சொன்னதைச் சொல்லும் 'கிளிப்பிள்ளை' கல்விமுறை, தகவல்களை இட்டு நிரப்பும் 'வங்கியியல்' கல்விமுறை, சுய சிந்தனை உள்ளவர்களையும் அடிமையாக இருக்க மறுப்பவர்களையும், சலித்தொதுக்கும் 'வடிகட்டல்' கல்விமுறை என்று, நிலவும் கல்விமுறைகள் குறிந்த உலக அறிஞர்களின் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, ஒரு முற்போக்கான, மாற்றுக் கல்விமுறையை நோக்கி, சர்வதேசச் சமூகங்கள் விவாதத்தை முன்னெடுத்திருக்கும் காலமிது.
ஆனால் 'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று, கற்றலையும் கற்பித்தலையும் பற்றியெல்லாம் கவலையில்லாமல், கற்பிக்கும் மொழியில் ஒரு எதிர்ப் புரட்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றது தமிழக அரசு!. 'அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்' என்னும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு, தமிழ்வழிக் கல்வியா – ஆங்கில வழிக் கல்வியா? என்ற நெடுநாள் விவாதத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இப் பிரட்சனையை, குணம் நாடி குற்றமும் நாடி, அறிவியல் பூர்வமாகவும் அணுகுவதற்கு ஏற்றவாறு, ஆங்கில வழிக் கல்வி என்பதை அயல்மொழி வழிக் கல்வி என்றும், தமிழ்மொழிக் கல்வி என்பதை தாய்மொழி வழிக் கல்வி என்றும், அடிப்படையில் பிரித்து விளங்கிக் கொள்வது நல்லது. இது உணர்ச்சிவயப்பட்ட கருத்துகளையும் அறிவியல் பூர்வமாக அணுக உதவக் கூடும். அயல் மொழி என்பதைத் தாண்டி, ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறப்போவதில்லை. அதேபோல் தாய் மொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும்!
தமிழ்ச் சமூகத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவாக, தமிழ் உணர்வாளர்கள், மொழி அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், முற்போக்காளர்கள் என்று அறிவுசார் வட்டங்களில் ஆதரவு இருக்கின்றதே தவிர, பொது மக்களில் பெரும்பான்மையினர் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மேலோட்டமாக நோக்குமிடத்து, கணினியுகத்தில் / உலகமயச் சூழலில் ஆங்கிலத்தின் தேவையும், ஆங்கிலம்தான் உலக மொழி, பொது மொழி, அறிவியல் மொழி போன்ற கருத்துருக்களும் தான், ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான மனநிலையை சமூகத்தில் விதைத்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு சமூகம் முழுமைக்குமே, தன் தாய் மொழியைக் கை-கழுவிவிட்டு, அயல் மொழியில் பயில முனைப்புக் காட்டுவதும் - மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், பாட்டாளிகள் என்று வர்க்க பேதமில்லாமல், துறை / தொழில் பேதமில்லாமல், சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல், ஆங்கில மோகத்தில் திளைத்திருப்பது, காரிய நோக்கம் கொண்டது அல்ல. அது அந்த சமூகம் சந்தித்திருக்கும் உளவியல் நெருக்கடி!. அதிகார வர்க்கம் காரிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஏற்படுத்திய உளவியல் நெருக்கடி!.
ஆங்கிலப் பட்டறைகளும் – ஆளனுப்பும் ஊடகங்களும்
பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான, ஆங்கிலம் தெரிந்த 'அதிசயக் கருவி'களை உற்பத்திசெய்வதற்கும், உற்பத்தியாகும் பொருட்களை நுகர மேற்கத்திய மோகச் சமூகத்தை உருவாக்குவதற்கும் தான், நம் நாட்டுத் தரகு முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் இரவு பகலாக கண்விழித்து வேலை செய்து வருகின்றன. எதிர்கால இந்தியாவின் தூண்களில், யார் 'அதிசயக் கருவி'யாகத் தேரிவருவார்கள் என்பது நிச்சயமில்லாத நிலையில், அத்தனை பேருக்கும் ஆங்கில மோகத்தை விதைப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை.
ஏனென்றால், நிச்சயத் தன்மையோடு, தேவையான எண்ணிக்கையில் மட்டும் 'கருவி'களை உற்பத்திசெய்துகொள்ளும் அளவிற்கு, இன்னும் நமது கல்வி நிறுவனங்களின் 'தரம்' உயர்த்தப்படவில்லை. மனித சமூகமும், இன்னும் அந்த அளவிற்கு மடச் சமூகமாக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் தான், தொலைக்காட்சி ஊடங்கள் இறங்கியுள்ளன. இருபத்து நான்கு மணிநேரமும் மக்களை அதற்காகப் பயிற்றுவித்துக்கொண்டுள்ளன.
முதலாளித்துவத்தின் சாதனைகளைப் பாருங்கள்... (தொழில் வளர்ச்சி இல்லையென்றால் என்ன) தொழில்நுட்பத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்... அமெரிக்கர்கள் ஆவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. அவர்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது?. இனி... விளையாட்டு, பயணம், உரையாடல், பொழுதுபோக்கு, ஓய்வு, வாசிப்பு எல்லாம், தொலைக்காட்சியில் வருபவைகள். நீங்கள் எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை, எல்லாம் தொலைகாட்சிகள் பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைகாட்சி பார்ப்பது மட்டும்தான். மொத்தத்தில் நீங்கள் எங்களுக்கு வேண்டும், எப்படி வேண்டுமோ அப்படி!. அதனால் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருங்கள். இதற்குப் பிறகும் உங்களுக்குச் சிந்திக்கத் தோணுகிறதா தவறில்லை, அது மனித இயல்பு. ஆனால் கிழக்கு தெற்கு வடக்கு எல்லாம் சூலம், 'மேற்கே' மட்டும் சிந்தியுங்கள். – என்று மூளையை முடமாக்கும் லேகியம் விற்றுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள்.
ஆங்கிலம் தெரியாத எந்த ஒரு கிராமமும் விடுபட்டுவிடக்கூடாது என்ற சிறப்புக் கவனத்தோடு, தமிழ் நாடு முழுமைக்கும், 'தமிழர்களுக்காக' ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முடிந்தவரை 'ஆங்கிலத்தில்' இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகின்றன. எந்நேரமும் திரையை ஆக்கிரமித்திருக்கும் சிறிய மற்றும் பெரிய திரைக் கலைஞர்கள் சேர்ந்து அடிக்கும் ஆங்கிலக் கூத்தும், கிண்டலாக உச்சரிக்கப்படும் உரைநடைத் தமிழும், பார்க்கும் பார்வையாளர்களை, கழுத்தில் கத்தியைவைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. தொலைக்காட்சியை அனைத்துவிட்டு, வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தால், ஆங்கிலம் நிற்குமோ என்ற அச்சத்தை உண்டுபன்னுகின்றன.
இப்படி, மேற்கத்திய மற்றும் ஆங்கில மோகம் சமூகத்தில் முதலாளித்துவ ஊடகங்களால், தொடர்ந்து வன்முறையாகத் திணிக்கப்படுகின்றன. இத் தொடர் வன்முறை, தமிழ்ச் சூழலில், பல அசிங்கமான உளவியல் விளைவுகளை உண்டுபன்னியிருக்கின்றன.
தமிழ்ச் சமூகத்தின் ஆங்கில உளவியல்
தமிழ் சமூகத்தில், ஒரு பட்டதாரி, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றால், சான்றிதழைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தற்குறிகளின் வரிசையில் அமர்ந்துகொள்ள வேண்டும். அவரை இச் சமூகம் ஒருபோதும் படித்தவராகப் பார்க்காது. அந்த முனைவரும் கூட, உளவியளாக அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிடுவார். மொத்தத்தில் ஆங்கிலம் என்பது படித்தவர்கள் பேசும் மொழியாகவும் பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டிய அறிவாகவும் கருதும் மனப்பான்மை, நமது சமூகத்தில் பரவலாக நிலவுகின்றது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டிலேயே படித்துப் பட்டம் பெற்ற ஒரு பச்சைத் தமிழனின் உட்சபச்ச மரியாதை 'தமிழ் அவ்வளவாக எழுத வராது' என்பதில் இருக்கின்றது.
இந்த அசிங்கமான உளவியல், ஆங்கில மோகத்தோடு நின்றுவிடவில்லை. தாய் மொழியை இகழவும், தாழ்வானதாக தரமற்றதாக நம்பவும் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு கடைக்காரரிடம் brown sheet என்று கேட்டுப்பாருங்கள். அவர், விலை மற்றும் தரம் உயர்வான polyurethane coated அட்டையைத் தருவார். அதையே 'காக்கி அட்டை' என்று தமிழில் கேட்டுப் பாருங்கள் polyurethane பூச்சு இல்லாத, விலை குறைவான, மட்டமான அட்டையைத் தருவார். சமூகத்தின் அனைத்து மட்டத்திலுமான, இந்தப் பாரதூரமான தாக்கம், அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி உருவாக்கும் நகச்சுவைகளைப் (self deprecating jokes) போன்றது அல்ல. இது, அமெரிக்கக் கனவோடு proud to be an Indian என்று குறுஞ்-செய்தி அனுப்பும், ஒரு முரண்நகை உளவியலைக்கொண்ட சமூகத்தின் அவல நிலை!
