மனிதர்களுக்குப் பரவுகின்றன என்பதுதான். ம.ந.கூ பற்றி இதுவரை நாம் பார்த்த அத்தனை எதிர்மறைத் தகவல்களும் கருத்துக்களும் அப்படிப் பரவியவைதாம். சொல்லப் போனால், அவற்றைப் பரப்பி விட்டவர்களே தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர்தாம் என்றாலும் அவர்கள் அதைத் தனிமனிதர்கள் என்ற முறையில்தான் செய்தார்கள். ஆனால், தி.மு.க பற்றிய விளம்பரங்கள் அப்படியல்ல. கூகுள் ஆட்ஸ், யூடியூப் ஆகியவற்றின் மூலம் இணையத்தில் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் தி.மு.க விளம்பரங்கள் கண்ணில் படுமாறு காட்சிக்கு வைக்கப்பட்டன என்றாலும் அவை தி.மு.க என்கிற ஒரு நிறுவனம் தன்னைப் பற்றித் தானே செய்து கொண்ட விளம்பரங்களாகத்தான் அமைந்தன. தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் எப்படி அலைவரிசையை மாற்றிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போமோ அப்படிப்பட்ட மனநிலையில்தான் அவை பார்க்கப்பட்டன. ஆகவேதான் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆக, தி.மு.க-வின் விளம்பரங்கள் இணைய ஊடகத்தின் தன்மைக்கேற்றபடி இல்லாமல் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படுவது போலவே வழக்கமான பாணியில் வெளியிடப்பட்டதும், அதே தி.மு.க போன்ற கட்சிகள் ம.ந.கூ பற்றிக் கிளப்பி விட்ட மேற்படி புரளிகளும் எதிர்மறைப் பரப்புரைகளும் மட்டும் இணையத்தின் தனித் தன்மைக்கே உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டதும் சேர்ந்து, முன்பே கூறியபடி, இந்தத் தேர்தலைத் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக மாற்றி விட்டன. அதனால், சொந்த வாக்கு வங்கியும் அ.தி.மு.க-வுக்கு நிகராக இல்லாமல், கூட்டணி வலிமையும் இல்லாமல் நின்ற தி.மு.க-வுக்கு அஃது எதிராக முடிந்து விட்டது.எனவே, இணையம் இத்தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது முழுத் தவறு. மூன்றாம் அணி மீது இணையம் ஏற்படுத்திய தாக்கம்தான் நடுநிலையாளர்கள் வாக்குச்சாவடிக்கே வராமல் செய்து விட்டது; வந்தவர்களும் பெரும்பாலும் ‘இவர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (NOTA) என்றும், பா.ஜ.க, தனி வேட்பாளர்கள் என்றும் சிதறி வாக்களிக்கும்படி செய்து விட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சியமைக்க அதுவே வாய்ப்பாகி விட்டது.
இப்படி, தவறான அணுகுமுறைகளும் இணைய உலகின் எதிர்மறைத் தாக்கமும் மூன்றாம் அணியின் தோல்விக்குக் காரணமாயின என்றால், பா.ம.க, நாம் தமிழர், பா.ஜ.க ஆகியவற்றுக்கு அவற்றின் தற்பொழுதைய நிலைமையும் நிலைப்பாடுமே எதிராக அமைந்தன.
பா.ம.க-வைப் பொறுத்த வரை, அதன் மீதான சாதிவெறி முத்திரை இன்னும் அகலவில்லை. அதை அகற்றிக் கொள்வதற்கான முயற்சி எதையும் அவர்கள் செய்யவும் இல்லை. அதுவே அவர்கள் தோற்கக் காரணமாக அமைந்தது.
பா.ம.க-வின் சாதியப்போக்கைக் குறிப்பிட்டுஅவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று நான் எழுதியபொழுது என் வலைப்பூவுக்கும் சமூக வலைத்தளப் பக்கங்களுக்கும் திரண்டு வந்து தலைவிரித்து ஆடினார்கள் பா.ம.க-வினர். ஆனால், புகழ் பெற்ற மாணவ அமைப்பு ஒன்றும் இளைஞர் இயக்கம் ஒன்றும் கூட இதையேதான் கூறின. ஆனால், நான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்றும் அதனால்தான் பா.ம.க பற்றி இப்படி எழுதுகிறேன் என்றும் நான் விண்ணப்பப் படிவம் ஏதும் அளிக்காமலே எனக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்து என் எழுத்தின் மீது சாதியச் சேறு பூசிச் சென்ற அந்த வலையுலக வட்டாட்சியர்கள் யாரும் அந்த அமைப்புகளிடம் வாய் திறக்கவில்லை. தனி ஒருவனாக இணையத்தின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டிருக்கும் என்னை விட ஆயிரக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அவர்களின் எழுத்துக்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
அடுத்து பா.ஜ.க-வுக்கும் இதே சிக்கல். அவர்கள் மீது சாதிவெறி முத்திரை என்றால், இவர்கள் மீது சமயவெறி முத்திரை. ஆனால், பா.ம.க மீதாவது சாதிவெறி தவிர தமிழ் உணர்வாளர்கள், தலைசிறந்த சட்டமன்றச் செயல்பாட்டாளர்கள் என்று பல நல்ல அடையாளங்கள் இருந்தன. ஆனால், இப்படி எந்த ஒரு நற்பெயரும் இல்லாமல் தமிழர்களுக்கு எதிரானவர்கள், சமயவெறியர்கள் எனக் கெட்ட பெயர் மட்டுமே எடுத்திருந்ததால் தாமரையும் தலையெடுக்க முடியாமல் போனது.
நாம் தமிழர், இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தாலும் முதல் முறை போட்டியிடும் அவர்களால் எடுத்த எடுப்பிலேயே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதாலேயே பெரும்பாலோர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இப்படி ஆறுமுனைப் போட்டியாக இல்லாமல் முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் மாற்றான ஒரே தேர்வாக நாம் தமிழர் களமிறங்கியிருந்தால் இளைஞர் வாக்குகளை மொத்தமாக அள்ளியிருக்கலாம். அல்லது, மூன்றாவது அணியில் இருந்திருந்தால் வைகோ, சீமான், திருமாவளவன் என ஈழத் தமிழ்ப் போராளிகளின் மொத்தக் கூட்டணி எனும் வகையில் தமிழ் உணர்வாளர்கள் அத்தனை பேரின் வாக்கையும் கவர்ந்திருக்கலாம். மாறாக, தவறான ஒரு காலச்சூழலில் தவறான ஒரு முடிவை எடுத்ததால் நாம் தமிழரின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த பன்னீராயின.
இவை மட்டுமல்லாமல், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு பெரும் மலைகளை எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று சாய்ப்பது என்பது கற்பனையிலும் இயலாத ஒன்றாக இருப்பதால் இந்த மூன்று தரப்பினரும் தனித்துப் போட்டியிட்டது மாபெரும் தவறாகிப் போனது.
சரி, இப்படியெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை மாற்று அரசியல் வெற்றி பெற்றிருக்குமா என்று கேட்டால், அப்படியும் சிரமம்தான். காரணம், இணைய உலகினரின் மனநிலை.
தமிழ் இணைய உலகில் இன்று முன்னணியில் இருக்கும் அத்தனை பேருமே தேர்தல், அரசியல் ஆகியவை பற்றி முற்றிலும் எதிர்மறையான கருத்துக்கள் கொண்டவர்கள்தாம். அதாவது ‘அரசியல் என்பதே சாக்கடை. அதில் இருக்கும் யாருமே நல்லவர்கள் கிடையாது. அத்தனை பேருமே திருடர்கள்’ என்கிற பொத்தாம் பொதுவான கருத்துக் கொண்டவர்கள்தாம். இவர்கள், அரசியலைப் பொறுத்த வரை யாரையுமே நல்லவர் எனச் சொல்ல மாட்டார்கள். காரணம், எல்லோரையுமே குற்றம் சொல்வதற்குப் பெயர்தான் நடுநிலைமை என நினைத்துக் கொண்டிருக்கும் மாமேதைகள் இவர்கள். தவறிப் போய் எந்த அரசியலாளரையாவது நல்லவர் எனச் சொல்லி விட்டால் குறிப்பிட்ட அந்தத் தலைவரின் கட்சியைச் சேர்ந்தவர் எனத் தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என அஞ்சி எப்பொழுதும் எல்லோரையும் குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இப்படி எழுதுபவர்கள்தாம் இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள் (அல்லது இணையத்தில் செல்வாக்கு மிக்க அனைவரும் இப்படித்தான் எழுதுகிறார்கள்) என்பதால் இணையத்தின் மூலமாகவே வெளி உலகைப் பார்க்கும் இன்றைய இளைஞர்களிடையில் அரசியல் மாற்றம் ஏற்படுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.
மொத்தத்தில், இன்றைய இணையச் சூழல், கட்சிகளின் தவறான அணுகுமுறைகள், பிழையான நிலைப்பாடுகள் போன்றவைதாம் மாற்று அரசியலை முன்னெடுத்தவர்களின் தோல்விக்குக் காரணம். எனவே, இஃது இந்தக் கட்சிகளின் தோல்விதானே ஒழிய ‘மாற்று அரசியல்’ எனும் கோட்பாட்டின் தோல்வி கிடையாது. தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு முறையான திட்டமிடலோடு அணுகினால் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
கண்டிப்பாக அதை இவர்கள் செய்வார்கள். தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சியைத் தருவார்கள் என நம்புவோம்! காத்திருப்போம்!
- இ.பு.ஞானப்பிரகாசன்
நீங்கள் கூறுவது போலப் பொதுவுடைமைக் கட்சிகளிடம் பல குறைகளும் நிலைப்பாட்டுப் பிழைகளும் இருப்பது உண்மைதான். ஆனால், இன்று அவர்களுடைய தோல்விக்குக் காரணம் அவையல்ல. இருந்தாலும், தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் எனும் விருப்பம் இருந்தால் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப ்படுத்தும் வகையில் தங்கள் கொள்கைகளை அவர்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததே!
விஜயகாந்த் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று கருணாநிதிதான் முதலமைச்சர் ஆகியிருப்பார் என்பது உறுதியில்லை. காரணம், இரண்டு திராவிடக் கட்சிகளும் வேண்டா என்று கூறி அவர் அரசியலுக்கு வந்ததுதான் அவருக்கு மக்களிடம் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கு ஏற்படக் காரணமாய் அமைந்தது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததில் அந்தச் செல்வாக்கில் பெரும்பகுதியை அவர் இழந்தார். இந்த முறை தி.மு.க-வோடும் கூட்டணி வைத்திருந்தால் மிச்சம் மீதி நம்பிக்கையையும் இழந்திருப்பார் என்பதே உண்மை.
ஆனால், உங்களுடைய அந்தக் கூற்றும் சரி, என்னுடைய இந்தக் கூற்றும் சரி வெற்று ஊகங்களே (hypothetical)! எந்த வகையிலும் உறுதிப்படுத்தக் கூடியவை அல்ல! :-) நன்றி!
கம்பம் செல்வேந்திரன் சொல்லியுள்ள கருத்தை இவர் தனக்கு ஏற்றபடி புரிந்து எழுதியிருக்கிறா ர். கம்பம் செல்வேந்திரனின் கருத்து இப்படியானதாகவும ் இருந்திருக்கலாம ். அதாவது, மூன்றாவது அணியானது அதிமுக-வின் பி-டீம் என்று தாங்கள் சொன்ன உண்மையை மக்கள் நம்பினார்கள் என்ற அர்த்தத்தில் அவர் சொல்லியிருக்கல ாம். அவர் சொல்லவில்லை என்றாலும், திமுக அந்த புரளியை கிளப்பியது என்று உங்களின் சொந்த ஆய்வுப்படி வைத்துக்கொண்டா லும், வைகோ என்ற மனிதரின் செயல்பாட்டை கடந்த சில மாதங்களாக தெளிவாக கவனித்தால் அதில் ஒன்று மட்டும் நன்றாக வெட்டவெளிச்சமாக தெரிந்தது. சாதாரணமாக பத்திரிகை படிப்பவர்களாலேய ே அதனை கவனிக்க முடியும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதே அது.
நீங்கள் அறிவுசார் மக்கள் என்று குறிப்பிட்டுள்ள வர்கள் எல்லாம் உண்மையிலேயே அறிவுசார் மக்களா? என்பதை நீங்கள்தான் நிறுவ வேண்டும். அப்படி அவர்கள் அறிவிலிகளாய் இருப்பதால்தான், எந்த ஆய்வறிவோ, வரலாற்று அறிவோ இல்லாமல், திராவிட எதிர்ப்பை தனது பிழைப்பாக மாற்றிக்கொண்ட சீமான் போன்றவர்களிடத் தில் அவர்கள் கவரப்படுகிறார்க ள். அப்போதும் சீமான் பெற்ற வாக்கையும், அவர் போட்டியிட்ட தொகுதியில் அவர் பெற்ற மாபெரும் ஆதரவையும் கவனித்தால், அவருக்கு பெரிய ஆதரவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவர் பெற்ற வாக்குகள் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெற்றவை. வெறும் 25 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளோடு பிழைப்புவாதி சீமான் பெற்ற வாக்குகளை ஒப்பிடுவதே தவறு.
அரசியல் என்றாலே இன்றைய இளைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்ற கருத்தும் தவறு. அரசியலைப் பற்றி இன்றைய இளைஞர்கள் சரியாக படிப்பதில்லை மற்றும் அதற்கான பொறுமை அவர்களிடத்தில் இருப்பதில்லை. அவர்களுக்கு மீம்ஸ் போடுவதில்தான் ஆர்வமே. அவர்கள் நடுநிலை ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ள ும் சில ஊடகங்களின் மூலமே, அவர்கள் செய்யும் பிரச்சாரங்களின் மூலமே அரசியலை அறிந்து, அதுதான் அரசியல் என்று நினைப்பவர்கள்தா ன் அவர்கள். அவர்கள் கற்றுக்கொண்ட அரசியலின் மையக்கருத்தின்ப டி பார்த்தால், தமிழக அரசியலை சீரழித்தது மற்றும் சீரழிப்பது திமுக மட்டுமே, கருணாநிதி மட்டுமே. இதுதான் அவர்கள் கற்றுக்கொண்ட அரசியல்.
நீங்கள் ஓரிடத்தில் காந்தியையும், காமராசையும் இழுத்துள்ளீர்கள ். அவர்கள் இருவரும் மிகவும் நல்லவர்களா என்பது பரவலாக படிப்பவர்களுக்க ுத் தெரியும். ஆனால், நீங்கள் குறிப்பிடும் அறிவுசார் மக்களுக்குத் தெரியாது. காமராசர் தேர்தல் அரசியலில் வேண்டுமளவு தோற்கடிக்கப்பட ்டவர் என்பது பலரும் அறிந்த வரலாறு. உங்கள் கட்டுரையில் ஒன்று மட்டும் தெரிகிறது. அது திமுக மீதான வன்மம் மற்றும் சாதிய தமிழ்தேசியத்தின ் மீதான ஆர்வம்.
