மூச்சுக் குழலை பிரித்துக் காட்டினால்
மூன்று மதிப்பெண்கள் கூடுதல்
இரைப்பை பெருங்குடலின் இணைப்பை
தனியாகக் காட்டுபவர்களுக்கு
இன்னும் சற்று கூடுதல் மதிப்பெண்கள்
மலவாயையும் மலக்குடலையும்
தனித்துக் காட்டாதவர்களுக்கு
இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்
என்றார்கள் ஆசிரியர்கள்
உதரவிதானத்தை அறுத்தபோதோ
இதயத்தைக் கிழித்தபோதோ
என்னுள் எந்த வேட்கையும் இல்லை
குடல்களின் மென்மையும்
மூச்சுக்குழாயின் தன்மையும்
என் உயிரில் ஊசி குத்தியது
இருந்தும் என் அழுகையெல்லாம்
வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட
எலியின் இதயமும்
என்னிடமிருந்து நீக்கப்பட்ட இதயமும்
சந்திக்குமா என்ற கணத்திற்காகத்தான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி