Abdul Rahmanபேனா உன் ஆறாவது விரலாய் இருந்தது

கவிதையும் உன் மூளையும் கலந்தே கிடந்தன

ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டினாய்

ஒவ்வொரு நாளும் புதியது சொன்னாய்

கவிதையை மட்டுமா படைத்தாய்

கவிஞர்களையும் நீ படைத்தாய்!

எங்கள் கவிக்கோவே அப்துல் ரகுமானே

எழுதுவதை ஏன் நிறுத்திக் கொண்டாய்?

- சுபவீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.