ஆம்! தி.மு.க மீது எனக்கு வன்மம் உண்டு. காலமெல்லாம் "தமிழ்... தமிழ்" என்று பேசிப் பிழைப்பு நடத்திவிட்டுத் தன் சொந்தக் காரணங்களுக்காக இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை அழித்து ஒழித்த தி.மு.க மீது மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே நியாயமாக இருக்க வேண்டிய அறச்சீற்றம் அது. ஒருவேளை அஃது உமக்கு இல்லாவிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
நான் தமிழ்தேசியவாதித ான். ஆனால், சீமானின் தொண்டன் இல்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில், பிறப்பின் அடிப்படையில் இவன் தமிழன், அவன் தெலுங்கன், இவன் கன்னடன் எனவெலாம் பாகுபாடு பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய தனிப்பட்ட தன்னல அரசியலில் எனக்கு ஆர்வமும் இல்லை. சீமான் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் இதே கீற்றில் உள்ளன. இதற்கு முந்தைய கட்டுரையில் கூட மூன்றாவது அணியைத் தெலுங்கர் கூட்டணி என நாம் தமிழர் ஆதரவாளர்கள் விமரிசித்து வருவது பற்றி காரசாரமாகப் பதிலடி கொடுத்திருந்தேன ். எனவே, தெரியாமல் பேசாதீர்!
அதே நேரம், நான் சீமானை ஒரேயடியாக வெறுக்கவும் இல்லை. வைகோ செய்யும் எல்லாமே சரியென்று சொல்லவும் இல்லை. யார் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டுகிறேன். யார் சரியாகச் செய்தாலும் பாராட்டுகிறேன், அவ்வளவுதான்.
மேலும், "அரசியல் என்றாலே இன்றைய இளைஞர்களுக்கு பிடிப்பதில்லை" என்று நான் கட்டுரையில் எங்குமே எழுதவில்லை. நான் கூறியது பதிவுலகம், முகநூல் போன்றவற்றில் நிறைய பின்தொடர்பாளர்க ளைக் கொண்டுள்ள முன்னணிப் பதிவர்களைப் பற்றி. அவர்கள்தாம் அப்படி யாருமே சரியில்லை, எதுவுமே சரியில்லை என்று எழுதிக் கொண்டிருக்கிறார ்கள். அதுவும் நடுநிலைத்தன்மை என நினைத்துக் கொண்டு எல்லோரையுமே அவர்கள் குற்றம் சொல்லப் போய்த்தான் யாருமே சரியானவர்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்து நடுநிலையாளர்கள் வாக்களிக்கவே வரவில்லை என்றுதான் சொல்லியிருக்கிற ேனே ஒழிய, அரசியல் என்றால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்று சொல்லவில்லை. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கருத்துக்களைத் திரிக்கப் பார்க்காதீர்!
"திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும்" என்று வைகோ முயன்றது வெளிப்படையாகத் தெரிந்ததாகக் குறிப்பிட்டுள்ள ீர். அஃது உண்மைதான். காரணம், தமிழ்நாட்டில் எப்பொழுதுமே எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிப்பதுதான் வழக்கம். எனவே, அந்த இடத்திற்குத் தாங்கள் வர வேண்டும் என்பதுதான் இங்குள்ள போட்டியே. எனவே, பரப்புரைகளும் அப்படித்தான் இருக்கும். மேலும், இங்கு தனிக் கட்சி தொடங்குபவர்கள், முதல்வர் ஆக விரும்புபவர்கள் என அனைவருமே தி.மு.க-வுக்கு மாற்றாகத்தான் தங்களை முன்னிறுத்த விரும்புகிறார்க ளே தவிர, அ.தி.மு.க-வுக்க ு மாற்றாக இல்லை. காரணம், அ.தி.மு.க என்பது எம்.ஜி.ஆர் என்ற தனி ஒரு மனிதரின் மீது மக்கள் கொண்ட அளவுக்கு மிஞ்சிய விருப்பத்தைக் கால்கோளாகக் கொண்டது. அஃது அந்த ஒற்றை மனிதரின் தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலானது . எனவே, அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. மாறாக, தி.மு.க என்பது குறிப்பிட்ட சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட கட்சி. எப்பொழுது அவற்றையெல்லாம் அந்தக் கட்சி கைவிடத் தொடங்கியதோ அப்பொழுதே அதே கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உண்மையாகப் பின்பற்றுபவர்கள ் அவற்றைத் தாங்கிப் பிடிக்கத் தானாகவே முன்வருகிறார்கள ். அதனால், தி.மு.க-வுக்குப ் போட்டி உண்டாகிறது. எனவே, தி.மு.க-வின் இடத்தைப் பிடிக்கத்தான் இங்கு எல்லாக் கட்சிகளும் போட்டி போடுகின்றன என்பதால் அவர்களின் முயற்சிகளும் பரப்புரைகளும் மற்ற யாவும் அப்படித்தான் அமைந்திருக்கும் . இந்த அடிப்படை அரசியல் கூடத் தெரியாத நீர் எனக்குப் போதுமான அளவு தகவல் அறிவு இல்லை என்கிறீர்! மேலும், இந்தக் கட்டுரை எந்த வகையைச் சேர்ந்தது என்பதே தெரியவில்லை என்கிறீர். எப்படித் தெரியும்? உம்மைப் போன்றவர்களுக்கு யாராவது ஒருவரை ஆதரித்தோ எதிர்த்தோ எழுதிய கட்டுரைகளை மட்டுமே பார்த்துப் பழக்கம். நான் இந்தக் கட்டுரையில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையுமே எதிர்த்திருக்கி றேன். அதே நேரம், கருணாநிதியின் திறமையையும் பாராட்டியிருக்க ிறேன். வைகோவை அநியாயமாகத் தூற்றுபவர்களைச் சாடியிருக்கிறேன ். அதே நேரம், அவர் செய்த தவறுகளையும் கண்டித்திருக்கி றேன். நாம் தமிழர் கட்சி செய்த தேர்தல் காலத் தவறுகளையும் சுட்டிக் காட்டியிருக்கிற ேன். அதே நேரம், சீமானுக்கு இளைஞரிடையே உள்ள ஆதரவையும் எடுத்துக் காட்டியிருக்கிற ேன். காரணம், நான் நடுநிலையானவன். தவறுகளை யார் செய்தாலும் கண்டிக்கிறேன். சரியாக யார் நடந்து கொண்டாலும் பாராட்டுகிறேன். உம்மைப் போல் எல்லாவற்றையும் கட்சிக் கண்ணோட்டத்தோடே பார்ப்பவர்களுக் கு அது புரிய வாய்ப்புக கிடையாது. உமது கறுப்பு-சிவப்பு க் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் பளிச்செனப் புரியும்!
எனக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை என்ற உங்களின் பாராட்டுக்கு நன்றி. எம்.ஜி.ராமச்சந் திரன் என்ற தனிமனித கவர்ச்சிதான் அதிமுக என்ற கட்சி என்பதை ஒப்புக்கொள்கிற ேன். ஆனால், அந்தக் கட்சிக்கு சித்தாந்த முலாம் பூசிய பெருமை சில கம்யூனிஸ்டுகளைச ் சேரும். வெறும் தனிமனித கவர்ச்சியால் மட்டுமே பெருவாரியான கொங்குவேளாள கவுண்டர்களும், முக்குலத்தோரும ் அவருக்கு வாக்களித்துவிடவ ில்லை. அதையும் மிஞ்சிய சமூக அரசியல் காரணங்கள் நிச்சயம் இருக்க வேண்டும், இருக்கின்றன. அதேசமயம் அவரும் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியையும், சில இடைத்தேர்தல் தோல்விகளையும் சந்தித்துள்ளார் . பின்னர் ஜெயலலிதா வந்தபிறகு, தேர்தல் தோல்விகளைப் பலமுறை சந்தித்துள்ளார் . ஆனால், ஜெயலலிதாவுக்கும ் அந்த குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதையும் தனிமனித கவர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா? மேற்சொன்ன சில சமூக மற்றும் அரசியல் காரணிகளே இருக்க வேண்டும். வன்னியர் சமூகத்தின் மத்தியில் திமுக-வுக்கு இருக்கும் ஆதரவையும், அதிமுக-வுக்கு மேலே சொன்ன 2 சமூகத்தினர் மத்தியில் இருக்கும் ஆதரவையும் நிலப்பிரபுத்துவ , சமூக மனப்பாங்கு மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில், மார்க்சிய மற்றும் பெரியாரிய கருத்துக்களின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள். சில உண்மைகள் புரியும். பாமக-வின் ஆரம்பகால கொள்கைகள் சில திமுக-வுக்கு போட்டியாக இருந்தன என்பதும் உண்மை. திமுக-வின் ஓட்டு வங்கியில் பாமக பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
கட்சித் தொடங்குவோர் எல்லோரும் திமுக-வின் இடத்தையே பிடிக்க போட்டியிடுகிறா ர்கள் என்ற உங்களின் கருத்திலும் தவறு உள்ளது. விஜயகாந்த் என்ற நடிகர் கட்சித் தொடங்கும்போது அவர் திமுக-வின் இடத்தைப் பிடிக்க போட்டியிடவில்ல ை. எம்.ஜி.ராமச்சந் திரனின் இடத்தைப் பிடிக்கவே போட்டியிட்டார் . தன்னை கருப்பு எம்.ஜி.ராமச்சந் திரன் என்ற அளவில் உருவகப்படுத்திக ்கொண்டார். இதனால் ஒரு நேரத்தில் பயந்துபோன ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்திற்கு வந்து, நாங்கள்தான் புரட்சித்தலைவரி ன் வாரிசு என்று சொல்லும் அளவிற்கு நிலைமை சென்றது என்பதையும் நினைவிற்கு கொண்டுவர முயற்சியுங்கள். மேலும் கட்சித் தொடங்கும் பலரும் திமுக-வை நோக்கியே தங்களின் விரலைத் திருப்புகிறார்க ள். அந்த வகையில், அவர்கள் திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்து, அதிமுக-வின் இடத்தைப் பிடிக்கவே போட்டியிடுகிறா ர்கள் என்பது எளிதான உண்மை. தவறுகள் இருந்ததால்தான் சுட்டிக் காட்டினேன். எனவே, உணர்ச்சிவசப்பட வேண்டாம். உங்கள் மீது நான் அறியாமல் ஏதேனும் அவதூறு கிளப்பியிருந்தா லும் அதற்காக வருந்துகிறேன்.
மற்றபடி, நான் கருப்பு சிவப்பு கண்ணாடி அணிந்திருப்பதாய ் புலனாய்வு செய்து எழுதியுள்ளீர்கள ். இது மட்டும் அவதூறு இல்லையா? ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் திமுக உறுப்பினரோ அல்லது கருணாநிதியின் தொண்டனோ அல்ல. இன்றைய இணையத்தில் எழுதும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுக்கொள்கை திமுக எதிர்ப்பு மற்றும் கருணாநிதி எதிர்ப்பு. அவர்கள் மிகப்பெரிய அறிவாளிகள் என்று நிரூபிப்பதற்கான ஒரு ஆபத்தில்லாத ஸ்டைலாக அது பயன்படுகிறது. எனவே, திமுக எதிர்ப்பின்றியே ா அல்லது திமுக பக்கமுள்ள நியாயத்தை சொல்ல வந்தாலோ, உடனே கருப்பு சிவப்பு முத்திரை குத்தி விடுகிறார்கள். இதுதான் நமது இணையதள எழுத்தாளர்களின் பொது வழக்கமாகவும் இருக்கிறது.
இணையத்துக்கு வந்த புதிதில் நானும் மென்மையானவனாகத் தான் இருந்தேன். ஆனால், சமூக அக்கறை காரணமாக எழுதுவதைக் கருத்தியல் சார்ந்து எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட வகையில் எதிர்த்து இழிவான வார்த்தைகளாலும் வசைகளாலும் தாக்கித் தாக்கி என்னைக் கடுமையானவனாக ஆக்கி விட்டார்கள். அதில் முதன்மையானவர்கள ், தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆதரவாளர்கள்தாம் . அதனால்தான் அப்படிப்பட்டவர் கள் ஒரு வார்த்தை தவறாக எழுதினாலும் பதிலுக்குப் பத்து மடங்கு திருப்பிக் கொடுக்கும் பழக்கம் வந்து விட்டது.
எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாறு பற்றித் துல்லியமாகத் தெரிவித்திருந்த ீர்கள். முதலில், அந்தத் தகவலுக்கு நன்றி! ஆனால், எப்பொழுதுமே எதிர்க்கட்சிதான ் ஆட்சியைப் பிடிப்பது வழக்கம் என்று நான் கூறியிருந்ததை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். "எப்பப் பார்த்தாலும் எதிர்க்கட்சிதான ் ஆட்சிக்கு வருது" என வாய் வார்த்தையாகச் சொல்கிற பாணியில்தான் நான் அப்படி எழுதியிருந்தேனே தவிர, இந்தியா விடுதலை பெற்றது முதல் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி மட்டும்தான் ஆட்சியைப் பிடித்து வருகிறது எனும் பொருளில் சொல்லவில்லை.
ஈழத் தமிழர்களைத் தி.மு.க முன்னின்று அழித்ததைப் போலக் கூறியிருக்கிறேன ் என்கிறீர்கள். அப்படித்தான் நான் உணர்கிறேன். இது தொடர்பாகத் தி.மு.க-வை ஆதரிக்கும் உங்களைப் போன்றோர் ஒன்றே ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! நடந்த அந்த இனப்படுகொலையைப் பொறுத்த வரை, எப்பொழுதோ நடந்து முடிந்து நாம் பாடநூல் மூலமாகவோ, வரலாற்று ஆய்வுக் குறிப்புகள் மூலமாகவோ செய்தியாக அறிந்து கொண்டது இல்லை அது. அந்தக் கொடுமையின் சமகாலப் பார்வையாளர்கள் நாம். எனவே, வைகோவோ சீமானோ வேறு யாருமோ சொல்லி நாம் அதில் ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது. கருணாநிதி நினைத்திருந்தால ும் அதைத் தடுத்திருக்க முடியாது என்கிறீர்கள். எப்படி இப்படிச் சொல்கிறீர்கள் என எனக்குப் புரியவே இல்லை! ஒன்றில்லை இரண்டில்லை நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை அன்று கைவசம் வைத்திருந்தவர் கருணாநிதி. அதுவும் அவர் ஆதரவில்தான் அன்றைய நடுவண் அரசும் அமைந்திருந்தது. அவர் தன் ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கையைப் பின்னின்று இயக்கிக் கொண்டிருந்த நடுவண் அரசு கவிழ்ந்திருக்கு ம். இனப்படுகொலை முடிவுக்கு வந்திருக்கும். உடனே, இந்தியா மட்டும்தான் அதைப் பின்னின்று நடத்தியதா என்பீர்கள். இல்லைதான். ஆனால், பின்னின்று நடத்திய நாடுகளில் இந்தியாதான் முன்னணியில் இருந்தது. இதை நான் சொல்லவில்லை, என்னைப் போன்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் மட்டும் சொல்லவில்லை. விக்கிலீக்ஸ் சொன்னது! உலக நாடுகளின் உலக மகா ரகசியங்களையெல்ல ாம் அம்பலத்தில் ஏற்றிய விக்கிலீக்ஸ், இறுதிக்கட்டப் போரின்பொழுது நடந்து கொண்டிருந்த இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா விரும்பியதாகவும ், அப்பொழுது சோனியா அமெரிக்க அதிபரைப் பேசியில் தொடர்பு கொண்டு "இது என் தனிப்பட்ட விவகாரம். யாரும் தலையிடக்கூடாது" என்று சொன்னதாகவும் பதிவு செய்திருக்கிறது . தன் மாபெரும் வெளிநாட்டுச் சந்தையின் முதுகெலும்பான இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்கா ஒருபொழுதும் விரும்பியதில்லை என்பதுதான் அனைவரும் அறிந்த உண்மை. இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவ து போலவே, இனப்படுகொலைப் போர் நடந்து முடிந்த பிற்பாடு "இந்தியா விரும்பிய போரைத்தான் நாங்கள் நடத்தினோம்" என்று கோத்தபயா சொன்னது, 'இந்தியாவுக்கு நன்றி' என்று சிங்களர்கள் பதாகை பிடித்துக் கொண்டு நின்றது ஆகியவை நடந்தன.
