19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து தமிழ் அரசியலில் தலையீடுகளை நிகழ்த்தியதில் அயோத்திதாச பண்டி தருக்கு முக்கியமான இடம் உண்டு. மொழி, இலக்கிய அரசியலில் சைவமல்லாத, வேளாளரல்லாத வெளி யினை உறுதிப்படுத்து வதிலும் அன்றைய அடை யாள அரசியல் போக்கு களுக்கிடையில் சாதி ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன் வைத்ததிலும் அயோத்தி தாசருக்கு முதன்மையான இடம் உண்டு.

அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது. வேடதாரி பிராமணர்களும் விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போன வேளாளரும்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

இது மிக அற்புதமான ஒரு வாதம். தமிழ் வரலாற்றின் முதல் அடிப்படை களிலேயே சாதியில்லாச் சமுதாயம்/சாதிச் சமுதாயம் என்ற பூர்வ முரண்பாடு அமைந் துள்ளது என்று அயோத்திதாசரால் சொல்ல முடிந்தது. பூர்வ பௌத்தம்/வேடதாரி பிராமணியம் என்ற முரண்பாடு முன்பு குறிப்பிட்ட சமூக முரண்பாட்டின் கருத்தியல் எடுத்துரைப்பாக அமைந்தது. நிலத்திலிருந்து அந்நியப்படாத விவசாயச் சாதிகளை (குறிப்பாகப் பறையர்களை) சமூக மாற்றத்திற்கான சமூக சக்திகளாகப் பண்டிதர் அடையாளப் படுத்தினார்.

தமிழ் அடையாள அரசியலினுள் சாதி, மதம் ஆகிய விசயங்களை மிக அழுத்தமாக விதைத்தவர் அயோத்திதாசர். விவசாயச் சாதிகளின் உலகநோக்கை உழைப்பு சார்ந்த அறமாக ஆக்கிக் காட்டியவரும் அவரே. பிராமணர், வேளாளர் ஆகிய மரபான மேட்டுக்குடிகள் தமது சாதி அதிகாரத் தையும் ராஜாங்க அதிகாரத்தையும் ஒன்று படுத்தி நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே பிரிட்டிஷ் ஆட்சியாளரை அண்டிச் சென்று அரசியல் நடத்தி வருகின்றனர் என்ற கருத்தை அயோத்திதாசர் முன்வைத்தார்.

காலனியச் சூழல்களில் அடையாள அரசியலின் சமூகவியல் பின்புலத்தை இக்கருத்து எடுத்துரைக்கிறது. இன்னும் கூடுதலாக, மேற்படி அரசியலைப் புரிந்து கொண்டு அடையாள அரசியலை அடித்தள மக்கள் எந்த நோக்குகளிலிருந்து நடத்திச் செல்ல வேண்டும் என் பதையும் அயோத்திதாசரின் நிலைப்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

சாதி அமைப்பிற்கும் இந்து மதத்திற்கும் இடை யிலான உறவைச் சுட்டிக் காட்டியதிலும் அயோத்தி தாசரின் பங்கு முக்கிய மானது. இந்தியச் சூழல் களில் சாதிக்கும் மதத்திற்கும் இடையில் இறுக்கமான பிணைப்புக்கள் உள்ளன என்ற கருத்து 19 ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்று அடுத்து வந்த காலங்கள் முழுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த வாதத்தை அம்பேத்கரும் பெரியாரும் எடுத்தாண் டார்கள். இந்தக் கருத்தை உருவாக்கியதில் காலனியக் காலத்தியக் கிறித்தவப் பாதிரிமார்களுக்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு எனினும், அது அவர் களைத் தாண்டி சாதிச் சமூகம் குறித்த ஒரு விமர்சனப் போக்கை இங்கு உசுப்பி விட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மதத்தின் சிக்கலான சமூகப் பாத்திரத் தை உணர்ந்துகொண்ட அயோத்திதாசர் இறைக் கருத்துக்கு இடமில்லாத பௌத்தத்தைத் தனது குறி யீடாக்குகிறார்.

சாதிகளற்ற பூர்வ சமூகத்தின் வித்தை, ஈகை, கருணை, சன்மார்க்கம் ஆகிய அறப்பண்புகளைச் சுமக்கும் கருத்தியலாக பௌத்தம் பண்டிதரின் பார்வையில் விரிகிறது. சாதிகளற்ற சமூகம் பற்றிய ஓர் ஏக்கம் தமிழ் மரபில் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்ற ஒரு வாதம் இக்காலத்திலிருந்து தமிழில் நிலைபெறுகிறது.

தனித்தமிழ் இயக்கம்: மொழி வழி தராதரப்படுத்துதல்

நாவலரின் வேளாளச் சைவ சமய அடையாளம் ஓரங்கட்டப்பட்டு மொழி என்ற விரிவாக்கம் பெற்ற, சமயம் சாராத அடையாளம் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதில் வேளாளருக்குச் சில நட்டங்கள் உண்டு.

இனி, மொழியை மீட்டுக் கைப்பற்ற வேண்டிய நிர்ப் பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. சைவமும் தமிழும் என்று இணைத்துப் பேச அவர்கள் முன்வந்தார்கள். செந்தமிழால் இசை பாடும் ஞானசம்பந்தன், தமிழால் வைதாலும் கூட மகிழும் சிவன் என்பது போன்ற வரி களுக்குக் கூடுதல் முக்கியத் துவம் உண்டாயின.

தனித்தமிழ் என்ற சொல்லாடல் தமிழின் செம்மொழித் தகுதியைக் குறித்து நிற்கிறது. பேச்சு மொழி அல்ல, வட்டார மொழிகள் அல்ல, படிப்பறிவில்லாத சாதாரண மக்களின் மொழி அல்ல, தரமான மொழி, இயல்-இசை-நாடகம் என்னும் முத்தமிழ் மொழி, கலப்பில்லாத மொழி போன்ற கோஷங்களைத் தனித் தமிழ் இயக்கம் முன்வைத்தது.

