பகைசான்றஇனமாய்வாய்த்த

                பார்ப்பனியத்திமிர்அழித்த

தகைசான்றநீதிக்கட்சி

                தலைவருள்பன்னீர்செல்வம்

மிகைஆர்வம்படிப்பில்கொண்டே

                மேல்நாட்டில்படிக்கப்போனார்

நகைசிந்தும்பண்பால்தஞ்சை

                நகர்மன்றத்தலைவர்ஆனார்

பாராளக்கற்றவெள்ளைப்

                பரங்கியர்ஆண்டநாளில்

ஏராளப்பதவிபட்டம்

                இவர்பெற்றார்; எளியோர்க்கெல்லாம்

தாராளஉதவிசெய்யத்

                தன்வாழ்வைஈந்தார்; நம்மின்

போராளிபெரியார்கைவாள்

                போல்இவர்சுழன்றுவாழ்ந்தார்

ஆளவந்தார்கள்இந்தி

                ஆளவேபார்த்தார்; அந்த

நாளிலேசிறையில்அய்யா!

                நம்பன்னீர்தலைவர்! தன்னின்

தோளுக்கன்(று) இட்டமாலை

                தூய்தாடிப்பெரியார்தம்மின்

தாளுக்கேஇட்டார்; செல்வம்

                தமிழர்தம்நெஞ்சைத்தொட்டார்

இமைமூடாதுழைத்தசெல்வம்

                இலண்டனுக்கழைக்கப்பட்டார்

"அமைச்சரின்ஆலோசனையர்'

                பணியேற்கப்பணிக்கப்பட்டார்

எமனாகவாய்த்த(து) அந்தோ

                இவர்சென்றவானஊர்தி!

நமையெல்லாம்தவிக்கவிட்டார்

                நடுக்கடலில்உயிரைவிட்டார்!                     

– தமிழேந்தி

Pin It