ஆக, நடந்த இனப்படுகொலையைப் பின்னின்று நடத்தியது இந்தியாவின் அன்றைய நடுவணரசு; அந்த நடுவணரசைத் தாங்கிப் பிடித்திருந்தது கருணாநிதி என்ற வகையில் இந்த இனப்படுகொலையில் கருணாநிதியின் பங்கு இன்றியமையாதது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை. அவர் வாக்களித்திருந் தபடி தன் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்திருந்தால் உடனே ஆட்சி கவிழ்ந்திருக்கு ம். ஈழத் தமிழினம் காப்பாற்றப்பட்ட ிருக்கும். ஆனால், அதைச் செய்யாமல் கண்ணெதிரே அத்தனை இலட்சம் உயிர்கள் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட ுவதைக் கை கட்டி வேடிக்கை பார்த்தார் கருணாநிதி. (ஆனால், இதற்கும் நீங்கள் ஒரு பதில் வைத்திருப்பீர்க ள் என்பது தெரியும். ஆனால், முந்திரிக்கொட்ட ைத்தனமாக நான் அதற்கும் இப்பொழுதே பதிலளிக்க விரும்பவில்லை. நீங்கள் சொல்லுங்கள்; அப்புறம் நான் பதில் சொல்கிறேன்).
மற்றபடி, அதே நேரம் அ.தி.மு.க ஆட்சியில் இருந்திருந்தால் ஜெயலலிதா அப்பொழுது என்ன செய்திருப்பார் என்பது நான் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிந்தித்ததுதான் . கண்டிப்பாக அவரும் கருணாநிதியைப் போலத்தான் நடந்து கொண்டிருப்பார் என்பதில் எனக்கு ஐயம் ஏதும் கிடையாது. பொதுவாகவே, ஈழத் தமிழர்களிடத்தில ் அக்கறை கொண்டவரான (அல்லது அப்படிக் காட்டிக் கொள்ள விரும்புகிற) கருணாநிதியே இனப்படுகொலையின் பொழுது அடுத்து நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை தாக்கத்தைச் செலுத்துமா என்று உளவுத்துறை மூலம் ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வந்தார் என்றபொழுது, ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறை இல்லாதவரான ஜெயலலிதா, பொதுவாகவே மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காதவர ான ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அப்பொழுது நடந்து கொண்டிருக்க மாட்டார். ஆனால், அதற்காக அவரை யாரும் தூற்றவும் மாட்டார்கள்தான் . ஆனால், அதற்குக் காரணம், ஜெயலலிதாவிடம் யாரும் அதை எதிர்பார்க்கவில ்லை என்பதுதான். ஏனெனில், ஜெயலலிதா தமிழினத் தலைவர் கிடையாது. அதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! ஜெயலலிதா என்பவர் மக்களைப் பொறுத்த வரை, வெறும் முதல்வர். ஆனால், கருணாநிதி என்பவர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழினத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டவர ். அப்பேர்ப்பட்டவர ், தமிழினம் தன் கண்ணெதிரே அழிந்து கொண்டிருந்தபொழு து, அதைத் தடுக்கும் முழு ஆற்றல் தன் கையில் இருந்தும் அதைச் செயல்படுத்தாமலே விட்டுவிட்டார் என்பதுதான் மக்களின் அளவிடற்கரிய சீற்றத்துக்குக் காரணம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் எடுத்துக்காட்டை க் கூறுகிறேன்.
ஜெயலலிதாவின் ஆட்சி என்பது குழந்தை தனியாக இருக்குமே என்பதற்காகப் பக்கத்து வீட்டுக்காரம்மா வைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவது போன்றது. அந்தம்மாள் பார்த்துக் கொள்ள மட்டும்தான் செய்வார்களே தவிர, அந்தக் குழந்தையைக் காப்பாறத் தியாகம் ஏதும் செய்வார்கள் என யாரும் எதிர்க்க மாட்டார்கள். மாறாக, கருணாநிதி ஆட்சி என்பது சொந்தத் தகப்பன் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்வது போன்றது. அந்த நேரத்தில் குழந்தை உயிர் போகும் ஆபத்தில் சிக்கி, அதைக் காப்பாற்ற முடிந்தும் அவன் அதைச் செய்யாதிருந்தால ் அதற்குப் பெயர் கொடும் துரோகம்!
-தொடரும் (1)...
ஈழப் பிரச்சினை இங்கே தேர்தல்களில் அவ்வளவாக எதிரொலிப்பதில்ல ை என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுதுமே எதிரொலிப்பதில்ல ை எனச் சொல்ல முடியாது. இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபொழு து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-காங்கிர சு கூட்டணி வென்றது என்பது உண்மைதான். அதற்குக் காரணம், மக்களுக்கு அப்பொழுது வேறு வழியில்லை. ஜெயலலிதா காலம் காலமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எதிர்மறையான நிலைப்பாடுகளை வெளிப்படையாகவே எடுத்துக் கொண்டு வந்தவர். இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபொழு தும் அதுவரை ஐன்ஸ்டீன், இராமானுஜம் போன்ற பெரிய மேதைகள் கூடச் சொல்லாத "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்ற அரும்பெரும் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னவர். எனவே, கருணாநிதியின் கைகளை வலுப்படுத்தினால ் ஒருவேளை அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி நம் கையில்தான் என்கிற பாதுகாப்பு உணர்வில் அவர் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றினாலும ் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு. அதனால் அப்படி வாக்களித்தார்கள ். ஆனால், இவர்கள் வெற்றி அறிவிக்கப்பட்டவ ுடனே அங்கே ஈழத்தில் ஒரே நாளில் குண்டுமழை பொழிந்து நாற்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட ்டது, அங்கே குண்டுகள் வெடிப்பதும் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அதே நேரத்தில் இங்கே தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவதும், அதற்குப் பின்னரும் தொடர்ச்சியாகக் கருணாநிதி ஈழப் பிரச்சினையில் செய்து வந்த துரோகங்களும் மக்களை வெறுப்படைய வைத்து விட்டதால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பெரும் சரிவைச் சந்தித்தது. அதை உரிய சான்றுகளோடு நிறுவும் என் பதிவை நீங்கள் இங்கே பார்க்கலாம். (பார்க்க: keetru.com/.../26552-5).
அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி முழுக்கவும் தனிமனிதக் கவர்ச்சி இல்லை என்று நீங்கள் கூறுவதை நான் உளமார ஒப்புக் கொள்கிறேன். நான் சொன்னது, அவர்களுக்கென என்றும் மாறாத வாக்கு வங்கி ஒன்று இருக்கிறது இல்லையா, அதைத்தான். அப்படி ஒன்று தி.மு.க-வுக்கும ் இருக்கிறது. எல்லாக் கட்சிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இருக்கிறது. அதைத்தான் நான் கட்டுரையில் தி.மு.க-வுக்கும ் அ.தி.மு.க-வுக்கும ் இடையில் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். அ.தி.மு.க-வுக்க ுக் குறிப்பிட்ட சில சாதியினரின் வாக்குகள் தொடர்ந்து கிடைக்கக் காரணம் குறிப்பிட்ட அந்தச் சாதியினர் மீது அவர்கள் காட்டி வரும் ஆதரவுப் போக்கும் இன்ன பிற அரசியல் சூழ்நிலைகளும். அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதினால் இன்னும் நிறைய எழுத வேண்டி வரும். சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட வேண்டுமானால், தேவர் சிலைக்கு ஜெ தங்கக் காப்பு சார்த்தியது, வி.சி.க-வைத் தொடர்ந்து தங்களுடன் வைத்திருந்தால் ஆதிக்க சாதியினரின் வாக்குகள் கிடைக்க மாட்டேன்கின்றன என்று கூறித் திருமாவளவனை ஸ்டாலின் விரட்டாத குறையாகக் கூட்டணியிலிருந் து கழற்றி விட்டது ஆகியவற்றைச் சொல்லலாம்.
கட்சி தொடங்குவோர் எல்லோரும் தி.மு.க-வின் இடத்தையே பிடிக்கப் போட்டியிடுகிறா ர்கள் என்ற என் கருத்திலும் தவறு உள்ளது என்று கூறியுள்ள நீங்கள் அதற்கு எடுத்துக்காட்டா க விஜயகாந்தைச் சுட்டிக் காட்டுகிறீர்கள் . எனக்கு எப்படிச் சொல்வதெனவே தெரியவில்லை. இந்த 'எப்பொழுதும்', 'எல்லாரும்' போன்ற வார்த்தைகளை நான் 'வழக்கமாக', 'பொதுவாக', 'பெருவாரியாக' என்கிற பொருட்களில்தாம் பயன்படுத்துகிறே ன். ஆனால், நீங்கள் விதிவிலக்காக ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு வாதிடுகிறீர்கள் . என்ன சொல்ல?
ஆனால் அதற்கடுத்ததாக, "கட்சித் தொடங்கும் பலரும் தி.மு.க-வை நோக்கியே தங்களின் விரலைத் திருப்புகிறார்க ள். அந்த வகையில், அவர்கள் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்து, அ.தி.மு.க-வின் இடத்தைப் பிடிக்கவே போட்டியிடுகிறா ர்கள் என்பது எளிதான உண்மை" என்றிருக்கிறீர் கள். மன்னியுங்கள், இது முற்றிலும் தவறான கோணம்! தி.மு.க-வை நோக்கி விரலை நீட்டுவதன் மூலம் தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய அவர்கள் முயலவில்லை; தி.மு.க-வுக்குப ் போகும் வாக்குகளை அடையவே முயல்கிறார்கள். நாங்கள்தாம் உண்மையான திராவிடக் கட்சி, நாங்கள்தாம் உண்மையான தமிழர் பிரதிநிதி தி.மு.க கிடையாது என்றுதான் அவர்கள் நிறுவ முயல்கிறார்கள். அறிவாலயத்தைக் கைப்பற்ற வைகோ கிளம்பியது, "பிரபாகரன்தான் உண்மையான தமிழர் தலைவர்; கருணாநிதி கிடையாது" எனச் சீமான் முதலான தமிழ்தேசியர்கள் கூறி வருவது என இவையெல்லாவற்றைய ும் ஒருங்கு கூட்டிச் சிந்தித்துப் பார்த்தீர்களானா ல் இவையெல்லாமே கருணாநிதியின் தமிழினத் தலைவர் நாற்காலியைக் குறி வைப்பவைதாமே தவிர, ஜெயலலிதா போன்ற ஒருவரின் இடத்தை அடைவதற்கான முயற்சிகள் அல்ல என்பதை மிக மிக எளிதாக உணரலாம். அதே நேரம், விஜயகாந்த் போன்ற விதிவிலக்குகளும ் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.
தி.மு.க பக்கமுள்ள நியாயத்தைச் சொல்ல வந்தாலே கறுப்பு-சிவப்பு முத்திரை குத்தி விடுகிறார்கள் என்கிறீர்கள். காரணம், அந்தளவுக்கு இளைஞர்கள் அந்தக் கட்சிகளின் மீது அளவு கடந்த வெறுப்பில் இருக்கிறோம். அந்த அளவுக்கு இரு கட்சிகளும் அட்டூழியங்களின் உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலையிலும் மலை மலையாகத் தீமைகளைச் செய்திருக்கும் அவர்கள் பக்கம் கடுகளவு நியாயம் ஒன்றிருந்தாலும் அதையும் பரிசீலிக்க வேண்டும் என உங்களைப் போன்றோர் விரும்புவதும் பரிசீலித்து எழுதுவதும் எங்களைப் போன்றோருக்கு அளவு கடந்த வெறுப்பை வருவிக்கிறது. இப்பேர்ப்பட்ட தவறுகள் புரிந்த அந்தக் கட்சியின் பக்கம் இப்படி ஒரு நியாயத்தைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடியெடுத்து இவர் முன்வைக்கிறார் என்றால், கண்டிப்பாக இவர் அந்தக் கட்சியின் ஆதரவாளர்தான் எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது . அப்படி ஓர் எண்ணத்தில்தான் நானும் அப்படி எழுதி விட்டேன். தவறெனில் மன்னியுங்கள்!
நீங்கள் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தும்பே ாது, அந்த வார்த்தைக்கு நேரடியான இலக்கண அர்த்தம் எதுவோ அதையே மற்றவர்கள் எடுத்துக்கொள்வ ார்கள். ஆனால், உங்கள் மனம்சார்ந்த எந்த அர்த்தத்தில் எழுதியுள்ளீர்கள ் என்பதை மற்றவர்கள் உணவர்வது கடினம்.
