மனம் பிசகிய

ஒருவன்

கனவுகளை விற்பனை

செய்து கொண்டிருந்தான்

 

நிஜங்களைப் பறிகொடுத்து

முண்டியடித்துக் கனவுகளை

வாங்கினார்கள்

 

அவனுக்கு ஆசை

ஒன்றிருந்தது எல்லோரும்

கனவுகளோடு

இருக்க

 

யாவரும் கனவுகளில்

கரைந்திருக்க

நிஜமாய் நின்றிருந்தான்

 

இடதுகை சுட்டுவிரல்

நகத்தில் கருப்பு மைப்புள்ளி

சிம்மாசனமிட்டிருந்தது

அனைவருக்கும்.

Pin It