கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்                                            

                                                                              ( குறள்: 796)

நமைச்சூழ்ந்து நின்றிடும் நண்பர்கள் தன்மையை

                நாமறிய வேண்டு மென்றால்

நமக்கொரு துன்பமே வருகின்ற நேரத்தில்

                நன்குநாம் அறிய லாகும்

 நண்பர்கள் அன்பையே அளவுசெய் கோலது

                நம்முடைய துன்ப மாகும்

நல்லவர் கெட்டவர் தேர்ந்துநாம் துணைக்கொள்ள

                நல்லவழி சொன்ன குறளே!  

More articles by மானம்பாடி புண்ணியமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.