கீற்றில் தேட...

*
வெகு நாட்கள் கழித்து
செல்போனில் அழைத்திருந்தாய்
காயும் வெயிலில்
என் மாடிச் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்

உன்
குரலின் நீர்மையில்
நான் ப்ரியமுடன் வளர்க்கும்
கனகாம்பரப் பூக்கள்
முகம் வாடிவிட்டன

வெயிலில் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றக் கூடாதாம்

உனக்கேன் தெரிந்திருக்கவில்லை
குரலின் நீர்மையோடு
வெயில் பொழுதில்
அழைக்கக் கூடாதென்று

****
- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )