பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கின்றன
தகிக்கும் நினைவுகள்

கனத்த மௌனத்தை
கலைத்துப்போடும்
தெருநாய்கள்

உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கி நிற்கும்
ஊடல் பொழுதுகள் !

- குடந்தை அன்புமணி

Pin It