செம்மை என்ற (சிவனுடன் தொடர் புடைய) சொல்லுக்குத் திரிபின்மை, மாறாத தன்மை, நிரந்தரத் தன்மை என்ற பொருட்களைச் சைவ சித்தாந்த உரை யாசிரியர்கள் வழங்குவர். கிட்டத்தட்ட இதே பொருளைத் தமிழுக்கு வழங்கித் தனித்தமிழ் இயக்கம் செயல்பட்டது.

திரிபற்ற, மாறாத தமிழ்ப் பண்பாட்டு அடிப்படை ஒன்று நிலவுகிறது என்று தனித்தமிழ் இயக்கம் வலியுறுத்தத் தலைப் பட்டது. மொழியினுள் மொழி வழியாகவே தராதரப்படுத்துதல் என்ற விஷயத்தைத் தனித்தமிழ் இயக்கம் குறிக்கிறது. நாவலரின் ஆகமச் சைவம் போலவே சாதாரண மக்களை அந்நியப்படுத்தும் போக்கு இதில் இருந்தது. “கலப்பற்ற”, “தூய” போன்ற சொல்லாடல்கள் என்னவோ சாதி அமைப் பையே நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

சாதியில் கலப்பு நிகழக்கூடாது என்பதை மொழிவழியாக இவர்கள் சொன்னார்களோ என்று தோன்றுகிறது. மேட்டுக்குடித் தமிழை உயர்தனிச் செம் மொழியாக்கும் முயற்சி தனித்தமிழ் இயக்கத்தில் இருப்பதாகவே தோன்று கிறது. பண்டைத் தமிழின் எழுத்திலக்கிய மொழியை, அதனைச் சுவீகரித்துக்கொண்ட தாகக் கூறிக் கொள்ளும் சமூகப் பகுதி யினரைச் சார்ந்தே இந்த இயக்கம் கட்டப் பட்டது. “தரமான” மொழி என்ற ஓர் அளவுகோல் தொழில் படுவதும் கவனிக்கத்தக்கது.

நீதிக்கட்சி: பிராமணரல்லாதவர் என்ற சொல்லாடல்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதும் தமிழ்ச் சூழல்களில் நிகழ்ந்துவந்த பண்பாட்டு அசைவுகள் நீதிக் கட்சியில் (1916) ஒன்று பட்டன. அது பிராமணர் அல்லாதார் என்ற சொல் லை மிக அழுத்தமாகப் பதிய வைத்தது.

பிராமணர் அல்லாத எல்லாச் சாதிகளையும் ஓரணியில் ஒன்றுபடுத்தும் முயற்சி இது. இது வெற்றி பெற்றது. தமிழ் என்ற அடை யாளத்தை விட பிராமண ரல்லாதார் என்ற அடை யாளம் எதிராளியைக் குறிப் பிட்டுச் சொல்கிறது. ஒன்று படவேண்டியவர்களையும் குறிப்பிட்டுச் சொல்கிறது. முன்பு குறிப்பிட்ட மரபான சமூக சக்திகளும் கல்வி, வேலைவாய்ப்பு நோக்கி நகரும் புதிய நடுத்தர வர்க்கத்தினரும் (Traditional and Transitional classes) ஒன்று படும் தளமாக பிராமண ரல்லாதார் என்ற தளம் அமைந்தது.

காலனியச் சூழலில் பிராமணர் மிக வேகமாக ஆங்கிலக் கல்வி, அரசுப் பதவிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

அயோத்திதாசர் குறிப்பிட்ட “சாதி அதி காரமும் ராஜாங்க அதி காரமும்” சேர்ந்த நிலை இது. பிராமணரை அடுத்து இருந்த சாதியினரும் அதே பாதையில் சென்று அதி காரத்தை ஈட்ட விழைந் தனர். இருப்பினும் எல்லாச் சாதிகளுக்கும் ஓர் உறுதி மொழியை வழங்குவது போலப் பிராமணர் அல்லா தார் என்ற பொதுப் பெயரைச் சூட்டிக்கொண்டனர். சாதி அமைப்பின் உள்ளீடாக அமைந்துள்ள படிநிலை வரிசை மேற்குறித்த உறுதி மொழி நிறைவேற்றப்படு வதற்கான வரிசையையும் குறித்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. நீதிக் கட்சியின் தலைவர்களாகப் பல ஜமீன்தார்கள் அமைந் திருந்தது ஓர் உறுத்தலான விசயமாகும். தமிழ்ச் சமூகத்தின் நிலவுடைமை எதிர்ப்பு அவர்களால் மிதப் படுத்தப்பட்டது என்றே கருதவேண்டும். நீதிக்கட்சி யினர் தமிழ் மொழிவழிச் சொல்லாடலைவிட சாதிச் சமூகம் என்ற சொல்லா டலைத் தீவிரப்படுத்தினர் என்பது உண்மைதான். இருப்பினும் சாதி ஒழிப்பு அவர்களது திட்டமாக இருக்கவில்லை. பிராமணரை விலக்கிய சாதி அனுசரிப்பு அவர்களது திட்டமாகத் தெரிகிறது.

அயோத்திதாசர் விவசாய உழைக்கும் சாதிகளை முன்னிலைப்படுத்தியதோடு ஒப்பிடும்போது, நீதிக்கட்சி அதற்கு எதிர் நிலையிலிருந்து மீண்டும் வேளாளர், ஜமீன்தார்கள், நகர்ப்புறப் பணக்காரர்கள் ஆகியோரின் தலைமையை முன்னிலைப் படுத்தியது. இருப்பினும், பிராமண ரல்லாதார் என்ற பொதுத்தளம் ஒரு கருத்தியல் மேலாண்மையைச் (Hegemony) சாதிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. பிராமணரல்லாத தமிழ்நாட்டுச் சாதிகளின் பொது ஒப்புதலை நோக்கியதாக அது அமைந்தது.

