டிகால் டிகால் டிகால்
டிகாலுக்குக் கீழே டிக்கிக்கால்
டிக்கிக்கால் காலடியில் டிங்கிக்கால்
டிங்கிக்கால் கண்ணீர்
டிகால் கவிதை
டிக்கிக்கால் கர்மம்
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
அவன் பாட்டுக்கு
அவன்
அவள் பாட்டுக்கு
அவள்
அது பாட்டுக்கு
அது
தப்பிப் பிறந்ததெல்லாம்
தையாரே தையாரே தையாரே
ஒரு காலகட்டம் வரையில்
சோறு அருமையாக இருந்தது
பிறகு
பெண்
நான்சென்ஸ் நான்சென்ஸ் நான்சென்ஸ்
காலையிலேயே
குடிக்கவைத்து வேடிக்கை பார்த்தது இசக்கி
ஏதாவது பாலியல் கவிதை எழுதேன் என
கேட்டுக் கொண்டது காளி
தேவடியாளைத் தேடிப்போடா என்று
கட்டளையிட்டது நீலி
இருந்த இடத்தில் இருந்தே
கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறாள் சிவகாமித்தாய்
திருடலாம்
கொள்ளையடிக்கலாம்
கூட்டிக் கொடுக்கலாம்
காட்டிக் கொடுக்கலாம்
கொலையும் செய்யலாம்
கூட வந்தவளை
ஜெயிக்க வேண்டும்
மனசு
மதனகாமராஜன்
வார்த்தை
ஜகதலப் பிரதாபம்
வாழ்வு
விக்ரமாதித்யன்
உன்னதம் - ஜனவரி 2005
தில்லாலங்கிடி கவிதைகள்
- விவரங்கள்
- விக்ரமாதித்யன் நம்பி
- பிரிவு: உன்னதம் - ஜனவரி 2005
More articles by விக்ரமாதித்யன் நம்பி
- நான்கு கவிதைகள் (20 ஜன 2016)
- காற்றின் காதலன் (29 ஜூன் 2012)
- ஆகும் கவிதை / ஆகாக்கவிதை (25 அக் 2010)
- தில்லாலங்கிடி கவிதைகள் (20 மே 2010)
- தில்லாலங்கிடி கவிதைகள் (19 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.