40 எம்.பிக்களை வைத்திருந்த திமுக ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால ் ஆட்சி கவிழ்ந்து போர் நின்றிருக்கும் என்கிறீர்கள். நீங்கள் பொதுவாக பல விஷயங்களை நடைமுறை அரசியல் உண்மைகள் மற்றும் சமூக உண்மைகள் சார்ந்து எழுவதைவிட, உங்கள் மனக்கிளர்ச்சி மற்றும் எண்ணங்கள் சார்ந்தே எழுதுவதை கவனிக்க முடிகிறது. கருணாநிதி எப்போது 40 எம்.பிக்களை வைத்திருந்தார்? அவரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் காதர் மொய்தீன் உட்பட வெறும் 16 பேர்களே. பாமக-விடம் 6 பேர். காங்கிரசிடம் 10 பேர். கம்யூனிஸ்டுகளிட ம் 4 பேர். மதிமுக-விடம் 4 பேர். இவர்களில் திமுக வாபஸ் வாங்கியிருந்தால ் மதிமுக வேண்டுமானால் உடன் வந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். பாமக, தன் மகனின் மந்திரிப் பதவியைத் துறந்து வந்திருக்குமா என்பது சந்தேகமே. கம்யூனிஸ்டுகள் தேசிய கட்சி. அவர்களின் ஈழ நிலைப்பாடே வேறானது. ஆக, பாமகவை கணக்கில் வைத்தால்கூட, மொத்தம் 26 பேர்தான். இந்த 26 பேர் வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்திருக்கு மா? அணு ஒப்பந்தம் தொடர்பாக 60க்கும் மேலாக உறுப்பினர்களை வைத்திருந்த கம்யூனிஸ்ட்டுகள ் ஆதரவை வாபஸ் பெற்றபோதே இந்த ஆட்சி கவிழவில்லை. திமுக வாபஸ் வாங்கியிருந்தால ் கவிழ்ந்திருக்கு மா? இந்தப் போரைப் பற்றிய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் போரை அவர்கள் சொன்னபடி சோனியாகாந்தி மட்டுமே தன் விருப்பம் சார்ந்து நடத்தவில்லை. இந்திய பெருமுதலாளிகள் மற்றும் தமிழினத்தின் மீது என்றுமே வெறுப்பைக் கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கம் ஆகியவை இணைந்தே நடத்தின. எனவே, ஒருவேளை சோனியாவே நினைத்திருந்தால ும் இதை தடுத்திருப்பது கடினமே. இலங்கையின் ஒன்றுபட்ட அமைதியான சந்தையைக் கைப்பற்ற வேண்டுமென்பதே இந்தியா உள்பட உலக முதலாளிகளின் நோக்கம். கருணாநிதி தனது அரசியல் நலனை பாதுகாக்க பட்டவர்த்தனமாக நடந்துகொண்டார் என்பது வெளிப்படையான உண்மையே. ஆனாலும் அது அவரின் கையை மீறிய விசயமே. மேலும், இலங்கை விவகாரத்தில் இந்தப் போரை மட்டுமே முன்வைத்து திமுக-வை மதிப்பிடுவதும் தவறு. பல முற்கால நடப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
புலிகள் தலையெடுக்கத் துவங்கிய காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர் ராமச்சந்திரன். புலிகள் அவரிடமே நெருங்கிய நட்பு பாராட்டினர். கருணாநிதிக்கும் அவர்களுக்கு அவ்வளவு சிறப்பான உறவு எப்போதுமே இருந்ததில்லை. அன்றைக்கு இந்திய அரசு புலிகள் உள்ளிட்ட பல போராளிகள் விவகாரத்தில் எந்தளவு தாராளமாக நடந்துகொண்டதோ , அதேயளவுதான் ராமச்சந்திரனும் அளந்துபார்த்து நடந்துகொண்டார் . தேவைப்படும் சூழலில் புலிகளை கைதுசெய்யவும் அவர் தவறவில்லை. ஆனால் இன்று சீமான் உட்பட பலரும் ஏதோ ராமச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால் ஈழம் அமைந்திருக்கும் என்பதுபோல் இந்தியாவைப் பற்றி எண்ணாமல், முற்றிலும் வரலாற்று அறிவு இல்லாமல், போதுமான அறிவற்ற இளைஞர்களை தன் பக்கம் இழுக்க அளந்து விடுகிறார்கள். இதே சீமான்தான், ராமச்சந்திரன் முதல்வரானவுடன், பெரியாருக்கு பாராட்டு விழா நடத்தினார் என்ற அரிய வரலாற்று உண்மையையும் பேசினார். இவர் பின்னால்தான் இளைஞர்கள் செல்கிறார்களா? இவர்தான் தமிழ் தேசிய நாயகரா? அடக் கொடுமையே, தமிழ் தேசியத்திற்கு வந்த சோதனையைப் பார்...! நல்லவேளை ராமச்சந்திரன் 1987ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். கருணாநிதியின் துரதிருஷ்டம் அவருக்கு நேரவில்லை. இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அநியாயத்தை நிச்சயம் நீங்களும் அறிந்திருப்பீர் கள். அந்த அமைதிப்படை வி.பி.சிங் காலத்தில் இந்தியா திரும்பி வந்தபோது அதை வரவேற்க செல்லாமல் கடும் விமர்சனத்திற்கு ஆளானார் அன்றைய முதல்வர் கருணாநிதி. சென்னையில் பத்மநாபா படுகொலை சம்பவம் மற்றும் பலவிதமான சூழல்களை ஒட்டி அரசியல் காட்சிகள் மாறின. காங்கிரசின் ஆதரவில் சந்திரசேகர் பிரதமராக இருந்தார். அதிமுக-வும் காங்கிரசும் நெருக்கமான கூட்டணி கட்சிகள். புலிகளை ஒடுக்க கருணாநிதி அரசு தவறியது மற்றும் சட்டம் ஒழுங்கு சீரழிவு உள்ளிட்ட பம்மாத்து காரணங்களின் அடிப்படையில் கருணாநிதி அரசு 2 ஆண்டுகளில் கலைக்கப்படுகிறத ு (ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே). 13 ஆண்டுகள் காத்திருந்து முதல்வர் பதவியை பிடித்தவர் 2 ஆண்டுகளில் அதை இழக்கிறார். அப்போது புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமே அல்ல.
1991 தேர்தல் பிரச்சாரத்தின்ப ோது ராஜிவ் காந்தி கொல்லப்படுகிறா ர். அந்தக் கொலைக்குப் பிறகு, ஏதோ திமுகதான் திட்டமிட்டு கொலை செய்ததுபோன்று, தமிழகமெங்கும் திமுக-வினர் பலர் கடும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் ஏராளமான உடைமைகள் அழிக்கப்படுகின் றன. மாபெரும் ஒரு அனுதாப அலையை கிளப்பி திமுகவை மோசமாக தோற்கடிக்கின்ற னர். பிறகு ஜெயின் கமிஷன் அறிக்கையின்போத ும், ராஜிவ் கொலையில் திமுக-வை தேவையின்றி வம்புக்கு இழுத்து மத்திய அரசையே கவிழ்த்தார்கள். ஆக, ஈழப்பிரச்சினையி ல் திமுகவின் மீது இத்தனை சங்கிலிகளைப் போட்டு பிணைத்திருக்கிற ார்கள் பலரும். இதையெல்லாம் தாண்டித்தான் திமுக அப்பிரச்சினையில ் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டியுள்ளது. ஏதாவது ஆதரவாக தப்பித்தவறி சொல்லிவிட்டாலு ம்கூட, ராஜிவ் கொலையோடு இணைக்க பலரும் தயாராகவே இருக்கிறார்கள். மேலும், ஈழப்போர் சமயத்தில், திமுக துரோகம் இழைக்கிறது என்று சொன்னவர்கள், அப்பிரச்சினைக்க ு முற்றிலும் தொடர்பே அல்லாத, ஜெயலலிதாவுக்கு ஆதரவு தருகிறார்கள். அதில் சீமான், வைகோ போன்றவர்களும் அடக்கம். சில பெரியார் இயக்கங்கள் கூட ஜெயலலிதாவை ஆதரித்த அபத்தம்கூட நடந்ததாக கேள்விப்பட்டேன ். அத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த எழுச்சித் தமிழர் திருமாவளவன், சோனியாவிடம் சரணாகதி அடைந்தார். ஆனால், அத்தேர்தலிலேயே, ஈழ மக்கள் இறந்த சூட்டோடு சூட்டாக, திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறுகிறது. இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்ட பிறகு, ஒன்றும் தெரியாத மக்களை ஏமாற்ற நினைத்த தலைவரின் கூட்டணி மிகக் குறைந்த இடங்களையே வென்றது. அப்போதே அப்படி எனும்போது, 2014 தேர்தலை எதற்காக கொண்டு வருகிறீர்கள் என்றே தெரியவில்லை. 2011 தேர்தலிலும், 2014 தேர்தலிலும் திமுக தோற்றது முற்றிலும் வேறு காரணங்களால், ஈழப் பிரச்சினைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி உண்மையாக இருந்தால், வைகோ ஏன் தோற்கப் போகிறார்? எனவே உங்கள் கருத்தோடு முழுமையான ஆய்வை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 2016 தேர்தலில்கூட, சில இணைய அறிவாளிகள், திமுக-வின் ஈழ துரோகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றே தங்களின் ஆராய்ச்சி அபத்தத்தைக் காட்டுகிறார்கள் . அப்படியெனில், வைகோவுக்கு ஏன் இந்த பரிதாப நிலைமை? மாபெரும் ஈழ ஆதரவாளராக காட்டிக்கொள்ளு ம் சீமானுக்கு அவர் போட்டியிட்ட கடலூரில் நிலைமை என்னவானது? அப்படியெனில், இன்னொரு பெரிய ஈழ ஆதரவாளராக அறியப்படும் நெடுமாறன்கூட ஒரு அரசியல் கட்சியை தொடங்கிப் போட்டியிட்டால் வென்றுவிடுவாரா? இந்த தேர்தலுக்கும் ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்? இத்தேர்தலில் திமுக 89 இடங்களை பெற்றுள்ளது. அது கூட்டணி கட்சிகளுக்கு அதிகம் கொடுக்காமல் குறைந்தபட்சம் 210 இடங்களில் நின்றிருந்தால் நிலைமையே வேறு. இன்னும் சொல்லப்போனால் , ஈழப் பிரச்சினை என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னும் மக்கள் போராட்டம் சார்ந்த ஒன்றாக வடிவம் எடுக்கவேயில்லை. அது பல இயக்கங்களின் செயல்பாட்டுக்கு ள்தான் முடங்கியுள்ளது. மக்களுக்கு அது ஒரு செய்தி மற்றும் அய்யோ பாவம் என்ற அளவிலேயே இருக்கிறது. 2009ம் ஆண்டு இறுதிப்போரில், ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோ து, தமிழ்நாடு தமிழர்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராடியிருக்கல ாமே? அதைப் பார்த்து, ஆட்சியிலிருந்த திமுக-வும் ஓடி வந்திருக்குமே.. .! இந்தி எதிர்ப்பு போராட்டம் சில காரணங்களால் தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்றது. ஆனால், ஈழம் என்பது தமிழ்நாட்டு பொது தமிழர்களுக்கு இன்னும்கூட, ஒரு பரிதாபப்பட்டுவி ட்டு, தத்தம் வேலையை பார்ப்பதற்காக செல்லக்கூடிய ஒரு சாதாரண உலக நிகழ்வு என்ற அளவில்தான் இருக்கிறது.
மேலும், புலிகள் இந்தளவு மோசமான தோல்வியை சந்தித்ததற்கு தமிழகத்திலிருந் த பல புலி ஆதரவு தலைவர்களே காரணம். அவர்கள், தமிழ் ஈழத்தைப் பெறுதவற்கு, இந்தியாவை சார்ந்திருக்கும ாறு அரசியல்ரீதியாக புலிகளை மிக தவறாக வழிநடத்தியவர்கள ். ஆனால், இவர்களை புலிகளும் நம்பி மோசம் போனார்கள் என்றே நினைக்கிறேன். அதனால்தான் பிரபாகரன்கூட ஒரு பேட்டியில் இந்தியாவை தந்தை நாடு என்று சொல்லி மகிழ்ந்தார். போரின் இறுதிகட்டத்தில் கூட புலிகள் இந்த ஆதரவு தலைவர்களை நம்பி வெம்பி அழிந்தே போனார்கள். ஆனாலும், ஈழம் அழிந்ததற்கு கருணாநிதிதான் காரணம் என்பதே குற்றச்சாட்டு, இந்த ஆதரவு தலைவர்கள் ஈழப்போர் ஓய்ந்த பிறகு, அங்கு அகதிகளாக வைக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களை மீட்பது குறித்தோ அல்லது இன்னமும் அங்கே பல்வேறாக துன்பப்படும், தம் அடையாளங்களை மற்றும் தொழில்களை மற்றும் வாழ்விடங்களை இழந்துவரும் லட்சக்கணக்கானோ ரை காப்பாற்றும் வகையில் செயல்படுவதைவிட, பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா? போன்ற விசயங்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்க ள். இன்றைய நிலையில், ஈழத்தமிழ் மக்கள் படும் அவலங்களை இந்த தலைவர்கள், நமது சீமான் உட்பட, பலரும் ஏறக்குறை மறந்தேவிட்டார்க ள். ஏனென்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பல வேலைகள்...! ஒருவர் சட்டமன்றத்தில் எதற்கும் உதவாத தீர்மானங்களைப் போட்டு தன் இமேஜை அதிகரிக்க முயல்கிறார். அதை ஆகா ஓகோவென்று பல புலி ஆதரவாளர்கள் பாராட்டுகிறார்கள்.
நீங்கள் சில இடங்களில் திமுக 90%க்கும் மேல் கெடுதலை மட்டுமே செய்த கட்சி என்று குறிப்பிட்டுள்ள ீர்கள்? அது எந்த ஆய்வின் அடிப்படையில்? ஒரு தேர்தல் கட்சி என்ற முறையில், திமுக கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் அது செய்த சாதனைகள் எவ்வளவோ உள்ளன. கெடுதலும் பல உள்ளன. ஒரு தேர்தல் கட்சியை ஈழ விவகாரத்தில் மட்டுமே முன்வைத்து, அதுவும் அப்பிரச்சினையால ் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு கட்சியை இந்தளவு விமர்சிப்பது சரியா? நான் திமுக-வின் நன்மைகளை சொன்னால் அதை ஏதோ சாக்கடையில் அரிசியை பொறுக்கும் செயல் என்னும் அளவிற்கு நீங்கள் வர்ணிக்கிறீர்கள ்! உண்மையில் திமுகவின் நன்மைகளை சொல்லி பிரச்சாரம் செய்து என் நேரத்தை செலவழிக்க வேண்டிய தேவையே எனக்கில்லை. அதனால் எனக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. என் பல வேலைகள்தான் கெடுகின்றன. இணையத்திற்கு கட்டும் பணம்தான் வீணாகிறது. ஆனால், அரசியல் அவதூறுகளை தாங்கிக்கொள்ள முடியாமல், அரசியல் துறையில் ஆர்வமுள்ள ஒருவன் என்ற முறையில் நானே முன்வந்து சில விவாதங்களில் கலந்துகொள்கிறே ன், அவ்வளவே. நீங்கள் திமுகவை பற்றி சொல்லியிருப்பத ில் நிறைய உணர்ச்சிவசப்பட் டுள்ளீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. நீங்கள் ஒரு சாதாரண அரசியல் ஆய்வாளராக நின்று பாருங்கள் என்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கி றேன்.
1972 காலகட்டத்திலிரு ந்து ராமச்சந்திரனைத் தவிர, திமுக-வை காலிசெய்ய முயற்சித்த மாற்று சக்திகளை கணக்கெடுத்தோமா னால், ஆரம்பகால வைகோவையும், பாமகவையும் சொல்லலாம், அவ்வளவே. பாமக சில புரட்சிகர கொள்கைகளை தொடக்க காலத்தில் முன்வைத்தது. ஆனால், அது அப்போதும் இப்போதும் தன்னை ஒரு சாதிக் கட்சியாவே அடையாளம் காட்டிக்கொண்டத ு. திமுகவின் வன்னியர் வாக்கு வங்கியில் ஒரு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய கட்சியாக வேண்டுமானால் அதை மதிப்பிடலாம். மற்றபடி, பாமாக-வால் 6% வாக்குகளைக் கூட எப்போதும் தொட முடியாது. மதிமுகவைப் பொறுத்தவரை, 1996 தேர்தலில் வைகோவால் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை. அவர் கருணாநிதியை எதிர்த்து வெளிவந்தபோது பெற்ற திமுக-வினரின் ஆதரவைவிட, மக்களின் ஆதரவை குறைவாகவேப் பெற்றார். இன்று அவரின் நிலைப்பாடுகளால் அவரின் கட்சியே ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. மற்றபடி, கட்சிகளிலிருந்த ு வெளியே வரும் சில அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்ட பல கட்சிகள் அவ்வப்போது காணாமல் போயிவிடுகின்றன . அவைகளால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை. திமுக அல்லது அதிமுக-வை அசைக்கவும் முடிவதில்லை. வழக்கமாக, திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுக-வுக்கும் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுக-வுக்குமே கிடைத்து வருகின்றன. 1991 மற்றும் 1996 தேர்தல்கள் மட்டுமே சற்று விதிவிலக்கு.
இந்த சமீபநாட்களில், திராவிட எதிர்ப்பை தன் அரசியல் மையக்கருத்தாக்க ி, நாம் தமிழர் என்ற கட்சியை நடத்திவரும் சீமான் கணக்கில் கொள்ளப்படுகிறா ர். திராவிட எதிர்ப்பு என்பது தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை, நடைமுறையில் திமுக எதிர்ப்பே. இவர் கட்சிக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. பார்ப்போம், இவர் எந்தளவுக்கு எதிர்காலத்தில் வளர்கிறாரா, திமுக வாக்குகளை பிரிக்கிறாரா அல்லது பழைய கணக்குகளின் அடிப்படையில் இவரும் காணாமல் போய்விடுவாரா? என்று.
