lover leaving

நான்
உனக்கு வரமா?
சாபமா?
எனக் கேட்கிறாய்!

சாபமாகிப் போன
என் வரம் என்கிறேன்!
அணைத்து
விழியில் முத்தமிட்டு
விடை தருகிறாய்....

கரை தொட்டுத்
திரும்பும் அலையென
திரும்பி பார்க்காது
விரைகிறேன்!
உடைவதற்கு முன்
உன்னை விட்டு...

- இசைமலர்

Pin It