தமிழகத்தில் வாழும் பெரும்பான்மையானத் தமிழர்கள், ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் தங்களை "இந்துக்கள்' என்று அடையாளம் காட்டிக் கொண்டு, தன்னம்பிக்கை இழந்து, மூட நம்பிக்கையில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

Muruga_Temple_370"இந்து மதம்' என்றால் இயற்கைக்கு எதிராக, பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன். மற்றொருவன் தாழ்ந்தவன் என்று வேறுபடுத்திக் காட்டும் முரண்பாடுகள் கொண்ட ஒரே மதம் என்பதை மறுக்க முடியுமா?

ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பு வரை "இந்து' என்ற சொல் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. அவர்கள் நம் நாட்டில் ஆட்சியைத் தொடங்கியபோது உச்ச நீதிமன்றத்தைக் கல்கத்தாவில் அமைத்தனர். கிறித்துவர்களையும், இசுலாமியர்களையும் கட்டுப்படுத்த அவர்களின் மதச் சட்டங்கள் போதுமானவையாக இருந்தன.

அதே நேரத்தில் இந்தியாவில் வாழும் பிற மதங்களைச் சார்ந்தவர்களைக் கட்டுப்படுத்த ஒரு சட்டம் இல்லையே என்று அவர்கள் நினைத்தனர், அப்போது கல்கத்தாவில் வாழ்ந்த ஆரிய பார்ப்பனர்கள், ஒரு காலத்தில் இந்திய நாடு முழுவதும் வாழ்ந்த திராவிடர்களைச் சூழ்ச்சியால் அடிமைப்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய "மனுதர்ம சாஸ்திரம்' அல்லது "வர்ணாஸ்ர தர்மம்' என்ற நூலை 1784 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவரிடம் கொடுத்தனர். அவர் சமசுகிருதத்தில் இருந்ததை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து படித்துப் பார்த்தார். இந்தியர்களைப் பிரித்தாளுவதற்கு இதுவே சரியானச் சட்டம் என முடிவெடுத்தார், அந்த நூலை மையமாக வைத்து ஒரு சட்டத்தை உருவாக்கினாõர். அந்தச் சட்டத்திற்குப் பெயர் இந்துச் சட்டமாகும் (ஏடிணஞீத ஃச்தீ) இங்குதான் முதன் முதலில் "இந்து' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் கிறித்துவர்கள் மற்றும் இசுலாமியர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கியது ஆகும். இதன் மூலம் நம் நாட்டில் வாழும், புத்த மதத்தினரையும், ஜைன மதத்தினரையும், சீக்கிய மதத்தினரையும் இந்து சட்டம் கட்டுப்படுத்தியது. இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்து மதத்தை எதிர்த்து உருவானதே புத்த மதமாகும். அந்த புத்த மதம் இந்து மதச் சட்டத்திற்குள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால் இது எவ்வளவு பெரிய சூழ்ச்சியாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் இப்படிச் செய்தார்கள் என்றால், சுதந்திர இந்தியாவிலும் இதே நிலைதான் நீடிக்கின்றது.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 25இல் "வழிபாட்டுச் சுதந்திரம்' என்ற உட்பிரிவில் கிறித்துவர்கள் மற்றும் இசுலாமியர்களைத் தவிர்த்து மற்ற மதத்தைச் சார்ந்த அனைவரும் "இந்துக்கள்' என்றே குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் இந்து மதச் சடங்குகளை எதிர்த்து வாழ்கின்ற நாத்திகனும் இந்துதான். இதுவே இந்து மதச் சட்ட தத்துவம் ஆகும். இதனை எதிர்த்துப் போராட புத்த, சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களோ, பகுத்தறிவாளர்களோ கூட வலிமையாக இல்லை. சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் மத நம்பிக்கை உள்ளவர்களே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் நாத்திகவாதியாக இருந்தாலும் இது பற்றிப் பேச அவர்களை அவர்கள் சார்ந்துள்ள கட்சிகள் அனுமதிப்பதில்லை.

எனவே "சுதந்திரம்' என்பது இந்திய நாட்டில் போலிச் சுதந்திரமாகவே உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், "சுதந்திரம்' என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்த சட்ட அதிகாரம் பார்ப்பனர் கைகளுக்கு மாற்றப்பட்டது என்பதே ஆகும். எனவே தான் தந்தை பெரியார் இதனை முன்கூட்டியே அறிந்து சுதந்திர நாளைத் துக்க நாளாகக் கொண்டாடக் கோரினார். இதில் அண்ணா அவர்களுக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தமிழர்களில் பெரும்பாலோர்

"கடவுள்' என்று ஒருவர் இருக்கிறார். அவர் மக்களைக் காப்பாற்றுவார்.