நீங்கள் திமுக மட்டுமே கொள்கை அடிப்படையிலான கட்சி. அதனால் அதையே அனைவரும் குறிவைக்கிறார்க ள், ஆனால் அதிமுக-விடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அதன் இடத்தை யாரும் பொருட்படுத்துவ தில்லை மற்றும் பிடிக்கவும் முடியாது என்று சொன்னீர்கள். வைகோ அறிவாலயத்தை கைப்பற்ற கிளம்பியது ஒரு உட்கட்சி விவகாரம். அதை ஏன் இங்கே கொண்டு வருகிறீர்கள்? தமாக மூப்பனார் தலைமையில் பிரிந்தபோது அவர்களால் சத்தியமூர்த்தி பவனை கைப்பற்ற முடிந்தது. ஆனால் குறைவான ஆதரவால் வைகோவால் அறிவாலயத்தை கைப்பற்ற முடியவில்லை. சீமானின் கூற்று எப்போது சொல்லப்பட்டது? கருணாநிதியை தமிழினத் தலைவராக எத்தனை பேர் எப்போது ஏற்றுக் கொண்டார்கள்? அது அவர்களாகவே கொடுத்துக்கொண ்ட பட்டம் என்ற அளவில்தான் உள்ளது. ராமச்சந்திரன் போன்று ஒரு சினிமா ஆளுமையாக வளர்வது முடியாது காரியம் என்பதால், திமுவை போன்று உருவாகலாமா என்று சிலர் நினைக்கிறார்கள் . ஆனால், முயன்று பார்க்கும்போது தான் தெரிகிறது, அது அவ்வளவு எளிதல்ல என்பது. எனவேதான் முயன்று பார்க்கும் பலரும் காணாமல் போய்விடுகிறார் கள். (ராமச்சந்திரனை சினிமாவில் வளர்த்துவிட்டது ம் திமுக-தான் என்பது வேறு கதை). நீங்கள் திமுக பக்கம் கடுகளவு நியாயம் மட்டுமே இருப்பதாக சொல்கிறீர்கள்? அப்படியெனில் மீதி நியாயம் யார் பக்கம் இருக்கிறது? ஒன்றுமட்டும் சொல்கிறேன். திமுகவை பிராண்டி தூற்றுவதுதான் அரசியல் விமர்சனம் என்று கருதினால் அது என்னைப் பொறுத்தவரை மிக மிக தவறு.
திமுக-வின் மீது உங்களைப் போன்றோருக்கும ் பிறருக்கும் இருக்கும் கோபமெல்லாம் நீங்கள் சுத்தமாக பொருட்படுத்தாத அதிமுக-வுக்கே நன்மையாக முடிகிறது. ஆக, எந்த கொள்கையும் இல்லாத, தனிமனித கவர்ச்சியால் மட்டுமே ஒரு கட்சியாக இருக்கிற, ஜனநாயகமோ, கருத்து சுதந்திரமோ சுத்தமாக இல்லாத, வலதுசாரி சிந்தனையுள்ள அதிமுக போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பது ஏற்புடையதா? இணையத்தில் உங்களைப் போன்ற இளைஞர்களால் திமுக-வை குறிவைத்து எழுதப்படும் பல படைப்புகளால், புதிதாக படிக்கவரும் பலரும் இயல்பாகவே அதிமுக சார்பானவர்களாக மாறிவிடுவார்கள் தானே...? பல நெட்டிசன்கள் திமுக-வையோ அல்லது கருணாநிதியையோ எந்த எல்லைக்கும் சென்று தூற்றுவதற்கு ஒரு முக்கிய காரணம், எதிர்நடவடிக்கைக ள் எதுவும் பாயாது என்பதே. அரசியலே சரியாக தெரியாத பல அறிவாளி நெட்டிசன்களுக்க ு அதுவொரு பாதுகாப்பான பொழுதுபோக்கு. ஏனெனில், கருணாநிதி என்ன சொன்னாலும் சகித்துக் கொள்வார். ஆனால், அதிமுக விசயத்தில் ஒரு எல்லையைத் தாண்டினால் நடப்பதே வேறு. இதுதான் இன்றைய இணைய அறிவு உலகின் ஒரு மட்டமான பண்பாடாக இருக்கிறது. இது மாறுமா? என்று பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமிருந்தா ல், thathuvathoothu van.blogspot.in என்ற எனது வலைப்பூ சென்று படித்து கருத்துக்களைப் பகிரவும்.
வார்த்தைகளை நேரடியான இலக்கணப் பொருளில் ஆளுமாறு கூறியிருந்தீர்க ள். உண்மைதான். தொடக்கத்தில் நான் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால், அதனால் சொற்றொடர்களை மிகவும் நீள நீளமாக எழுத வேண்டியிருந்தது . அதனால்தான், ஒரு கருத்தைப் பேச்சில் எப்படிச் சொல்வோமோ, முடிந்தளவுக்கு அதே பாணியில் எழுதவும் செய்வதுதான் நம் எழுத்து நடையை எளிதாகப் புரிய வைக்கும் என்று கருதி இப்படி எழுதத் தொடங்கினேன். ஆனால், சில இடங்களில் இதனால் தவறான பொருள் ஏற்பட்டு விடுகிறது. இனி கவனமாக இருக்கிறேன். நன்றி! மற்றபடி, நீங்கள் பெரியவரோ சிறியவரோ, தவறு என் பக்கமிருந்தால் தயங்காமல் மன்னிப்புக் கேட்பதே என் வழக்கம்.
கருணாநிதியின் கையில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை; அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தி.மு.க முதலான ஆறு கட்சிகளின் கூட்டு எண்ணிக்கை என்பது உண்மைதான். சரியாகச் சொன்னால், அது நாற்பது கூட இல்லை 39-தான். இதே விவாதம் இதற்கு முன் 2014-இல் தீவிர தி.மு.க விரும்பிகளுக்கு ம் எனக்குமிடையில் ஏற்பட்டபொழுது நான் "தி.மு.க கூட்டணியிடம் 39 உறுப்பினர்கள் இருந்தார்கள். எனவே, தி.மு.க விலகிக் கொண்டிருந்தால் மற்ற தமிழ்நாட்டுக் கட்சிகளும் விலகியிருப்பார் கள்" என்றுதான் எழுதினேனே தவிர, அந்த மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தி.மு.க-வினர் என்று எழுதவில்லை. (பார்க்க: facebook.com/.../...). ஆகவே, ஏதோ கவனக்குறைவு காரணமாக அப்படி எழுதி விட்டேனே தவிர, வேறெந்த உள்நோக்கமும் ஆணையாகக் கிடையாது.
வெறும் 26 பேர் பதவி விலகியிருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கு மா என்று கேட்கிறீர்கள். இதைத்தான் மேற்கண்ட அந்த விவாதத்திலும் கேட்டார்கள். இது சிறிதளவும் ஈவிரக்கமற்ற வாதமாகத் தென்படவில்லையா? எதற்காக ஒரு கட்சியை அல்லது கூட்டணியைத் தேர்ந்தெடுத்து மக்கள் நாடாளுமன்றத்துக ்கோ சட்டமன்றத்துக்க ோ அனுப்புகிறார்கள ்? தங்களுக்காகச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தானே ? ஆனால், தங்கள் இனமே அழிகிற நேரத்தில், தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் திரண்டெழுந்து அந்த அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்காகப் போராடுகிற வேளையில், அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஒரு கட்சியின், தலைவரின் கடமை இல்லையா? மாறாக, தான் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அழிவு தொடரத்தான் செய்யும் என்பதற்காகத் தானும் சேர்ந்து அந்த இன அழிப்புக்கு ஒத்துழைக்கத் தொடங்கி விடுவதா? மனித இதயம் படைத்த யாராவது இப்படிச் செய்வார்களா? பதவி விலகல் விவகாரம் இருக்கட்டும்; நீங்களே சொல்கிறீர்கள், கருணாநிதி ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் திசை திருப்பினார் என்று. அதுவே, மாபெரும் துரோகம் இல்லையா? அதுவும் ஒன்றா இரண்டா? மாணவர் போராட்டங்களை ஒடுக்கக் கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தினார்; தன்னை எதிர்த்துப் பேசிய காரணத்துக்காகத் தமிழருவி மணியனை நடுத்தெருவில் நிறுத்தினார்; பாரதிராஜாவை மிரட்டி வீட்டுக்குள்ளேய ே முடங்கச் செய்தார்; அண்டை நாட்டு விவகாரத்தில் ஓரளவுக்கு மேல் நம் நாட்டு அரசால் தலையிட முடியாது என்று நடுவணரசுக்குச் சப்பைக் கட்டுக் கட்டினார்; எல்லாவற்றுக்கும ் உச்சக்கட்டமாக உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று தொடங்கி, இனப்படுகொலை நின்று விட்டதாகப் பொய்யாக அறிவிக்கச் செய்து பதுங்குகுழிகளில ிருந்த தமிழர்களையெல்லா ம் வெளியில் வரச் செய்து சாகடித்தார்! எப்பேர்ப்பட்ட கொடுமைகள் இவையெல்லாம்! "தமிழ்... தமிழ்" என்று காலமெல்லாம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் அந்தத் தமிழினத்தை அழிப்பதற்கே துணை போன ஒருவரை, அவர் கையில் கடிவாளம் இல்லை எனும் ஒரே காரணத்துக்காக மன்னிக்கச் சொல்கிறார்களா? கருணாநிதி கையில் அதிகாரம் இல்லை என்பதே உண்மையாக இருக்கட்டும்; அவர் நடுவணரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தாலும ் எந்த மாற்றமும் ஏற்பட்டிராது என்பதே உண்மை என வைத்துக் கொள்வோம். எனில், இந்தக் கொடுமைகளையெல்லா ம் செய்ய வேண்டிய தேவை என்ன? கேட்டால், நான் உண்மையையும் நடைமுறையையும் கணக்கில் எடுக்காமல் வெறும் என் உள்ளக் கிளர்ச்சியின் அடிப்படையில் பேசுவதாகச் சொல்வீர்கள். ஐயா! தேர்தல் அரசியல் என்பதே மக்களின் உணர்வுகளைச் சரியாகப் பிரதிபலிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற ்கான வேலைதான். அந்த மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஒரு கட்சி தவறும்பொழுது அதனால் ஏற்பட்ட பாதிப்பை எடுத்துரைக்கையி ல் அந்த உணர்வுகளைப் பற்றி விளக்காமல் எப்படிச் சொல்ல முடியும்? அப்படி விளக்கும்பொழுது அந்தக் கருத்தில் உணர்ச்சி வெளிப்படுவதை எப்படித் தவிர்க்க முடியும்?
மேலும், இந்த இனப்படுகொலையை மட்டும் வைத்து நான் தி.மு.க-வை மதிப்பிடவில்லை. முந்தைய காலங்களில், நீங்கள் விவரித்தது போலப் பலமுறை தி.மு.க ஈழத் தமிழர்களுக்காகவ ும் விடுதலைப்புலிகள ை ஆதரித்ததற்காகவு ம் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்திருக்கி றது என்பதை நானும் மனமார ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அன்று அப்படி ஈகங்கள் செய்தார்கள் என்பதற்காக இன்று செய்யும் இந்த துரோகங்களை மன்னிக்க வேண்டும் என்கிறீர்களா? இவற்றையெல்லாம் எடுத்துரைத்து இப்படியெல்லாம் பல சங்கிலிகளைப் போட்டுத் தி.மு.க-வைப் பிணைத்திருப்பதா ல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஈழப் பிரச்சினையில் எந்த ஒரு முடிவையும் தி.மு.க எடுக்க வேண்டியுள்ளது என்கிறீர்கள். இது உங்களுக்கே நியாயமாக இருந்தால் சரி.
தி.மு.க மீதான அன்றைய பழிகளும் குற்றச்சாட்டுகள ும் பழைய கதைகள். 2009-இல் நடந்த இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனால் அவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டிரு ந்தாலோ அல்லது அது போன்ற வேறேதேனும் இழப்பை அவர்கள் சந்திக்க நேர்ந்திருந்தால ோ அதன் காரணமாய் ஏற்படும் அனுதாப அலை தி.மு.க-வுத்தான ் சாதகமாகியிருக்க ும். தமிழ் மக்களிடையே தி.மு.க இன்னும் உயர்வு பெற்றிருக்கும். சீமான் போன்ற புதிய தலைவர்கள் முளைத்திருக்கவே முடியாது. என்னைப் போன்றவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பக்கம் பக்கமாகப் பதிலளித்துக் கொண்டிருக்கவும் தேவையிருக்காது. தி.மு.க-வை எதிர்ப்பது ஆபத்தில்லாத பொழுதுபோக்காக மாறி வருவதாகக் கூறுகிறீர்களே, அதற்கான அடித்தளமே கிடைக்காமல் போயிருக்கும்.
இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்ற 2009 தேர்தலிலேயே தி.மு.க - காங்கிரசு கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்ப ொழுது 2014 தேர்தலில் அந்தக் காரணிக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்று மீண்டும் கேட்டிருக்கிறீர ்கள். அதற்கான பதிலாகத்தான் நான் அந்தத் தேர்தல் முடிவை ஒட்டி எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைத்தேன். நீங்கள் அதைப் படிக்காமலே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டிருக்கிறீர ்கள். வைகோ ஏன் தோற்றார் என்றும் கேட்டிருக்கிறீர ்கள். அதற்கான பதிலும் அதில் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் அதைப் படிக்க விரும்பவில்லை என்பதால் அந்தப் பதில்களை இங்கேயே சொல்லி விடுகிறேன்.
2009 நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டபொழு து வெற்றியடைந்த தி.மு.க, 2014 தேர்தலில் தோற்க ஈழப் பிரச்சினை எப்படிக் காரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் கேட்பது, 2004, 2009 என்று தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி அடைந்த தி.மு.க, இதற்கு முன்பும் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள ் பலவற்றில் சிக்கிக் கொண்டிருந்தபொழு தும் இந்தளவுக்கு முழுத் தோல்வியைச் சந்தித்திராத தி.மு.க, 2014 தேர்தலில் மட்டும் இப்படியொரு படுதோல்வியைத் தழுவியிருக்கிறத ு என்றால் அதற்குக் காரணம் ஈழப் பிரச்சினை தவிர வேறென்னவாக இருக்க முடியும் என்பதுதான். காங்கிரசு மீதாவது மக்களுக்கு ஏராளமான குற்றச்சாட்டுகள ் இருந்தன. ஆனால், தி.மு.க மீது அலைக்கற்றை ஊழலையும், தமிழினத் துரோகத்தையும் தவிர வேறென்ன குற்றச்சாட்டு இருந்தது? ஊழல் குற்றச்சாட்டுகள ைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன தமிழ் மக்கள் இந்த இரண்டில் எந்தக் காரணத்துக்கு முக்கியத்துவத்த ைத் தந்திருப்பார்கள ் என்பது தெரியாததா?