வெண்டைக் காயை ladies finger என்பதற்குச் சிரிக்காத தமிழன், சேனைக் கிழங்கை elephant foot என்பதற்குச் சிரிக்காத தமிழன், 'கைப்பேசி' என்ற அழகான 'காரணப்பெயர்'-ஐக் கேட்டுத்தான் சிரிக்கின்றான். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கேட்டு, தன் மொழியைத் தானே ஏளனம் செய்து மகிழ்கின்றான். இந்தக் கேள்விகள் பெரும்பாலான நேரங்களில், அவனது ஆங்கில அறிவைப் போலவே, மொன்னையாகவே இருக்கின்றன. sim க்கு நிகரான தமிழ்ச் சொல் கேட்டு குறுஞ்-செய்திகளைப் பறக்கவிடுகின்றான். subcriber identity module என்பதன் சுருக்கமான (Abbreviation) எஸ்.ஐ.எம் என்பதை, 'சிம்' என்று சேர்த்து வாசிப்பதில் அவனுக்கு சிக்கல் இல்லை. வார்த்தையல்லாத ஒன்றுக்கு இணையான தமிழ் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அறிவார்ந்த கணையைத் தொடுத்துவிட்டதாகப் புளங்காகிதம் அடைவதிலேயே குறியாய் இருக்கின்றான். ( S.I.M - உருபான்மையர் அடையாள மட்டுளி).
புதிய கண்டுபிடிப்புகளுக்கு, புதிதாய்தான் பெயரிட முடியும் என்ற, அடிப்படை அறிவு அவனுக்கு இல்லாமலில்லை. தன் தாய் மொழியைத் தானே ஏளனம் செய்து புளங்காகிதம் அடையும் பரவச நிலையில், அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அல்லது அவன் எடுத்துக்கொண்ட உளவியல் பயிற்சி அவனை சிந்திக்க அனுமதிப்பதில்லை.
ஆங்கில வழிக் கல்விக்கான, இச் சமூகத்தின் ஆகப் பொது ஆதரவுக் கருத்தும் கூட, கிட்டத்தட்ட இதே ஞானத்தோடுதான் இருக்கின்றது. அது, 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது' என்பது. சரி, ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு?
நமது மாணவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா!
ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள், எத்தனை வருடங்கள்... எத்தனை பாடங்கள்... எத்தனை வகுப்புகள்... எத்தனை தேர்வுகள்... எத்தனை படித்திருப்பார்கள்... எத்தனை எழுதியிருப்பார்கள்... அத்தனையும் ஆங்கிலத்தில்!. அத்தனையிலும் தேர்ச்சியும் பெற்று வந்தவர்களுக்கு, ஆங்கிலம் தெரியும் என்று சொல்வதற்குத் திராணி இருக்கின்றதா?. உண்மையில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, அந்த மொழி வழியிலேயேதான் கல்வியே கற்க வேண்டும் என்பதே அபத்தம், மடத்தனம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழிக் கல்வி என்றால், ஸ்பானிஷ் கற்க?. அல்லது வேறு மொழி ஏதேனும் கற்றுக்கொள்ள?.
சமீபத்திய ஆய்வு ஒன்று தமிழ்நாட்டு மாணவர்களைத் தற்குறிகள் என்கிறது. PISA (program for international student assessment) என்பது அந்த ஆய்வு. சர்வதேச மாணவர்களுக்கு, எழுத்தறிவு, கணிதவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தி, மதிப்பிட்டு, ஆறிக்கை தருவது அதன் வழக்கம். 2009-10-ல், 74 economies (பிரதேசங்கள்) கலந்துகொண்ட தேர்வில், இந்தியாவிலிருந்து இமாச்சலப் பிரதேசமும் தமிழ்நாடும் கலந்து கொண்டன. எழுத்தறிவுத் தேர்வில், தமிழ்நாடு 72-வது இடத்தையும் இமாச்சலம் 73-வது இடத்தையும் பெற்றுள்ளன. கணிதவியல் அறிவியல் தேர்வுகள் முறையே, தமிழ்நாடும் இமச்சலமும் 72,73 - 72,74 வது இடத்தைப் பெற்றுள்ளன. எழுத்தறிவு (Literacy) என்பதற்கு PISA கொடுத்த விளக்கம் - 'படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது'. இதன் அடிப்படையில், இந்திய மாணவர்கள் பெரும்பான்மையினர் தற்குறிகளாக (illiterate) இருகிறார்கள் என்கிறது. தேர்வு எழுதிய மாணவர்களின் முதல் மொழியும் பயிற்று மொழியும் வெவ்வேறாக இருந்ததே, இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எழுத்தறிவு, கணிதவியல், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தில் ஷாங்காய் (சீனா) இருக்கின்றது. பொறியியல் மருத்துவம் என்று மேற்படிப்புகள் அனைத்தையும், தன் தாய் மொழி வழியிலேயே கற்கும் சீனா எப்படி, ஆங்கில வழியில் நடந்த தேர்வில் முதலிடத்தைப் பெற்றது?. அதுதான் தாய் மொழிக் கல்வியின் மகத்துவம்!.
மொழியும் தாய்-மொழியும்
முதலில் (தாய்) மொழி என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைப் பார்ப்போம். அயல் மொழியாக இருந்தாலும் தாய் மொழியாக இருந்தாலும் இரண்டும் மொழிகள்தான் என்றும், மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி, மனித வாழ்க்கையில் மொழிக்கு வேறெந்தப் பங்கும் இல்லை என்றும், பொதுவாக நிலவும் கருத்துக்கள் சரியா? என்றால், 'இல்லை' என்கிறார் தலைசிறந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி.
சர்வதேசிய துணை மொழிக் (International auxiliary language) கனவோடு, போலந்து நாட்டைச் சேர்ந்த எல்.எல்.சாமின்ஹோஃப் என்பவரால் கட்டமைக்கப்பட்ட மொழி எஸ்பெரான்டோ. இன்று இம் மொழியை, உலகெங்கும் 20 லட்சம் பேர் அறிந்து வைத்திருக்கின்றார்கள். கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உதவினாலும், மொழிக்கான இயற்கைச் சமூகம் (native speakers) இல்லாத வகையில், எஸ்பெரான்டோ-வை மொழியே அல்ல என்கிறார் சோம்ஸ்கி.
மொழியறிவு என்பது மனித இனத்தின் இயற்கையான திறன் என்றும், மூளையில் அதற்கென தனிக் கட்டமைப்பே இருப்பதாகவும் கூறுகிறார் சோம்ஸ்கி. இதை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது புரிந்துகொள்வதற்கு சற்றே கடினமாக இருக்கலாம். அனால், (பரிணாம வளர்ச்சியில்) உருவாகிக்கொண்டிருந்த மனிதர்கள், தங்களுக்குள் சொல்லிக்கொள்ள ஏதோ இருந்தது - மொழியைப் படைத்தது என்னும் ஏங்கெல்ஸ்-ன் கூற்றோடு பொருத்திப் பார்த்தால், மனித இனம் தான் தோன்றிக்கொண்டிருந்த காலம்தொட்டே, சிந்தனையை ஒழுங்கமைக்கவும், கருத்துக்களை வளர்த்தெடுக்கவும், பரிமாறிக்கொள்ளவும், பதிவு செய்யவும் மொழியை தன் வரலாறு நெடுகப் பயன்படுத்தியதன் பரிணாம விளைவு, மூளையில் மொழிக்கென ஒரு கட்டைமைப்பை உருவாக்கியிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மனித இனத்தின் உழைப்பு, அதன் உடல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்தது போது, மனித இனத்தின் பிரிக்க முடியாத அங்கமான மொழியும், மூளையில் அதற்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டதில் வியப்பென்ன இருக்க முடியும். மேலும் மனித மொழிகள் அனைத்திற்கும், ஒரு பொதுவான இலக்கணம் (Universal grammar) இருப்பதாகவும் கூறுகிறார் சோம்ஸ்கி.
