அதிராம்பட்டினம் அன்சாரி கைது விவகாரம்

கடந்த 19ம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட் டினத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்கிற வெங்காய வியாபாரி இந்திய இராணுவ ரகசியங்களை வெளிநாட் டிற்கு கடத்த முயன்றதற்காகவும், இந்தியாவை சீர்குலைப்பதற் காக வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து சதி வேலையில் ஈடு பட்டதற்காகவும் கைது செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் வழி யாக செய்தி சொன்னது திருச்சி கியூ பிரிவு போலீஸ்.

அன்சாரி கைது விவகாரத்தில் போலீஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அது குறித்த உண்மை நிலை என்ன என்பதை கண்டறிவதற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையி லான உண்மை அறியும் குழு தஞ்சை அதிராம்பட்டினத்தில் முகாமிட்டிருக் கும் தகவல் கிடைக்கவே மக்கள் ரிப் போர்ட்டுக்காக பேரா. அ. மார்க்ûஸ நேரில் சந்தித்தோம்.

இந்த வழக்கு தொடர்பாக தனது குழு வுடன் சென்று கண்டறிந்த உண்மைகளை யெல்லாம் தொகுத்து திருச்சி பிரஸ் கிளப் பில் 24-09-2012 அன்று அறிக்கையாக வெளியிடுவதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மக்கள் ரிப்போர்ட்டுடனான நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கித் தந்தார் அ. மார்க்ஸ்.

அவருடனான நேர்காணலை மக்கள் ரிப்போர்ட் வாசகர்களுடன் பரிந்து கொள்கிறோம்.

மக்கள் ரிப்போர்ட் : உண்மை அறியும் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கி றார்கள்?

மார்க்ஸ் : நான், கோ. சுகுமாரன், எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் பிரபா, கல்விமணி, பேரா. கோச்சடை சகோதரர் கமருத்தீன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறோம்.

ம.ரி : உண்மை அறியும் குழுவின் நோக் கம்தான் என்ன?

மார்க்ஸ் : காவல்துறையினரால் பார தூரமான குற்றச்சாட்டுகள், பெரிய வழக் குகள் போடப்படும்போது அதிலுள்ள உண்மைத்தன்மையை அறிந்து அரசாங் கத்திற்கும், மக்களுக்கும் சொல்வதுதான் எங்கள் நோக்கம்.

ம.ரி : அதிராம்பட்டினம் அன்சாரி மீது அப்படியென்ன குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது போலீஸ்?

மார்க்ஸ் : அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்களை இலங்கைக்கு கடத்த முயன் றதாகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்கு லைக்க வெளிநாட்டு சக் திகளோடு சேர்ந்து சதி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது.

ம.ரி : இந்த குற்றச் சாட்டுகளில் உண்மை இருப்பதாக உங்கள் குழு கருதுகிறதா?

மார்க்ஸ் : உண்மை இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென் றால் அன்சாரி பிளா க்பெரி செல்போனை வைத் துக் கொண்டு ஊட் டியில் இயங்கும் இந்திய இராணுவ தளத்தை வெளியில் ரோட்டில் நின்று கொண்டு படம் பிடித்தார். அந்தப் படத்தை இலங் கைக்கு அனுப்ப முயற்சி செய்தார் என்று எஃப். ஐ.ஆரில் சொல்லப்படுகிறது.

இந்த எஃப்.ஐ.ஆரில் பல முர ண்பாடுகள் உள்ளன. அவற்றை நாங்கள் தொகுத்திருக்கும் உண்மை அறியும் குழுவின் அறி க்கையில் பதிவு செய்துள்ளோம்.

இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு இந்திய இராணுவமே இந்த இராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கும்போது அன்சாரியின் புகைப்படம், அதுவும் வெளியில் ரோட்டிலிருந்து எடுக்கும் படம் இலங்கை இராணுவத்திற்கு தேவையில்லை.