சாதி எண்ணிக்கையை ஒத்த விகிதாச் சாரத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் சட்ட சபைகளில் இட ஒதுக்கீடு என்ற முன் மொழிவு எல்லாச் சாதிகளையும் திருப்திப் படுத்துவதாக அமைந்தது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அடிமைமுறை ஒழிப்புக் காகப் போராடிய போது (1860), புரட்சி கரமான போராட்டங்கள் தேவைப்படும் சூழல்களில் சட்டபூர்வமான முறைகள் முன்வைக்கப்படு கின்றன என்று மார்க்ஸ் குறிப்பிடுவார். கிட்டத் தட்ட அதே விதமான அரசி யலே தமிழிலும் நிலை கொண்டது. நீதிக்கட்சி தமிழ் மொழி பற்றியோ இந்து மதம் பற்றியோ கறாரான நிலைப்பாடுகள் கொள்ளவில்லை. நீதிக் கட்சியாரிடம் இந்து மத அபிமானம் தொழில் பட்டது. ஆனால் தமிழ்ச் சூழல்களில் சாதிக் கட்ட மைப்பு அவர்களால் தீவிர மாகக் கவனத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

நீதிக்கட்சியின் வருகைக்கு முன்னதாகத் தமிழ் என்னும் மொழி அடையாளம் நிலைகொள்ளத் தொடங்கி விட்டது என முன்னர் குறிப்பிட்டோம். ஆயின் நீதிக்கட்சி அந்த விரி

வாக்கத்தை அப்படியே முன்னெடுத்துச் செல்ல வில்லை. அது பிராமண ரல்லாதார் என்ற சாதி ரீதியான அடையாளத்தைத் தான் முன்னிலைப்படுத்தியது.

தமிழ் என்பதற்குப் பதிலான ஒரு மாற்று விரி வாக்கம் நீதிக் கட்சியினரிடம் உள்ளது. பிராமணரல்லா தார் அனைவரும் திராவிடர் என்ற கணிப்பும் நீதிக் கட்சி யிடம் உள்ளது. இந்த மடை மாற்றம் சிக்கலானது. நீதிக் கட்சியார் பிராமணரல்லா தார் என்று பேசியதில் மொழியை விட சாதி அதிக அடிப்படைத்தன்மை கொண்டது என்ற அங்கீ காரம் உள்ளது.

அயோத்திதாசப் பண்டிதர் பறையர் சாதியை முன்னிலைப்படுத்தி விவசாயச் சாதிகள், தமிழ், பௌத்தம் போன்றவற்றை மையப் படுத்தி உருவாக்கிய சிந்தனையை நீதிக் கட்சி ஒருவிதத்தில் பின்னுக்குத் தள்ளுகிறது.

அடித்தளத்திலிருந்து உருவாகும் சமூகத் திரட்சிக்கு மாற்றாக நீதிக் கட்சியினர் பிராமணரல்லாதார் என்ற திரட்சியை முன்வைக்கும்போது, அது கீழிருந்து உரு வாகும் திரட்சியாக இருப்பதற்குத் தேவை யில்லை என்ற தருக்கவியல் தொழில்படத் தொடங்கிவிடுகிறது. அயோத்திதாசர் பிராமணரல்லாதார் என்ற சொல்லாக்கம் தோன்றிய அந்த ஆரம்ப நாட்களிலேயே அதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

பிராமணரல்லாதார் என்போர் சாதி யில்லாதவர்களா? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இது முக்கியமான கேள்வி. நீதிக் கட்சி அடித்தளத் திரட்சிக்கு மாற்றாக பிராமணரல்லாத மேட்டுக் குடிகளின் திரட்சிக்கு முயலுகிறது என் பதை அயோத்திதாசர் உணர்ந்திருக்க வேண்டும். மேட்டுக்குடித் திரட்சியாக மட்டுமல்லாமல், மேட்டுக் குடித் தலைமைக்கான எத் தனிப்பே அது என்பதையும் உணரமுடியும். அயோத்தி தாசரிடமும் பிராமண எதிர்ப்பு இருந்தது. ஆனால் நீதிக் கட்சியாரிடம் பிரா மண எதிர்ப்போடு, அதற்கு மாற்றாக பிராமணரல்லாத மேட்டுக்குடித் தலைமை குறித்த பிரக்ஞை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிராமணரல்லாதார் என்று பொதுவாகப் பெயரிட்ட தன் மூலம் இடைநிலை மற்றும் அடித்தளச் சாதிகளும் அப் பெயரை நிராகரிக்க முடி யாத நிர்ப்பந்தத்தையும் அது கொண்டிருந்தது. அடுத்து வந்த தமிழ் நாட்டு அடை யாள அரசியலை இந்நிர்ப் பந்தம் நீண்ட காலத்திற்குக் கைப்பற்றிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார்: அறிவும் சமூக மாற்றமும்

பிராமணரல்லாதார் அரசியல் ஓரளவு நிலைப் பட்டுவிட்ட தறுவாயில் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதைப் பிரசாரம் செய்யத் தொடங் கினார். பெரியார் நேரடி யாக நீதிக்கட்சியில் போய் இணையவில்லை என்பது முக்கியமானது.

சாதி, மதம் ஆகிய வற்றிற்கெதிரான நிலைப் பாடுகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுய விழிப்புணர் வும் பெரியாரின் சுயமரியா தை இயக்கத்தில் தீர்மான கரமானவை. நீதிக்கட்சி யாரின் ஜமீன்தார் மனோ பாவங்களையும் இந்துமத அபிமானம், மேட்டிமைச் சாதியம் ஆகியவற்றையும் பெரியார் விமர்சித்தார். காங் கிரசுக்கும் நீதிக் கட்சிக்கும் நடுவே ஒரு மூன்றாவது பாதையை அவர் உருவாக்க முனைந்தார். அது சிங்கார வேலர், ஜீவா ஆகியோர் உருவாக்கிய சுயமரியாதைச் சமதர்மமாகப் பரிணமிக்க வாய்ப்புகள் இருந்தன.

ஆயின் பிராமணரல்லா தார் அரசியலின் காரியார்த் தமான நடைமுறைத் தன்மை களிலிருந்து பெரியாரால் தப்பிக்க முடியவில்லை. அத்தகைய சூழல்களிலும் பிராமணரல்லாதார் அரசி யலில் சில தீவிர நிலைப் பாடுகளை அவரால் உண் டாக்க முடிந்தது. நாத்திகம், பெண் விடுதலை, சுயமரி யாதை, பொதுவுடைமை போன்ற கூறுகளை அவர் பிராமணரல்லாதார் அரசி யலில் ஏற்படுத்தினார். சாதிக் கட்டமைப்பு பற்றிய சொல் லாடல்களைப் பெரியார் பார்ப்பனியத்தோடு மட்டு மின்றி இந்து மதத்தோடும் இறுக்கமாக இணைத்துக் கட்டினார். அவரைப் பொருத்தஅளவில் அது சாதிக் கட்டமைப்பு மட்டுமல்ல; சாதி, மதக் கட்டமைப்பு.

இந்த நிலைப்பாடு அயோத்திதாசரிலும் அம்பேத்கரிலும் உண்டு. ஆயின் அயோத்தி தாசரும் அம்பேத்கரும் இந்து மதத்திற்கு மாற்றாக பௌத்தத்தை முன்மொழிய பெரியார் நாத்திகத்தை முன்மொழிந்தார். அது பௌத்தத்தை விட தீவிரமான நிலைப்பாடு போன்ற தோற்றம் பெற்றது.

பெரியாரின் சிந்தனையில் தமிழ் மொழி அரசியலுக்குக் குறிப்பான இடம் கிடையாது. தமிழ் மொழி அரசியலை அதிகம் பேசிய அண்ணா முதலான இளந்தலைமுறையினர் குறித்த எரிச்சல் அவரிடம் எப்போதுமே காணப்பட்டது. மொழி விஷயத்தில் பெரியார் ஆங்கில மொழியை அமோகமாக ஆதரித்தார். இது பெரியாரின் ஒரு பலவீனமான புள்ளி யாகக் கூடத் தென்படுகிறது. தாய்மொழிக் கல்வி என்ற திட்டமே அவரால் அங்கீ கரிக்கப்படவில்லை. பழந்தமிழ் பெரு மிதங்களை அவர் வெளிப்படையாகவே மறுதலித்தார்.

பெரியாரின் சுயமரியாதை என்ற நிலைப்பாடு காங்கிரசால் முன்வைக்கப் பட்ட சுயராஜ்யம் என்பதற்கான மாற்றாக அமைந்தது. பெரியாருக்கு முந்தி சுயாக் கினியர்கள் சங்கம் என்ற ஒன்று சென்னைப் பட்டினத்தில் அறியப்பட்டிருந்தது. இது சுயசிந்தனைக்காரர்கள் (Free Thinkers) என்ற அர்த்தத்தில் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் பெரியாரில்

அது இன்னும் கூடுதலாக ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வு என்ற கருத்தியல் மற்றும் உளவியல் வேலைத்திட்டத்தைக் கொண்டிருந்தது.

பெரியாரின் பகுத்தறிவு என்ற மற்றொரு நிலைப்பாடு ஐரோப்பாவின் புலனுணர்வுத் தத்துவத்தைத் தமிழ்ச் சூழல் களில் முன்வைத்தது. சுயமரியாதை, பகுத் தறிவு என்ற நிலைப்பாடுகள் தொடர்ந்து செழுமையடைவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருந்தன. இறுக்கமான இந்தியச் சமயச் சடங்காச்சாரச் சூழல்களில் சுய மரியாதையும் பகுத்தறிவும் சமூக விழிப் புணர்வுக்கான கட்டுடைப்பு ஆற்றலைக் கொண்டிருந்தன. இன்றுவரை தலித்தி யர்கள், பெண்ணியவாதிகள் எடுத்தாளும் சமூக விமர்சன உள்ளடக்கம் கொண்ட வையாக அவை அமைந்துள்ளன.

அறிவின் சமூக மாற்ற ஆற்றலைப் பெரியாரின் சிந்தனை குறித்தது. இறுக்க மான நிலவுடைமை மற்றும் ஆணாதிக்கப் பிடிமானங் கள் இன்னும் நெகிழாத சூழல்களில் பெரியாரின் கட்டுடைப்புக் கருவிகள் தொடர்ந்து மறு உயிர்ப்பு செய்யப்படவேண்டியவை

யாகத் தங்கிவருகின்றன. சமீபத்தில் பின்னை நவீனத் துவவாதிகள் பெரியாரின் குறிப்பிட்ட இந்த ஆற்றலை மறு உயிர்ப்பு செய்ததை நினைவூட்டுவோம்.

தமிழ் அடையாளத் தைத் திராவிட அடை யாளம் எனப் பெரியார் விரிவுபடுத்தினார். பூகோள ரீதியாக அதன் அரசியல் சாத்தியப்பாடுகள் தோல்வி யடைந்தன. தமிழ் மொழி எல்லைகளுக்குள்ளேயே உள்ளீடான சனநாயகப் படுத்தலுக்கு இன்றும் அது துணை நிற்கிறது என்ற கருத்தை நாம் ஏற்கலாம்.

சிங்காரவேலர்: தமிழ் அடையாளத்தின் வர்க்கச் சார்பு நோக்கி

அயோத்திதாசபண்டிதர், பெரியார் ஆகியோருடன் சில பொது நிலைகளும் சில அடிப்படையான வேறுபாடு களும் கொண்ட வடிவில் சிங்காரவேலரைச் சந்திக் கிறோம். அந்த இரு ஆளுமை களுடன் சிங்காரவேலர் தொடர்புகொண்டிருந்த போதிலும் தமிழ் அடை யாளத்திற்கான சமூகப் பொருளாதார உள்ளடக் கத்தை வழங்கியவர் என்ற முறையில் சிங்காரவேலரின் ஆளுமை தனித்துவம் கொண்டது.

