திட்டமிட்டே
கட்டப்பட்ட அணையில்
தேங்கி ததும்பும்
எனக்கான பாசன நீர் நீ
குறுவைக்கான விதை நெல்லோடு
காத்திருக்கும்
குறுங்காணிக்காரன் நான்
பாறையாய் பிளவுண்டு கிடக்கும்
என் மருதத்தின் பசுமை
பெருக்கெடுத்து
தடுப்புடைத்து
நுரைபொங்க வரும்
உன் வரவால் மட்டுமே
சுரண்டிய மணலற்று
வறண்ட காவிரியாகி விடுகிறதுன் வீதி
நீ வெளியூருக்குப் போகும்
நாட்களில்
நீர் வேட்கையால்
கடைசி வேர்நாக்கும்
இற்றுப்போகும் வரை தவமிருக்கும்
என் நதிக்கரை
மரங்களைபோல்
நான் காத்திருப்பதை
அறியாதவளில்லை நீ
வளம்சேர்த்துப்புகழ் பெற்ற வண்ணமகள் காவேரி
இன்று குடம் சேர்க்கும் நீர் கூடக் கொடுப்பதற்கு
வழியில்லை!
தடமெல்லாம் மணற்பரப்பு,தகிக ்கும் ஆதவன் கொதிப்பு,
கட்டடம் கட்ட இடம் தேடியலைவோர்க்கு காவிரியின்
மணற்பரப்பு சரியான இடமாச்சு! நதி நீர்களை இணைப்போம் என நாள்தோறும் பேச்சு!
விதியெண்ணி மக்கள் தினம் விடுவர் பெருமூச்சு!
RSS feed for comments to this post