மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

கானாடுகாத்தான் வைசு.ஷ. பார்வதி நடராஜன் திருமணம்

25 ஜூன் 2025 பெரியார்

தலைவர் அவர்களே! மணமக்களே!! பெற்றோர்களே!!! தோழர்களே!!!! இன்று நடந்த இத் திருமணத்திற்கு நமது மாகாண அபிவிர்த்தி மந்திரியும், பிரபல கனவானுமான நண்பர் பி.டி.ராஜன்...

பார்ப்பனியத்தில் இருந்து முருகனை மீட்டெடுப்போம்! சங்கிகளை அம்பலப்படுத்துவோம்!!

23 ஜூன் 2025 கட்டுரைகள்

ஒவ்வொரு மனிதனும் துன்பப்படும்போது ‘இந்த உலகில் இது போன்ற நிலைமை யாருக்குமே வரக்கூடாது’ என்று கடவுளை வேண்டிக் கொள்வான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு...

கிராபின் சிப் பதித்து மூளை புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

23 ஜூன் 2025 புற்றுநோய்கள்

நரம்பியல் அறுவை சிகிச்சை முறையில் இந்த புதிய கிராபின் (Graphene) சிகிச்சை மருத்துவரீதியில் முதல் முயற்சி. கிராபின் சிப் பதித்து மூளைக் கட்டிகளை அகற்றும்...

கண்ணகி பகவதியான வரலாறு

23 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

பண்டையத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகள் உடையவர்களாக விளங்கியுள்ளனர். பண்டையத் தமிழகம் என்பது இன்றைய கேரளம், ஆந்திரம், கர்நாடாகம், தமிழ்நாடு முதலான...

திருநங்கைகளின் வாழ்வியலும் முன்னேற்றமும்

23 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சமூகமாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய நிலையில் உள்ளனர்....

குறவர் சமூகப் பண்பாட்டு அவலங்கள்

23 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழ்ச் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் புரையோடிக் கிடக்கிற சடங்கு முறைகள் ஏராளம். அதில் சில சடங்கு என்ற போர்வையில் மக்களிடையே நிலவுகின்ற அபத்தங்களும்...

ஊறுவதும் மெய்

23 ஜூன் 2025 கவிதைகள்

கோரி எடுத்த அன்புகொடுத்ததை மறந்துததும்பி வழிகிறது. மறுகால் வழியாக மற்றவர்களும் பயனுற. பந்தலிட்டு பரிமாறாத காதல்பொங்காத நீரூற்றாகஊற்றுக்கண் காய்ந்து வறண்டு...

ஆணவ மண்டையோடுகள்

23 ஜூன் 2025 கவிதைகள்

மூச்சை இழுத்து விடச் சொல்கிறாய். உயிர் மூச்சைப் பிடித்துக் கொண்டு நடக்கிறோம்.நாடிகளில் காதலின் துடிப்புகள்.சாதிய வெறி பிடித்த காற்று திசையாவிலும்...

144 - நல்ல காரியம்

23 ஜூன் 2025 பெரியார்

சேலத்திலும், வேலூரிலும் பொதுக் கூட்டங்களுக்கு 144 பிரிவுப்படி உத்திரவுகள் போட்டு சர்க்காரார் பொதுக் கூட்டங்களைத் தடுத்ததாகத் தெரிய வருகிறது. இதே முறையை...

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம்

20 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

2014 ஆகஸ்ட்18-ம் தேதி மேட்டூரில் கழக சார்பில் நடந்த நாத்திக பேரணிக்கு முதலில் காவல்துறையில் அனுமதி மறுத்தது நீதிமன்றம் வழியாக அனுமதி பெறப்பட்டது நீதிமன்ற...

100 விழுக்காடு!

20 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

கல்விக்காக இந்து வேத மதம் தனித்துறை ஒன்றை உருவாக்கி அதன் அதிகாரத்தை சரஸ்வதி என்ற கடவுளுக்கு ஒதுக்கியது, பள்ளிகளில் சரஸ்வதி படமாக தொங்கினார். ஆனால்...

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு மாநில அரசே செலவிடுகிறது

20 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி தர மறுத்து வரும் ஒன்றிய ஆட்சி, மற்றொரு உண்மைக்கு மாறான செய்தியை பரப்புகிறது. ஒன்றிய...

தேசிய கூட்டணியில் முருக பகவான்

20 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையப் போகின்றன என்று எடப்பாடியும் நயினாரும் பேசாத நாள் இல்லை. அது வந்தே விட்டது கூட்டணிக்குள் கட்சிகளை இழுக்க...

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

20 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் கிராமத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் முட்டை பிரியாணி சாப்பிட்டார்கள் என்பதற்காக கோயில் தீட்டாகி விட்டது என்று கூறி, தீட்டு...

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

20 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

எதிர்காலக் கனவுகளையும் மகிழ்ச்சியான உணர்வுகளையும் சுமந்து சென்ற 246 மனித உயிர்கள் பலியாகி விட்டன. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விழுந்து நொறுங்கியது,...

கீற்றில் தேட...

இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.

Tasteஇனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகிறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.

மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.

ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?

நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?

மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.

சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

சுவை மொட்டுகள்

பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.

Taste

ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.

இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?

மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.

நன்றி: சைன்டிஃபிக் அமெரிக்கன்.

முனைவர். க. மணி 
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்