குழந்தை கையில் பிடித்துப் பறக்கவிட்ட
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை

-

நான் கடந்து வந்துவிட்டதால்
எதுவும் இன்னமும் நிகழாமல்
இருக்கப்போவதில்லை

-

உனக்கு என்ன வேண்டும் என
என்னுள்ளிருந்துகொண்டே
கேட்கிறாய்

-

மன்னிக்கவியலாத
தவறுகள் செய்தபோதும்
கவனியாது விட்டுவிடுவது
உன்னிருப்பை என்னுடன்
உறுதி செய்துகொள்ளத்தான்

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
க.உதயகுமார்
//குழந்தை கையில் பிடித்துப் பறக்கவிட்ட
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை//

என் இப்போதைய சூழலுக்கு இவ்வரிகள் அத்தனை வலியோடு பொருந்திப் போகிறது . இழந்த நிறங்களை மீட்கும் வழி தெரியவில்லை பட்டாம்பூச்சிக்கு , ஆனாலும் குழந்தையின் மீது யாதொரு அதிருப்தியும் இன்றி மீண்டும் மீண்டும் பறக்கவே எத்தனிக்கிறது .
chinnappayal
நிறமிழந்தால் சுமை குறைகிறது உதயா..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.