மார்க்சின் அரசியல் பொருளாதாரச் சிந்தனைக் கோட்பாட்டு ரீதியாக இன்று வரை எளிதில் நிராகரிக்கப் பட முடியாதது. அது அப்போது தான் தமிழுக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தது. பௌத்தம், சுயமரியாதைச் சிந்தனை ஆகியவற்றில் சிங்காரவேலர் ஈடுபாடு கொண்டிருந்த போதும், மார்க்சின் அரசியல் பொருளாதாரச் சிந்தனையால் முடிவாக ஈர்க்கப்பட்டார்.

பண்டிதர், பெரியார் என்ற இருபெரும் கருத்து நிலைகளோடு ஊடாடி, அவற்றை நகர்ப்புறத் தொழிலாளர் வர்க்கத்தோடும் மார்க்சியத்தோடும் இணைத்த மாபெரும் ரசவாதத்தைத் தமிழ்ச் சூழல்களில் செய் தவர் சிங்காரவேலர். தமிழ் அடையாளம் என்ற பிரதேசவெளியினுள் மார்க்சியம் என்ற மாபெரும் கோட்பாட்டுப் பரப்பைச் சிங்காரவேலர் சேர்த்திணைத்தார். அது வரையில் தமிழ் அடையாளம் அறிந்திராத கோட்பாட்டுப் பரப்பு அது.

இனி எப்போதுமே தமிழ் அடையாளம் குறித்த விவாதங்களில் புறக்கணிக்கப்பட முடியாத பரப்பு அது. எல்லாவிதமான சூத்திரவாதங்களையும் கடந்து செல்லும் படைப்புத் தன்மை கொண்ட பரப்பு அது. சர்வ தேச அளவிலான மிக அகல மான அறிவுப் பரப்பையும் அனுபவப் பரப்பையும் சே கரித்து தமிழ் அடை யாளம் குறித்த விவாதங்களுக்குள் செலுத்தும் வல்லமை கொண்டதாக மார்க்சியம் உள்ளது.

இந்த மாபெரும் நிகழ்வுக் கான விரிந்த களங்களை நோக்கிய முதல் வரைவினை இட்டவர் சிங்காரவேலர். நாட்டு விடுதலையோடு, சாதி, மதப், பொருளாதார முரண்பாடுகளை எதிர் கொள்ளுதல் என்ற வேலைத் திட்டத்தைச் சிங்காரவேலர் ஒன்றிணைய உருவாக்கினார். சுயமரியாதைத் தத்துவம், பகுத்தறிவு, விஞ்ஞானச் சிந் தனை ஆகியவற்றின் கருத் தியல் ஆற்றலைச் சிங்கார வேலர் வலுவாக அங்கீகரித் தார்.

எதற்குமே அடங்காத துடுக்குத்தனம் கொண்ட பெரியாருக்கு மார்க்சியத் தில் நியாயமான ஈர்ப்பு ஏற்படும்படி செய்தவர் சிங்காரவேலர். பெரியாரி டம் மட்டுமல்ல, அவர் வழியாகத் திராவிட இயக்கத் தினுள்ளேயும் மார்க்சியம் சார்ந்த ஒரு சவால் நிரந் தரமாகத் தொழில்படுவதற் கான முதல் புள்ளிகளை இட்டவர் சிங்காரவேலர்.

தமிழ் அடையாள அர சியலின் வலுவான ஒரு சிந் தனைப் பாரம்பரியம் மார்க் சியத்தை ஏற்றுப் பேசுவது என்ற நிலை அன்றிலிருந்தே உருவானது. இன்றுவரை ஒலித்து வரும் திராவிடப் பொதுவுடைமை, தமிழ் தேசிய பொதுவுடைமை என்ற சொல்லாடல்கள் தற் செயலானவை அல்ல.

அண்ணா முதலானோரின் மொழி மற்றும் இலக்கிய அரசியல்

1935 களில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மொழி அரசியலைத் தமிழ்ச் சூழல்களில் அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டன. பல மொழிகளைக் கொண்ட இந்திய நாட்டில் ஒரு குறிப் பிட்ட பகுதி மக்களின் மொழியே ஆட்சி மொழி யாகவும் கல்வி மொழியாக வும் இருக்கமுடியும் என்ற கணக்கு சனநாயக விரோத மானது.

1935களில் இந்தித் திணிப்பு வெற்றி பெற்றிருக்கு மாயின், இலங்கையில் உரு வான சூழல் போன்ற ஒன்று இங்கும் அப்போதே உரு வாகியிருக்கும். 1947க்குப் பிறகு, மொழிவழி மாநிலங் கள் என்ற ஏற்பாடே அரங்கிற்கு வராமல் போயிருக்கலாம்.

1935களின் இந்தி எதிர்ப்புப் போராட் டங்கள் இந்தித் திணிப்பை நிறுத்திய தோடு தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த சொல்லாடல்களைத் தீவிரப்படுத்தின. பல மரபார்ந்த தமிழ் அறிஞர்கள் பெரி யார் தலைமையேற்றிருந்த நீதிக்கட்சி யோடு அணி சேர்ந்தனர். தமிழ் அறிஞர் கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற அணிசேர்க்கை திராவிட அரசியலுக்குக் கிடைத்தது இக்காலத்தில்தான். அண்ணா வின் தலைமையிலான நீதிக்கட்சியின் இளம் தலைமுறை தமிழ் அடையாள அரசியலின் இலக்கிய வழிப் பண்பாட்டு அரசியலை முனைப்பாக்கியது. அண்ணா முதலான அணியினர் எழுத்தாளர்களாகவும் மேடைப் பேச்சாளர்களாகவும் திரைப்படம் போன்ற நவீன ஊடகவியலாளராகவும் இருந்தனர். ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கைப் பற்றுவது போல, வெகுசனப் பரப்புரைச் சாதனங்களை அவர்கள் கைப்பற்றினர். தேர்வு செய்யப்பட்ட பண்டைத்தமிழ் இலக்கியத் தகவுகளை ஜனரஞ்சக வடிவில் வெகுமக்களிடையில் அவர்கள் பரப்பினர். ஆரியர்/திராவிடர், பார்ப்பனர்/அல்லா தவர் வேறுபாடுகளை, மோதல்களை நாடகப் பாங்கான மக்கள் உணர்வாக அவர்களால் மாற்ற முடிந்தது. பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த ஒரு பிரும்மாண்டத்தை அவர் களால் உருவாக்கிக் காட்டமுடிந்தது.

