தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர்.
பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை.
ஒருவரின் நடைமுறைச் செயல்பாடுகளில் உள்ள தமிழினத் துரோகச் செயல்களைப் பட்டியலிட்டு விமர்சிக்காமல், அவர் பிறந்த சாதி எது என ஆராய்ச்சி செய்து தூற்றுகின்ற ‘மனுதர்மப்’ போக்கு சிலரால் முன்வைக்கப்படுகிறது. மனுதர்மப் பார்வையுடன் பேசித் திரியும் இப்போக்காளர்களை, தமிழ்த்தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
ஏனெனில், ஆரியப் பார்ப்பனிய மனுதர்மத்தையும், சாதியையும், அதன் இன்றைய கருத்தியல் வடிவமான இந்தியத் தேசியத்தையும் தன் பிறப்பிலேயே மறுதலிப்பது தான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் ஆகும். தமிழ்–தமிழினம் என பேசிக் கொண்டு திரிபவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்தத் தொடங்கினால், தமிழினத் துரோகி கருணாநிதியைக் கூட எளிதில் “தமிழ்த்தேசியர்” என அடையாளப்படுத்தி விடலாம்.
ஆக, வெறும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும், ஒரு விடுதலைக் கருத்தியலாகக் கருதுவது முற்றிலும் தவறானது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியல் வெறும் மொழி - இனப் பற்று கொள்வதை மட்டும் கொண்டதல்ல. மாறாக, முழுமையான மொழி – இன விடுதலைக்குப் பாடுபட மக்களை அணிதிரட்ட முன்வைக்கப்படும் கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.
திராவிடக் கருத்தியலை கடுமையாக எதிர்க்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரின் சமூகப் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அவரது தவறான கருத்துகளை சுட்டிக் காட்டி திறனாய்வு செய்கின்றது. இந்தி எதிர்ப்பை மேற்கொண்ட பெரியார், தமிழகத்தில் தமிழை முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தினார். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், தமிழர்களின் மரபார்ந்த அறிவியலையும், அறத்தையும் கொச்சைப்படுத்தி மேற்கத்தியவாதத்தை முன்வைத்து செயல்பட்டார். இவ்வாறு பெரியாரின் செயல்பாடுகள் மீது திறனாய்வுகளை முன்வைக்கும் நாம், ஒருபோதும் பெரியாரைக் 'கன்னடர்' என பிறப்பு அடிப்படையில் ஆய்ந்து, இத்திறனாய்வுகளை முன்வைப்பதில்லை.
வரலாற்றுப் போக்கி்ல் தமிழகத்தில், அயல் இனத்தாரின் படையெடுப்பால் பல்வேறு அயல் இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்குடியேற்றத்தால், இங்கு வசிக்கத் தொடங்கிய அயல் இனத்தார் பல்வேறு சமூகங்களாக, தமிழ்ச் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்டும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் இவ்வகைச் சமூகத்தினர், தங்களது தாயகத்துடன் முற்றிலும் தொடர்பை இழந்து, தமிழகத்தைத் தம் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல், தம் வழிபாட்டு மொழியாக உருது, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், முகமதியர், கிறித்துவர்களை 'கவனத்துடன்' கையாள வேண்டுமென்கிறது நாம் தமிழர் கட்சியின் ஆவணம். இது இந்துத்துவத்திற்கு நெருக்கமானப் போக்காகும். ஈழ விடுதலையை வலியுறுத்துவது, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்வது, முகமதியர்கள் மற்றும் கிறித்துவர்களை சந்தேகப் பட்டியலில் வைப்பது ஆகிய நாம் தமிழர் கட்சியின் மூன்று செயல்திட்டங்களை மட்டும் நாம் இணைத்துப் பார்த்தால், இம்மூன்றையும் தங்களது செயல்திட்டமாக ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டுள்ள, இந்திய மற்றும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரமான இந்து மக்கள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வேறுபாடுகளையே நாம் காண முடியும்.
நாம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், எம்மதத்தவரையும் விலக்கி வைப்பதாகவோ, சந்தேகப் பட்டியலில் வைப்பதாகவோ இயங்கும் கருத்தியல் அல்ல. அனைத்து மதத்தவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும் கருத்தியலே ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த பல போராட்டங்களிலும், இவ்வாறு போலித் தமிழ்த் தேசியர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படும் சமூகத்தினர் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்களின் அமைப்பான ஆதித்தமிழர் பேரவையினர், ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடுகின்றனர். பல முசுலிம் மற்றும் கிறித்தவ மத அமைப்புகள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராடியிருக்கின்றன. அதேபோல, தெலுங்கு நாயுடு, நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழர் உரிமை பேசும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பு வகிக்கின்றனர்.
இச்சமூக மக்களின் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து, தமிழ்த் தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின்பால் அவர்களை அணிதிரட்ட வேண்டியதே உண்மையான தமிழ்த் தேசியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அச்சமூக மக்களையும், இயக்கங்களையும் அவர்களது பிறப்பு வழி சாதியைக் கண்டுபிடித்து, அதன் காரணமாகவே அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானது.
தம் வீட்டு மொழியாக அயல் மொழியைக் கொண்டிருந்தாலும், சமூக மொழியாக தாய்தமிழை ஏற்றுக் கொண்ட இச்சமூக மக்களை ஒட்டுமொத்தமாக ‘வடுகர்’ எனக் குறிப்பிட்டு, அவர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை அறிஞர் குணா முதலில் முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவு குறித்த பல சீரிய ஆய்வுகளை முன்வைத்த, அறிஞர் குணாவின் இப்பார்வை தவறானது. ஒரு தேசிய இனத்தின் தாயகப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்கி, அம்மக்களோடு பிணைந்த உளவியலையும், வாழ்வியலையும் பெற்ற மக்களை முழுவதுமாக வெளியேற்றுவது பாசிசமே ஆகும்.
