*
நீ
சொல்லாத ஒரு வார்த்தையின்
அடர்த்தி
எனது இரவைத் தூங்கவிடாமல்
விடிய வைக்கிறது

நீ
சொல்லத் தயங்கும் ஒரு வார்த்தையின்
வெப்பம்
எனது பகலை என்னோடு
எரிய விடுகிறது

நீ
சொல்ல முயலும் ஏதோவொரு வார்த்தை
எனக்கான
மிஸ்டு காலின் அதிர்வோடு
அடங்கிப் போகிறது

நீண்ட அயற்சிக்குப் பின்
மை தீர்ந்துப் போன
ஒரு பேனாவின் உதறலோடு
நினைவு சிதறும் பிறிதொருநாளில்

பிரிக்கப்படாத ஒரு கடிதமாக
படிக்க விரும்பாத ஒரு துயரமாக
நீ
சொல்லியிருக்கும் வார்த்தைகள்
மொத்தமும்
இன் பாக்ஸில் தேங்குகிறது

****
-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

1 comment

1
சுதா
Nice keep writing:-)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.