குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
         (குறள் 66)

வீணையில் தோன்றும் நாதம்
 வேய்குழல் ஊதும் கீதம்
இனிமையோ இனிமை யயன்று
 எவருரைக் கின்றார் என்றால்

மடியிலே இருந்து பிள்ளை
 மழலையாய்ச் சிந்தும் சொல்லைக்
கேட்டிடா மனிதர் தானே
 கீதமே இன்ப மென்பார்

- மானம்பாடி புண்ணியமூர்த்தி

More articles by மானம்பாடி புண்ணியமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.