இப்பாசிசக் கருத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளும், “எழுகதிர்” அருகோபாலன் போன்ற சிலரும் தான் “தமிழ்த் தேசியம்“ என்ற பெயரில் இத்தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் தென்னாட்டுக் கிளையான திராவிடத்தை மட்டுமே இவர்கள் குறிவைத்து சாடுகிறார்களே ஒழிய, தமிழர்களின் முதன்மையான எதிரியான ஆரியப் பார்ப்பனிய இந்தியத் தேசியத்தை விட்டுவிடுகிறார்கள்.
‘தமிழனை தமிழனே ஆள வேண்டும்’ என்று கூறும் இவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் தம்மை அமர வைக்கக் கோருகிறார்கள். இந்திய அரசுக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிப் பதவியான தமிழக முதல்வர் பதவியில், ‘தமிழ்ச் சாதியில்’ பிறந்த இவர்களை அமர்த்தக் கோரும் பதவி அரசியலைத் தான் இவர்கள், ஏதோ இனவிடுதலை அரசியல் போல் முன்வைத்து படம் காட்டுகிறார்கள். இதற்குப் பதில், அப்பட்டமாக, “எங்களை முதல்வராக்குங்கள்” என தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற தேர்தல் கட்சிகளைப் போல் இவர்கள் பரப்புரை செய்யலாம். அதைவிடுத்து, தமிழர் - தமிழ்த் தேசியம் என பேசுவதெல்லாம் வெறும் ஓட்டுகளுக்காகவே ஆகும்.
தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
பெ.தி.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் “திராவிடம்” என்ற தவறான சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் தமிழீழ விடுதலைக்கும் தமிழக உரிமைகளுக்கும் செய்த பங்களிப்புகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது தவறான கருத்தியலின் காரணமாக, அவர்களது உண்மையான ஈகங்கள் பெருமையிழப்பதை நாம் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்ட வேண்டும். பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் இவ்வமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை என்பதும் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழ் – தமிழினம் என முழங்கி செயல்படும் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் தத்துவ அடித்தளத்தையும், நடைமுறை வேலைத் திட்டங்களையும் தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர்களது பிறப்புவழிச் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துத் தூற்றுவது மனுதர்மப் போக்கே ஆகும். இதுவே, இப்போலித் தமிழ்த் தேசியர்களுக்கு பெரும் வேலையாகி விட்டது.
சாதியை முன்வைத்து வெளியிடப்படும், இவ்வகை பதவி சுகம் தேடும் போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துகளை, உண்மையான “தமிழ்த் தேசியம்” எனக் கூறி, தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும், இந்தியத் தேசிய வெறியர்களும் உள்நோக்கத்துடன் வெளியிட்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள்.
திராவிடத்திற்கு மாற்றாக, தமிழ்த் தேசியக் கருத்தியலின் வலிமையை கருத்தியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தமிழ்ச் சமூகத்தின் இழிவான சாதியை வைத்து அதை நிறுவக் கூடாது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால், மொழிவழி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்திற்குள் குடியேறி, பொருளியல் – பண்பாட்டு ஆதிக்கங்கள் புரியும், தெலுங்கர்கள், மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து அயல் இனத்தாரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் குடியேறி வரும் வடவர்களையும், மலையாளிகளையும் வெளியேற்றக் கோருவதும் இந்த அடிப்படையில் தான்.
தமிழீழத் தாயகப்பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயலும் சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிக்கும் அதே அடிப்படையில் தான், த.தே.பொ.க., தமிழ்நாட்டுத் தமிழர்களை சிறுபான்மையாக்கும் விகிதத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறும் வடவர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரை வெளியேற்றக் கோருகிறது. திராவிட இயக்கமான ம.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகள் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்கின்றனவே தவிர, தமிழகத்தில் மலையாளிகளையும், வடவர்களையும் வெளியேற்றக் கூடாது என்பதையும் நாம் விமர்சிக்கிறோம்.
தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் உள்ள அயல் இனத்தாரை வெளியேற்றுகின்ற அதே வேளையில், தமிழக எல்லையோரங்களில் உள்ள பிற தேசிய இன மக்கள் மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம்.
இது உலகெங்கும் இன்றைக்கும் உள்ள 'விசா நடைமுறையைப் போன்றதாகும். ஆனால், அறிஞர் குணா பாதையில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி, தமிழ் மக்களாக வாழுகின்ற சமூகத்தினரை வெளியேற்றவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத பாசிசத் தன்மையுடன் முன்வைக்கப்படும் திட்டமாகும். ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் முழுவதுமாக ஒரே இனம் தான் வாழ வேண்டும் என்ற இனத்தூய்மையாக்கல் கொள்கை ஒருக்காலும் சாத்தியம் ஆகாது.
ஏனெனில், ஒரு தேசிய இனத் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில், அண்டைத் தேசிய இன மக்கள் குடியேறுவதும், பிறநாட்டினர் சிறு அளவில் குடியேறுவதும் இன்றைய நடைமுறையில் தவிர்க்க இயலாது. ஆனால், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவே, பிற தேசிய இன மக்கள் குடியேறலாமேத் தவிர, அத்தேசிய இன மக்களை விட அதிகளவிலான பிற தேசிய இன மக்கள் குடியேறக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பாசிசமாகாது. இந்த அளவுகோல் வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை. ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)
அருணபாரதி அண்ணே, ஒரு தெலுங்கரைத் தெலுங்கர் என்று சொல்வதில் என்னைய்யா பிரச்சனை? ஏண்ணே, ஒரு தெலுங்கரை தே...பயலை என்றா சொல்லுகிறோம்? திருடா என்றா சொல்லுகிறோம். அந்த இனம் அவ்வளவு கேவலமான இனமா? இன அடையாளத்தை மறைப்பதில் சூழ்ச்சி இருக்கிறது. கருணாநிதியைத் தெலுங்கர் என்பதா தமிழர் என்பதா? பொருளியல், சுரண்டலியல், ஒழுக்கவியல் ஆகியனதான் இனத்தை அடையாளப்படுத்து ம் என்றால் நித்தியானந்தா தெலுங்கராகிவிடு வார். அமெரிக்காவின் மோனிக்கா லெவின்ஸ்கியும் தெலுங்கச்சி ஆகிவிடுவாள்.
