1950ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியின்போது, விறகிற்குப் பயன்படும் என்று கருதி வெளிநாட்டிலிருந்து சீமைக்கருவேல (Prosopis Juliflora) விதைகள் கொண்டுவரப்பட்டு இங்கே தூவப்பட்டன. இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய்த் தெரியாமல்....!

கடந்த 66 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து, ஏறத்தாழ 25 சதவீத விளை நிலங்களை ஆக்கிரமித்துப் பாழ்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் நஞ்சாக மாறிவிடும்.

சீமைக் கருவேல மரங்கள் :

இந்த மரத்தினைப் பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துகொண்டு இருக்கிற ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்தத் தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் இயல்பாக இருக்கக் கூடிய முள் மரம் இது. தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்தக் கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியவை. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தின் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத் தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி, மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டுவிடுகிறது. இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை. ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலும், தன்னைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை யும் இம் மரம் உறிஞ்சிவிடுகிறது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட, உறிஞ்சிவிடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னைச் சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால், இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல் வறண்டு போய்விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர், இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட் டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கியக் காரணம் என்பது யாருக்கும் இதுவரை புரியவில்லை. ஆனால், இதை அறியாமல் தமிழ்மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்துப் பராமரிக் கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக் கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும், இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக வளர்த்து வருகின்றனர். இது, பேரா பத்தை இந்த மண்ணுக்குச் செய்கிறது என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளைக் கட்டி வைத்து வளர்த்தால், அவை மலடாகிவிடும். அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும். ஒரு வேளை மீறி, சினையாகி, கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்.

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை நச்சாக மாற்றிவிடுகிறது. மற்றொருபுறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழமுடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்தச் செடியும் வளராது. தவிர இம் மரத்தில் எந்தப் பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால், இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. ஆனால் கரியமில வாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புறக் காற்று மண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இத்ந மரத்தைப் பற்றிய விழிப்புணர்வை வனத் துறையினர் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூடக் காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடித் தேடி அழித்திருக்கிறார்கள்; வெட்டிப் போட்டுக் கொளுத்திவிட்டு, சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள்.

அதனால்தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரி மிதமான நாடாக இருக்கிறது. அங்கே நீரானது தடை யின்றிக் கிடைக்கிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டுவிட்டால், சாத்தானைக் கண்டுவிட்டதுபோல் அலறி, அதை வெட்டித் தீயிலிட்டுக் கொளுத்திவிட்டுத்தான் அப்பால் நகருகிறார்கள்.

கேரளாவில் தொழிற்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?

நம் தமிழ்நாட்டிலிருந்துதான் கேரளாவுக்கு விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளைப் பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள். ஆனால் நம் ஆறுகளில் இருந்து மணல் அங்கே போகும். சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் விறகுத் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும். சீமைக் கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா போல் நீரால் குளுமை பெறும்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ, அதைவிட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதைவிட அவசியம். அமெரிக்கத் தாவரவியல் பூங்கா, வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிப்பட்டியலே வெளியிட்டி ருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமைக் கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்குக் கொடுக்கும் செய்தி! ஆகவே கருவேல மரங்களை ஒழிப்போம்! நம் மண்ணின் மாண்பைக் காப்போம்!

Pin It