வாழ்க்கை - 1

எரிக்கும் வன்மங்கள்
எவ்வளவோ முரண்பாடுகள்...
மோதிக் கொள்ளும்
சாத்தியங்களுடன்
நேரெதிர் சந்திப்பில்
முகம் பார்த்தும்,
காயமேதுமின்றியே
விலகிப் போகும்
கணங்களில்தான்-
கனிந்து கொண்டிருக்கிறது...
வாழ்க்கை.

வாழ்க்கை - 2

இல்வாழ்க்கை
எனப்படுவது யாதெனில்...
யாரொருவரின் குரல்
உயரும் போதெல்லாம்,
மற்றொருவரின் குரல்
உள்ளீடாய் கலந்திருப்பதாக
நம்பப்படுவதே.

- மு.முருகேஷ்

Pin It