இவை தவிர, இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபொழு து தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியும் குழப்பமுமே மேலோங்கியிருந்த து. காலங்காலமாக ஈழத் தமிழர்களுக்காகக ் குரல் கொடுத்து வந்த கருணாநிதியே ஈழத் தமிழர்களை அழிப்பவர்களின் கூட்டணியில் இருந்தார். ஆக, அவருக்கு மாற்றாக அவர் அளவுக்கு இன்னொருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டது. ஒருபுறம், தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் எதிர்மறை நிலைப்பாடு கொண்ட ஜெயலலிதா. மறுபுறம், ஈழத் தமிழுணர்வு கொண்டவர்களாக இருந்தாலும், பெரிய தலைவர்கள் என்று சொல்ல முடியாத வைகோ, ராமதாஸ். ஆக, கருணாநிதிக்கு மாற்றாக யாரையுமே மக்களால் இனம்காண இயலவில்லை. ஆகையால், மீண்டும் கருணாநிதியையே வெற்றி பெற வைத்தால்தான் காங்கிரசுடன் நேரடி உறவிலிருக்கும் அவரால்தான் அவர்களை வழிக்குக் கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்பியதன் விளைவு - அந்தத் தேர்தல் தீர்ப்பு. மேலும், இன்று நீங்கள் சொல்கிறீர்கள். கருணாநிதியின் தமிழினத் தலைவர் பட்டம் தி.மு.க-வினரே அவருக்குக் கொடுத்ததுதான் என்று. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வாதம் இது என்பது உங்களுக்கே தெரியும். வெளிநாட்டுத் தமிழர்கள் எப்படியோ, ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவருக்குமே 'தமிழினத் தலைவர்' என்ற வார்த்தை கருணாநிதியைத்தா ன் நினைவுபடுத்தியத ு 2009 வரை. அ.தி.மு.க-வுக்க ு வாக்களிப்பவர்கள ை நீங்கள் ஏன் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறீர் கள் என்று கேட்டுப் பார்த்தீர்களானா ல், ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். "ஜெயலலிதா துணிச்சலானவர்", "அரசு ஊழியர்களைக் கறாராக வேலை வாங்கக் கூடியவர்", "கருணாநிதியை விடப் படித்தவர்", "எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்" - இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்வார்கள். ஆனால், ஜெயலலிதாவுக்காக த் தீக்குளிக்கக் கூடிய தொண்டராகவே இருந்தாலும் "அவர் தமிழர் தலைவி. அதனால் வாக்களிக்கிறேன் " என்று சொல்ல மாட்டார். ஆனால் அதுவே, தி.மு.க வாக்காளர்களைக் கேளுங்கள், "நான் தமிழன். அதனால் தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறேன் " என ஒரே வரியில் முடித்து விடுவார்கள். தி.மு.க வாக்காளர்கள் மட்டுமில்லை, தமிழ்ப் பற்று, தமிழர் எனும் உணர்வு கொண்ட எந்த ஒரு மனிதரை நீங்கள் கேட்டாலும் அவர், ஒன்று - கருணாநிதிதான் என்றும் தமிழினத் தலைவர் என்பார் அல்லது 2009-க்கு முன்பு வரை கருணாநிதியைத் தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தவராய ் இருந்திருப்பார் . அந்த அளவுக்குக் கருணாநிதிதான் தமிழினத் தலைவர் என்பது மொத்தத் தமிழ்நாட்டு மக்களிடையிலும் நிலைபெற்ற உண்மை.
அப்படிப்பட்ட மக்கள் போயும் போயும் ஊழல் குற்றச்சாட்டுக் காகவோ குடும்ப அரசியலுக்காகவோ கருணாநிதியை 2014 தேர்தலில் தோற்கடித்தார்கள ் என்றால் அது நம்பக்கூடியதா? அவையும் காரணம்தான், நான் மறுக்கவில்லை. ஆனால், இந்த ஊழல் குற்றச்சாட்டுகள ும் குடும்ப அரசியல் பற்றிய குற்றச்சாட்டுகள ும் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. ஆனாலும், அப்பொழுதெல்லாம் அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, ஆயிரம் இருந்தாலும் கருணாநிதி என்கிற தமிழினத் தலைவருக்கு, தி.மு.க என்கிற தமிழர் பிரதிநிதித்துவக ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில ் உரிய இடத்தைத் தருவதுதான் இந்தியா போன்ற ஒரு நாட்டில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்று கருதித் தொடர்ந்து தி.மு.க-வுக்கு நாடாளுமன்றத்தில ் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்த மக்களுக்கு 2014-இல் மட்டும் இந்தக் குற்றச்சாட்டுகள ் பெரிதாகத் தெரிகின்றன என்றால், அதற்குக் காரணம் கருணாநிதியும் தி.மு.க-வும் தமிழர் பிரதிநிதிகள் என்கிற நம்பிக்கை மக்களுக்குப் போய் அவர்களும் சாதாரண அரசியல் பிரதிநிதிகளாக மக்கள் கண்ணுக்குத் தென்படத் தொடங்கி விட்டதுதான் என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
- தொடரும் (1)...
2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோற்கக் காரணம் அவருடைய தவறான கூட்டணி. "ஈழப் பிரச்சினையில் வாஜ்பாயின் நிலைப்பாட்டையே பின்பற்றுவதாக மோடி உறுதியளித்துள்ள ார்" என்று கூறி அவர்களுடன் கூட்டணி வைத்தார் வைகோ. ஆனால், தேர்தலுக்கு ஓரிரு வாரங்கள் கூட முழுதாக இல்லாத நிலையில் "தனி ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை" என்று அறிவித்தார் வெங்கையா நாயுடு. வாஜ்பாயின் நிலைப்பாட்டுக்க ும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை; வைகோ சொன்னதன் பொருள் இஃது இல்லை என்றாலும் பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இஃது ஈழத்துக்கு எதிரான அறிக்கையாகவே தென்பட்டது. எனவே, 'தனி ஈழத்துக்கான தீர்மானம்', இலங்கை மீது பன்னாட்டு விசாராணைக்கான தீர்மானம்' போன்றவற்றை நிறைவேற்றி ஈழப் பிரச்சினையில் தீவிர ஆதரவாளராகக் காட்டிக் கொண்ட ஜெ அப்பொழுது தமிழ்நாட்டு முதல்வராகவும் இருந்ததால் அவருக்கு வாக்களிப்பதுதான ் புத்திசாலித்தனம ் என்று மக்கள் நினைத்தார்கள். மேலும், ஈழ ஆதரவாளர்களில் புதியவராக முளைத்து மிகக் குறுகிய காலக்கட்டத்தில் இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றிருந்த சீமானின் பரப்புரையும் அப்பொழுது வைகோவுக்கு எதிராகவும் அ.தி.மு.க-வுக்க ு ஆதரவாகவுமே அமைந்திருந்தது. இவை எல்லாவற்றுக்கும ் மேலாக, ஜெ-வின் 'மோடியா லேடியா' எனும் முழக்கம் நன்றாகவே எடுபட்டது. யார் எவர் என்றே தெரியாத யாரோ ஒரு மோடிக்கு வாக்களிப்பதை விட நல்லவரோ கெட்டவரோ தமிழரோ கன்னடரோ, நமக்கு நன்கு அறிமுகமான ஜெயலலிதா பிரதமராக வாக்களிப்பது நல்லதுதானே என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள் - ஈழ ஆதரவாளர்கள் உட்பட. அதில் எந்தத் தவறும் இல்லை. ஆகவே, அ.தி.மு.க வென்றது. வைகோ தோற்றார். ஆக, அந்தத் தேர்தலில், தி.மு.க வென்றதற்கும் சரி, வைகோ தோற்றதற்கும் சரி ஈழப் பிரச்சினை வலுவான காரணமாக இருந்தது என்பதே என் பார்வை. ஆனாலும், ஈழப் பிரச்சினைதான் முதன்மையான காரணம் என்று சொல்ல மாட்டேன். அதுவும் ஒரு காரணம். எல்லாவற்றையும் விட, முந்தைய எந்தத் தேர்தலைக் காட்டிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை மிகப் பெரிய அளவில் பரப்புரைகளில் பேசப்பட்டது. 2009 தேர்தலிலும் அப்படிப் பேசப்பட்டது என்றாலும், கருணாநிதி அதுவரை இல்லாதபடி ஈழத் தமிழர்களுக்கு எதிராக அப்படி ஒரு நிலைப்பாட்டை அப்பொழுதுதான் எடுத்திருந்தார் என்பதால் அத்தனை ஆண்டுகளாகக் கருணாநிதியை நம்பிய தமிழ் மக்களால் உடனே அது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. "கருணாநிதி தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார். உடனடியாக அவரைத் தூக்கயெறிந்து விட்டு அடுத்து வேறு ஒருவரைத் தேட வேண்டியதுதான்" என்று சட்டென மாற மக்களால் முடியவில்லை. ஆகவே, 2009 தேர்தலில் ஈழ துரோகம் பற்றிய அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள ் ஓரளவுக்கு மேல் எடுபடவில்லை. ஆனால், 2014-இல் நிலைமை அப்படியில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பளித்தும் ஈழத் தமிழர்கள் உயிரையும் மானத்தையும் தன் கால் தூசியளவு கூடக் கருணாநிதி மதிக்கவில்லை என்றறிந்ததும் அந்த ஐந்து ஆண்டு இடைவெளியும் அந்த ஐந்தாண்டுக்கால விழிப்புணர்வுப் பரப்புரைகளும் மக்கள் மனதில் நன்கு பதிந்தன. ஆதலால், அதுவும் ஒரு காரணியாகத் தேர்தலில் எதிரொலித்தது.
2009 தேர்தல் நேரத்தில் மக்கள் ஏன் போராடவில்லை என்று கேட்டிருக்கிறீர ்கள். அப்படிப் போராடியிருந்தால ் தி.மு.க-வும் போராடியிருக்கும ் என்கிறீர்கள். மனச்சான்றோடுதான ் பேசுகிறீர்களா எனத் தெரியவில்லை. மக்கள் போராடவில்லையா? 2009-இல் நடந்த அளவுக்கு அத்தனை தரப்பினரும் போராடிய ஒரு விதயம் அதற்கு முன் வேறேதாவது இருந்திருக்குமா என்று தெரியவில்லை. எதற்காகவுமே வீதிக்கு வராத, தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிற, சமூகம் பற்றிய அக்கறையேயில்லாத மனிதர்கள் என்று வருணிக்கப்படுகி ற தகவல் தொழில்நுட்பத்து றை இளைஞர்கள் முதல் சமூகத்தின் அடிக்கீழ் மட்டத்தில் இருப்பவர்களான மூன்றாம் பாலினர் வரை அத்தனை பேரும் அன்றாடம் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டே இருந்த வேளை அது. திரைப்படத் துறையினர், பல்வேறு அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் இயக்கங்கள், மாணவர்கள் என்று போராடாதவர்களே இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இதனோடு ஒப்பிட்டுக் காட்டுகிறீர்கள் . இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கூட மாணவர்களும் இளைஞர்களும் மட்டும்தான் கலந்து கொண்டதாகத்தான் நான் கேள்விப்பட்டிரு க்கிறேன். இப்படி எல்லாத் துறையினரும் துறைவாரியாகத் தொடர்ந்து போராட்டங்களும் மறியல்களும் பேரணிகளும் பொதுக்கூட்டங்கள ும் நடத்தியதாக நான் அறியவில்லை. நடந்த அத்தனை போராட்டங்களையும ் அடக்கி ஒடுக்கியவர் கருணாநிதி. மாணவர் போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடித்தபொழுது கல்லூரிகளை மூடுவதன் மூலம் அவர்கள் ஒருங்கிணைய முடியாமல் தடுத்தவர் கருணாநிதி. உடனே, ஏன் அவர்கள் வேறு வழியில் ஒருங்கிணைந்திரு க்கவே முடியாதா என்று கேட்பீர்கள். அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். காரணம், மாணவர்கள் மூலம் செய்திகளில் வந்த தகவலாகத்தான் நான் இதை அறிய முடிந்தது. குளிரூட்டப்பட்ட அறையில் கணினி முன் அமர்ந்து கொண்டு நீங்களும் நானும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், எந்த ஒன்றையும் செயல்பாட்டுக்கு க் கொண்டு வரும்பொழுது இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை அவரவரே அறிவர். எனவே, வரலாறு காணாத வகையில் எல்லாத் தரப்பினரும் போராடியும் அனைத்தையும் கருணாநிதி ஒடுக்கிவிட்ட பிறகும் மக்கள் ஏன் போராடவில்லை என்று நீங்கள் கேட்பதாயிருந்தா ல் இந்தக் கேள்வி நியாயமானதுதானா என நீங்களே முடிவு செய்து கொள்ளுமாறு விட்டுவிடுவதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.
மேலும், கருணாநிதி இத்தனை தவறுகள் செய்திருக்க, இவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு நடந்த கொடிய முடிவுக்குக் காரணம் ஈழ ஆதரவுத் தலைவர்கள் என்கிறீர்கள் நீங்கள். இந்த இடத்தில் ஒரு விதயத்தை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்! மே 17, 2009 வரை ஈழ ஆதரவுத் தலைவர் என்கிற பட்டியலில் கருணாநிதியும் ஒருவர் என்பதுதான் அது. எனவே, ஈழ ஆதரவுத் தலைவர்கள் என்கிற பெயரால் நீங்கள் குற்றஞ்சாட்டுவத ாக இருந்தால் ஈழ இனப்படுகொலையைப் பொறுத்த வரை அது கருணாநிதியையும் சேர்த்துத்தான் குறிக்கும்.