இதன் அடிப்படையில்தான், 'குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப்போல் தாய் மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்கின்றார்கள்' என்கிறார் சாம்ஸ்கி. மேலும், தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது they deduce rules from it என்கிறார் (இலக்கணத்தை - விதிகளை ஊகித்துணர்தல்). அறிவு வளர்ச்சியின் முன் தேவையாக, இயற்கையான சிந்தனைப் பசியால் உள்வாங்கிக்கொள்ளப்படும் முதல் மொழி என்பதால், அந்த rules deduction இயல்பாகவே நடந்துவிடுகின்றது. எனவேதான் குழந்தைகள் தங்கள் தாய் மொழியைப் பயில்வதை குறிக்கும் இடங்களில், சோம்ஸ்கி learning (கற்றல்) என்ற சொல்லுக்குப் பதிலாக acquisition (முயன்று அடைதல்) என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்துகிறார். மனித மூளையிலுள்ள மொழிக்கான கட்டமைப்பிற்கும் Language acquisition device என்றே பெயரிட்டுள்ளார்.
குழந்தைகள் மரத்தைக் காட்டி என்ன என்று கேட்கும் போது, மரம் என்று சொல்லி முடித்துக்கொள்கிறோம். (நாம் வேறு எதுவும் செய்ய முடியாதுதான்). நாம் அதை மரம் என்று ஏன் சொன்னோம்? அதுதான் அந்தப் பொருளின் பெயர். ஆனால் ஒரு பொருளுக்கு பெயர் இருக்கும் என்பதே குழந்தைகளுக்குத் தெரியாதே!. இங்கே தான் சோம்ஸ்கி சொன்ன rules deduction நடைபெறுன்றது. (ஆம், நாம் சொன்ன பதில் குழந்தைகளுக்கு நிறைவைக் கொடுத்திருக்காது) வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளையும் குழந்தைகள் தாங்களாகவே முயன்று அடைகிறார்கள். இரண்டாவது மொழியில் இந்த பணி நடை பெறுவதில்லை. boy ன்னா பையன், girl ன்னா பொண்ணு என்று, தாய் மொழி வழியாகத்தான் எந்த மொழியும் மூளையைச் சென்றடையும். இல்லையில்லை, நான் அயல் மொழியையும் வலிந்து rules deduction-க்கு உட்படுத்தப்போகிறேன் என்றால், அதற்கு முதலில் நீங்கள் அந்த மொழியைக் கற்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது மொழி ஆராய்ச்சி!.
இந்த அறிவியல் விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, நாம் நமது குழந்தைகளுக்கு, ஐம்பது வார்த்தைகளுக்கு மேல் கற்றுக்கொடுத்திருக்க மாட்டோம் என்பது நமக்குத் தெரியும். இலக்கணமும் அப்படியே! எந்த ஒரு குழந்தைக்கும் தாய்-மொழி பிறரால் வலிந்து கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகள் தங்கள் தாய் மொழியை தாங்களே தங்கள் சமூகத்தோடு சேர்ந்து இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது முயன்று அடைகிறார்கள் என்பது தெளிவு. (தாய் மொழி என்பதற்கான சரியான விளக்கம் இதற்குள்ளாகத்தான் இருக்க முடியும்)
எனவே தாய்-மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும் இருக்க முடியாது. அது கிட்டத்தட்ட, ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத் திறனாக அமைகின்றது. மற்ற எதையும் அவன் இதன் வழியாகத்தான் கற்கின்றான், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில் அவன் தொடும் எல்லையைத் தீர்மானிப்பதில், தாய் மொழித் திறன் முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு கற்றல் என்று நாம் குறிப்பிடுவது, கல்வி கற்றல், அறிவுசார் கற்றலைத் தான். மிதிவண்டி கற்றலை அல்ல. அது கற்கக் கூடியதும் அல்ல, பயின்று, பழகக் கூடியது. இரண்டையும் போட்டுக் குழப்பிகொள்ளக் கூடாது.
குழந்தைகள் மீதான வன்முறை
இயற்கையாக, அனைத்தையும் தன் தாய் மொழியில் புரிந்துவைத்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் கற்பிக்கும் போது, அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது. இது, குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை ஆகும். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் 'முயிற்சி', படிப்படியாக குழந்தைகளின் தாய் மொழித் திறனையும் காலி செய்துவிடுகின்றது. முடிவாக அவர்கள் கற்பதையே (learning) நிறுத்திவிடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை (teaching) நிறுத்திவிடுகின்றனர். பிறகு நடப்பதெல்லாம் மதிப்பெண்களை நோக்கிய பயிற்சிதான் (coaching). அவர்கள் எடுக்கும் பயிற்சி, புத்தகங்களில் இருப்பதைப் பிரதி எடுப்பதற்குத்தான். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்துவிடுகின்றன அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலப் புலமையெல்லாம் ஆங்கிலம் கற்பதால் சாத்தியமே தவிர, ஆங்கில வழியில் பிரதி எடுப்பதால் (கற்பதால்?) அல்ல.
பிற்காலத்தில் தங்களை அதிசயக் கருவிகளாகிக்கொள்ள, எப்படிச் சிரிப்பது, எப்படி கை-குழுக்குவது, எப்படிப் பார்ப்பது, எப்படி தன்னை விற்பது! (interview skills ) என்று, பட்டைதீட்டி நிமித்துவதற்கு முன் தேவையாக - சுய மரியாதை, சுய சிந்தனை, படைப்புத்திறன் ஆகியவற்றை, அடித்து நொறுக்கி அழித்தொழித்துப் புடம்போடப்படும் இடமாகத்தான் இந்தப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.
கற்றலில் மொழி
பள்ளி என்பது கற்றலைக் கற்பிக்கும் இடம் தான், உண்மையான கல்வி பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே நடக்கிறது – என்கிறார், கல்வியியலாளர் ஜான் டூவி (john dewey). அயல் மொழி வழியில் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில், பள்ளிகுள்ளும் சரி, பள்ளிக்கு வெளியிலும் சரி, கற்றல் அதன் உண்மையான பொருளில் நடப்பதே கிடையாது. எந்த ஒரு மொழியிலும் பாண்டித்தியம் இல்லாத ஒருவரால், எதையும் முழுமையாகக் கற்க முடியாது. ஒரு ஆழமான புத்தகத்தைக் கூட படித்துப் புரிந்துகொள்ள முடியாது. வாசிக்கும் மொழியில் பாண்டித்தியம் அல்லது வாசிக்கப்படும் பொருளில் அடிப்படை அறிவு, இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இல்லாமல், தினத்தந்தி செய்தியைக் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
PISA தேர்வில் நமது மாணவ மணிகளின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வுப் பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவு, ஆங்கிலத்தை சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது. தாய் மொழியில் கற்ற கல்வி, அம் மொழியில் அவர்களுக்கிருந்த பாண்டித்தியம், தேர்வுப் பொருள் பற்றிய அடிப்படை அறிவிற்கு ஆதாரமாக இருந்திருக்கின்றது. ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்தியம் என்பது கற்றலுக்கு அவசியமான ஒன்று. தாய் மொழியில் பாண்டித்தியம் பெறுவதே இயற்கையானதும் எளிமையானதும் ஆகும். அதற்கு தாய் மொழி வழியில் கற்பதே சிறந்த வழி.
இப்படிக் கூறுவதானது, தாய் மொழியைத் தவிர, வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற முடியாது என்பதாகுமா?. அப்படியில்லை. ஒரு நூலை எவ்வாறு கற்பது என்பதற்கே, 1000 பக்கங்களில் விளக்கப் புத்தகங்கள் தேவைப்படுகிற நூல், காரல் மார்க்ஸின் Das capital. அவ்வளவு கடினமான நுட்பமான நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க, பதின்ம வயதில் தன் வாழ்வை புரட்சிப் பணிக்கு அர்பணித்த, தோழர் தியாகு-விற்கு முடிந்திருக்கின்றது. (Das capitalai-ஐப் பொருத்தவரை, இந்திய மொழிகளிலேயே, இது தான் முதல் முழுமையான மொழிப் பெயர்ப்பு. தோழர் தியாகு தான், தமிழகத்தின் முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கியவர். அதே பள்ளியில், தனது மகளை முதல் மாணவியாகச் சேர்த்தவரும் கூட). ஆக, அயல் மொழியில் பாண்டித்தியம் என்பது சாத்தியமே. ஆனால் இது போன்ற விதிவிலக்கான சாத்தியப்பாட்டை நோக்கி, ஒரு சமூகத்தையே அயல்-மொழியில் நகர்த்துவது முட்டாள்த் தனம் என்கிறோம். பில்கேட்ஸ் (ஹாவார்டு) பல்கலைக்கழகப் படிப்பை இடையிலேயே முடித்துக்கொண்டார் என்பதற்காக, கணினித்துறையில் நுழைய விரும்புபவர்களெல்லாம், கல்லூரிகளைவிட்டுப் பாதியிலேயே ஓடிவந்துவிடுவதில்லையே!