அண்ணா முதலியோரின் இலக்கிய வழி அணுகுமுறை, அவர்தம் விருப்பு, வெறுப்புகட்கு அப்பாற்பட்டு, மதம் இருந்த இடத்தில் மொழியையும் இலக் கியத்தையும் அமரவைத்தது. மதம் எவ் வகையான மேட்டுக்குடித் தகவுகளைச் சார்ந்திருக்குமோ அவ்வகையான தகவுகளின் அரசியலை இலக்கியச் சொல்லாடல்கள் மூலம் நிகழ்த்த முடிந்தது.

அதாவது, பிராமணரல்லாத மேட்டுக் குடித் தகவுகளை மொழி, இலக்கியம் மூலம் நிலைநிறுத்த முடிந்தது. இந்த அரசியலுக்குத் திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினர் தலைமை தாங்கினர். தனித்தமிழ், செவ்வியல், செம் மொழி, வீரம், மானம், மூவேந்தர் மரபு, சோழர்காலத் தமிழின் பொற்காலம், கொஞ்சம் கூடுதலாக முடியுமெனில் சைவ சமயப் பெருமை போன்றவை தமிழர் அடையாள அரசியலின் மையப்புள்ளி களாகின.

திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறை யினரே திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலை வர்கள் ஆனார்கள். விடு தலை பெற்ற இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற் கான போட்டியில் திரா விட இயக்கத்தார் ஈடுபட வேண்டும் என்பது முன் னேற்றக் கழகத்தின் ஒரு முக்கிய நிலைப்பாடு. அர சியல் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற நிலைப் பாட்டைத் தவறென்று கொள்ள முடியாது.

ஆனால் எந்த வர்க்கத் தின் பிரதிநிதிகளாக அவர் கள் அதிகாரத்தில் பங்கேற்க விரும்பினர் என்பதே பிரச் சினை. தமிழ் அடையாளத் தின் பெயரால் அவர்கள் அரசியல் அதிகாரத்தை நாடினர்.

ஆனால் அரசியல் அதி காரத்திற்கான போட்டி யில் சாதி, வர்க்கம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த் தல் இயலாது. சாதியும் வர்க்கமுமாக நிலை பெற்றி ருக்கும் தமிழ்ச் சமூகத்தில், இனம் என்ற ஒன்றை வர்க்க, சாதி எல்லைகளுக்கு வெளி யில் வைத்துப் பார்க்க முன் னேற்றக் கழகம் விழைந்தது.

தமிழின அரசியலையும் தமிழ்ச் சமூகத்தின் சாதி, வர்க்க முரண்பாடுகளையும் ஒன்றிணைத்திருந்தால் முன்னேற்றக் கழகம் முற் போக்கு அரசியலில் முன் னோடிச் சக்தியாக ஆக முடிந் திருக்கும். மாறாக, அடை யாள அரசியலின் தளங் களுக்குள் தொழில்பட்ட மரபுரீதியான சாதி மேட்டி மைகளை முன்னேற்றக் கழக அரசியலால் அப்புறப்படுத்த முடியவில்லை.

அதுபோலவே அடை யாள அரசியலினுள் தொழில் படத் துவங்கிய முதலாளியச் சக்திகளினின்றும் அது தன்னை அப்புறப்படுத்திக் கொள்ளவில்லை.

தமிழ் அடையாள அரசி யலினுள் தொழில்படும் நில வுடைமைச் சாதிய சக்திகள் மற்றும் அவற்றின் ஊடாக உருவாகி வந்த முதலாளியச் சக்திகள் பற்றிய தன்னுணர் வே முன்னேற்றக் கழக அர சியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுடன் விருப்புடன் இயைந்து செல்வதே முன் னேற்றக் கழக அரசியலா யிற்று.

ஜீவாவின் பண்பாட்டு அரசியல்

சிங்காரவேலர், பெரி யார் ஆகியோருடன் தமிழ் அடையாள அரசியலினுள் தோழர் ஜீவா பிரவேசித் தார். சிங்காரவேலரிடம் காணப்பட்ட சுயமரியா தை, பகுத்தறிவு, மார்க்சியம் என்ற ஒன்றிணைந்த நிலை ஜீவாவிடமும் ஆரம்பக் காலத்தில் இருந்தது. இருப் பினும் ஜீவாவின் வாழ்க் கைக் காலம் அவருக்குச்

சில கூடுதல் வாய்ப்புகளை வழங்கியது. திராவிட இயக்கத் தாரின் இரண்டாம் தலை முறையினர் முன்னெடுத்த தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த பண்பாட்டு அரசி யலை ஜீவா நேரடியாக எதிர் கொள்ளவேண்டி யிருந்தது. தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றின் தொன்மை, தொடர்ச்சி, செழுமை குறித்த தன்னு ணர்வு ஜீவாவிடம் இருந்தது.

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பன் காவி யம், பாரதி, பாரதிதாசன் எனத் தமிழ் இலக்கியத்தின் முழுப்பரப்பை ஜீவா தழுவி நின்றார். ஆயின் அவ்விலக் கியங்களை அண்ணா முதலானோர் அணுகி யதிலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாட்டு டன் ஜீவா அணுகினார். தமிழிலக்கியங் களினுள் மேட்டுக்குடி மரபுகளையோ மூவேந்தர் மாண்புகளையோ கண்டு ஜீவா சிலாகிக்கவில்லை. சங்ககாலம் தொட்டு பாரதி, பாரதிதாசன் வரையிலான இலக் கியங்களினுள் தொட்டுத் தொடர்ந்து வரும் மானுட மாண்புகளை, சனநாயகப் பண்பு களை, சமத்துவ ஏக்கங்களை ஜீவா வெளிக் கொணர்ந்தார். அவை வெறுமனே கடந்த காலப் பெருமைகளாக முடிந்துபோய் விடாமல் புதிய காலப் பரப்பை நோக்கி முன்பை விடப் பாய்ச்சலாக முன்னேற வேண்டும் என அவர் வகுத்துரைத்தார். புதியவை நோக்கிய பாய்ச்சல்களுக்குப் பாரதி அவருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தார். ஜீவாவின் இலக்கியம் குறித்த அணுகுமுறையில் தமிழ்ப்பண்பாடு, உழைக்கும் மக்களின் நலன், மானுடநேயம் ஆகியவை ஒன்றிணைந்திருந்தன.