தவிர, இனப்படுகொலையின் இறுதி நிமிடம் வரை, ஈழ விவகாரத்தில் கருணாநிதிதான் தமிழர் தரப்பிலிருந்து முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்பதுதான் உண்மை. கனிமொழிக்கும் தன் கணவர் எழிலன் (எ) சசிதரனுக்கும் இடையே செயற்கைக்கோள் வழிப் பேச்சு நடைபெற்றதாகவும் கனிமொழியுடன் பேசிய பிறகுதான் சரணடையும் முடிவையே விடுதலைப்புலிகள ் எடுத்ததாகவும் அண்மையில் விடுதலைப்புலிகள ் அமைப்பின் முதன்மைப் பொறுப்பில் இருந்த சசிதரனின் மனைவி கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர் கள். ஆக, விடுதலைப்புலிகள ைத் தவறாக வழிநடத்தியது இதர ஈழ ஆதரவுத் தலைவர்களா அல்லது ஈழ ஆதரவுத் தலைவர்களில் தலைமையிடத்தில் இருந்த கருணாநிதியா என்பதை அருள் கூர்ந்து நீங்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
மேலும், தி.மு.க 90% தீமை மட்டுமே செய்த கட்சி என்று நான் சொல்லியிருப்பதா கக் கூறியுள்ளீர்கள் . உண்மைதான். ஆனால், நான் பார்க்கும் விழுக்காட்டின் தன்மை வேறு; நீங்கள் பார்க்கும் விழுக்காட்டின் தன்மை வேறு. நீங்கள் தி.மு.க எத்தனை எத்தனை நன்மைகளையெல்லாம ் செய்திருக்கிறது என்கிற எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த விழுக்காட்டைக் கணக்கிடுகிறீர்க ள். நான் ஈழப் பிரச்சினை முதலான தீமைகளை மட்டுமே கணக்கில் கொள்கிறேன். நன்மைகள் அனைத்தையும் மறந்துவிட்டுத் தீமைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது சரியா எனும் கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இது தவறுதான். ஆனால், செய்த நன்மைகளால் ஏற்பட்ட விளைவுகளின் தீவிரம் கூடுதலா இந்தத் தீமையினால் ஏற்பட்ட விளைவுகளின் தீவிரம் கூடுதலா என்ற அடிப்படையில் நான் இதை அணுகுகிறேன். மேம்பாலங்கள் கட்டியது, சமத்துவபுரத் திட்டம் தீட்டியது, சாதிய எதிர்ப்புணர்வை மக்கள் மனத்தில் தொடர்ந்து தக்க வைத்தது, எல்லா வகையான ஊடகங்களையும் தமிழில் வளர்த்தெடுத்தது என எத்தனையோ பல நன்மைகளைத் தி.மு.க செய்திருக்கிறது என்பதை நான் மறக்கவில்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், காவிரியை மீட்டுத் தர முழுமையான அளவில் முயற்சி எடுக்காதது, அண்டை மாநிலங்களுடனான உறவைத் தக்க வைத்துக் கொள்ள முயன்ற அளவுக்கு அவர்களிடமிருந்த ு நம் உரிமையைப் பெற உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளாதது, தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நொடங்க இசைவளித்தது, மதுவிலக்கை விலக்கியது - இப்படி எத்தனையோ தீமைகளையும் தி.மு.க செய்திருக்கிறது . இவை அனைத்துக்கும் உச்சக்கட்டமாக இருப்பது ஈழ துரோகம். மேற்படி, எல்லாக் குற்றங் குறைகளையும் மன்னிக்க முடிந்த என்னால் என்னைப் போன்ற மற்றவர்களால் கடைசிக் குற்றத்தை மன்னிக்க முடியவில்லை. காரணம், மற்றவையெல்லாம் நிர்வாகரீதியிலா ன, ஆட்சியில் இருப்பவர்களுக்க ேயுரிய தன்னலம் காரணமான இது போன்ற இன்ன பிற காரணங்களின் அடிப்படையிலான தவறுகள். ஆனால், ஈழ துரோகம் என்பது தி.மு.க-வை எந்தக் காரணத்துக்காக நான் விரும்பினேனோ அந்த அடித்தளத்தையே தகர்த்து விட்டது. நாட்டில் காங்கிரசு, பா.ஜ.க, இடதுசாரிகள் என எத்தனையோ தேசியக் கட்சிகள் இருக்க இந்த நாட்டுக் குடிமகனாகிய நான் தி.மு.க என்கிற ஒரு மாநிலக் கட்சிக்கு வாக்களிக்கிறேன் , ஆதரவளிக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அது என் இனத்துக்கு, என் சமூகத்துக்கு என இருந்த தனிப்பட்ட ஒரு கட்சி; என் சமூகத்தையும் இனத்தையும் பிரதிநிதித்துவப ்படுத்தும் கட்சி என்பதால்தான். ஆனால், என் இனமே அழிந்தபொழுதும் எப்பொழுது அந்தக் கட்சி அதற்காகக் குரல் எழுப்பவில்லையோ அப்பொழுதே அந்தக் கட்சி எனக்கானதில்லை என ஆகி விடுகிறது. அதற்குப் பின்பும் நான் அந்தக் கட்சியுடன் என்னைத் தொடர்புபடுத்திக ் கொண்டிருப்பதில் எந்தவிதமான பொருளும் இல்லை என்பது என் கருத்து மட்டுமில்லை, காய்தல் உவத்தலின்றி இயல்பாகச் சிந்திக்கக் கூடிய அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
கடைசி வரிகளில், தி.மு.க-வைப் பற்றிப் பரப்புரை செய்ய வேண்டிய தேவை உங்களுக்கில்லை என்று கூறியிருந்தீர்க ள். அதே போலத்தான் நானும். தி.மு.க-வை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை. மாறாக, தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிடமிருந் து இனி வரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும் எனும் ஆர்வம் காரணமாக எழுதிக் கொண்டிருக்கிறேன ், அவ்வளவுதான். இப்பொழுதும் கருணாநிதி நினைத்தால், நடுவணரசுகளையோ தேர்தல் அரசியலையோ நம்பாமல் அதை ஒரு பக்கம் தன்பாட்டுக்குச் செய்து கொண்டே மறுபுறம் இவை எதையும் சாராமல் வேறு வழிகளில் மிகப் பெரிய அளவில் சில முயற்சிகளைச் செய்து தமிழீழம் தொடர்பாக நல்ல திருப்புமுனைகளை ஏற்படுத்த இயலும். நான் மேலே பட்டியலிட்ட தமிழ்நாட்டளவிலா ன தன் முந்தைய ஆட்சித் தவறுகளையும் இனி ஆட்சி அமைக்க வாய்ப்புக் கிடைக்கையில் திருத்திக் கொள்ள முடியும். அவற்றையெல்லாம் கருணாநிதி செய்யட்டும். நான் மீண்டும் தி.மு.க-வுக்குக ் கொடி பிடிக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம் அவர் செய்ய மாட்டார். ஸ்டாலினும் செய்ய மாட்டார். காரணம், அவற்றை விட முதன்மையான பல வேலைகள் அவர்களுக்கு இருக்கின்றன.
- தொடரும் (2)...
கருத்துரை இரண்டில் சிலவற்றைச் சொல்லத் தவறி விட்டேன்.
நடந்த இனப்படுகொலையை சோனியா தன் விருப்பம் சார்ந்து நடத்தவில்லை என்றிருக்கிறீர் கள். நான் ஊடகங்கள் மூலமாகவும் சக மனிதர்கள் வாயிலாகவும் அறிந்த செய்திகளின், கருத்துக்களின் அடிப்படையில் ஏதாவது சொன்னால் எந்த ஆய்வின் அடிப்படையில் இப்படிச் சொல்கிறேன் எனக் கேட்கிறீர்கள். விக்கிலீக்சிலிர ுந்தே சான்றுடன் ஒரு கருத்தை முன்வைத்தால் அஃது ஒருபுறம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு "சோனியா தன் விருப்பம் சார்ந்து இந்தப் போரை நடத்தவில்லை" என்று எந்தவிதச் சான்றும் இன்றி நீங்களாக ஒரு கருத்தை முன்வைக்கிறீர்க ள். இது என்ன நியாயம்?
சரி, நீங்கள் சொல்வது சரியெனவே வைத்துக் கொள்வோம். சோனியா தன் விருப்பம் சார்ந்து இந்தப் போரை நடத்தவில்லை எனில் "இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் தமிழினத்தின் மீது என்றுமே வெறுப்பைக் கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கம் ஆகியவை இணைந்தே நடத்தின" என்ற உங்கள் கூற்றில் 'தமிழினத்தின் மீது என்றுமே வெறுப்பைக் கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கம்' எனும் வருணனை யாரைக் குறிக்கிறது? அன்றைய நாளில் காங்கிரசுதான் ஆட்சியிலிருந்தத ு எனும்பொழுது இந்த வார்த்தைகள் அவர்களைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும்? தமிழினத்தின் மீது என்றுமே வெறுப்பைக் கொண்டவர்கள் காங்கிரசார் மட்டுமில்லை, இந்திய அதிகார வர்க்கத்தினர் பலரும்தாம் என்றாலும், அன்றைய நாளில் இந்திய அதிகார வர்க்கத்தினராய் அமர்ந்திருந்தவர ்கள் காங்கிரசாரும் அதன் தலைவி சோனியா காந்தியும்தானே? இவர்களைத் தவிர்த்து இந்த வார்த்தை வேறு யாரைக் குறிக்கும் என்பது எனக்குப் புரியவில்லையே!
ஒன்றுபட்ட, அமைதியான இலங்கையின் சந்தையைக் கைப்பற்ற உலகப் பெருமுதலாளிகள் பலரும் ஆர்வம் கொண்டிருந்தார்க ள் என்பது உண்மைதான். அரசுகளைப் பின்னின்று இயக்குபவர்களே அவர்கள்தாம் என்பதும் சரியே. ஆனால், அதற்காக இந்தப் போரை வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தியவர்களே அவர்கள்தாம் என்கிற அளவுக்கு நீங்கள் எழுதியிருப்பது அபத்தமாக இல்லையா?
இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், தமிழர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் சட்டங்கள் இடுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சிங்களர்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதை ஓர் உத்தியாகவே வெகு காலமாக இலங்கை அதிபர்கள் பலரும் கையாண்டு வந்ததை உணரலாம். அதன் உச்சக் கட்டமாக, விடுதலைப்புலிகள ை ஒழித்துக் கட்டித் தமிழ் இனத்தையே பெரிய அளவில் அழித்துக் காட்டினால் நிரந்தரமான செல்வாக்கை சிங்களர்களிடையி ல் பெறலாம் என்ற குரூரப் பேராசையால் இராசபக்ச அமெரிக்காவை முதலில் அணுகினான். செப்டம்பர் 2011 இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பிறகு உலக அளவில் தீவிரவாதக் குழுக்களை ஒழிப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பது போல நடந்து கொண்ட அமெரிக்காவின் புதிய முகமூடி இராசபக்சவுக்கு சாதகமாகிப் போனது. "எங்கள் நாட்டிலும் பெரிய தீவிரவாதக் குழு (விடுதலைப்புலிக ள்) ஒன்று இருக்கிறது. என்னால் அவர்களை சமாளிக்கவே முடியவில்லை. ஆதரவு தாருங்கள்" என்ற இராசபக்சவின் நீலிக் கண்ணீருக்கு மதிப்புக் கிடைத்தது. தொடர்ந்து இங்கிலாந்தும் உள்ளே வந்தது. மனித உரிமை முகமூடியைக் காப்பாற்றிக் கொள்ள நாளும் போராடும் நேச நாடுகளே அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் இறங்கிய பிறகு, உலகில் எங்கு அட்டூழியம் நடந்தாலும் அட்டூழியம் செய்பவர்களுக்கே ஆதரவளிக்கும் இரசியா, சீனா ஆகியவற்றை இழுத்து வருவதில் இராசபக்சவுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆனால், ஆயிரம் பேர் ஆதரவளித்தாலும், அண்டை நாடு என்கிற முறையில் ஐ.நா சட்டப்படி இந்தியா நினைத்தால் இதில் நேரடியாகத் தலையிட முடியும் என்பதால் நியாயமாக இராசபக்சவுக்கு அச்சம் வந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான காங்கிரசு ஆட்சியிலிருந்தத ு அவனுக்கு மாபெரும் நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. இதுதான் நடந்த இனப்படுகொலை பற்றி அரசியல் விமர்சகர்களும், புவிசார் அரசியல் வல்லுநர்களும், நடுநிலை ஊடகங்களும் தொடர்ந்து கூறி வரும் உண்மை. ஆனால், நீங்களோ போரை நடத்தியதே இந்திய, உலகப் பெருமுதலாளிகள்த ாம் என்கிறீர்கள்! இது எந்தளவுக்குச் சரி என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
அப்படியே நீங்கள் கூறுபவையெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அதன் மூலம் நீங்கள் சோனியாவை எப்படி நியாயப்படுத்த முடியும் என்பது விளங்கவில்லை. பெருமுதலாளிகளுக ்காகவோ அல்லது அது போன்ற வேறு யாருக்காகவோ அரசு நடத்துவதில்லை ஆளுங்கட்சியின் வேலை. மக்களுக்காக அரசை நடத்துவதுதான் அவர்கள் கடமை. அதை விட்டுவிட்டு பெருமுதலாளிகளுக ்கோ அல்லது அவர்களைப் போன்ற வேறு யாருக்கோ விலைபோய் அதன் காரணமாகத் தமிழர்களை அவர்கள் அழித்தொழித்ததை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஒரு தவற்றின் மூலம் இன்னொரு தவற்றை எப்படி நியாயப்படுத்த முடியும்? மக்களுக்காக அரசு நடத்தாமல் பெருமுதலாளிகளுக ்காக அரசு நடத்துவது என்பதே தவறு. அந்தத் தவற்றைச் செய்ததனால்தானே அவர்கள் இனப்படுகொலைக்கா க அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டி வந்தது என்று சொல்வது எப்படி சரியான சமாதானமாக இருக்க முடியும்? ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கப் போனவன் அந்த வீட்டுக்காரனையு ம் கொன்று விட்டு வந்தால், கொள்ளையடிக்கப் போனதால்தானே கொலை செய்ய வேண்டி வந்தது? இல்லாவிட்டால், அந்த வீட்டுக்காரனைத் தேடிப் போய்க் கொல்ல இவனுக்கு என்ன கட்டாயம் இருக்கிறது எனச் சொல்ல முடியுமா? அப்படித்தான் இருக்கிறது நீங்கள் கூறும் சமாதானமும்.
புலிகள் விவகாரத்தில் எம்.ஜி.ஆர் அளந்துதான் நடந்து கொண்டார் என்கிறீர்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் மனம் வந்து சொல்கிறீர்களோ தெரியவில்லை. எம்.ஜி.ஆர் காலத்துப் பழைய அரசியல் செய்திகளெல்லாம் எனக்கு அவ்வளவாகத் தெரியாதுதான். ஆனால், பல விதயங்கள் சான்றுகளுடன் இன்று இணையத்தில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. விடுதலைப்புலிகள ுக்கு அந்தக் காலத்திலேயே தன் சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இப்படி, விடுதலைப்புலிகள ் இயக்கத்துக்குப் பலமுறை நிதியளித்து அவர் உதவியதுண்டு. நிதி மட்டுமின்றி, அரசியல்ரீதியான தன் செல்வாக்கைப் பயன்படுத்தியும் பல உதவிகளை அவர் அந்த இயக்கத்துக்குச் செய்திருக்கிறார ். அப்படி ஒருமுறை பெரிய ஆயுதச் சரக்கை நல்லபடி அந்த இயக்கம் பெற்றுக் கொள்ள உதவியதால் பிரபாகரன் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அந்த ஆயுதங்களிலிருந் தே ஏ.கே 47 துப்பாக்கி ஒன்றைப் பரிசளித்ததும் அதை எப்பொழுதும் எம்.ஜி.ஆர் தன் தலையணைகளுக்கு அடியில் தன் பாதுகாப்புக்கு வைத்திருந்ததும் புகழ் பெற்ற செய்தி. இன்னும் இன்னும் எப்படியெல்லாம் விடுதலைப்புலிகள ் இயக்கத்துக்கு எம்.ஜி.ஆர் உதவினார் என்பது பற்றிப் பல செய்திகள் பல்வேறு நூல்களிலிருந்து சான்றுகளுடன் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. அப்படியெல்லாம் செய்ததால்தான் மாவீரர் நாளில் தாங்கள் வழிபடும் பெரியவர்களின் படங்களுடைய வரிசையில் எம்.ஜி.ஆர் படத்தையும் வைத்து வணங்கினார்கள் விடுதலைப்புலிகள ். நேரமிருந்தால் குறிப்பிட்ட இணையச் செய்திகளைப் படித்துப் பாருங்கள்! அதன் பின் கருணாநிதி ஈழத்துக்குச் செய்தவை பெரியவையா அல்லது எம்.ஜி.ஆர் செய்தவை பெரியவையா என நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்!
- தொடரும் (3)...
தி.மு.க-வின் இடத்தைக் கைப்பற்ற மற்ற கட்சிகள் முனைவது பற்றிய உங்கள் கருத்துரைக்கு இப்பொழுது பதிலளிக்க விரும்புகிறேன்.
"திமுக-வை தாக்குவதால் அதற்கு செல்லும் வாக்குகளை கைப்பற்ற முனைகிறார்கள் என்ற உங்களின் ஒரு அரசியல் வியூக விளக்கத்தை நான் முற்றிலும் நிராகரிக்கவில்ல ை" என்று கூறியிருந்தீர்க ள். சிறு திருத்தம்! அது அந்தக் கட்சிகளின் அரசியல் வியூகம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. ஒருவேளை அப்படிப் பொருள்படுபடியாக ச் சொல்லியிருந்தால ், அது தவறு. ஏனெனில், தி.மு.க தவறு செய்வதால்தான் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை மற்றவர்களுக்கு எழுகிறது. மாறாக, வேண்டுமென்றே தி.மு.க மீது குறை சொல்லி அதன் மூலம் அந்த இடத்தைப் பிடிக்க இங்கு யாரும் முயல்வதாகத் தெரியவில்லை.
