2004

kanasuதஞ்சாவூர் அருகில் உள்ள வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய பொய்த் தேவு என்ற நாவல் தமிழ் இலக்கியத்தின் முக்கிய நாவல் என்று கூறப்படுகின்றது. தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த விமர்சகர்களில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சனக்கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். இலக்கிய வட்டம் என்ற மாத இதழை நடத்தியவர். 

நாவல்

1. சர்மாவின் உயில்

2. சமூக சித்திரம்

3. ஏழுபேர்

4. பெரிய மனிதன்

5. வாழ்ந்தவர் கெட்டால்

6. அவரவர் பாடு

7. பட்டணத்துப் பேச்சு

8. மாதவி

9. ஒரு நாள்

10. அசுரகணம்

11. ஆட்கொல்லி

12. தந்தையும் மகளும்

13. பொய்த்தேவு

14. தாமஸ் வந்தார்

15. கோதை சிரித்தாள் (தமிழக அரசு பரிசு பெற்றது)

16. அவதூதர்

17. பித்தப் பூ

18. நளினி

சிறுகதைத் தொகுதிகள்

1. ஆடரங்கு

2. தெய்வ ஜனனம்

3. மணிக் கூண்டு

4. க.நா.சு.சிறுகதைகள் தொகுதி I, II, III

நோபல் பரிசு பெற்ற நாவல்கள் -\ தமிழ் மொழிபெயர்ப்பு

1. ரோமன் ரோலந்து: ஜூன் கிரிஸ்டபர்

2. நட்ஹாம்சன்: நிலவளம்

3. செல்மாலாகர்லெவ்: மத குரு

4. பேர்லாகர் குவிஸ்ட்: பாரபஸ்

5. ஆந்த்ரே ழீடு: குள்ளன்

6. எரிக்ஸஸ்: விரோதி

சிறந்த ஆசிரியர்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள்

1. ஹென்றி இப்சன் பொம்மையா? மனைவியா?

2. ஸ்டீபன் கிரேன் திறந்த படகு

3. ஸ்டீபன் கிரேன் மணமகள் வருகை

4. காதரீன் அன்னிபோட்டர் குருதிப்பூ

5. வில்லியம் சரோயான் மனுஷ்ய நாடகம்

6. ஜான் ஸ்டீபன் பெக் கடல் முத்து

7. செல்மா லாகர் லெவ் தேவமலர்

8. ஜார்ஜ் ஆர்வெல் விலங்குப் பண்ணை

9. ஜார்ஜ் ஆர்வெல் 1984

10. ஐரோப்பிய சிறுகதைகள்

11. ஜெர்மனி சிறுகதைகள்

வெளிவர வேண்டியவை

1. திருவலங்காடு - நாவல் ஆயிரம் பக்கங்கள்

2. ஜாதி முத்து - நாவல்

3. சிறுகதைகள்- நூற்றுக்கு மேல்

4. தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் - நூற்றுக்கு மேல்

கவிதைத் தொகுதிகள்

1. க.நா.சு.கவிதைகள்

2. மயன் கவிதைகள்

கட்டுரைத் தொகுதிகள்

1. விமரிசனக் கலை

2. இலக்கிய விசாரம்

3. நாவல் கலை

4. பாரதியின் காட்சிகள்

5. தமிழின் முதல் ஐந்து நாவல்கள்

6. இந்திய சிந்தனை வளம்

7. இலக்கியத்திறன்

8. இலக்கியத்திற்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதமி விருதுபெற்றது)

9. பத்து இந்திய நாவல்கள்

10. இந்திய மரபு

நாடகம்

1. நால்வர்

2. ஊதாரி

தமிழில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு

1. சிலப்பதிகாரம்

2. திருக்குறள் (அறத்துப்பால்மட்டும்)

3. குறுந்தொகை

4. பி.ஆர்.ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம்

5. நீல. பத்மநாபன் - தலைமுறைகள்

6. புதுமைப்பித்தன், மௌனி கு. அழகிரிசாI, ஜெயகாந்தன் உட்பட சிறுகதைகள்

7. ஆர். சண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.