"மறு பிறவி' என்று ஒன்று உண்டு. கடவுளை நம்பினால், மறுபிறவியில் அனைத்துச் சுகபோகங்களையும் அனுபவிக்கலாம்.

"மோட்சம்' என்று ஒன்று உண்டு. அங்கு சென்றால் தேவதைகளோடு உறவாடலாம் என்று பார்ப்பனர்களால் பரப்பிய பொய்மையையே உண்மை எனக் கருதி வாழ்கின்றனர்.

கடவுள், மதம் இவ்விரண்டும் தான் நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் என எண்ணி, காலையிலிருந்து இரவு உறங்கும் வரை கடவுள், மதம் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கித் தமது இயல்பான வாழ்க்கையைத் தமிழர்கள் இழந்து வருகின்றனர்.

2004ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 24ஆம் நாள் இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் அதனால் உருவான ஆழிப் பேரலையால் 12 நாடுகள் பாதிக்கப்பட்டன. சில மணித் துளிகளில் 3,63,000 மக்கள் உயிரிழந்தனர். இதில் நம் நாட்டில் உயிரிழந்தோர் 21,970 பேர்.

கிறித்துவர்களுக்கு ஒரு கடவுள், இசுலாமியர்களுக்கு ஒரு கடவுள், இந்துக்களுக்கோ எண்ணற்ற கடவுள்கள். தெருவுக்கு இரண்டு கோயில்கள், ஒவ்வொரு கோயிலிலும் ஒரு கடவுள். இப்படி எண்ணற்ற கடவுள்கள் இருந்தும் இவர்களைக் காப்பாற்ற ஒரு கடவுளும் முன்வரவில்லையே. மக்கள் பெரிதும் நம்பும் சபரிமலை அய்யப்பனோ, திருப்பதி ஏழுமலையானோ, அறுபடை முருகனோ, தெருக்கள்தோறும் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் விநாயகர்களோ யாராவது ஒருவர் கடற்கரைக்குச் சென்று ஆழிப்பேரலையை நிறுத்திப் பக்தர்களைக் காப்பாற்ற முன் வந்தார்களா? இல்லையே பிறகு எதற்கு இவர்கள்?

நாட்டில் நடைபெறும் எந்த நிகழ்வுகளும் தமக்குத் தெரியாது தமது காலடியில் உள்ள உண்டியலை உடைத்துத் திருடிச் சென்றாலும் தமக்குத் தெரியாது. தம்மையே திருடர்கள் கடத்திச் சென்றாலும் தமக்குத் தெரியாது. தம்மைச் சீன நாட்டுப் பூட்டால் பூட்டி, வெளியே தம்மைக் காவல் காக்கும் காவலர்களை அடித்துக் கொன்றாலும் தமக்குத் தெரியாது என்றால் இவர்கள் கடவுள்களா? இவர்களுக்கு எதற்குக் கோயில்கள்? எதற்கு முக்கால பூசை? எதற்குத் திருவிழாக்கள்? எதற்கு அரசாங்கத்தில் அதற்கு ஒரு துறை? எதற்கு அந்தத் துறைக்கு ஒரு அமைச்சர்?

நம் நாட்டில் இந்துமதக் கோட்பாடு என்பது. ஆரிய பார்ப்பனர்கள் தன்னைக் கடவுளுக்குச் சமம் என்று சொல்லிக் கொள்வதற்கும், தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்வ தற்கும், தன்னை உழைக்காமல் வலுப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது ஆகும்.

மனிதன் பிறவியிலேயே உயர் சாதிக்காரனாகவும், தாழ்ந்த சாதிக்காரனாகவும் பிறக்கிறான் என்கிற இந்து மதக் கொள்கையினால், மனிதர்கள் ஒருவரரோடு ஒருவர் உறவு கொண்டு வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்னும் சொல்லப்போனால், பார்ப்பனர் அல்லாதவர் அனைவரையும் பல சாதிகளாய்ப் பிரித்து, ஒன்று சேரவிடாமல் தடுப்பதற்கு உருவாக்கப்பட்டதே இந்து மதம் ஆகும்.

