மிகச் சாதாரணமாய் நடந்து முடிந்த
அசுரவேட்டையிது
சாதியின் எரிதழல் கொண்டு நீ
எரியூட்டிய‌ நெருப்பில்
உருசிதைந்து போனது நத்தம் சேரிக்குடிசைகள்

நடமாடும் மனிதர்களைத் தவிர
வேறெதுவும் மிஞ்சிடவில்லை
ஜனநாயகத்திற்கெதிராக எழுதப்பட்ட
உன் வாய்ச்சவுடாலில்
எரிந்து சாம்பலாகிப் போனது
சேரி மக்களின் உடைமையும் வாழ்க்கையும்

எதற்கும் பயன்படாத சாதியை
வெஞ்சினம் மூட்டி
தீயிட்டுக் கொளுத்துவதன் மூலம்
நிலைநிறுத்த முயற்சிக்கிறாய்

உடைமையிழந்தவர்களை நிம்மதியிழந்தவர்களை
தேற்றுவதற்கோ, ஆறுதல் சொல்வதற்கோ
நம்மிடையே யாருமில்லை

எங்கோ நடந்து முடிந்ததாய்
பெருமூச்செறியும் தாழ்த்தப்பட்டோர் ஒருபுறமிருக்க
சாதி கடந்து கைகுலுக்கி தலித்அரசியலை
நிலைநிறுத்திய தலித் அரசியல் கட்சிகள் மறுபுறமிருக்க
இரணங்களின் காயம் வடுக்களாய் மாறி
நம்மீது எச்சிலை உமிழ்கிறது.

எரியூட்டப்பட்ட நெருப்புக்குக் காரணம்
சாதி மறுப்புத் திருமணமென்று நியாயம் பேசுகிறது
ஊடகங்களும் உளவாளிகளும்…
சனநாயகத்தை மென்று விழுங்கும்
சாதி வன்மம் மறந்து,
சாதி ஆதிக்கம் மறந்து.

இதுவரை நடந்தேறிய வன்முறைகளுக்கெல்லாம்
சாதி மறுப்புத் திருமணம் தான் காரணமெனில்
சூளுரையேற்போம்…
இனி நடக்கவிருக்கும் திருமணங்கள்
சாதி மறுப்புத் திருமணங்களாய்
விதைத்தெழுவோம்!!

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

1 comment

1
antony
Very nice thozhar. Keep it up

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.