கருணாநிதி தன்னை ஒரு தமிழர் என்ற முகத்திரை போட்டுக் கொள்வதிலும் தெலுங்கர் என்ற அடையாளத்தை மறைப்பதிலும் நோக்கம் உள்ளது. 1956க்கு முன்னால் வந்தாலும் திராவிடத்தனம், தெலுங்கினப் பற்று மாறவில்லையே!
அளவுக்கு அதிகமாக பொதுவுடமைச் சரக்கு அடித்தால் இப்படித்தான், எதையாவது வம்படிக்குச் சொல்லி தமிழனுக்குக் காயடிக்கப் பார்ப்பது. கர்நாடகத் தமிழர்களின் தாயகமே அந்த மண்தான். ஈழத் தமிழர்களின் தாயகமும் ஈழம்தான் இலங்கைதான். இங்கே வந்த தெலுங்கராவது வந்தவர்கள், வந்தேறிகள்! அவர்களுக்காக நீர் இந்த மண்ணில் சொல்லும் வரலாற்றுக் கணக்கெல்லாம் எங்கைய்யா போச்சிது? வறட்டு மாக்சியத்தை வரைமுறையில்லாமல ் தின்று வாந்தியெடுக்கிற ீர்கள். உம்மை யாரு பாசிஸ்டு என்று சொன்னது. உங்களைப் போன்றவர்கள் வறட்டியம் தட்டுகிறீர்கள்.
அது என்ன சார், 1956 கணக்கு? 1956க்குப் பின் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு சரவணாநாயுடு நல்ல தமிழப் பற்று கொண்டிருந்தால் தமிழரா? தெலுங்கரா?
கட்டிலுக்காக காலை வெட்டாதீர்!
”தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்கள் தமிழகத்தைத் தாயகமாகவும், தாய் மொழியாகத் தமிழையும் ஏற்றுக் கொண்ட உளவியலைப் பெற்றுள்ளனர்.”
என்று கூறுகின்றீர்கள்.
அப்படியானால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுங்கள்.
1. தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்கள் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டிருக்கிறார ்கள் என்பது உண்மையானால், தமிழர் தாயகத்தின் எல்லைப்
பகுதிகளை ( தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, கொள்ளேகாலம், கோலார், பெங்களுர், திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர் முதலிய பகுதிகளை ) ச் சுற்றி
உள்ள மாநிலத்தவர் பிடுங்கிய போது, தமிழ்நாட்டில் அப்பொழுது இருந்த திராவிடத் தெலுங்கு கன்னடத் தலைவர்கள் நீங்கள் சொல்வதைப்போல தமிழர்
என்ற உளவியலை பெற்றிருந்த நிலையில், எந்த வலுவான போராட்டமும் நடத்தி தடுக்காமல் வேறு என்ன பிடுங்கிக் கொண்டிருந்தார்கள்?
2. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட உளவியலைத் தெலுங்கர்கள் கொண்டிருக்கிறார ்கள் என்பது உண்மையானால், 400 ஆண்டு காலத்திற்குப்
பிறகும் வீட்டில் தங்கள் தாய்மொழியாகக் கருதும் தமிழில் பேசாமல், தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாது போனதாக கூறப்படுகிற ஆந்திர
மொழியான தெலுங்கில் பேசுவதேன்? எல்லைப் பகுதிகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டுப் பகுதிகளிலும் தெலுங்குப் பள்ளிகள் பெருவாரியாக நடத்தப்படுவதேன்?
3. 400 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டில் ஆதிக்க வாழ்வு வாழ்ந்த தெலுங்கர்களைத் தோழர் அருணபாரதி போன்றோர் தமிழர்களாக ஏற்றுக் கொள்ள
முன்வந்திருக்கின்ற போது, அவர்களில் 99 விழுக்காட்டினர் தங்களைத் தமிழர் என்று ஒத்துக்கொள்ளவி் ல்லையே, ஏன்? அருப்புக்கோட்டை , சங்கரன்கோயில்,
கோவில்பட்டி போன்ற பகுதிகளில் தேர்தல் சுவரொட்டிகள் தெலுங்கில் வெளியிடப்படுகின ்றன என்றால் அது, அங்குள்ள தெலுங்கர்கள் தங்களைத்
தமிழர்களாகக் கருதி வாழ்கிறார்கள் என்று பொருளா?
4. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குகின்ற தெலுங்கர்கள், தங்கள் கட்சிகளின் பெயர்களில் தமிழ், தமிழர் என்று முனனொட்டுகள்
இல்லாமல் பார்த்துக்கொள்வ திலிருந்துத் தெலுங்கர்கள் தங்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புரியவில்லையா? அவர்கள் தமிழர்களுக்குத்
தலைமை தாங்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லையா?
மொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் அங்கேயே தங்கி பல நூற்றாண்டுகளாகி விட்டதால், அங்குள்ள பல பதவிகளில் தமிழர்கள் உள்ளனர். மலேசியா, கனடா போன்ற பல இடங்களிலும் தமிழர்கள் அரசியல் பதவிகளை அடைந்து அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள னர். இவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் போது அங்கு கொண்டு செல்லப்பட்டவர்க ள். இவர்கள் அங்கு மொழிச் சிறுபான்மையினரா க விளங்கி வந்தாலும், காலப்போக்கில் அந்நாட்டின் குடியுரிமைப் பெற்ற மக்களாகவே கருதப்படுவர்.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தமது நாடு போர்ச் சூழலில் இருப்பதை உணர்ந்து பிற நாடுகளுக்கு வெளியேறிவர்கள் ஆவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள இத்தமிழர்கள், தமது தாயக விடுதலைக்குப் பிறகு மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதையே உளவியலாகக் கொண்டிருப்பவர்க ள். இவர்கள் ஆக்கிரமிப்பாளர் கள் அல்லர். இந்தியாவெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள், திபெத்தியர்கள், பாலஸ்தீனியர்கள் உள்ளிட்ட தாயகமற்ற மக்களை புகலிடம் கோரி வருபவர்களாகவேக் கருதி அவர்களுக்கு சமமான குடியுரிமை அளித்து நாம் பாதுகாக்க வேண்டும்.