அன்பிற்கினிய உழைக்கும் மக்களே
ஆங்கிலத்தையோ வேறு ஏதேனும் அயல் மொழியையோ கூட கற்றுக்கொள்வது, இக் காலங்களில் அவ்வளவு கடினமானது அல்ல. கைப்பேசி போன்ற பல மின்னியல் உபகரணங்கள் (gadgetries), எப்போதும் கைகளில் இருக்கும்படியான மின்னியல் அகராதிகள், இணையதளப் பயன்பாடு, ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பன்மொழி திரைப்படகளையும், செய்திகளையும் பார்க்கும் வாய்ப்புகள் போன்றன, அயல் மொழி கற்றலை எளிமைப் படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. எனவே ஆங்கிலத்திற்காக, ஆங்கில வழியிலேயே கல்வியைத் தேர்ந்தெடுத்துத் தற்குறிகளாக வேண்டிய அவசியமில்லை.
நம் சமூகத்திற்கு, ஆங்கிலம் பயன்படலாமே தவிர, ஆங்கில -அயல் மொழி- மொழிக் கல்வி, கேடு விளைவிக்கவே செய்யும். எந்த ஒரு சமூகத்திற்குள்ளும், அதன் சமூக (தாய்) மொழியைப் புறக்கணித்து, அயல்மொழி வழிக் கல்வியைத் திணிப்பது, அச் சமூகத்தின் ஆழுமையைச் சீரழிக்கக் கூடியது. சமூகத்தோடு ஒண்றி வாழாத, உற்பத்தியில் பங்குகொள்ளாத, மேல்தட்டு மக்களுக்குச் சாதகமானது. உழைக்கும் பாட்டாளி மக்களைப் பலகீனப்படுத்தக்கூடியது. சமூகத்தின் பெருவாரி மக்களை அறிவிலிகளாக்கி, போராட்ட உணர்வை மழுங்கடித்து, ஒட்டச் சுரண்ட வழிவகுக்கக் கூடியது.
ஜெர்மெனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில், மேற்படிப்புகள் கூட, தாய் மொழியில் கற்க முடிகின்றது. (ஆங்கிலமே இயல்பு மொழியாகவுள்ள (de facto), இங்கிலாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியாவையும் கூட இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் தானே?). உலகிலேயே, வளமையான மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு, அடிப்படைக் கல்வியையே அயல் மொழியில் கற்பிக்கும் நாடு, இந்தியா மட்டும் தான்!. வேறெந்த நாட்டிலும் இந்த அவலம் இல்லை. இதை மக்களின் விருப்பம் என்பது, எல்லோரையும் சொல்லி ராசா குசு விட்ட கதை (சொலவடை) தான்.
அன்பிற்கினிய உழைக்கும் மக்களே, இது நமக்கான உரையாடல். நமது மொழி - நமது பலம், நமது கல்வி - நமது உரிமை. அமெரிக்கா சென்றால் என்ன செய்வது... ஆஸ்திரேலியா சென்றால் என்ன செய்வது... டெல்லியில் குடியேறினால் என்ன செய்வது... குஜராத்தில் குடியேறினால் என்ன செய்வது... என்ற, சொற்ப மேல்தட்டு கனவான்களின் சுய அரிப்பிற்காக, நமது உரிமையை விட்டுக்கொடுத்துச் சீரழிய முடியாது. இக் கனவான்கள், அங்குள்ள உழைக்கும் மக்களோடும் கூட ஒன்றி வாழப் போவதில்லை, ஒட்டச் சுரண்டும் ஒட்டுண்ணியாகவே செல்கிறார்கள், என்பது திண்ணம். இவர்களின், சர்வ தேசியமும் பொது மொழிச் சிந்தனையும், ஒருபோதும் மக்கள் நலன் கருதி உதயமானது அல்ல.
ஸ்டீவ் ஜாப்ஸ்-காக கண்ணீர்விடும் இக் கனவான்களுக்கு, நமது ஆறுகளின் அவலநிலையைப் பற்றிக் கவலையில்லை. பில் கேட்ஸ் எந்தத் தேதியில், எங்கே ஒண்ணுக்குப் போனார் என்று தெரிந்த இவர்களுக்கு, தனது மாவட்டத்தில் எத்தனை ஆறுகள் ஓடுகிறன என்பது தெரியாது. இவர்களின், ஐரோப்பிய அத்தை தேடும் கனவிற்கு, சர்வதேசியத்தை சாட்டையால் அடித்தா சாத்தியப்படுத்த முடியும்?. சிந்தியுங்கள் தோழர்களே...!
- மதியவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
YOUR LANGUAGE PRINCIPLES IS NOT CORRECT ONE. TAMIL LANGUAGE NEVER DESTROYED WE LEARN OTHER LANGUAGES. WE MAY STUDY NOT ONLY HIGHER EDUCATION ALSO RESEARCH EDUCATION IN TAMIL IT IS A GOOD ONE BUT IF WE BANNED TO LEARN OTHER LANGUAGE WE LOSE TO EXPRESS OUR WISDOME TO WORLD. WE MUST CREAT NEW PRINCIPLE FOR OUR LANGUAGE DEVELOPE IN THE BASIS OF OUR GRAND FATHERS WAYS.
ஏழை,தலித் மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பே இல்லாமல்,தொடக்க ,நடுத்தர பள்ளிகள் மூடபட்டு கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அரசு பள்ளிகள் தொடரவும் வாய்ப்புள்ளது.இ தை எதிர்ப்பது ,ஒடுக்கபட்ட மக்களின் சிறு வாய்ப்புகளுக்கு ம் ஆப்பு வைப்பது ஆகும்.
தாய்மொழி கல்வியே அறிவார்ந்தது, ஆழமானது .அதற்காக அனைத்து பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி கல்விக்காக தமிழ்மொழி கல்விக்காக போராடுவோம்.
இவ்வாறில்லாமல் அரசு பள்ளிக்குமட்டும ் தடுப்பது ஏழை,தலித் மக்களை பற்றி அக்கறைபடாத, நடுத்தரவர்க்க ஆதிக்கசாதி தேசிய பார்வையாகும்.
இந்த ஹிந்தி வெறி இயக்கத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் 1965க்கு பிறகு ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய ஆட்சி மொழியாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்னியர்களின் மொழியாகிய ஆங்கிலம் 1965க்கு முன் முற்றிலும் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டத ு. தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அப்போது தென்னிந்தியாவில ், குறிப்பாக சென்னை மாகாணத்தில், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை தான் நிலவியது. பிராமணர்களின் பல நூற்றாண்டு கால தொடர்ந்த ஆதிக்கத்தினாலும ் அராஜகத்தினாலும் பெரும் பாதிப்படைந்திரு ந்த பிராமணரல்லாதவர் கள் (குறிப்பாக அதிருப்தி கொண்ட அறிவுஜீவிகள்) நீதிக்கட்சியின் கீழும் பின்னர் திராவிடர் கழகத்தின் கீழும் அணிதிரண்டிருந்த ார்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எழுந்தது. சென்னை மாகாணம் ஹிந்தி கட்டாயப்படுத்தப ்பட்ட முதல் ஹிந்தி பேசாத மண்டலம் என்பதால் இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மிகவும் வலுவடைந்தது. ஆங்கிலம் அன்னிய மொழி என்றால் ஹிந்தி பேசாத மக்களுக்கு ஹிந்தியும் அன்னிய மொழி தான். இரண்டு மொழிகளையும் ஒப்பு நோக்கும் போது ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பது தான் எங்களுக்கு பலனளிக்கும் என்று இந்த போராட்டக்காரர்க ள் வாதாடினார்கள். பதினெட்டு இந்திய மொழிகளையும் தேசிய ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அது வரை ஆங்கிலம் தான் இந்தியாவின் ஒரே தேசிய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கை. இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தீவிரத்தை கண்ட அப்போதைய பிரதமர் நேரு “ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் துணை தேசிய ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்னும் உறுதிமொழியை கொடுத்தார். இந்திய அரசியல் சட்ட புத்தகத்தில் ஏறாத இந்த வெறும் வாய் மொழி உத்தரவாதம் தான் இந்தியாவில் ஆங்கிலத்தின் இருப்பை இன்று வரை உறுதி செய்து வருகிறது. ஹிந்தியை அரக்கியாக சித்தரித்து கக்கூசுகளில் படம் வரைந்தது முதல் ரயில் நிலையங்களில் ஹிந்தி பெயர் பலகைகளில் தார் பூசி அழித்தது வரை தங்கள் கற்பனை சக்தியை காட்டிய திராவிட கட்சியினர் நேருவின் உறுதி மொழியின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஹிந்தி (வடவர்) ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் தான் என்று கூறும் தி.மு.க கூட நாற்பது எம்.பிக்களையும் கொண்டு மத்திய ஆட்சியில் பங்கெடுத்த போது இதற்காக எதுவும் செய்யவில்லை. 2ஜி ஊழலில் தான் மாட்டினார்கள்.
