தலித்துகள் மீது தொடர்ந்து பாயும் மனநோயாளி மருத்துவர் இராமதாஸ் உதிர்த்தவை:

* தருமபுரியில் தலித்துகள் தங்கள் வீடுகளை தாங்களே கொளுத்திக் கொண்டார்கள் ...!

* தலித் இளைஞர்கள் வன்னியர் பெண்களை சாதி மறுப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் என்ற பெயரில் நாடகத் திருமணம் நடத்துகிறார்கள் ..!

* பள்ளி கல்லூரி செல்லும் பிற சாதிப் பெண்களின் கற்பிற்கு பாதுகாப்பு இல்லை ..!

* வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான புகார் கொடுகிறார்கள்..!

* எனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தும் கொண்டுவர போராடுவேன்...!

* தலித் அல்லாத அனைத்து சாதிக் கூட்டணியோடு தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்கு களம் இறங்கிப் போராடுவோம்(இதற்கென 42 சாதிகளைக் கொண்ட கூட்டத்தை சென்னையில் டிசம்பர் 2ல் கூட்டி உள்ளார்)

* கடலூர் மாவட்டத்தில் 2000 வன்னியர் பெண்களை தலித்துகள் காதலித்து திருமணம் செய்து விட்டனர்...!

* நாமக்கல் மாவட்டத்தில் 970 பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்களை தலித்துகள் காதலித்து கைவிட்டு விட்டார்கள்..!

* தலித்துகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் வன்முறைக் கும்பலைச் சேர்த்தவர்கள். ..!

மன நோயாளி மருத்துவர் இராமதாஸ் சொல்ல மறந்தவை:

* வன்னிய பெண்கள் தலித்துகள் படிக்கும் அரசு / தனியார் பள்ளிகளில் இனிமேல் சேர்ந்து படிக்கக்கூடாது ..!

* அரசு அலுவலகம் /தொழில்சாலைகளில் வன்னியப் பெண்கள் தலித்துகளுடன் சேர்ந்து பணியாற்ற கூடாது...!

* பேருந்துகள், ரயில்களில் தலித்துடன் இணைத்து பயணித்தால் காதல் பற்றிக்கொள்ள வாய்புகள் அதிகம். எனவே சாதிக்கு ஒரு பேருந்து விடவோ அல்லது ஒவ்வொரு சாதியினரும் பயணிக்கும் நேரத்தை வரையறுக்கவோ மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* வயலில் தோட்டங்களில் தலித் பாட்டாளிகளோடு சேர்ந்து நடவு நட, உழவு செய்ய, களை பறிக்க, அண்டை வெட்ட, அறுவடை செய்ய போகக்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்ட நேரங்களில் கட்டான உடலும் கடுமையான உழைப்பும் செலுத்தும் தலித் இளைஞர்கள் மீது வன்னியப் பெண்களுக்கு காதல் உண்டகிவிடலாம் ...!

* எந்த நிலையிலும் சாதிக்கலப்பு ஆண் -பெண் கூடல் (புணர்ச்சி ) நேர்ந்துவிடாத அளவிற்கு, இந்துத்துவ சாதி அமைப்பை பாதுகாப்பதற்கென்றே பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தனி அமைச்சு துறையை உருவாக்குவோம்...! அதுவரை இக்கோரிக்கை நிறைவேற அனைத்து சாதிக் கூட்டணியோடு தொடர்ந்து பா.ம.க. போராடும்.

* தலித் இளைஞர்களை கொலை செய்யும் வன்னியர்கள் மீது போடப்படும் கொலை வழக்குகளில் வன்னியர் சமுகத்தைச் சேர்ந்த 75 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகள் மீது மட்டும் தான் போலிசார் கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். (கடலூர் மாவட்டம் சென்னிநத்தம் தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கில் 75 வயதில் கனகவல்லி என்ற வன்னிய மூதாட்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்)

- அரங்க குணசேகரன்

Pin It