அவர்களுக்கு கிடைக்காத என்ன இரகசியத்தை இந்த செல்போன் படங்கள் தந்து விட முடியும்? இந்தியாவும் இலங் கையும் "மோஸ்ட் ஃபேவர்டு நேஷன்ஸ்' என்ற அடிப்படையில் செயல்படுவதை நாம் அறிவோம் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ம.ரி : தூத்துக்குடி துறைமுகம் போன்ற முக்கிய இடத்தின் வரை படங்கள் அன்சாரியிடம் கைப்பற் றப்பட்டதாக போலீஸ் கூறுகிறதே!

மார்க்ஸ் : இன்று கூகுள் உள்ளிட்ட இணைய தளங்களில் இவர்கள் சொல்லக் கூடிய மேப் கிடைக்கிறது. அதனால் அன்சாரி யின் மூலம் இலங்கை இதை வாங்க வேண்டியது இல்லை.

அதுவும் சி.டி.யில் பதிவு செய்து நேரடியாக கொடுக்க அன்சாரி இலங்கைக்கு போனார் என்பது நம்பும்படியாக இல்லை.

ம.ரி : அன்சாரி கைது செய்யப் பட்டது குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல் வருகிறதே?

மார்க்ஸ் : காவல்துறை 19ம் தேதி திருச்சி டோல் கேட்டில் விரட்டிப் பிடித்து கைது செய்த தாக சொல்கிறது. அது உண்மை யல்ல. அன்சாரியை 16ம் தேதி

யன்றே திருச்சி விமான நிலையத் தில் கைது செய்து மறைமுகமாக காவல்துறை வைத்திருந்தது. திருச்சி டோல் கேட்டில் அன்சா ரியை கைது செய்யவில்லை.

ம.ரி : அப்படியானால் 16ம் தேதி யன்று கைது செய்யப்பட்ட அன் சாரியை 19ம் தேதி கைது செய்த தாக காவல்துறை ஏன் பொய் சொல்ல வேண்டும்?

மார்க்ஸ் : பொதுவாக பொய் வழக்கை ஜோடிப்ப தற்காக இந்த அவகாசத்தை காவல்துறை பயன்படுத்திக் கொள்ளும். அன்சாரி விஷ யத்திலும் அப்படித்தான் நடந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். உண் மையில் அன்சாரி காவல்து றையால் கண்காணிக்கப்பட்டி ருந்தால், அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு உளவுத்துறையி டம் ஆதாரம் இருந்தால் கைது செய்த உடனே அன்சாரியை கோர்ட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறை அப்படிச் செய்யவில்லை. அது வும் எங்களுக்கு சந்தேகத்தை கிளப்புகிறது.

தஞ்சை வல்லம் பகுதியைச் சேர்ந்த ராதா என்ற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுடன் அன் சாரி நெருங்கிப் பழகினாராம். அவரிடமிருந்து இராணுவ ரகசி யங்களைப் பெற்றாராம். இதை போலீஸ் சொல்கிறது.

ஓய்வு பெற்ற இராணுவ அதி காரிகளிடம் இராணுவ ரகசியங் கள் இருக்கும் என்பது நம்பும்ப டியாக இல்லை. அதே சமயம், அந்த இராணு அதிகாரியை போலீஸ் ஏன் இதுவரை விசாரிக் கவில்லை என்பதற்கும் பதி லில்லை.

ம.ரி : அன்சாரியை வழக்கத் திற்கு மாறாக கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பது பற்றி?

மார்க்ஸ் : ஆமாம். கியூ பிரிவு போலீஸ் கைது செய்து வழக்கை நடத்துகிறது. கைது செய்யும் காவல்துறையினரே இதுபோன்ற பெரிய வழக்கை நடத்தக் கூடாது. மேலை நாடுகளில் கூட கைது செய்வதும், வழக்கை நடத்துவதும் ஒரே இலாகாவில் ஒப்படைக்கப்படுவது கிடை யாது. இது ஜனநாயக விரோத செயலாக கருதப்படுகிறது.

கியூ பிரிவு போலீஸ் நக்ஸ லைட்டுகளின் செயல்பாடுகளை உளவு பார்க்க 1970களில் ஏற்ப டுத்தப்பட்ட அமைப்பு. இதற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சீருடை கிடையாது. காவல் நிலையத்திலும் பெயர் பலகை கிடையாது.

காவல் துறைக்கும், உளவுத்து றைக்கும் செயல்பாடுகளில் வேறு பாடுகள் உண்டு. உளவுத்துறை என்பது இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என் றும் கூட சொல்லலாம்.