தமிழ்மொழி குறித்த அரசியலிலும் தோழர் ஜீவா கிட்டத்தட்ட இதே அணுகு முறையைத்தான் கொண்டிருந்தார். நீதிக் கட்சிக்காரர்கள் தொட்டு இங்கு வளர்க்கப் பட்டிருந்த ஆங்கில மோகத்தை ஜீவா கேள்விக்குள்ளாக்கினார். தமிழின் பழம் பெருமைகள் பேசியவர்களால் கூட முன் வைக்கப்படாத “தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே நிர்வாக மொழி” என்ற முடிவான திட்டதை ஜீவா முன்வைத்தார். இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை அரியணையில் ஏற்ற வேண்டும், அப்போதுதான் தமிழன் உலகத்தரத்திற்கு உயர்வான் என்ற பம்மாத்து ஜீவாவிடம் இருந்ததில்லை. உழைக்கும் மக்களுக்கான கல்வி அவர்களது தாய் மொழியிலேயே கிடைக்க வேண்டும் என்ற மிகச் சர்வ சாதாரண அணுகுமுறையே ஜீவாவிடம் இருந்தது.

தமிழ்ச் சூழல்களில், சிங்காரவேலர் பகுத்தறிவும் புரட்சியும் இணையும் ஓர் தளத்தில் மார்க்சியத்தை முன் வைத்தார் எனில் பேரா சான் ஜீவா அவர்கள் பண் பாடும் புரட்சியும் இணை யும் ஒரு தளத்தில் மார்க் சியத்தை முன்வைத்தார் எனலாம்.

தமிழ்ப் பண்பாடு என்னும் மிகச் செழுமை யான பரப்பினுள் புதைந்து கிடக்கும் புராதனப் பொது வுடைமைக் கனவுகள், சாதி எதிர்ப்புக் கூறுகள், சன நாயகக் கருத்தாக்கங்கள் ஆகியவற்றை இன்றைய உழைக்கும் மக்களின் போ ராட்ட ஆயுதங்களாக்கும் பண்பாட்டு அரசியலுக்கான அடிப்படைகளை ஜீவா வழங்கினார்.

பண்பாட்டு அரசியலை விவசாயிகள், தொழிலாளி களின் வர்க்கப் போராட்ட அரசியலுடன் இணைத்துச் செல்லும் ரச வாதத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்ச்சி பெறவேண்டும் எனத் தோழர் ஜீவா எதிர் பார்த்தார்.

பேராசிரியர் நாவா: நாட்டுப்புறப் பண்பாட்டை நோக்கி

தோழர் ஜீவாவிற்குப் பிறகான தமிழ்ப் பண்பாட்டு அரசியல் மிக விரிந்த பரப் பைக் கொண்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலேறித் தன்னிச்சையான முதலாளியத்தைப் பரப்பி யது. அரசு நலத்திட்டங் களின் மூலம் ஏழை எளிய மக்களைத் தனக்கு ஆதர வாகத் தக்கவைத்துக் கொள்ளும் கலையில் அது தேர்ச்சி பெற்றது. ஏழை எளிய மக்களுக்கான அரசு நலத்திட்ட ஒதுக்கீடுகளின் வழி அது உண்மையில் தனது இரண்டாவது, மூன்றாவது மட்டத் தலைவர்களின் வாழ்வைச் செழிப்பாக்கி யது.

அரசியல் அதிகாரத்தின் வழியாக வட்டார அள விலான மேட்டிமைச் சாதி களை அது பலப்படுத்தி யது. முதலாளிய வளர்ச்சியின் தற்காலிக ஆதாயங்களைக் கொண்டு கிராமப் புறங் களில் சாதியம் முன்பை விட அதிகமாக வலுவடைந்தது. ஒடுக்கப்பட்ட சாதிகள் தாம் திராவிடக் கட்சிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்ற தன்னுணர்வினைப் பெற்று மாற்றுவழிகளைச் சிந்திக்கத் தொடங்கினர்.

பேராசிரியர் நாவா வின் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு தனது மார்க்சியப் பார் வையைக் கிராமங்களை நோக்கி, நாட்டுப்புறக் கலை இலக்கிய வாய்மொழி வடிவங்களை நோக்கிப் பரப்பியது. நாட்டுப் புற வழக்காறுகள் தொகுக்கப் படுதல், அவற்றின் பண் பாட்டுப் பொருண்மை அறியப்படுதல் என்ற செயல்பாடு துவங்கியது. தோழர் ஜீவா அவர்களின் பண்பாட்டு அரசியலின் பண்புகளை இது கொண்டதே எனினும் முன்னை விட உணர்வுபூர்வமாக இது உழைக்கும் மக்களின் பண்பாட்டைத் தேடி அடைவதாக அமைந்தது. எழுத்திலக் கியங்களின் வழியாக மட்டுமே தமிழ்ப் பண்பாட்டை அணுகுதல் என்ற முறையி லிருந்து அடிப்படையாக இது வேறுபட்டு நின்றது. வாய்மொழி வழக்காறுகள் மூல மாகப் பாடுபடும் மக்களின் பண்பாட்டு அனுபவங்களைப் பதிவு செய்யும் முறையி யலுக்கு அது முன்னுரிமை கொடுத்தது. சாதாரண மக்களின் உழைப்பு, அழகியல், அறம், துயரங்கள், எதிர்ப்புணர்வு ஆகிய வற்றை அது மையப்பட்டிருந்தது. கொச்சை யானது, தாறுமாறானது, ஒழுங்கற்றது, தரமற்றது, வரைமுறையற்றது என்றெல்லாம் ஓரங்கட்டப்பட்டிருந்த மக்கள் பண்பாட்டின் நியாயமான சமூக அந்தஸ்தை நிறுவும் முயற்சி பேராசிரியர் நாவாவின் நாட்டுப் புறவியல் ஆய்வுகளில் அமைந்திருந்தது. வர்க்க சமூகத்தில் பண்பாடு என்பது ஒரு படித்தானது அல்ல, அது ஆளும் வர்க்கத் தாரின் பண்பாடு எனவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு எனவும் பிளவுபட்டே நிலவும் என்ற லெனினின் கருத்தைத் தமிழ்ச் சூழல்களில் எடுத்துரைப்பதாக இது அமைந்தது. பேராசிரியர் நா.வா.வின் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பண்பாட்டில் வர்க்கப்போராட்டம் என்ற கருத்தாக்கத் தைப் பின்புலமாகக் கொண்டிருந்தன எனலாம். தமிழ் அடையாள அரசியலில் உழைக்கும் மக்களின் தரப்பை அது வலுவாக்கியது.