ஆனால், வடநாட்டிலிருந்த ும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலிருந ்தும் வருபவர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் உள்ள ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடாத உளவியலைப் பெற்றே தமிழகத்திற்கு வந்து குவிகின்றனர். இவர்கள் தமிழகத்திலுள்ள தமிழர்களின் கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்புகளை யும் பறிப்பதோடு, பொருளியல் ஆக்கிரமிப்பாளர் களாகவும் விளங்குகின்றனர் . இவர்களை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும் என்பதையே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியாவாலும் தமிழர்கள் தமிழர்களாகவே பார்க்கப்படுவதற ்கு இந்திய அரசின் இனவெறித் தன்மையே காரணம். இதை முறியடிக்க, இந்தியத்துடனுனா ன தொடர்புகளை தான் நாம் துண்டிக்க வேண்டும். இந்தியத்துடன் சமரசம் செய்து கொண்ட அண்டை மாநிலங்களுடன் நாம் போராட வேண்டும். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு இந்திய அரசு நடத்துகின்ற தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் இந்திய அரசுக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலையை தான் இங்குள்ள சிலர் செய்ய முற்படுகின்றனர் .
கங்காணி, கங்காணி என்று சொல்லிக் கொண்டே, கங்காணிகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு வீதி ஆர்ப்பாட்டம் ஏனையா செய்கிறீர்கள்? உங்களுடைய களம் புரட்சிக் களம் தானே! உங்களது கட்சியும் "சூழ்நிலைக் கைதிகளாகி தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது" என்பது தான் உண்மை. சனநாயகத்தைப் பயன்படுத்தியும் , விடுதலை பெற முடியும். அது உங்களுக்குப் புரியாது. 2007 ஆண்டுகூட "கிழவனல்ல கிழக்குத் திசை" என்று புத்தகம் எழுதியவர் தான் உங்கள் தலைவர் மணியரசன். பெரியாரிசம், (இந்திய) கம்யூனிசம் இரண்டுமே தனது சீடர்களின் சிந்திக்கும் அறிவை மழுங்கடிக்கும் போதைப் பொருள். அதனால் தான் மணியரசன் ஐயாவால் கூட முறையாகச் சிந்திக்க முடியவில்லை. நீர் எம்மாத்திரம்? பாவம் ஒரு சிறுபிள்ளை!. சனநாயகத்தைப் பயன்படுத்தி விடுதலையும் பெறமுடியும். உங்களது கட்சியின் பல கொள்கைகள் தமிழர் விரோத கொள்கைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது!
தோழர் பெ.மணியரசன் பெரியாரை விமர்சிப்பதற்கு ம், நாம் தமிழர் கட்சியினர் பெரியாரை விமர்சிப்பதற்கு ம் வேறுபாடுகள் உள்ளன. பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்புக் கோட்பாடு, சாதி ஒழிப்பிற்கு எதிரான போராட்டம் என பெரியார் தமிழ்ச் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை பாராட்டி நன்றி செலுத்தும் அதே வேளையில் தான், அவரது இனம், மொழி குறித்த மாறுபட்ட கருத்துகளை நாம் விமர்சிக்கிறோம் . இதை தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சிலும், பெரியாருக்குப் பின் பெரியார் நூலிலும் காணலாம். தோழர் பெ.மணியரசன் அவர்கள் தொடங்கி, இயக்கத்தின் கடைக்கோடித் தோழர்கள் வரைக்கும் இதே கருத்துள்ளவர்கள ் தாம். இதைத்தான் நாங்கள் பேசியும் எழுதியும் வருகிறோம்.
ஆனால், இயக்குநர் சீமானின் தம்பிகளோ, “பெரியாரை கன்னடர்“ என சாதி கண்டுபிடித்த இழித்தூற்றுவதைத ் தான் நாங்கள் விமர்சிக்கிறோம் .
ஆனால், “பெரியார் எங்களுக்கு பாடம்”, “பிரபாகரன் பேச்சையும், அண்ணன் கொளத்தூர் மணியின் பேச்சையும் கேட்பேன்” என்றும் இயக்குநர் சீமான் இதழ்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க,
நாம் தமிழர் ஆவணம் பக்கம் 43இல் பின்பற்றப்பட வேண்டிய தலைவர்கள் என “புரட்சிப் பெரியார்” என்று பெரியாரை அடையாளப்படுத்தப ்பட்டிருக்க,
நாம் தமிழர் தம்பிகளோ இணையத்தில் “பெரியார் கன்னடர்” என முழங்கிக் கொண்டிருக்க...
நாம் தமிழரின் பெரியார் குறித்த உண்மையான மதிப்பீடுகள் தான் என்ன என தோழர் செந்தில்நாதன் அவர்களாவது உறுதிபட விளக்க முடியுமா? ஏன் உங்களிடம் இவ்வளவுக் குழப்பங்கள்..?
சாதி ஒழிப்பிற்குப் போராடிய பெரியாரையே, சாதியை வைத்து இழித்துப் பேசுகி்ன்ற நாம் தமிழர் கட்சித் தம்பிகள் பிழைப்புவாத அரசியல் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள்? தாங்கள் ஓட்டுப் பொறுக்கி பதவி சுகம் அனுபவிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மமதைக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்றேத் தோன்றுகிறது.