நான் சொன்ன அந்தக் காரணம் சரியென்றே வைத்துக் கொண்டாலும் நடைமுறையளவில் அது தவறான விளைவையே தருவதாக நிறையத் தகவல்களுடன் விளக்கமளித்திரு ந்தீர்கள். அவற்றில் பெரும்பாலானவை நான் அறியாத அல்லது மேலோட்டமாக மட்டுமே அறிந்த தகவல்கள். எனவே, அவற்றுக்காக முதலில் நன்றி! ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒரு கோட்பாடு அதனளவில் சரியானதாக இருந்து, நடைமுறையில் தவறான விளைவைத் தருகிறது எனில், தவறான விளைவைத் தராதபடியாக அதை நடைமுறைப்படுத்த ுவது சரியா அல்லது தவறான விளைவு ஏற்படுகிறது என்பதற்காகச் சரியான ஒரு கோட்பாட்டை அப்படியே கைவிட்டு விடுவது என்பது சரியா?
மீண்டும் சொல்கிறேன் தி.மு.க-வை யாரும் வேண்டுமெனவே எதிர்க்கவில்லை. அவர்கள் செய்த தவறுகள் காரணமாகத்தான் எதிர்க்கிறார்கள ். அதே நேரம், தி.மு.க-வை மட்டும் எதிர்க்கிறார்கள ா என்றால் இல்லை, அ.தி.மு.க-வையும ் சேர்த்துத்தான் எதிர்க்கிறார்கள ். ஆனால், தங்கள் கட்சியை மட்டுமே குறை சொல்வதாகத்தான் இரு கட்சிகளுமே கருதுகின்றன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ தி.மு.க-வை மட்டுமே எதிர்க்கிறார்; அ.தி.மு.க-வை எதிர்க்கவேயில்ல ை; ஆகவே, அவர் ஜெ-விடம் பணம் வாங்கி விட்டார் என்று பழி சுமத்தினார்கள். ஆனால், இந்தத் தேர்தலின் தொடக்கத்திலிருந ்து இறுதி வரை பரபரப்பாகப் பேசப்பட்ட கொள்கலன் ஊர்திக் (container lorry) குற்றச்சாட்டை முதன்முதலில் கூறியவரே வைகோதான். அது மிகப் பெரிய பரபரப்புக் குற்றச்சாட்டு என்பதால் எல்லா ஊடகங்களிலும் வைகோ இப்படிச் சொன்னார் என்று வெளிவந்தது. ஆனால், போகப் போக அஃது ஏதோ ஊடகங்களே கண்டுபிடித்த உண்மை போல ஒரு பொத்தாம் பொதுவான செய்தியாகத்தான் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. ஜெ-வுக்கு எதிராக அவ்வளவு பெரிய குற்றச்சாட்டைச் சுமத்தியவரே அவர்தான், அந்த உண்மையை வெளிக்கொண்டு வந்தவரே அவர்தான் என்றபொழுதிலும் அந்தச் செய்திக்குப் பக்கத்திலேயே வைகோ
ஜெ-விடம் காசு வாங்கினார் என்ற சித்திரப்பகடிகள ையும் வெளியிட்டார்கள் , இரண்டுக்கும் இடையில் எவ்வளவு பெரிய தலைகீழ் முரண்பாடு இருக்கிறது என்பதை உணராமலே (அல்லது உணர்ந்தே).
என்னைப் பொறுத்த வரை, நான் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையுமேதான் சமமாக விமரிசித்து வருகிறேன். 'வேடம் கலைந்த ஈழத்தாய்' என்று இணையத்துக்கு வந்த புதிதிலேயே கட்டுரை எழுதியவன் நான். எல்லாரும் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்கையில ் 'தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள ் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்-ஜெயலலி தா!' என்று இந்தத் தேர்தலின்பொழுது துணிந்து எழுதியவன் நான். எனவே, தி.மு.க-வை மட்டுமே தாக்குகிறார்கள் , அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்பதால் அப்படிச் செய்கிறார்கள்; அ.தி.மு.க-வைத் தாக்கத் துணிவில்லாதவர்க ள், தி.மு.க-வைப் பிறாண்டித் தூற்றுவதுதான் அரசியல் விமர்சனம் எனக் கருதுபவர்கள், அ.தி.மு.க-வைச் சற்றும் பொருட்படுத்தாதவ ர்கள் எனவெல்லாம் உண்மை தெரியாமல் பழி தூற்றாதீர்கள்!
எந்தக் கொள்கையும் இல்லாத, தனிமனிதக் கவர்ச்சியால் மட்டுமே ஒரு கட்சியாக இருக்கிற, ஜனநாயகமோ, கருத்து சுதந்திரமோ சுத்தமாக இல்லாத, வலதுசாரி சிந்தனையுள்ள கட்சி என்று அ.தி.மு.க-வைப் பற்றிய உங்கள் குற்றச்சாட்டுகள ் அனைத்தும் சரியானவையே! ஆனால், தி.மு.க-வை எதிர்த்து என்னைப் போன்றவர்கள் எழுதுவதால் புதிதாகப் படிக்க வரும் பலரும் இயல்பாகவே அ.தி.மு.க சார்பானவர்களாக மாறிவிடுவார்கள் என்பது கற்பனையான அச்சம். தி.மு.க-வை எதிர்த்து எழுதுவது போலவே அ.தி.மு.க-வையும ் எதிர்த்து எழுதுவதால் இரண்டுமே வேண்டா என்கிற நிலைப்பாடும் புதிய ஆளுமை குறித்த தேடலும்தான் படிப்பவர்களுக்க ு ஏற்படுமே தவிர, நீங்கள் கூறுவது போல அப்படித் தவறாக ஏதும் நடக்காது. சமூக வலைத்தளங்களில் சென்று பார்த்தால் இன்று இளைஞர்கள் மிகப் பெரும்பாலானோர் தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் வேண்டா என்றுதான் கருத்திடுகிறார் கள். இவற்றில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவாக எழுதுகிற இளைஞர்கள் எண்ணிக்கை என்பது மிக மிகக் குறைவுதான். வலைப்பதிவரான உங்களுக்கு இது தெரியாததில்லை. மற்றபடி, இவ்வளவு குறைகள் கொண்ட அ.தி.மு.க மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காகத் தி.மு.க எவ்வளவு தவறுகள் செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியா என்பது என் பணிவான கேள்வி.
தி.மு.க பக்கம் கடுகளவு நியாயம் மட்டுமே இருப்பதாக நான் கூறியிருப்பதாகச ் சொல்லி எனில், மீதி நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறீர ்கள். அப்படி நான் சொல்லவே இல்லை. குறிப்பிட்ட வரிகளை அப்படியே இங்கு படியெடுத்து ஒட்டுகிறேன், படித்துப் பாருங்கள்!
"அந்தளவுக்கு இளைஞர்கள் அந்தக் கட்சிகளின் மீது அளவு கடந்த வெறுப்பில் இருக்கிறோம். அந்த அளவுக்கு இரு கட்சிகளும் அட்டூழியங்களின் உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலையிலும் மலை மலையாகத் தீமைகளைச் செய்திருக்கும் அவர்கள் பக்கம் கடுகளவு நியாயம் ஒன்றிருந்தாலும் அதையும் பரிசீலிக்க வேண்டும் என உங்களைப் போன்றோர் விரும்புவதும் பரிசீலித்து எழுதுவதும் எங்களைப் போன்றோருக்கு அளவு கடந்த வெறுப்பை வருவிக்கிறது" - இதுதான் நான் எழுதியது. 'அந்தக் கட்சிகள், 'அந்த இரு கட்சிகள்', 'அவர்கள்' என மீண்டும் மீண்டும் பன்மையில்தான் குறிப்பிட்டிருக ்கிறேன். ஆம்! நான் சொன்ன அந்தக் 'கடுகளவு நியாயம்' என்கிற சொல்லாடல் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையுமே குறிப்பதுதான். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்!
அறிவாலயத்தைக் கைப்பற்ற வைகோ கிளம்பியது உட்கட்சி விவகாரம் என்றீர்கள். கருணாநிதியின் தமிழினத் தலைவர் பதவியை நோக்கியே அனைவரும் பயணப்படுகிறார்க ள் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டா க அதைச் சொன்னேன். பொருந்தவில்லை எனில் அது தவறு என ஒப்புக் கொள்கிறேன். ஆனால் வைகோ, சீமான், அன்புமணி, இராமதாசு என அனைவருமே தி.மு.க-வின் இடத்தைப் பிடிக்கத்தான் போட்டியிடுகிறார ்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை. ஜெயலலிதா ஊழல் அரசி என்றும், எல்லாரையும் தன் காலில் விழ வைத்து வேடிக்கை பார்ப்பவர் என்றும், மரியாதை தெரியாதவர் என்றும் இன்னும் பலவாறாகவும் விமரிசிக்கிற இவர்கள் யாரும் அதற்காக அ.தி.மு.க-வுக்க ு மாற்று நாங்கள்தான் என்று ஒருபொழுதும் சொன்னது கிடையாது. ஆனால், தி.மு.க-வை விமரிசிக்கும்பொ ழுது மட்டும் தி.மு.க தமிழர் பிரச்சினைகளில் செய்த துரோகங்களை எடுத்துச் சொல்லி ஆகவே அது உண்மையான தமிழர் பிரதிநிதித்துவக ் கட்சி இல்லை என இவர்கள் நிறுவுகிறார்கள் . அதிலும் சீமான் தான்தான் உண்மையான தமிழர் பிரதிநிதித்துவக ் கட்சி என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார். ("பிரபாகரன்தான் உண்மையான தமிழர் தலைவர்; கருணாநிதி கிடையாது" என்று சீமான் எப்பொழுது சொன்னார் என்று கேட்கிறீர்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. சீமானின் எல்லாப் பரப்புரைகளும் நேர்காணல்களும் பதாகை வைக்கும் முறைகளும் இன்ன பிற யாவும் இந்த அடிப்படையில்தான ் அமைந்திருக்கின் றன. தொடக்கத்திலிருந ்தே அவர் அப்படித்தான் பேசியும் வருகிறார். இதற்குப் போய் நீங்கள் சான்று கேட்பது உள்ளங்கையிலிருக ்கும் நெல்லிக்கனிக்கு ச் சான்று கேட்பது போலத்தான்). எல்லாவற்றுக்கும ் மேலாக, இந்தக் கட்சிகளைத் தி.மு.க தொடர்ந்து உடைத்து வருவதே இந்தக் கட்சிகளெல்லாம் தி.மு.க-வின் இடத்தைப் பிடிக்கத்தான் போட்டி போடுகின்றன என்பதற்குச் சரியான சான்று. மொத்தத்தில், இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் தங்கள் தமிழ் உணர்வு, தமிழர் போராட்டங்கள், சாதிய எதிர்ப்பு போன்ற கொள்கைகளின் மூலம் தி.மு.க-வின் இடத்தைப் பிடிக்கத்தான் தொடர்ந்து போட்டியிடுகின்ற ன என்பது உலகறிந்த உண்மை. ஒருவேளை தங்கள் உளமார அப்படி அவர்கள் முயற்சி செய்யாமல், தவறு செய்யும் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கும் நோக்கத்துடன் மட்டுமே இவற்றையெல்லாம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் தி.மு.க-வுக்கும ் இந்தக் கட்சிகளுக்கும் இடையிலான கொள்கையளவிலான ஒற்றுமை இந்தக் கட்சிகளைத் தி.மு.க-வுக்கு மாற்று எனும் நோக்கில்தான் காட்சிப்படுத்து கிறது. மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள்.
மற்றபடி, இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்சினையின் எதிரொலியால்தான் தி.மு.க தோற்றது என்பது அபத்தம். ஈழப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு மற்ற மாவட்டங்களை விடச் சென்னையில்தான் கூடுதல். ஆனால், மற்ற இடங்களிலெல்லாம் தோல்வியைத் தழுவிய தி.மு.க சென்னையை மீண்டும் பிடித்திருப்பதே இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலிக்கவில்ல ை என்பதற்கான அசைக்க முடியாத சான்று.
கடைசியாக ஒன்று! நான் தி.மு.க குறித்து உணர்ச்சிவசப்பட் டுப் பேசுவதாக எழுதியிருந்தீர்கள்.
திரும்பவும் சொல்கிறேன், ஈழப் பிரச்சினையில் கருணாநிதி செய்த துரோகமும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் மக்கள் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, அவை பற்றி எடுத்துரைக்கும் பொழுதும் அந்த உணர்வுகளின் அடிப்படையில்தான ் அவற்றைச் சொல்ல முடியும். ஒருவேளை, அப்படியில்லாமல் வெறும் அறிவுப்பூர்வமான அடிப்படையில் கூடச் சொல்ல முடியலாம். ஆனால், எனக்கு அந்தளவு எழுத்துவன்மை கிடையாது. எனக்குத் தெரிந்த விதத்தில் நான் என் கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறேன ், அவ்வளவுதான். எனவே, உணர்ச்சிவசமான அடிப்படையில் கூறப்படுவதாலேயே இவை தவறானவை என்றோ, பொய்யானவை என்றோ, அறிவுக்குப் புறம்பான வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்றோ நீங்கள் இதை ஒதுக்கி விட முடியாது.
மேலும், இரண்டு தலைமுறையாகத் தி.மு.க-வுக்கு வாக்களிக்கும் குடும்பத்தில் பிறந்தவன் நான். சிறு வயதிலிருந்தே கருணாநிதியைத் தமிழினத் தலைவராகப் பார்த்து வளர்ந்தவன் நான். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த அன்பும் அக்கறையும் பெருமதிப்பும் இருந்தது உண்டு. ஆனால், எப்பொழுது அவர் தமிழர்களுக்கே துரோகம் செய்தாரோ, எந்தக் காரணத்துக்காக நான் அவர் மீது பற்று வைத்திருந்தேனோ அந்த அடிப்படைக் காரணத்திலிருந்த ே எப்பொழுது அவர் விலகிச் சென்றாரோ அப்பொழுதே அவரை என் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டேன் . அடுத்து யார் எனத் தேடத் தொடங்கி விட்டேன். குறிப்பிட்ட தனிமனிதர் ஒருவர் மீதான என் உணர்ச்சியைத் தள்ளி வைத்து விட்டு சமூகத்துக்கு எது நல்லது என அறிவின் அடிப்படையில் நடந்து கொள்ளும் நான் உணர்ச்சிவசமானவன ா அல்லது இவ்வளவு பெரிய தீமைகளை அவர் தமிழினத்துக்குச ் செய்த பின்னும் முந்தைய காலங்களில் அவர் செய்த நன்மைகள் காரணமாகத் தற்பொழுது அவர் கடைப்பிடித்து வரும் தமிழின எதிர்ப்புப் போக்கைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என நீங்கள் கூறுவது உணர்ச்சிவயப்பட் ட போக்கா என்பதை நீங்களே கொஞ்சம் ஆற அமரச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நானும் தங்களைப் பணிவன்புடன் வேண்டுகிறேன்!
உங்கள் அழைப்புக்கு நன்றி! இந்த அளவுக்கு அரசியல் வரலாற்று அறிவும் வாதப்பெரும் திறனும் கொண்ட உங்கள் வலைப்பூவுக்கு வரவே விரும்புகிறேன்.
நன்றி! வணக்கம்!
RSS feed for comments to this post