பல இனத்தவரும் மொழிகளும் புழங்கும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் மொழியை மட்டும் தேசிய ஆட்சி மொழியாக அறிவித்து நடைமுறைப்படுத்த ினால் மற்ற மொழிகளை பேசும் மக்கள் எப்படி எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார ்கள் என்பதற்கு சோவியத் யூனியன், சீனா, கிழக்கு பாக்கிஸ்தான், இலங்கை ஆகியன சரியான சான்றுகள். சோவியத் யூனியன் ஒரு சமஷ்ட்டி அமைப்பாக இருந்ததால் ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்து மற்ற நாடுகள் பிரிந்து போக முடிந்தது. இந்தியா என்கிற அன்னிய சக்தியின் தலையீட்டினால் கிழக்கு பாக்கிஸ்தான் பங்களாதேசமாக விடுதலை அடைந்தது. சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் இது எதுவும் நடக்கவில்லை. சீனாவில் சீன-மாண்டரின் தான் தேசிய ஆட்சி மொழி. இந்த மொழியை பேசும் ஹான் இனத்தவர்கள் சீன மக்கள் தொகையில் தொண்ணூறு விழுக்காட்டினர் . பத்து விழுக்காட்டினரா க மட்டுமே இருக்கும் (திபெத்தியர்கள் , உய்குர்கள் போன்ற) மற்ற இனத்தினர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் . அதுவும் சீன அரசமைப்பானது மத்தியில் அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள கம்யூனிச அமைப்பு என்பதால் மேற்கண்ட சிறுபாண்மை இனத்தவர்களுக்கு கூடுதல் நெருக்கடி. மேலும் சீனாவில் ஆங்கிலம் பொது தொடர்பு மொழியாக கூட இல்லாததால் திபெத்தியர்களும ் உய்குர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் ஆதிக்கத்தையும் இன அழிப்பையும் சீனாவுக்கு வெளியே சர்வதேச சமூகத்திடம் சரியான முறையில் வெளிப்படுத்த கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் சிறுபாண்மை தமிழர்கள் எதிர்கொள்ளும் நுணுக்கமான சிங்கள மொழித்திணிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இருந்தாலும் யாழ்ப்பாண பிரதேசத்து மேட்டுக்குடி தமிழர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்ட காரணத்தால் இனப்பிரச்சினையை உலகளவில் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடிந்தது.
அரசியல் சட்டத்தின்படி இந்தியாவின் மத்திய அரசு சர்வ வல்லமையும் கொண்டது. பெரும்பாலான அதிகாரங்கள் இதனிடம் தான் குவிந்துள்ளன. இந்தியாவின் மாநில அரசுகளோ இன்றளவிலும் கவுரவம் மிக்க முன்சிபாலிட்டிக ளாகத்தான் (Esteemed Municipalities) விளங்கி வருகின்றன. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் மிகக்குறைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹிந்தி பேசாத மக்களின் வளர்ச்சி, வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆங்கிலம் தான் அரணாக இருக்க முடியும். தமிழ் போன்ற மாநில ஆட்சி மொழிகள் அல்ல. வலிமை மிக்க மத்திய அரசின் தேசிய ஆட்சி மொழியாக ஹிந்தி விளங்குவதோடு அதன் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒதுக்கப்படுகிறத ு. தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு குறைந்த அதிகாரங்களை கொண்ட மாநில அரசுகளால் எவ்வளவு நிதியை ஒதுக்க முடியும்? அப்படியே ஒதுக்கினாலும் என்ன பயன் விளைந்து விடும்? இந்த கோணத்தில் இருந்து தான் உயர் கல்வியில் தமிழ் பயிற்று மொழி என்கிற விஷயத்தை அணுக வேண்டும்.
அந்தக்காலத்தில் இருந்த தமிழர்கள் கடாரம் வென்றார்கள். தமிழச்சிகள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். சோழ சாம்ராஜ்ஜியம் தென்கிழக்கு ஆசியா எங்கும் விரிந்திருந்தது என்றெல்லாம் தமிழ் பற்றாளர்கள் கூறக்கூடும். ஆனால் இன்றிருக்கும் தமிழர்களின் நிலை வேறு. இன்றைக்கு தமிழ்நாடு என்பது இந்தியா என்னும் மூன்றாம் உலக நாட்டின் மூன்றாம் நிலை மாநிலமாக உள்ளது. பெரும்பாலான தமிழ் மக்கள் வறுமை மற்றும் அறியாமையின் பிடியில் உள்ளார்கள். இந்த தமிழ் நாடு மாநிலத்துக்கும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் கூட சொல்லிக்கொள்ளும ்படியான செல்வாக்கு எதுவும் இல்லை. இந்தியாவில் தமிழ் என்னும் மொழி பேசும் மக்கள் வாழ்வது கூட வெளி உலகில் பலருக்கு தெரியாது. போதாக்குறைக்கு சுற்றியுள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். ஆகையால் உயர்கல்வியை தமிழ் வழியில் மட்டும் படித்துவிட்டு தமிழகத்திற்கு வெளியே போய் பிழைப்பது இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் கடினம்.
ஜெர்மானியரும் ஜப்பானியரும் அவரவர் மொழியில் உயர் கல்வியை மேற்கொள்கிறார்க ள் என்றால் அது வேறு விஷயம். நவீன அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளும் கல்வியும் ஆரம்ப காலத்தில் இருந்தே இம்மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரியம் உண்டு. அங்கெல்லாம் பாடத்திட்டம் தயாரிக்கும் அறிஞர்கள் நோபெல் பரிசு வாங்கியவர்களாகவ ோ அல்லது அந்த அளவுக்கு தரம் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். மேலும் ஜெர்மானியருக்கு ம் ஜப்பானியருக்கும ் தனித்தனி நாடுகள் உண்டு. அந்நாடுகளில் அவர்களின் மொழி தான் தேசிய ஆட்சி மொழியாக இருக்கிறது. உலகில் எங்குமே உயர் கல்வியை தேசிய ஆட்சி மொழியில் தான் வழங்குகிறார்கள் . அது தான் சட்டப்பூர்வமானத ு. இந்தியாவின் தேசிய ஆட்சி மொழி தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட ஹிந்தியாகும். ஆங்கிலம் கூடுதல் தேசிய ஆட்சி மொழியாக (நெருவின் வாய்மொழி உத்தரவாதம் காரணமாக) இருப்பதால் தான் உயர் கல்வியை ஆங்கில வழி மூலமாக நாம் (குறிப்பாக தென்னிந்தியர்கள ்) கற்கிறோம். இல்லாவிட்டால் ஹிந்தி மீடியம் மூலமாகத்தான் கற்க வேண்டி இருக்கும். பா.ஜ.க மத்தியில் ஆட்சி செய்த போது வட இந்தியாவில் நடந்த ஒரு மத்திய அரசு தேர்வில் ஹிந்தி மொழியில் மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டிருந ்தது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம் . இந்தியாவின் கூடுதல் தேசிய ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருப்பது குறித்து ஹிந்தி வெறியர்களுக்கும ் ஹிந்துத்வவாதிகள ுக்கும் எப்போதும் விசனம் உண்டு.
தமிழ்நாடு என்பது இப்போதே தண்ணீருக்கு தவிக்கும் மாநிலம். எதிர்காலத்தில் இந்த தண்ணீர் பிரச்சினை உலகளவில் மோசமாகும் என்று கூறப்படுவதால் தமிழகத்தின் நிலை பற்றி சொல்லத்தேவையில் லை. மின்வெட்டு பிரச்சினையும் நம் மாநிலத்தை வாட்டுகிறது. விவசாயம் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. பல சிறு மற்றும் குறு தொழில்களும் நசிந்து வருகின்றன. வேலை இல்லாத்திண்டாட் டம் பெருகுகிறது. ஆகையால் எதிர்காலத்தில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் வேலை தேடிக்கொள்வதற்க ும் பிழைப்பதற்கும் வழிவகை செய்யும் கல்வி தான் தமிழர்களுக்கு தேவை. மாறிவரும் உலக சூழ்நிலையில் நாடு விட்டு நாடு பெயர்வது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தவிர்க்கமுடியாத தாக இருக்கும்.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் உயர் கல்வி முடிக்கிறார்கள் . இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க தமிழ் நாடு மாநில அரசால் (எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்) இயலாது. ஆகையால் வேலை வாய்ப்புக்காக பல தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும். மேலும் மத்திய அரசு தேர்வுகள், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தான் பெரும்பாலும் நடத்தப்படுகின்ற ன. எனவே ஆங்கில வழி உயர்கல்வி என்பது இன்றிமையாதது. பன்னாட்டு நிறுவனங்கள் உயர் கல்வியை ஆங்கில வழியில் முடித்தவர்களுக் கு தான் வேலையில் முன்னுரிமை கொடுக்கின்றன. ஏழை பின்னணி உள்ள எத்தனையோ தமிழக மாணவர்கள் திறமை இருந்தும் ஆங்கிலம் தெரியாத தாழ்வு மனப்பாண்மை காரணமாக சோபிக்க முடிவதில்லை. ஆகையால் தமிழகத்தில் உயர்கல்வியை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க வேண்டும். கூடவே மோசமாக இருக்கும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு உயர்கல்வி மன்றமும் தேர்ந்த கல்வியாளர்களும் தமிழக அரசுக்கு ஆங்கில வழி கல்விக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இதில் குறை கண்டுபிடிப்பதற் கு என்ன இருக்கிறது?. மேலும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டது எந்த வகையில் தவறாகும்?
