இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல
தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில்
ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய்
உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல்
சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல்
அலையாடும் படகு
திரைச்சீலையாய்
அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில்
ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில்
என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற
ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக்
கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.
- விதூஷ்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- விதூஷ்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009