சருகுகள் உதிர
தன்னிலை இழக்கிறது மரம்
இலைகள் ஏதுமின்றி
கிளைகளில் வெறுமை படர
வறட்சியை முன்னிறுத்துகிறது
அதனிருப்பு.
எதிர்வரும் பருவத்தை நோக்கி
துளிர்விட தொடங்குகின்றன இலைகள்
தோல்விகளைச் சுமந்து
வெற்றியை நோக்கி
முயற்சிகளைத் தொடரும்
நம்பிக்கை மனிதனென.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.