tree paintingநிலைக் காலுக்காக

நானே வெட்டினேன்...

நானே

புல்வெளிகளைப்

பொழுதுபோக்கு

மைதானமாக்கினேன்...

நானே பணப்பயிர்களுக்கு

பச்சை வயல்களை

பாலையாக்கினேன்

நானே

உப்புப் பண்ணைகளை

ஊருக்குள் நிறுவி

பன்னாட்டுப் பாசனத்தை

விதையாக்கினேன்

நானே

அந்நிய மோகத்திலும்

கண்ணிய மதப் பற்றிலும்

வாழ்வாதாரத்தைத்

தொலைத்து நின்றேன்

நானே

அனைத்திற்கும்

காரணமானவன் என

நான் அறியும்போது

நானே இருக்கப் போவதில்லை. 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.