தமிழ்த்தேச விடுதலை இயக்கங்களில் தன்னைத் தமிழராக மனதார உணர்ந்தவரும், வீட்டிலும் முழுமையாகத் தமிழ் பேசும் மக்களை மட்டுமே இணைத்துக் கொள்ள வேண்டும்.
நீண்டகாலமாகத் தமிழகத்தில் வாழும் எவரையும் நாம் வெளியேற்றச் சொல்லவில்லை. அப்படி கற்பிதம் செய்து எழுதும் அருணபாரதியின் எழுத்து ஒரு விஷமம். ஒரு பின்னூட்டம் சொல்கிறது, இனி நாம் அருணபாரதியின் சாதியைக் கேட்போம் என்று. ஆமாம். தயங்காமல் கேட்கிறோம். அருணபாரதி தமிழரா அல்லை நாயுடுவா, ரெட்டியா, கவுடாவா........ .......? ஏனென்றால், அவரது கட்டுரை அவ்வளவு விஷமத்தனம் கொண்டதாக உள்ளது. ஒரு உண்மைத் தமிழனால் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருக்க முடியாது.
“ஓட்டுப் போடாதவர்கள் செத்த பிணங்களுக்குச் சமம். அவர்களை சுடுகாடுகளில் அடக்கம் செய்யக் கூட அனுமதிக்கக் கூடாது” - இதை பேசியது, இந்தியத் தேசிய வெறியர்களோ, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா வெறியர்களோ அல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர ் இயக்குநர் சீமான் தான் செங்கிப்பட்டிக் கூட்டத்தில் இப்படி பேசியுள்ளார்.
ஓட்டுப் போட எப்படி உரிமையுள்ளதோ, அதைப் போல ஓட்டுப் போட மறுப்பதும் உரிமை. இது தான் சனநாயகம். ஆனால், எப்படியாவது ஓட்டுப் பொறுக்கிப் பதவி சுகம் அனுபவிக்க வேண்டுமென்று நினைக்குமளவிற்க ு பதவி வெறித் தலைக்கு ஏறிய இயக்குநர் சீமான் அவர்ளோ, ஓட்டுப் போட மறுக்கும் சனநாயக உரிமையை வெறுப்பதில் வியப்பில்லை. இந்த முத்துக்களைத் தான் “செங்கிப்பட்டியி ல் சீமான் முழங்கிவிட்டார் ” என்று கூறி வியக்கிறார் செந்தில்நாதன்.
இந்தியத் தேசிய வெறியர்களான காங்கிரசு - பா.ச.க. கூட சொல்லத் தயங்கும் வார்த்தைகளை, வெறியுடன் கொட்டும் இயக்குநர் சீமான் தமிழ் மக்களுக்கு என்னவகை சனநாயகத்தை வழங்குவார் என்று செந்தில்நாதன் தான் கூற வேண்டும்.
நாங்கள் பாடம் கற்றுக் கொள்வதெல்லாம் இருக்கட்டும், முதலில் ஒருவரை தமிழர் என்றும் திராவிடர் என்றும் எப்படி வரையறுக்கிறீர்க ள்? திராவிடர் என்பது கருத்து அடிப்படையில் வருவதா அல்லது சாதி பார்த்து வருவதா? இதை முதலில் விளக்குங்கள்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தேர்தல்களிலும் பங்கெடுப்பதலில் லை. வெற்றி பெற்றவர்களிடமும ் மனு கொடுக்க நாங்கள் காத்திருப்பவர்க ளும் அல்ல. இதற்கு நீங்கள் தக்க ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.
மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தான் தமி்ழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுக்கிறது . இதில் எவ்வித சமரசமும் கிடையாது. தேர்தல்களில் பங்கெடுக்காத மாவோயிஸ்டுகளும் மக்களுக்கான கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம ் வைக்கின்றனர். இப்படிப் போராடுவதும் தவறு என்றால், நாம் தமிழர் கட்சியினர் எந்த கோரிக்கையும் முன்வைக்காமல் எப்படி போராட்டங்களை நடத்துவது என உலக மக்களுக்க சொல்லித் தருவார்களா?
ஓட்டுப் பொறுக்கி அரசியலில் இறங்கி பதவி சுகம் தேடாத, பணம் - பதவி ஆசைகளுக்கு சோரம் போகாத, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகாத, தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியத்திற்கு கிஞ்சித்தும் சமரசமாகாத கருத்தியல்களுடன ் இயங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், தோழர்களையும் நாங்கள் வென்றெடுத்துள்ள ொம். நாம் தமிழர் கட்சியில் இலட்சம் பேர் இருந்தாலும், நாங்கள் சொன்ன அத்தனை கருத்தியல்களையு ம் ஏற்றுக் கொண்ட ஓரிருவரையாவது சுட்ட முடியுமா? வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் அல்ல, எண்ணங்களில் தான் உள்ளது. தமிழக இளைஞர்களை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்குப் பயன்படுத்தி பதவி அடைவதுதான் உங்கள் சாதனை என்றால், நீங்கள் எங்களுடன் போட்டியிடவே தகுதியற்றவர்கள் ஆவீர்கள்.
தமிழ்த் தேசியம் என்பது தமிழ் இனத்தின் விடுதலையைப் பற்றிப் பேசுகின்ற கருத்தியல். இக்கருத்தியலைத் திரித்து, ஓட்டுப் பொறுக்கப் பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சியினருக்கு தமிழ்நாட்டு விடுதலை குறித்தும், தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும் சிறிதும் அக்கறை கிடையாது. ஏனெனில், தேர்தலில் பங்கேற்பதன் மூலம் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், இச்சிக்கல்களுக் குக் காரணமாக விளங்கும் இந்திய அரசை எப்படி எதிர்ப்பீர்கள் என்பதே கேள்விக் குறி. ஆக, எப்படி முதல்வர் பதவியைப் பிடிப்பது என்பதில் தான் உங்களுக்கு அதிக அக்கறை உள்ளது என்பதே தெளிவு. தேர்தலின் மூலம் ஒருபோதும் விடுதலை பெற முடியாது. பணமும், பதவியும் வேண்டுமென்றால் பெறலாம்.