மத்திய அரசின் கீழ் வரும் சி.பி.எஸ்.சி பள்ளிப்பாடத்திட ்டம் தரமான பாடத்திட்டம். இந்த பாடத்திட்டதுக்க ு உலகளவில் அங்கீகாரம் உண்டு. இந்த பாடத்திட்டத்தின ் படி தயாரிக்கப்பட்ட என்.சி.இ.ஆர்.ற் றி பாடப்புத்தகங்கள ் சர்வதேச தரம் கொண்டவை. தில்லியில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் தான் உள்ளது. ஆனால் ஹிந்தி மீடியத்தில். மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களு க்கு (குறிப்பாக கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதய வித்யாலயா ஆகியவை) ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு தரக்கட்டுப்பாடு மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படு கிறது. ஆனால் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரமும் கற்பித்தலும் மோசம். தி.மு.க ஆட்சியின் போது வீட்டில் சும்மா உட்கார்ந்திருந் தவர்களுக்கு ”மூப்பு அடிப்படையில்” என்ற பெயரில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. ”சமுதாய நலன்” ”சமூக நீதி” என்ற பெயரில் பல லட்சம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் இப்படி தான் பல வகைகளில் பாழாக்கப்படுகிற து. ஆட்சியாளர்களுக் கு ஏழை மாணவர்களின் நலன் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியன சமுதாய நலனாகவும் சமூக நீதியாகவும் தெரியாமல் போனது விந்தை தான்.
திராவிட கட்சிகளின் தலைவர்களின் வழித்தோன்றல்கள் உயர்தர ஆங்கில மீடியம் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி எல்லாம் ஊருக்கு தான் உபதேசம். ஒரு காலத்தில் கலைகளையும் அறிவியலையும் மருத்துவத்தையும ் உள்ளடக்கிய சமஸ்கிருத மொழியை பிராமணர்கள் மட்டுமே படித்து பெரிய ஆட்களாக உலா வந்தார்கள். சமஸ்கிருதம் “தேவ பாஷை” என்று சொல்லி சாதாரண பொது மக்கள் அந்த மொழி கற்பதை தடுத்தார்கள். இதன் மூலம் அறிவு சார் துறைகள் மற்றும் அதிகாரத்தின் மீதான தங்கள் சாதி ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொண ்டார்கள். இப்போது திராவிட அரசியல்வாதிகளும ் தங்கள் குடும்பத்தவர்கள ், சொந்தபந்தங்கள் ஆகியோரின் முறையற்ற ஆதிக்கத்தையும் நலன்களையும் தமிழகத்தில் பாதுகாப்பதற்காக ஆங்கில வழிக்கல்விக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள் . ஆனால் இந்த அரசியல்வாதிகளின ் வழித்தோன்றல்கள் சர்வதேச தரம் கொண்ட உண்டு உறைவிட ஆங்கில பள்ளிகளில் தான் கற்கிறார்கள். அதுவும் மிகுந்த பணச்செலவில்!. ஆங்கிலம் சரியாக தெரியாததால் பெரும்பாலான தமிழக மக்கள் கிணற்று தவளைகளாக வெளியுலகம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தமிழக எல்லைக்கு அப்பால் உள்ள உலக நிலவரம் பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தெரியாது. அரசியல்வாதிகள் தமிழ் நாட்டை எளிதாக சூறையாடுவதற்கு இது தோதான சூழ்நிலையாக இருந்து வருகிறது. இது மாற்றப்பட வேண்டும். அடித்தட்டு மக்களின் சமுதாய உயர்வுக்கு ஆங்கில வழி கல்வி மிகவும் இன்றிமையாதது. வட இந்தியாவில் இருக்கும் அடித்தட்டு சமூகங்களின் தலைவர்கள் தங்கள் மக்களின் சமுதாய உயர்வுக்கு ஹிந்தி வழி கல்வியை விட ஆங்கில வழி கல்வியையே அதிகம் வலியுறுத்துகிறா ர்கள். ஆகவே ஆங்கிலம் கொஞ்சம் கூட தெரியாமல் தமிழ் வழியில் மட்டும் படிப்பவர்களுக்க ு எதிர்காலத்தில் திருவோடு கூட கிடைக்காத நிலை உருவாகலாம். இவர்கள் மடிப்பிச்சை தான் எடுக்க வேண்டி இருக்கும்.
இப்போது ஆங்கிலம் என்பது மொழி என்னும் வரையரையை தாண்டிவிட்டது. அது ஆங்கிலேயர்களின் கையில் இருந்து எப்போதோ நழுவி விட்டது. சில பத்தாண்டுகளுக்க ு முன்னர் உயர் கல்வியை தாய்மொழியில் வழங்குவது தான் சிறப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. விவரம் தெரிந்தவர்கள் ஆங்கில வழி கல்வியையே வலியுறுத்துகிறா ர்கள். ஏனெனில் நிலைமை அப்படி. இப்போது ஒரு ஆண்டுக்கு பல லட்சம் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் ஆங்கில மொழியிலேயே வெளியாகின்றன. ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இதனால் ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரும் நெருக்கடிக்குள் உள்ளன. இந்த நாடுகள், உள்ளே எழும் எதிர்ப்பையும் மீறி, மெதுவாக ஆங்கில வழி உயர்கல்விக்கு மாறிவருகின்றன. நவீன அறிவியலிலும் தொழில்நுட்பத்தி லும் முன்னேறிய நாடுகளே ஆங்கில வழி உயர் கல்விக்கு மாறும்போது இந்தியா என்னும் மூன்றாம் உலக நாட்டின் தமிழகம் என்னும் மூன்றாம் நிலை மாநிலத்தை பற்றி சொல்லவேண்டியதில ்லை.
தாய் மொழி வழிக்கல்வி என்பது உயர்வானது தான். அது மாணவர்களின் உரிமையும் கூட. ஆனால் மேற்கண்ட அரசியல் மற்றும் சமுதாய காரணங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டா ல் தான் தமிழ் மக்களும் தமிழ்நாடும் முன்னேற முடியும். இதை அனைவரும் உணர வேண்டும். இப்போதைய நிலவரத்தில் பள்ளிக்கூடத்தில ் ஐந்தாம் வகுப்பு முடிய அனைத்து பாடங்களையும் தமிழில் கற்பிக்கலாம். இதை அனைத்து வகை பள்ளிகளிலும் கண்டிப்பாக்க சட்டம் போட்டு செயல்படுத்தலாம் . ஐந்தாம் வகுப்புக்கு மேலும் தமிழ் வழியில் தான் கற்க வேண்டும் என அனைவரையும் கட்டாயப்படுத்த கூடாது. உயர்கல்வியில் முடிந்தவரை ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
மத்தாய் என்னும் கல்வியாளர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பல பெரும் பதவிகளை வகித்தவர். இவர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது அப்போதைய கேரள அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் உயர் கல்வியை மலையாள மொழியில் கற்பிப்பதற்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும ் வழங்கும்படி கேட்கப்பட்டிருந ்தது. உடனே அந்த கடிதம் குப்பைக்கூடைக்க ு போனது. அந்த கடிதம் எங்கு போகவேண்டுமோ அங்கு போனதாக அவர் பின்னர் சொன்னதாக சொல்வார்கள். மலையாள மக்கள் எந்த வகையில் தமிழர்களை விட கல்வியில் குறைந்து போய்விட்டார்கள் ?.
"இந்தியாவில் தமிழ் என்னும் மொழி பேசும் மக்கள் வாழ்வது கூட வெளி உலகில் பலருக்கு தெரியாது. போதாக்குறைக்கு சுற்றியுள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். ஆகையால் உயர்கல்வியை தமிழ் வழியில் மட்டும் படித்துவிட்டு தமிழகத்திற்கு வெளியே போய் பிழைப்பது இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் கடினம்."
இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வது கூட வெளியுலகில் பலருக்கு தெரியாது என்று தாங்கள் கூறுவது எந்த அளவிற்கு இந்த வெளியுலகத்தை தாங்கள் உற்றுநோக்குகிறீ ர்கள் என்பது தெரிகிறது.
சுற்றியுள்ள மாநிலங்களிலும் நாடுகளிலும் தமிழர்கள் படும் துன்பத்துக்கம் உயர்கல்வி பயிற்று மொழிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்.
