அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் நாடெங்கும் உள்ள காவல்துறை வகுப்பு வாத மயமாகி உள்ளது என்று பகி ரங்கமாக குற்றம் சாட்டினார்.

நாடு முழுவதும் காவல்துறை வகுப்பு வாத மயமாகி வருகிறது. தன் நச்சு கருத்துக்களால் ஒட்டு மொத்த குஜராத் காவல்துறையும் வகுப்புவாத மயமாகி உள்ளது என்று குஜராத் வகுப்பு கலவரங்க ளின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசியுள்ளார் பூஷன்.

நாடெங்கும் தீவிரவாத வழக்கு களில் காவல்துறையினரால் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியா சூழல் முஸ்லீம்களை அதில் சிக்க வைப்பதில் காவல்துறை தெளிவான திட்டமிடலுடன் செயல்படுகிறது.

அப்படி சிக்க வைக்கப்படும் அப்பாவிகளுடன் எதிர்த்து போராடும் திறமற்றவராக இருந்தால் அவரின் வாழ்நாள் சிறையிலேயே கழிந்து விடுகிறது என்றும் ஒரு வேளை அந்த நபர் வழக்காடி வெளியில் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களாவது சிறையில் கழிக்க நேரிடுவதோடு சமூகத்தில் தீவிரவாத முத்திரையோடு காலம் தள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள் ளார்.

இப்படி கைது செய்யப்படும் அப்பாவிகளுள் 2 சதவீதம் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளால் உண்மையிலேயே தீவிரவாதிகளாகும் வாய்ப்புண்டு என்றும் போட்டுத் தாக்கியுள்ளார் பிரஷாந்த் பூஷன்.

Pin It