தாம்பத்ய இரவை
எளிமையாக
பார்க்காதே
அறிவு கொண்டு
புணர நேர்ந்தால்
தோற்றுப் போக நேடும்.
எது வெற்றி?
எது தோல்வி?
நீடிக்கும் குழப்பங்களின்
உச்சியில் தான்
விடிகிறது பொழுது.
பகல் மறைத்த
உடல்களைக் கொண்டு
அலைகிறோம்
இரவுகளில் வெளிப்பட பயந்து
முனங்கலோ, இருமலோ
தூக்கத்தை கிழிக்கும்
ஆயுதமாய் மாறலாம்
இமை திறந்த வெளிகளில்
ஊற்றென வெளிவரும்
கண்ணீரை பதிந்து வை
வேறொருவன் படித்துப் பார்க்க
தொடர்புடைய படைப்புகள்
அ. இலட்சுமி காந்தன் கவிதை
- விவரங்கள்
- அ.இலட்சுமிகாந்தன்
- பிரிவு: புதுவிசை - அக்டோபர் 2005
More articles by அ.இலட்சுமிகாந்தன்
- நிலமிசை வாழ்பவர்க்கே.... (22 ஜன 2012)
- தொங்கும் காலம் (25 அக் 2011)
- மரப்பாச்சிகளின் தனிமை (27 செப் 2011)
- அ. இலட்சுமிகாந்தன் கவிதை (23 ஆக 2010)
- கருப்பு வெள்ளை (23 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.