திறந்தே கிடக்கிறது
சன்னல் கதவுகளற்ற
மிகச்சிறிய என்வீடு.
திருடர்கள்
வெகுஎளிதாக நுழைந்து
திருட முடியாதபடிக்கு
ஏகப்பட்டவைகள்
அடைத்துக் கொண்டுள்ளன.
இருந்தபோதும்
விருந்தினரை வரவேற்கும்
ஒரு நாற்காலி காலியாக உள்ளது.
யாதுமற்ற ஒரு வழிப்போக்கன்
வெகுஇலகுவான நிர்வாணத்துடன்
அனுமதியின்றி நுழைந்து
யாவற்றையும் நிர்மூலமாக்கி
வெளியேறிவிடுகிறான்.
நாற்காலி மட்டும்
எதையோ நிரப்பிக் கொண்டுள்ளது.
இறுதியில்
மிகச்சிறிய என்வீடு
சுவர்களற்ற பெருவெளியாய்
மிகப்பிரமாண்டத்துடன்
விரிந்துக் கொண்டேயிருக்கிறது
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!