நாம் தமிழர் கட்சியின் சாதனை என்ன என்பதை காண முப்பதாண்டு காலம் நாம் காத்திருக்கத் தேவையில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவர்களது இலட்சணம் தெரிந்துவிடும்.
2007இல் தோழமை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 'கிழவனல்ல கிழக்குத் திசை' என்ற நூல் தோழர் பெ.மணியரசன் எழுதிய நூல் அல்ல. அது பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துகளையும், ஓவியர் புகழேந்தி அவர்களது ஓவியங்களையும் கொண்ட ஓர் தொகுப்பு. அந்நூலில் இடம் பெற்ற பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் தொகுக்கும் வேலையை மட்டும் தான் தோழர் பெ.மணியரசன் செய்தார்.
பெரியாரிடமுள்ள நல்ல கருத்துகளையும், குறையுள்ள கருத்துகளையும் ஓரு வாசகர் தெரிந்து கொள்ளும் வகையில் தான் அதை தொகுத்தக் கொடுத்திருக்கிற ார். குறிப்பாக, பெரியார் ராஜாஜியிடம் கொண்டிருந்த நெருக்கம் குறித்தும், திராவிடர் கழகத்தை உட்கட்சி சனநாயக முறை கொண்ட அமைப்பாக அவர் நடத்தாத குறித்தும், இன்னபிற பெரியாரின் சிந்தனை பலவீனங்கள் குறித்தம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும்படி அது தொகுக்கப்பட்டுள ்ளது.
மேலும், வர்ண சாதி ஒழிப்பு, பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமை போன்றவற்றில் பெரியாரின் பாராட்டத்தக்க கருத்துப் பங்களிப்பையும் போராட்டங்களையும ், த.தே.பொ.க.வும், தோழர் பெ.மணியரசன் அவர்களும் இன்றும் பாராட்டுகிறார்க ள். இதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட “பெரியாருக்குப் பின் பெரியார்“ நூலே சான்று.
மொழி, இனம் குறித்த பெரியாரின் முற்றிலும் தவறான நிலைபாடுகளை கொஞ்சமும் சமரசம் இன்றி தோழர் பெ.மணியரசன் விமர்சித்து வருகிறார். திராவிடம் என்ற கருத்தியலை, அதன் அரசியல் வடிவத்தை நூற்றுக்குநூறு எதிர்த்து வருகிறார். நுனிப்புல் மேய்வது போல் திரு. பாண்டியன் அவர்கள், தோழர் பெ.ம. குறித்து விமர்சிப்பது சரியல்ல. ஒரு நூலில் என்ன இருக்கிறது என்று கூட ஆராயாமல் பேசுமளவிற்கு முனைவர் வே.பாண்டியன் அவர்களுக்கு ஏதோ கண்ணை மறைக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.
த.தெ.பொ.க. தெளிவாகவும், ஒளிவு மறைவின்றியும் உரத்துச் சொல்கிறது. இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி, தமிழ்நாட்டையே தாயகமாக கொண்டு வாழும் தெலுங்கு பேசும் மக்களும், கன்னடம் பேசம் மக்களும், உருது பேசும் மக்களும், தமிழர்களைப் போல் சமௌரிமையுள்ள தமிழ்த் தேசக் குடிமக்கள் ஆவர். எனவே, அம்மக்கள் த.தே.பொ.க. கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அதன் அமைப்பு விதிகளுக்கு ஏற்ப களப்பணி ஆற்ற வந்தால், அவர்களை இருகை நீட்டி வரவேற்கக் காத்திருக்கிறோம ்.
ஏற்கெனவே, மேற்படி சிறுபான்மை மொழி பேசும் யாராவது எங்களுடன் இருந்தால் அது எங்கள் கொள்கைக்கு ஏற்ற நடைமுறைதானே தவிர முரண்பட்டதல்ல.
வரலாற்று வழியில் வந்து குடியேறி தமிழ்த் தேசக் குடிமக்களாக நூற்றாண்டுகளாக வாழும் மக்கள் வேறு தாய்மொழியைக் கொண்டிருந்தாலும ், அவர்கள், தமிழை கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் த.தே.பொ.க. முன் வைக்கும் நிபந்தனை.
எனவே, பாண்டியனார் எங்களிடம் சாதி குறித்து துப்பறியும் வேலை செய்யும் அவசியமே தேவையில்லை.
மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைத்துப் பிறமொழியினரையும ், வெளிமாநிலத்தவர் களையும் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி ‘வெளியாரை வெளியேற்றவாம’ என்ற இயக்கத்தை த.தே.பொ.க. தொடர்ந்து நடத்தி வருகிறது.
தமிழ்த் தேச விடுதலையில் அக்கறையில்லாத, தமிழ்த் தேச விடுதலையை தனது இலட்சிய இலக்காக வைத்துக் கொள்ளாத, தேர்தல் அரசியலில் விருப்பம் வைத்துள்ள, தன்முனைப்பும் தமிழினத்தின் பேரால் தமிழ் மொழியின் பேரால், சுயதம்பட்ட விளம்பர வேட்கையும் கொண்ட உதிரிக் கருத்தியலாளர்கள ், சுயசாதி பெருமைக் கோட்பாட்டில் திளைக்கிறார்கள் . இவ்வாறாக இவர்கள் பார்ப்பனியத்தின ் பங்காளியாகிவிடு கிறார்கள். தமிழ் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளை, உள்மனதளவில் தன் சாதிக்குக் கீழானதாக்க் கருதும் போக்கும் இவர்களிடம் இருக்கும்.
