menமனிதர் மூலம்
பயணித்த
என் வார்த்தைகள்
அவரவர் இயல்புக்கேற்ப
பரிமாணம் பெற்று
உன்னை ஊடறுத்த போது
அது
நிகழ்ந்து விட்டது.

தன் போக்கில்
விளையாடிக் கொண்டே
குருட்டுப் பெரியவர்களின்
விரல்கள் பற்றி
அழைத்து வருகிறாள்
சிறுமி

வழி காட்டும்
வார்த்தைகளால் மட்டுமே
அதட்டிக் கொண்டு
வருகிறார்கள்
பெரியவர்கள்

More articles by புதுகை சஞ்சீவி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.