உயர்கல்வியை ஆங்கிலத்தில் படித்தால் தான் தமிழகத்தை விட்டு வெளியே போய் பிழைப்பு நடத்த முடியுமா?
மதியவன் தன்னுடைய கட்டுரையில் மிகச் சிறப்பாக கூறியிருக்கிறார ்....
“உண்மையில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, அந்த மொழி வழியிலேயேதான் கல்வியே கற்க வேண்டும் என்பதே அபத்தம், மடத்தனம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழிக் கல்வி என்றால், ஸ்பானிஷ் கற்க?. அல்லது வேறு மொழி ஏதேனும் கற்றுக்கொள்ள?.”
தங்கள் பின்னூட்ட கட்டுரை முழுக்க ஆங்கிலத்திற்கு வடம் பிடித்து, ஆங்கிலத்தை விட்டால் வேறு நாதியில்லை என்று தாங்கள் கூறியுள்ள பல தவறான கருத்துக்களுக்க ு பதில் கூறவேண்டும் என்று நினைத்தேன். பிறகு தான் புரிந்தது தமிழ் வழிக்கல்வியை வலியுறுத்தும் அனைத்து கட்டுரைகளுக்கும ் பின்னூட்டமாக தங்கள் கட்டுரையை பதிவு செய்துள்ளீ ர்கள் என்று.
மதியவன் எழுதியுள்ள மிகச் சிறந்த இந்த ஆய்வுக்கட்டுரைய ை படியுங்கள். புரியவிலையென்றா ல் மீண்டும் மீண்டும் படியுங்கள். தாங்கள் தெளிவடைவீர்கள்.
மிகச்சிறந்த கட்டுரையை சரியான தருணத்தில் எழுதியுள்ளீர்கள ். தங்களுக்கு என் வாழ்த்துக்களையு ம் நன்றியையும் தெரிவித்துக்கொள ்கிறேன்.
தமிழில் பேசுவதையே கேவலமாக கருதும் அளவுக்கு மக்கள் சிந்தனை மழுங்கடிக்கப்பட ்டிருக்கும் இத்தருணத்தில் சிந்தனையைத் தூண்டும் தங்களின் இக்கட்டுரை இன்றைய அவசியத் தேவையாகும். தங்கள் கட்டுரையை பலருக்கு பரிந்துரைத்துள் ளேன். பிரதிகள் எடுத்து பலருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளே ன்.
ஆங்கில வழியில் படித்தால் தான் எதிர்காலத்தில வளமான வாழ்க்கை வாழ முடியும் என்ற தவறான, செயற்கைத்தனமான, அறிவியலுக்கு முரணான நடைமுறையை தமிழகத்திலிருந் து அடியோடு ஒழித்துக்கட்டவே ண்டும்.
என் மகனை அடுத்த கல்வியாண்டில் தாய்த்தமிழ்ப் பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளே ன்.
தங்கள் சீறிய பணி தொடர என் வாழ்த்துக்கள்
உங்கள் பிள்ளையை தாய் தமிழ் பள்ளியில் சேர்ப்பது உங்கள் இஷ்டம். மேலும் நான் எங்குமே தாய் மொழி வழி கல்வியை குறை சொல்லவில்லை. ஐந்தாம் வகுப்பு முடிய தாய் மொழியில் தான் பிள்ளைகளுக்கு அறிவியலையும் கணிதத்தையும் பயிற்றுவிக்கவேண ்டும் என கூறியிருக்கிறேன ். ஆனால் ஐந்தாம் வகுப்புக்கு பிறகு தாய் மொழி வழிக்கல்வியை கட்டாயப்படுத்தக ்கூடாது என்பது என் கருத்து. உலக நிலவரம் அறிந்தவர்கள் என் கருத்துக்களோடு நிச்சயம் உடன்படுவார்கள். உங்கள் மாதிரியானவர்கள் தமிழகத்துக்கு வெளியே ஓர் உலகம் இருக்கிறது என்பதையும் அந்த உலகத்தின் இயல்பு என்ன என்பதையும் அறியாதவர்கள். வெளியுலகத்தில் தமிழர்களுக்கு என்ன மாதிரியான மரியாதை இருக்கிறது என்பதை உங்களை போன்றவர்களும் குண்டுச்சட்டியி ல் குதிரை ஓட்டும் கிணற்றுத்தவளைகள ான தமிழ் அறிஞர்களும் அறிவதில்லை. இந்தியர் என்றால் அவர்கள் தாய் மொழி ஹிந்தி என்று தான் என உலகின் பெரும்பாலான பகுதிகளில் நினைத்துக்கொண்ட ிருக்கிறார்கள். இந்தியாவுக்குள் தமிழ் போன்ற மொழிகளை பேசும் மக்கள் வாழ்வது கூட வெளியுலகில் பலருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன்! தமிழ் வழிக்கல்வி பற்றி ஊருக்கு உபதேசம் வழங்கும் இந்த தமிழக அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் ஏன் உயர்தர உண்டு உறைவிட ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்கிறார்கள் ? அதனால் பலன் கிடைக்கிறது என்பதற்காக தானே தங்கள் வழித்தோன்றல்களை மிகுந்த பொருட்செலவில் அங்கு படிக்கவைக்கிறார ்கள்!. நம் தமிழக அரசியல்வாதிகள் ஒன்றும் தெரியாத முட்டாள்களா? இன்றைக்கு தமிழ் மக்கள் இருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் உயர் கல்வியை ஆங்கில வழியில் பெறுவது தான் சாலச்சிறந்தது. சுற்றியுள்ள உலகின் மனநிலையையும் பார்வையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளா ததால் தான் ஈழப்போராட்டம் தோல்வி கண்டது. மேலும் தமிழகத்தில் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்கள் யாருமே தங்கள் பிள்ளைகள் சாக்கிரட்டீசாகவ ோ, ஐன்ஸ்டீனாகவோ வர வேண்டும் என்னும் எண்ணத்தோடு சேர்ப்பதில்லை. தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். படித்து முடித்த பின்னர் நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும். நாலு காசு சம்பாதித்து திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டு நன்றாக இருக்க வேண்டும் என எண்ணித்தான் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள் . தங்கள் பிள்ளைகள் தங்களை போல் சிரமப்படக்கூடாத ு என்ற எண்ணம் தான் அவர்களுக்கு உள்ளது. தங்கள் பிள்ளைகள் சாக்கிரட்டீசாகவ ோ, ஐன்ஸ்டீனாகவோ வர வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. அப்படி யோசிக்கவும் முடியாது. முதலில் இதை புரிந்துகொள்ளுங ்கள்!. தமிழகத்தில் இருக்கும் உயர் பதவிகளில் குறிப்பாக சிவில் நிர்வாகத்திலும் மத்திய அரசு நிறுவனங்களிலும் இப்போது வெளிமாநிலத்தவர் கள் தான் வீற்றிருக்கிறார ்கள். மற்ற துறைகளிலும் அப்படித்தான்!. ஆங்கிலத்தை அகற்றினால் தமிழ் வந்து அந்த இடத்தில் உட்காராது. ஹிந்தி ஆதிக்கம் தான் வரும். இன்றைக்கு இருக்கும் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் ஏதாவது ஒரு அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் தான் தமிழும் தமிழர்களும் இருந்தாக வேண்டும்! ஹிந்தி ஆதிக்கத்துக்கு ஆங்கில ஆதிக்கம் எவ்வளவோ மேலானது!. தென்னிந்தியாவில ் எதிர்பார்த்த அளவுக்கு ஹிந்தி பரவாததற்கு ஆங்கில ஆதிக்கம் தான் காரணம் என வடஇந்திய வெறியர்கள் ஏற்கெனவே குமைந்து கொண்டு உள்ளார்கள். சுதந்திரம் பெற்ற இலங்கையில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு சொந்த மொழிகளை (அதாவது சிங்களம் மற்றும் தமிழ்) ஆட்சி கட்டிலில் ஏற்ற வேண்டும் என்னும் நோக்கத்தோடு SWABHASHA MOVEMENT (சொந்த மொழி இயக்கம்) உருவானது. அந்த SWABHASHA MOVEMENT எளிதாக SINHALA BHASHA MOVEMENT ஆக மாறி ஆங்கிலத்தையும் கூடவே தமிழையும் அகற்றி தமிழர்களை அடிமைப்படுத்துவ தில் போய் முடிந்தது. நான், எனது, நாம், எமது என்று யோசிப்பதில் தவறில்லை. ஆனால் கொஞ்சம் வரலாற்று உணர்வோடும் யதார்த்த நிலையை கணித்தும் யோசிக்க வேண்டும்.
தமிழர்க்கு தமிழே தாய் மொழியன்றோ
தமிழகம் தமிழர்க்கு தாயகம் அன்றோ
தமிழ் நாட்டில் அயலவர்க்கு இனியென்ன வேலை
அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க
மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க
இருப்பாய் தமிழா இருப்பாய் நெருப்பாய்
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்
தாய் மொழி பற்றில்லாதவன் நாயினும்
கீழான கோழை பயல்கள்
அவர்கள் வாழ்வதை விட இறத்தல் நன்று
ஆங்கிலம் படித்தால் தான் வாழ முடியும் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும்
எல்லோருக்கும் நம்மை தெரியும் என்றல்லாம் பேசுவது மொழியின் பெருமை
தெரியாமல் பேசுபவர்கள். ஆங்கிலத்தை எதிர்ப்பதால் இந்தி தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியதுதான். தமிழர்களுக்கு
எங்கும் வேலை கிடைக்காது இனி அவர்களால் வாழவே முடியாது என்று சொல்பவர்களுக்கு
நான் ஒன்று சொல்கிறேன் நன்றாக கேளுங்கள். தமிழ்ப் படித்தவர்களுக்க ு எப்படி வேலை தருவது, தமிழ்மொழியை எப்படி உயர்கல்விக்கும் , அதற்குமேலேயும் கொண்டு வருவது, மருத்துவக்கல்வி , பொறியியல் கல்வி, தொழிற்கல்வி இப்படி எதுவாக இருந்தாலும் அனைத்தும் தமிழில் இருக்கவேண்டும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும். வைப்பகங்கள், தொடர்வண்டி நிலையங்கள் , உணவகங்கள் , விற்பனை நிலையங்கள் , அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் , தனியார் நிறுவனங்கள், விமானநிலையங்கள் , பெயர்பலகை கொண்டு இயங்கும் அனைத்து தொழிற் கூடங்கள், ஊர்பெயர்கள், தெருக்களின் பெயர்கள்,. நகர்களின் பெயர்கள், அரசு ஆணைகள், பிள்ளைகளின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள், தமிழ்ப்படங்களின ் பாடல்கள் தமிழில் இருப்பதற்கு, மாவட்டங்களின் பெயர்கள், கல்வி நிலையங்களின் பெயர்கள், இப்படி எதுவும் தமிழில் இல்லை இதையெல்லாம் நீங்கள் முதலில் தமிழில் மாற்றம் செய்யுங்கள். ஒகேனஹள்ளு என்று பெயர் இருப்பதால் கன்னடன் தமிழ்நாட்டின் இடத்தை சொந்தம் கொண்டாடுகிறான். அதை முதலில் தமிழர்கள் மாற்றவேண்டும். தமிழ் நாட்டை சேர்ந்த இந்திய ஆட்சி பணி செய்த ஒருவருடைய பெயர்
அலக்ஸ் பால் மேனன் இவர் ஒரு மாநிலத்தில் வைத்து கடத்தப்பட்டார். அப்போது இவரை யாரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றே யாரும் நினைக்கவில்லை. பிறகு அந்த மேனன் தமிழ் நாட்டை சேர்த்தவர் என்று தெரிந்ததும் வைக்கோ, திருமா, கருணாநிதி, இன்னும் பலர்
தொலைக்கட்சிகளில் தோன்றி மேனன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்கிறார்கள். யாரவது அவர் பெயரை மாற்ற சொல்லி கேட்டார்களா இப்படியே பலர் தங்களின் பெயர்களை தமிழ் அல்லாத வேறு மொழியில் வைத்துக்கொண்டால ் தமிழன் என்ற அடையாளம் அழிந்து விடாதா? ஆங்கில வழியில் படித்தால் தான் தமிழ் நாடு அல்லாத பிற இடங்களிலும் வாழ ,முடியும் என்று தன்னலம் பேசும் நயவஞ்சக நரிகள் தங்கள் பெயரை ஏன் பிறமொழியில் வைக்க வேண்டும். தமிழில் பெயர் வைத்தால் ஆங்கிலம் வராதா இல்லை பிற நாடுகளில் வேலை தரமாட்டார்களா ஒரு பிடிச் சோற்றுக்கு தன்மானத்தையும், தமிழன் என்ற அடையாளத்தையும் இழக்கும் சூடு சொரனையற்ற எருமை மாடுகளா? முதலில் நீங்கள் தமிழில் பெயர் வையுங்கள். ஆங்கில வழி கல்வியை பிறகு பார்க்கலாம் தமிழன் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் எங்காவது தமிழ் இருக்கிறதா? தொலைக்காட்சியின ் பெயர்கள் தமிழில் இருக்கிறதா? இல்லை தமிழ் நாட்டில் தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்தும் வர்ணனையாளர்கள் தான் தமிழில் பேசுகிறார்களா? தமிழ் நாட்டில் தமிழர்கள் நடத்தும் தொலைக்காட்சி பெயர்கள் சண் டிவி , விஜய் டிவி , ராஜ் டிவி, சண் நியூஸ், சண் மியூசிக், கலைஞர் டிவி, என்று எது பார்த்தாலும் ஆங்கிலம் இவற்றிற்க்கெல்ல ாம் முதலில் தமிழில் பெயர் வைக்கச் சொல்லுங்கள் இதற்க்கெல்லாம் தமிழில் பெயர் வைத்தால் பிற இடங்களில் தமிழர்களுக்கு வேலை தரமாட்டார்களா? நிகழ்ச்சிகளை தமிழில் தந்தால் வேலை தரமாட்டார்களா? ஆனால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற நாடுகளில் தொலைக்காட்சியின ் பெயர்கள் அவர்கள் மொழியில் இருக்கிறது. அவர்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மொழி உணர்வாவது தமிழனுக்கு இருக்கவேண்டும். எதுவும் இல்லாமல் ஆங்கிலம் கற்பதால் தமிழ் மொழி அழியாது தமிழ் மொழியை அழிக்க முடியாது என்று சொல்பவர்கள் சுயநலவாதிகள் மேலும் ஆங்கிலத்தை எதிர்ப்பதால் இந்தி தமிழகத்தில் நுழைத்து விடும் என்று சொல்லும் இந்த குள்ள நரிகள் தமிழுக்கு கேடர்கள். இந்தி நுழைந்தால் அதை எதிர்ப்பதற்கு கோடி தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள். நீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே இந்தி வந்தால் என்ன நீ அதையும் படிக்க போகிறாய்
நீங்களெல்லாம் ஆங்கிலம் படித்து வெளிநாடுகளிலெல் லாம் வேலைப்பார்த்து நன்றாக வாழுங்கள் ஆனால் தமிழ் மொழி பற்றில்லாத நீங்கள் தமிழரென்று மட்டும் சொல்லாதீர்கள். சொன்னால் பாத அணி எடுத்து பல நூறு முறை அடிப்பேன்.
தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி நினைவெல்லாம் உணர்வாகி நன்னிடீரோ?
தமிழ்த் தாய்க்கு வருந்தீமை நமக்கு வரும் தீமையன்றோ?
ஒரு பேச்சுக்கு என்று வைத்துக்கொள்வோம ் தமிழர்கள் எல்லாம் ஆங்கில வழி படித்து,
உயர்க்கல்வி முடித்து, பதவிகள் பல பிடித்து தமிழ் நாட்டில் வாழ்வாராயின் எங்கு பார்க்கினும் ஆங்கிலம், பார்க்குமிடம் எங்கும் நீக்கமற ஆங்கிலம். தமிழ் எங்கே தமிழன் எங்கே சொல்லுங்கள் அறிவார்ந்த ஆங்கில மொழி விரும்பிகளே அன்பர்களே சொல்லுங்கள்.
நாடே ஆங்கிலம் மயமாகி போனப்பின்னே தமிழன் நிலை என்ன? தமிழ் மொழியின் நிலை என்ன? தெரிகிறதா? ஒன்றும் புரியவில்லை.
இமயமலை போலுயர்ந்த ஒரு நாடும்
தன் மொழியில் தாழ்ந்தால் வீழும்
ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென்றால் அவன் உயிரை எடுக்க வேண்டியதில்லை அவன் பொருளாதாரத்தை அழித்துவிட்டால் போதும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த இன மக்களை கொன்றொழிக்க வேண்டியதில்லை அவர்கள் மொழியை அழித்தால் போதும் அதனால் அவர்கள் தான் யார் என்பதே தெரியாமல் தன்னுடைய வரலாறு என்ன என்று புரியாமல் பண்பாடு சிதைந்து முற்றும் அவர்களாகவே அழிந்து போவார்கள். குருதி சிந்தாமல், மூளை உழைப்பை கொடுக்காமல் உயிர்வலி இல்லாமல் எளிதாக ஒரு இனத்தை அழித்து விடலாம்.
தமிழை யார் தடுத்தாலும் விடேன்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
தமிழ் என்னில் எம்முயிர் பொருளாம்
இன்ப தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்
தமிழ் என்று தோள்தட்டி ஆடு நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு
RSS feed for comments to this post