இது சேகரிக்கும் உளவுத் தக வல்களை அப்படியே சாட்சிய மாக ஏற்க முடியாது. காவல் துறை என்பது அப்படியல்ல... ஒருவரை கைது செய்தால் அவர் குற்றவாளி என போலீஸ் கருதி னால் முறையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தல், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைது செய் தல், பொருட்களை பறிமுதல் செய்தல், தேடுதல், அவருக்கு எதிரான ஆதாரங்க ளைத் திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இதோடு இதன் பணி முடியாது. அது சேக ரித்த தகவல்களை, சாட்சியங்களின் உண் மைத் தன்மையை நீதிமன்றத்தில் அது நிறுவியாக வேண்டும்.

ம.ரி : ஒரே இலாகா போலீசாரே கைது செய்து வழக்கை நடத்தக் கூடாது என்கிறீர்களா?

மார்க்ஸ் : கைது செய்வதும், வழக்கு நடத்துவதும், புலனாய்வு செய்வதும் ஒரே இலாகாவாக இருந்தால் இந்த இலாகாவை பயன்படுத்தி அரசியல் காரணத் திற்காகவும், மற்ற சுய லாபத்திற் காகவும் பொய்யான வழக்கைப் போட்டு, போலியான ஆதாரங் களை தயார் செய்து யாரை வேண்டுமானாலும் பழி வாங்க முடியும். ஆகவே தான் கூடாது என்கிறோம். இது மனித உரிமை மீறலாகவும் கருதப்படுகிறது.

ம.ரி : கியூ பிரிவு போலீஸ் இந்த வழக்கை நடத்துவது மனித உரிமை மீறலாகக் கருதுகிறீர் களா?

மார்க்ஸ் : மனித உரிமைக் கும், ஜனநாயகத்திற்கும் விரோத மாக காவல்துறையில் சர்வாதி கார போக்குடைய கியூ பிரிவை கலைக்க வேண்டும் என்று என் போன்ற சமூக ஆர்வலர்கள் சொல்லி வருகிறோம். மேலை நாடுகளில் கூட இதுபோன்ற சர்வாதிகார போக்குடைய உளவு அமைப்புகள் கிடையாது. எனவே கியூ பிரிவு இந்த வழக்கை நடத்துவது சரியல்ல.

ம.ரி : அன்சாரி மீது போடப்பட்டி ருப்பது பொய் வழக்கு என்றால் அதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : இஸ்லாமியர்கள் இறைத் தூதராக ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகத்தை உண்மைக்குப் புறம்பாக அவ தூறு கூறி படமெடுக்கப்பட் டதை கண்டித்து அந்த இயக்கு னர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்தக் கொடும் செயலுக்கு துணைபோகும் அமெரிக்க அரசை கண்டித்தும் உலகம் முழுவதும் போராட்டம் நடந் தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாக வும் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக் குவதற்காகவும், இஸ்லாமிய சமுதாயத்தை அச்சப்படுத்தி போராட்டத்தை வீரியமிழக்கச் செய்யவும்தான் அன்சாரி மீது வழக்கு போடப்பட்டிருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது.

அன்சாரி கைதுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்கும் படுகிறது.

இஸ்லாமியர்கள் சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும்!

அன்சாரி கைது தொட ர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவரும் சமூக ஆர்வலருமான ராஜ வேலுவை நேரில் சந்தித்து கருத்து கேட்டோம்.

“இஸ்லாமிய சமூகம் முத லில் சட்ட ரீதியான விழிப்பு ணர்வை பெற வேண்டும். இதுபோன்ற வழக்குகளை சட்ட ரீதியாக எதிர் கொள்ள வேண் டும். பாதிக்கப்படும் இஸ்லாமி யர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண் டும்.

மிக முக்கியமாக, இஸ்லாமிய சமூகம், திமுக, அதை விட்டால் அதிமுகவை மட்டும் ஆதரிப்பதை விட்டு மாற்று அரசியல் சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து தங் களின் இருப்பை வலிமைப்படுத்த வேண்டும்...” என்றார் நம்மிடம்.

Pin It