வாழ்கை குறித்த பிரயாசையோடும்
பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தோடும்
நடுநடுங்கி வளர்கிறது
ஒரு பச்சை மரம்.
வெட்டப்படும் கிளைகளுக்கு
புத்துயிர் தரும் அதன்
வேர்களை நம்பி...
வேரும் கைவிட, வேடிக்கையாக்கப்பட்ட
சிலரை மௌனமாய் கண்டும் காணாதபடி...

***
தன் மானம் வேண்டி
கையேந்திய வேசை நங்கையின் கையில்
திணிக்கப்படுகிறது
நிர்வாணம்
வேகமாய் மூடி மறைக்க முயன்றவளுக்கு
அரைகுறையாய் உதவுகிறது
சில பத்து ரூபாய் நோட்டுகள்

***
ஒரு ஜிப்ஸியைப் போல துவங்கும் மறுபிறப்பில்
காதைப் பிளக்கும் தட்டல் ஓசை...
வன்மங்களின் தாக்குதலில்
காய்ந்துப் போன குதங்கள்
மாரைக் கீறி ரத்தம்
கேட்கும் குரூர நயவஞ்சகங்கள்
ஆற்றாமையின் கணங்களை
அளக்கும் நிராகரிப்புகளுமாய்
சொர்க்கம் வரை தொடர்கிறது
சில துர்சொப்பனங்கள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.