கலைஞர் அரசின் ஒரு சில தவறுகளின் காரணமாக கோபமுற்ற மக்கள் தேர்த லின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். கடந்த கால அரசுகளின் தவறுகளை களைந்து புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டி யது புதிய அரசின் கடமை.

தவறான திட்டங்களையும், நடைமுறைகளையும் மட்டுமே களைய வேண்டிய ஜெயலலிதா அரசு மக்கள் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் மீது கை வைத்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்தியன், மெட்ரி குலேஷன் என்று பலவகையான பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டப் பள்ளிக ளில் அகில இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டமே (சமச்சீர்) அமுலில் உள் ளது. பல்வேறு கல்வி முறையில் ஏற் றத் தாழ்வுகள் நிலவி வந்தது. தங்கள் பள்ளிகளில் தகுதி, திறமை ஆகிய வற்றை அதிகப்படுத்தும் கல்வி முறை உள்ளதாக கூறி மெட்ரிகுலேஷன் பள் ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தன.

பணம் படைத்தவர்களுக்கு மட் டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவானது. சாதீய, பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் படிக்கும் மாண வர்களிடையே உருவாகக் கூடாது என்கி றஅடிப்படையில் சீருடைத் திட் டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளி மாணவர்கள் அணியும் ஆடையில் ஏற்றத்தாழ்வுகள் தெரியக் கூடாது என்றால் படிக்கும் பாடத் திட் டங்களில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வு? என்ற கேள்வியை பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் எழுப்பி வந்தனர்.

கல்வியாளர்கள் மற்றும் பெரும் பான்மை மக்களின நீண்ட கால கோரிக் கையின் அடிப்படையில் கல்வியாளர் கள் அமைந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட் டம்தான் சமச்சீர் கல்வி திட்டம்.

சமச்சீர் கல்வி உருவான வரலா ற்றை கவனத்தில் கொள்ளாமல் கரு ணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்ற எண்ணத்தோடு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கி மூக்குடைபட்டுள்ளார் முதல்வர்.

சமச்சீர் கல்வி திட்டம் அமுல்படுத் தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத் திட்டம் அமையும். இதனால் ஏழைகள் பணக்காரர்கள் என்கிற பேதம் இல்லா மல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.

இது வரவேற்கத்தக்க திட்டம் என் பதை யாராலும் மறுக்க முடியாது என் றாலும் தனியார் பள்ளிகளின் அநியாய வசூலுக்கு வேட்டு வைக்கும் என்பதால் நொண்டிச் சாக்குகளை கூறி திட் டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை யில் இறங்கினர் ஆதிக்கவர்க்கத்தினர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை சமத் தாழ்வு திட்டம் என்று கேலி பேசி எள்ளி நகையாடினர். தகுதி, திறன் என்று கூறி தங்கள் ஆதிக்க மனோபாவத்திற்கு ஆதரவு சேர்த்தனர். எல்லா கேள்வி கணைகளும் முனை மழுங்கிய வேளையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஆட்சி மாற்றத்தை தமக்கு ஆதரவாக (ஆதாரமாக) மாற்றிக் கொண்டனர்.

நேரடியாக சமச்சீர் கல்வித் திட் டத்தை நிறைவேற்றக் கூறினால் முடி யாது என்பதை உணர்ந்த ஆதிக்க வர்க்கம் பாடத் திட்டங்கள் சரியில்லை பாடத் திட்டங்களில் தரமில்லை என்று மகுடி ஊதினார்.

ஆதிக்க வர்க்கத்தினரின் சாகசப் பேச்சில் மயங்கிய முதல்வர் சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடும் நடவடிக்கையில் இறங்கினார். இந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த தீர்மா னத்தை சட்டசபையில் நிறைவேற்றி னார்.

சட்டத் திருத்தத்திற்கு கல்வியாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்காலி கம்தான் நிரந்தரமில்லை என்று கூறி சமாளிக்கப் பார்த்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத கல்வி யாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி னார். உயர் நீதிமன்றம் வழக்கு விசா ரித்து சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கண்ட வுடன் எச்சரிக்கை அடைந்து தமிழக முதல்வர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஈகோவுடன் மோதல் போக்கை தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1, 6ம் வகுப்புக ளுக்கு திட்டம் தொடரலாம். மற்ற வகுப் புகளுக்கு ஆய்வுக் குழு அமைத்து பரிசீலிக்குமாறும், அதன் அடிப்படை யில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றஉத்தரவின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு அளித்த ஆய்வறிக்கை கல்வியாளர் கள் மத்தியில் கண்டனத்தை எழுப்பி யது.

இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி, ""ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்தி விட்டது தமி ழக அரசின் சமச்சீர் கல்விக்கான ஆய் வுக்குழு - ஆதங்கமும் வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது...'' என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு தமிழக அர சின் நடு மண்டையில் நச்சென்று இறங்கியது.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி யாண்டில் நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தத்தின் 3வது பிரிவு செல்லாது. புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப் பட்டு தயாராக உள்ள பொதுப்பாட நூல் களை 22ம் தேதிக்குள் மாணவர்க ளுக்கு விநியோகிக்க வேண்டும். அந்தப் பாடப் புத்தகங்களில் குறைகள் இருக்குமானால் அவற்றைக் கண்ட றிந்து, களைவதற்கு ஒரு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து எந்தப் பாடப் புத்தகங்களும் இல்லாமல் வெறுமனே மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆசிரியர்களும் எந்தப் பாடத்தை நடத் துவது என்று குழம்பிய மனநிலையில் உள்ளனர். தமிழக அரசு இனிமேலும் ஈகோ, மேல்முறையீடு என்று கால த்தை கடத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற மனப்பான்மையில் முதல்வர் செயல்படுவாரேயானால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடும். ஐந்தாண்டு காலம் காத்திருந்து பெற்றவெற்றி எல்லாம் உள்ளாட்சித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் காணாமல் போய் விடும்.

Pin It