புதிதாக வெள்ளையடித்த சுவரில்
நகத்தை வைத்துக் கீறும்போது ஏற்படும்\
மனக்குறுகுறுப்பை உள்ளூர ரசிப்பது,
மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து
அதன் மணத்தை தான் மட்டும் நுகர்வது,
ஆகக்கூடுதல் சிரமத்திற்குப் பின்னர்
கைவிரல்களால் பிடித்த வண்ணத்துப்பூச்சியின்
நிறத்தை உற்றுநோக்குவது.
இப்போது அடிக்கப் போகும் பெரிய அலை
கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும்
என நினைக்கையில்
அது அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது,
தரைமட்டமான கட்டிட இடுபாடுகளிலிருந்து
சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது,
சிறு கண்ணாடிக்குடுவையின்
உள்ளுக்குள் நீந்தும் மீனை வெளியிலிருந்து
ஏதும் செய்ய இயலாது பார்க்கும்
பூனை மனத்துடன் சில சமயங்களில் இருப்பது,
எனக்கென்னவோ
இவையெல்லாவற்றிற்கும்
காதலுக்கும் தொடர்பிருக்கிறது
என்பது போலத்தான் தோணுகிறது.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.