நாங்கள் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை
அதற்கான நேரமும் இருப்பதில்லை
இரை தேட வேண்டியிருக்கிறது
மழைக்காலமானால் கூடுகளை இடம் மாற்ற
வேண்டியிருக்கிறது
நனைந்து போன சிறகுகளை உலரவைக்கவே
வெகுதூரம் பறக்க வேண்டியிருக்கிறது
பெரிய கழுகுகளின் பார்வையிலிருந்து
எங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது
ஆண்டில் பலமுறை புலப்பெயர்வுக்கென
இடம் தேடிப் பறப்பதிலேயே
வாழ்க்கையின் பாதி நாள் வீணாகிறது
இப்படி நாங்கள் வானில் சஞ்சரிக்கும்
சில நேரப்பொழுதுகளை மட்டும்
பார்த்து வைத்துக்கொண்டு
கவி பாடித் திரிவதில் கொஞ்சமும்
அர்த்தமில்லை
மேலும்
நாங்கள் உங்கள் கவிதைகளை
வாசிப்பதில்லை
- சின்னப்பயல் (