சமதர்மம் ஆளும் கியூபா நாட்டில்
அமெரிக்கச் சதியால் வளங்குறை இருப்பினும்
வேலை யில்லா நிலைமை இல்லை
நோய்குணப் படுத்தக் கட்டணம் இல்லை
சீற்றம் கொண்ட காற்றின் முன்னால்
ஆற்றல் கொண்ட அமெரிக்க அரசு
கோழையாய் மக்களைக் காவு கொடுக்க
ஏழை எனினும் கியூபா அரசு
வளர்ப்புப் பிராணியும் சாகாது காத்தது
தளரா சமதர்ம அறமென அறிவீர்

(சோஷலிசம் ஆளும் கியூபா நாட்டின் மீது (வல்லரசான) அமெரிக்கா (பொருளாதாரத் தடை என்ற பெயரில்) செய்யும் சதிச் செயல்களால், அந்நாடு வளத்தில் குன்றி இருந்தாலும், அங்கு வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லை; (மக்களுக்கு ஏற்படும்) நோய்களைக் குணப்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. சீற்றத்துடன் புயல் காற்று வீசிய பொழுது ஆற்றல் மிக்கதாக நினைக்கப்படும் அமெரிக்க அரசு ஒரு கோழையைப் போல் தன் மக்களில் பலரைக் காவு கொடுத்தது. (இது முதலாளித்துவ அமைப்பின் கையாலாகாத் தனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்) ஏழ்மையில் இருந்தாலும் கியூபா அரசு தன் மக்களை மட்டுமல்லாமல் அவர்களுடைய வளர்ப்பப் பிராணிகளிலும் ஒரு உயிரைக் கூட, காவு கொடுக்காமல் காத்தது, உறுதியான சோஷலிச அமைப்பின்அறத்தினால் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.