நம் சமூகநீதித் தமிழ்த் தேசம் ஏட்டில் (2009 தை/சனவரி) இதழிலிருந்து) அறிஞர் அண்ணா குறித்து எழுதிக் கொண்டிருந்த ஆய்வுத் தொடரை மீண்டும் தொடர வேண்டுமென நாமும் தமிழ் ஆர்வலர்களும் அன்புரிமையுடன் கேட்டு வந்தோம். இப்போது புதுப் பொலிவுடன் மீண்டெழுந்துள்ள நம் தமிழ்த் தேசம் ஏட்டில் அத்தொடரைத் தொடர அவர் மகிழ்வுடன் இசைவு தெரிவித்துள்ளார். இத்தொடரில் இது வரை 11 பகுதிகள் வந்துள்ளன. பகுதி 12 அணியமாகிக் கொண்டிருக்கிறது.

உவத்தல் காய்தலின்றியும் அறிவியல் வழிநின்றும் தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா எனும் அரசியல் ஆளுமை குறித்துத் தொடர்ந்து நம்மோடு உரையாட வரும் முனைவர் த. செயராமனை வரவேற்க வேட்கையுடன் காத்திருப்போம்.

 அடுத்த இதழ் (2014 ஆனி) வரும் வரை!

 ஆசிரியர்.

Pin It