மதம் என்ற சொல்லைவிட அதிகமாக அச்சுறுத்தப்“ பயன்படுத்துகின்ற சொல்தான் "கடவுள்'. கடவுள் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு அயோக்கியத்தனம் செய்கிறவர்கள் தான் சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களைக் கடவுள் அப்போதைக்கப்போது தண்டிக்காததால் (இருந்தால் தானே தண்டிப்பதற்கு) கடவுள் ஒப்புக் கொண்டதாகவே கருதி மேலும் அதே தவறுகளைச் செய்கிறார்கள். அதே நேரத்தில் ஏதுமறியா அப்பாவித் தமிழர்கள் தங்கள் சொத்தையும், சுகபோகங்களையும் இழக்கின்றனர் கடவுளின் பெயரால்.

கடவுள் மதம் என்னும் பெயரால், நமது நாட்டில் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள், ஏராளம். கறுப்பு நிற ஆடை அணிந்த ஒரு கூட்டம் சபரிமலைக்கும், மஞ்சள் நிற ஆடை அணிந்து ஒரு கூட்டம் திருப்பதிக்கும், சிவப்பு நிற ஆடை அணிந்து ஒரு கூட்டம் மேல்மருவத்தூருக்கும், காவி நிற ஆடை அணிந்து ஒரு கூட்டம் பழனிக்கும்படையெடுக்கிறார்களே இதனால் இவர்கள் பெற்ற பலன் என்ன? ஒவ்வொரு ஆண்டும் படையெடுக்கின்றனரே ஆண்டவன் என்ன சுலப தவணையில் ஆசிர்வதிக்கிறாரா? இல்லையே பிறகு என்ன பலன்? கடன் பெற்றது தான் அவர்கள் கண்ட பலன்.

தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும், குத்தூசி குருசாமியும், இன்னும் பிற தலைவர்களும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து நம் மீது சுமத்தப்பட்டுள்ள "சாதி' எனும் இழிவைப் போக்குவதற்கும், மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதற்கும் அவர்கள் ஆற்றிய தொண்டினை மறந்து, 21 ஆம் நுற்றாண்டிலும், கடவுள், மதம் சாதி இம்மூன்றும் மனிதனால் படைக்கப்பட்டது என்பதை உணராமல் அவைகளைச் சுற்றியே தம் வாழ்நாளை வீணடிக்கும் தமிழர்களை, நாம் எப்படிக் காப்பாற்றப் போகிறோம்.

மேலை நாடுகளில் கடவுள் நம்பிக்கை குறைந்த வருகிறது. பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது.

ஆனால் இந்திய நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வெறும் 0.02 விழுக்காடே. அப்படி என்றால் தமிழகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிற

நாடுகளின் பட்டியலைப் பாருங்கள்

வ.எண்             நாடு                                    கடவுள் நம்பிக்கை

                                                                           இல்லாதவர்கள்

1.            பிரான்சு                                                        33%

2.            பெல்ஜீயம்                                                   27%

3.            நதர்லாந்து                                                  25%

4.            ஜெர்மனி                                                      23%

5.            சுவீடன்                                                          23%

6.            இங்கிலாந்து                                               20%

7.            அங்கேரி                                                       19%

8.            டென்மார்க்                                                  19%

9.            ஸ்பெயின்                                                   18%

10.          நார்வே                                                        17%

இயேசு கிறித்து பிறப்பதற்கு 399 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் பிறந்த சாக்கரடீசு மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவுப் புரட்சியை உருவாக்கினார். அந்நாட்டு மக்கள் அவரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டதால் இன்று பிரான்சு நாடு கடவுள் நம்பிக்கை இல்லாத நாடுகளின் பட்டியலில் முதன்மை வகிக்கிறது.

சாக்ரிடிசுக்கு இணையாக அறிவுப் புரட்சியைப் பரப்பிய தந்தை பெரியாரின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் தமிழ்நாடு இன்று ஆன்மீகத்தில் கொடி கட்டிப் பறந்து கற்காலத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. தடுத்து நிறுத்திட தமிழகத்தில் இன்று தலைவர்கள் இல்லை என்பது வெட்கக்கேடானதாகும்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக புறப்பட்ட திராவிட இயக்கங்கள் இன்று தடுமாறிக் கொண்டிருக்கின்றன. திராவிட இயக்கத்தொண்டர்களில் பெரும்பாலோர் நெற்றியில் விபூதி, சந்தனம் குங்குமப் பொட்டு என அணிந்து அமர்க்களமாய் வலம் வருகின்றனர். அவர்களை ஆதரித்து வழி அனுப்புகின்றனர், மூச்சுக்கு மூன்று முறை பெரியாரின் பெயரை உச்சரிப்போர்.

எங்க போகின்றது தமிழகம்? சிந்திப்போமாக.

Pin It