ஒரு விடுதலை இயக்கத்திற்கு அனைத்து வகை சனநாயக சக்திகளையும் இணைத்து, முதன்மை எதிரியை வீழ்த்தக் களம் காண வேண்டும் என்ற அக்கறை இருக்கும். சுயசாதி தம்பட்டக்காரர்க ளுக்கு, அந்த அக்கறை தேவைப்படாது. இருக்கின்ற, மக்கள் சக்திகளை திரித்துப் பிரித்து, இந்திய ஏகாதிபத்தியத்தி ன் பக்கமும், பார்ப்பனியத்தின ் பக்கமும், அவர்கள் விரட்டிவிடவே அவர்களின் தாந்தோன்றித் தன்முனைப்பு தொலை நோக்கு இலட்சியமற்ற தமிழின ஆர்வமும் பயன்படும்.
அடுத்து, பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்தியல்களை உமது கட்சியும், ஐயா மணியரசனாரும் ஏற்கின்றீர்களா? இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லை உங்களுக்கு? பெரியார் தனது 72 வது அகவையில், 30 வயதையும் அடையாத மணியம்மையாரை திருமணம் செய்தது எதனால்?
தமிழர்களை என்று அவர் திராவிடர் என்று அழைத்தாரோ அன்றே தமிழரது முதல் முள்ளிவாய்க்கால ் நிகழ்ந்து விட்டது.
பெரியாரின் மொழி, இனக் கொள்கைகள் தவறானவை. அவரிடம் சனநாயகம் இல்லை. அவரது திராவிடக் கருத்தியல் தமிழினத்தை வீழத்தி இருக்கிறது. இதையெல்லாம் ஆமோதிக்கும் உமது கட்சி, பெரியாரைப் பறக்கனிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? விஷம் கலந்த பாலை வெளியில் கொட்டுவோமா அல்லது அதிலுள்ள பாலுக்காக தினமும் சிறிதளவு உட்கொள்வோமா? தமிழினத்திற்கு Slow Poison கொடுக்கிறீர்களா ?
*********
நுனிப்புல் மேய்வது நாங்களல்ல. நான் முன்பே குறிப்பிட்டபடி, தமிழனை அழித்த இரண்டு விடயங்கள் பெரியாரிசம் என்ற திராவிடக் கருத்தியலும். கம்யூனிசம் என்ற பிராமண மயமாக்கப்பட்ட கருத்தியலும். இவற்றால் ஆட்கொள்ளப் பட்டவர்கள் தங்களது சிந்தனைத் திறத்தை இழந்து விடுகிறார்கள். செக்கு மாடுகளாகிச் சுற்றிக் கொண்டிருப்பார்க ள்.
........// தமிழ்த் தேச விடுதலையில் அக்கறையில்லாத, தமிழ்த் தேச விடுதலையை தனது இலட்சிய இலக்காக வைத்துக் கொள்ளாத, தேர்தல் அரசியலில் விருப்பம் வைத்துள்ள, தன்முனைப்பும் தமிழினத்தின் பேரால் தமிழ் மொழியின் பேரால், சுயதம்பட்ட விளம்பர வேட்கையும் கொண்ட உதிரிக் கருத்தியலாளர்கள ், சுயசாதி பெருமைக் கோட்பாட்டில் திளைக்கிறார்கள் . இவ்வாறாக இவர்கள் பார்ப்பனியத்தின ் பங்காளியாகிவிடு கிறார்கள். தமிழ் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளை, உள்மனதளவில் தன் சாதிக்குக் கீழானதாக்க் கருதும் போக்கும் இவர்களிடம் இருக்கும். ஒரு விடுதலை இயக்கத்திற்கு அனைத்து வகை சனநாயக சக்திகளையும் இணைத்து, முதன்மை எதிரியை வீழ்த்தக் களம் காண வேண்டும் என்ற அக்கறை இருக்கும். சுயசாதி தம்பட்டக்காரர்க ளுக்கு, அந்த அக்கறை தேவைப்படாது. இருக்கின்ற, மக்கள் சக்திகளை திரித்துப் பிரித்து, இந்திய ஏகாதிபத்தியத்தி ன் பக்கமும், பார்ப்பனியத்தின ் பக்கமும், அவர்கள் விரட்டிவிடவே அவர்களின் தாந்தோன்றித் தன்முனைப்பு தொலை நோக்கு இலட்சியமற்ற தமிழின ஆர்வமும் பயன்படும்.//...............
நான் என்ன சொன்னேன். உங்களது கட்சியல் இருப்பவர்களில் தெலுங்கு, கன்னட வழிவந்த உருப்பினர்களில் பெரும்பாலோருக்க ு உண்மையில் தமிழ் தேசியத்தில் ஆர்வம் இல்லை என்றும், அவர்களை வைத்துக் கொண்டு தேசியவிடுதலைக்க ுப் போராடுவது "செக்கு மாட்டை வண்டியில் பூட்டி, பயணம் போவதற்கொப்பாகும ்" என்றும் சொல்லி இருந்தேன். அதற்குத்தான் மேற்குறிப்பிட்ட உங்களின் பதில் இவ்வாறாக அமைந்துள்ளது. இதைத்தான் ஐயா மணியரசனார் அவர்கள் "நெருப்புக் கோழித் தந்திரம்" என்று சொல்வார். ஐயா மணியரசனார் சொன்னது, திராவிட இயக்கங்களில் இருக்கும் நெருப்புக் கோழிகளைத்தான். ஆனால், தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சியிலேயே நெருப்புக் கோழிகள் இருப்பது அவருக்குத் தெரியாது பாவம்! எங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த அளவுக்கு நெருப்புக் கோழிகள் தா. தெ. பொ. க. வில் இருக்கின்றனவே என்ற செய்தி.
