தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் “சவுக்கு'' என ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு அந்த இணைய தளத்தில் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் போலி என்கவுண்டர் கொலையையும் உயர் அதிகாரிகளின் ஊழலையும் வெளிக் கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழக உளவுத் துறையின் தலைவர் சாபர் சேட் அரசை ஏமாற்றி தன் மகள் பேரில் ஒரு கோடிக்கும் அதிகமானவிலையில் வீட்டு மனை பெற்றது உளவுப் பிரிவின் இரகசிய நிதியிலிருந்து தன்னுடைய செலவினங்களுக்காகத் திருடிக் கொண்டது. இதுபோலவே நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ், சாபர் சேட் வாங்கிய வீட்டு மனை அருகிலேயே அவரும் அரசை ஏமாற்றி வீட்டு மனை வாங்கியது, மேலும் சாபர் சேட் சனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிராக 25 போலி என்கவுண்டர் படு கொலை செய்தது என தொடர்ச்சியாக ஆதாரங்களோடு வெளியிட்டு வந்தது.

இதனைக் கண்டு பொறுக்க முடியாத சாபர் சேட் சவுக்கு இணைய தளத்திற்கு உதவியாக இருந்த சங்கர் என்பவரை பொய் வழக்கில் கைது செய்தது. மேலும் சங்கர் மீது ரவுடிகளை ஏவி கொலை செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாவும் செய்திகள் வருகிறது. மக்களுக்கு எதிரான ஊழல்வாதிகள், ஒடுக்குமுறை யாளர்கள் ஆகியோருக்கு எதிராக அணி திரள்வோம். சனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கம் கொலைகார கும்பலை அடித்து விரட்டுவோம்.

மேலும் செய்திகளுக்கு www.savukku.net இணையத்தைப் பாருங்கள்.

Pin It