பேராசிரியரின் நாட்டுப்புறவியலின் வழியாக மானுடவியலும் இனவியலும் அறிஞர் உலகினுள் நுழைந்தன. தமிழ்ச் சூழல்களில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் வெறுமனே மானுடவியலாகவும் இனவிய லாகவும் மட்டும் நின்றுவிடவில்லை. அது தமிழ்ச் சமூகத்தில் வேரோடிப் போயுள்ள சாதிய எதார்த்தத்தை முன்னுக்குத் தள்ளியது. லெனின் கூறியது போலப் பண்பாடு என்பது இங்கு இரண்டாக அல்ல, பல படித்தான சாதி அடுக்குகளாகத் துண்டு பட்டுக் கிடக்கிறது என்ற உண்மையை அது வெளிப்படுத்தியது.

பேராசிரியர் நா. வா. தொடங்கி வைத்த நாட்டுப்புறவியலின் அடுத்தடுத்த அரசியல் வெளிப்பாடுகள் மிகத் தீவிர மானவை. வாய்மொழி வரலாறு, அடித் தள மக்கள் வரலாறு, இன வரைவியல், வெகுசனக் கலாசாரத்தில் நாட்டுப்புற வழக்காறுகள், பகடி செய் தல், கட்டுடைப்பு, பலவீன மானவர்களின் போராட்ட உத்திகள், மாற்றுப் பண் பாடு, மாற்று மருத்துவம், எதிர்ப் பண்பாடு, கலகப் பண்பாடு, பன்மியப் பண் பாடு, தலித் பண்பாடு, பெண் எழுத்து, பெண் அரங்கு எனப் பல திசைகளில் நாட்டுப் புறவியலின் அரசியல் கிளை பரப்பி வளர்ந்துள்ளது.

பேராசிரியர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், ராஜ் கௌதமன் ஆகியோ ரின் எழுத்துக்களோடு பரிச் சயம் உள்ளவர்கள் மேற் கூறிய சமகாலப் பண்பாட்டு அசைவுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அமைப் பியல், பின் அமைப்பியல், பின்னை நவீனத்துவம், ஒடுக்கப்பட்டோரின் உளவியல் எனப் பலவகைக் கோட்பாடுகள் மேற்கூறிய பண்பாட்டு அசைவுகளோடு தொடர்பு கொண்டவை எனினும் கோட்பாடுகளைத் தாண்டி நின்று அவை தமிழ்ப் பண்பாடு, தமிழ் அடை யாளம் ஆகியவை குறித்த விவாதங்களைச் செழுமைப் படுத்தி வருகின்றன.

முடிவுரை

19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து தொடங்கிய தமிழ் அடையாள அரசி யலின் செல்நெறிகளில் சில வற்றை இங்கு வரிசைப் படுத்தியுள்ளோம். கட்டுரை யின் துவக்கத்தில் குறிப்பிட்ட படி, தமிழ் அடையாள அர சியல் என்பது ஒற்றையானது அல்ல என்ற கருத்தை விவரித் துள்ளோம். அதன் இயங் கியல் மிகச் சிக்கலானது என்பதை விளக்கிக்காட்டி யுள்ளோம். தமிழ் அடை யாள அரசியல் என்பது பெரும் மோதல்களுக்கு உரித்தான ஒரு களமாகவே (Contested Territory) இருந்து வந்திருக்கிறது என்பதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. தமிழ் அடையாளம் என்பது தமிழ் ஆர்வலர்கள் என அறியப்பட்டவர்களின் ஏகபோகச் சொத்தாக இருக்கவில்லை, அது தமிழ்ச் சமூகத்தினுள் தொழில்படும் சாதி-வர்க்க சக்திகள் பொருதிக் கொள்ளும் ஒரு மைதான மாக இருந்து வந்திருக்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளோம். இந்தப் போராட்டம் முடிந்து விடவில்லை, தொடருகிறது. இப்போராட்டத்தில் மார்க்சியர்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் ஏராளமாகப் பங் களித்துள்ளனர்; அவர்கள் இன்னும் செய்வதற்கு ஏராளமாக உண்டு.

இதுதான் தமிழ் அடையாளம், இவர்கள்தாம் அதனைச் சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்று கூட நம்மால் இங்கு அறுதியிட்டுச் சொல்ல முடிய வில்லை. நாம் தொடர்ந்து, அடுத்தடுத்து தேடிக் கொண்டிருக்கும் சமூக விடுதலை வடிவங்களின் ஒரு குறியீடாகக்கூட அது இருக்கலாம். அது, இது வரையில் நாம் அறிந்த ஒன்றாக இல்லாமல், நாம் அடைய விரும்பும் கனவு தேசமாகக் கூட இருக் கலாம். நாம் அதனைத் தேடிக்கொண்டிருக்கிறோம், அதற்காக உண்மையாகப் போராடிக் கொண்டிருக் கிறோம் என்பதே எல்லாவற்றையும் விட முக்கிய மானது.

Pin It