சருகுகள் உதிர
தன்னிலை இழக்கிறது மரம்
இலைகள் ஏதுமின்றி
கிளைகளில் வெறுமை படர
வறட்சியை முன்னிறுத்துகிறது
அதனிருப்பு.
எதிர்வரும் பருவத்தை நோக்கி
துளிர்விட தொடங்குகின்றன இலைகள்
தோல்விகளைச் சுமந்து
வெற்றியை நோக்கி
முயற்சிகளைத் தொடரும்
நம்பிக்கை மனிதனென.

Pin It