எங்களைப் பொருத்தமட்டில் 400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட வழி ஆளும் வர்க்கம் வெரும் சிறுபாண்மை மக்களில்லை. அவர்கள் ஒரு ஆதிக்க இனம். அவர்களைத் தமிழராக, நிபந்தனையில்லாம ல் நாங்கள் ஏற்கத் தயாரில்லை. அவர்களை நாங்களும் "தமிழக மக்களாக" ஏற்கிறோம். ஆனால், அவர்களை நாங்கள் "தமிழர்களாக" ஏற்க வேண்டுமானால், அவர்கள் வீட்டிலும் முழுமையாகத் தமிழ் பேச வேண்டும். அவர்கள் தங்களைத் தமிழர்களாக மனதார ஏற்கவேண்டும். தமிழினத்தை அழித்த பெரியாரை அவர்கள் முற்றாகப் புறக்கனிக்க வேண்டும்.
இல்லையேல் அவர்கள் சிறுபாண்மை இனமாக வாழட்டும். அவர்களின் தனி மனித உரிமைகள் மதிக்கப்படும். ஆனால், அவர்கள் எங்களை ஆள முடியாது. அண்டை மாநிலங்களிலுள்ள தமிழர்கள் பெரும்போலோர் அந்த மண்ணின் மக்கள். ஆனல், அவர்கள் அங்கு ஒரு M.L.A. வாகக் கூட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னடர்கள் "முழுவதுமே" தமிழகத்தில் "வந்தேறி" எங்களை ஆண்டு, ஆதிக்கம் செலுத்தியவர்கள் இன்றும் செலுத்திக் கொண்டிருப்பவர்க ள். இவர்கள் ஆண்டு காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு உரிமைகளை நாங்கள் இழந்தது தான் மிச்சம். இன்று முல்லைப் பெரியாரிலாவது ஓரளவுக்கு நல்ல தீர்ப்பு வந்ததென்றால் அதற்கு இந்தத் திராவிடர்கள் காரணமல்லை. தன்னெழுச்சியாக நடந்த எளிய தமிழர்களின் போராட்டம் தான்.
தமிழகத்தைச் சுற்றி திராவிட தேசங்களை வைத்துக் கொண்டு, தமிழகத்திலும் திராவிடர்களை ஆள அனுமதிப்பது போன்ற ஒரு செயல் மிகவும் ஆபத்தானதும், அபத்தமானதுமாகும ். தமிழர்கள் தொடர்ந்து நாசமாய்ப் போய்க்கொண்டிருப ்பது இதனால் தான்.
பள்ளியில் தமிழில்லை. அரசு சாராயம் விற்கிறது. தமிழர்கள் அகதிகளாக்கப் பட்டிருக்கிறார் கள். அகதிகளும் வதை படுகிறார்கள். தமிழரின் நிலம் மாற்றான் கைக்கு மாறுகிறது. வேண்டாம் திராவிடம். அரசியலில் வேண்டாம் திராவிடர்.
எங்களது விடுதலைப் போராட்டத்தில் "அனைத்து வகை" சனநாயக சக்திகளையும் நாங்கள் இணைத்துக் கொள்ள மாட்ட்டோம். ஏனென்றால் தமிழத்தேசியம் செக்கு மாடாகி விடக்கூடாதல்லவா ? தா. தே. பொ. க. தன்னை வேண்டுமானால் "திராவிட தேசப் பொது உடைமைக் கட்சி" என்று அழைத்துக் கொள்ளட்டும்.
இந்த நெருப்புக் கோழியோடு எனது உரையாடல் முற்றுப் பெறட்டும்!
சாதிக்கும் இனத்துக்கும் உள்ள் வேறுபாட்டை முதலில் விளக்க வேண்டும்!
இந்த வேறுபாட்டைக் கூட சரியாகப் புரிந்துகொல்ல வில்லையா? அல்லது புரிந்துகொல்லாத து போன்று களத்தில் இரங்கியது நீங்கள் குழமபியா? அல்லது பிறரைக் குழப்பவா?
இத்தகையோர் முதலில் தமிழ்நாட்டை தமிழன் ஆளவண்டும் என்பர். பின்பு மருத்துவர் கூறுவதுபோல் எங்கள் சாதிக்காரன் ஒருவன் கூட முதலமச்சர் பதவிக்கு வரவில்லை என்பர். இவர்களுக்கு தமிழ்நாட்டை ஆரிய டெல்லி ஆளுவது பிரச்னை இல்லை.
தமிழத்தேசப் பொது உடைமைக் கட்சியின் பெரியார் நிலைப்பாட்டையும ், தமிழர் யார் என்ற நிலைப்பாட்டையும ் முற்றாக நாங்கள் நிராகரிக்கிறோம் . எனவே, மாற்றானின் சாதியைக்கேட்டு அவனை அடையாளங்காண்பதை த் தவறானதாகக் கருதவில்லை. அது தமிழர்களின் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்று. பட்டதெல்லாம் போதாதா?
"கிழக்குத் திசை" என்று பெரியாரை அவர் வர்ணித்தது ஒரு அபத்தம். என்னுடைய கேள்வி என்னவென்றால் "கிழவனல்ல கிழக்குத் திசை" என்ற நூலை அவர் "தொகுக்கும்" போது, "பெரியாருக்குப் பின் பெரியார்" என்ற நூலில் உள்ள செய்திகள் அன்றே அவருக்குத் தெரியுமா அல்லது தெரியாதா? தெரியாதென்றால் அவரது அறிவு பரிணாம வளர்ச்சியை நாங்கள் ஏற்கிறோம். தெரிந்தே அப்படி எழுதியிருந்தால் அது ஒரு அறிவு நாணயமற்ற செயல். இதற்கு மேல் சங்கடத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.
நான் என்றும் தி.மு.க. அனுதாபி இல்லை. ஆனால், அதன் பிராமண எதிர்ப்பு கூச்சலால் சற்றே நெகிழ்ந்தது உண்டு. அவ்வளவே!
அந்தத் திருத்தங்கள் தேவையற்றது என்பது எனது தெளிவானக் கருத்து.
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !
புரட்ட்சிக்கவி பாரதிதாசன்.
RSS feed for comments to this post