1990 ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடுதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் (அப்போது எம்.சி.பி.ஐ.) முன் முயற்சியில் பொதுநிலை மாநாடாக நடத்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைக்க வேண்டும் என்பது அம்மாநாட்டின் முதன்மைத் தீர்மானம். தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியதற்காக த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மீது பிரிவினைத் தடைச் சட்டத்தை ஏவி சென்னை நடுவண் சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் த.தே.பொ.க.பின் வாங்கவில்லை. அன்றிலிருந்து தமிழர்களின் அரசியல், பொருளியல், மொழி உள்ளிட்ட பண்பியல் கூறுகளின் கொள்கலனாக கூர்மைப் படுத்தப்பட்ட இலட்சியமாகத் தமிழ்த் தேசியத்தை வளர்த்து வருகிறது.அவ்வகையில் பிப்ரவரி 25 ஆம் நாளை தமிழ்த் தேசிய நாளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவித்தது.

tanjore-600

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசியநாள் சிறப்புக்கூட்டம்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த தமிழ்த் தேசிய நாள் சிறப்புக் கூட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கப் பொதுசெயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையேற்றார்.

முள்ளிவாய்க்கால் முற்ற இலக்கிய மன்றத்தின் சார்பில் பொறியாளர். ஜோ. கென்னடி வரவேற்புரை நிகழ்த்தினார்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மண்மொழி ஆசிரியர் தோழர் இராசேந்திரசோழன், நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் வழக்குரைஞர் அ. நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் ஐயா நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதா முத்து கிருட்டிணன், தமிழர் தேசிய இயக்கத்தின் தோழர் சாமி கரிகாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியில் தமிழர் தேசிய இயக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பொன் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

சென்னை

சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலையில் காலை 8.45 மணியள வில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலை மையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை வடச் சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன் ஏற்றி வைத்தார். பின்னர் தோழர் உதயன், தமிழ்த் தேசிய நாளை பற்றி விளக்கி பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், ”எமது தேசிய இனம் தமிழர், யாம் இந்தியரும் இல்லை, திராவிடரும் இல்லை! எமது தேசிய மொழி தமிழ், இந்தியோ, ஆங்கிலமோ எமது தேசிய மொழி அல்ல! எமது தேசம் தமிழ்த் தேசம், இந்தியாவோ, திராவிடமோ எமது தேசமன்று!

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு” என்பன உள்ளிட்ட எழுச்சி முழக்கங்களை எழுப்பினார்.

இந்நிகழ்வில், நடுவண் சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் செந்தில், செயலாளர் தோழர் முத்துக்குமார், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் தலைவர் தோழர் அகத்தாய்வன், செயலாளர் தோழர் நல்லன்.கோ உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை:

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளர் தோழர் இராசு. முனியாண்டி தலைமையில் காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 2.30 வரை கோரிக்குளம், பூக்காரலாயம், அண்ணா நகர் முதல் தெரு, அண்ணாநகர் ஏழாம் தெரு, ரெங்கநாதபுரம், கருணாநிதி நகர், வடக்குவாசல் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் சென்று த.தே.பொ.க.கொடி ஏற்றினர் இந்நிகழ்வில் தமிழக உழவர் முன்னணி பொதுச் செய லாளர் தோழர் காசிநாதன், நகரச் செயற்குழு உறுப்பி னர் தோழர் இராமசாமி, தோழர் செயச்சந்திரன், தோழர் பாலகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

பூதலூர் :

த.தே.பொ.க. சார்பில் கொடியேற்றப்பட்டு தமிழ்த் தேசிய நாள் துண்டறிக் கைகள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டன. தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் பூதலூர் ஒன்றியத்திலுள்ள, வன்னியம் பட்டி, ஆச்சாம்பட்டி, பாலையப்பட்டி, நந்தம் பட்டி, காதாட்டிப்பட்டி, வலம்பக்குடி, மனையேறிப்பட்டி, வெண்டையம் பட்டி, திருவிழாப் பட்டி, புதுக்குடி நரிக் குறவர் காலனி, புதுக்குடி முதன்மைச் சாலை, காமாட்சி புரம், சமத்துவபுரம், தக்கனூர், நந்தவனப் பட்டி, ஊ.வி.க. பட்டி, வீரப்புடையான் பட்டி, பூதலூர், புதுப் பட்டி, செங்கிப்பட்டி, சானூரப் பட்டி உள்ளிட்ட ஊர்களில் கொடியேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் தோழர் காமராசு (ஒன்றியச் செயலாளர், த.தே. பொ.க.) தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச் செயற்குழு, த.தே. பொ.க.) தோழர் க.காம ராசு (தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர்) தோழர் ஆ.தேவதாசு (த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர்) தோழர் தெட்சிணாமூர்த்தி (நடுவண் குழு உறுப்பினர், த.இ.மு.) உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், த.இ.மு. தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோதேவராசன் தலைமையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேள் அவர்கள் ஏற்றி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து காசுக்கடைத்தெரு, மேலவீதி, கொத்தவால் தெரு, உள்ளிட்டப் பகுதிகளில் தோழர்கள் பேரணியாக சென்று தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கைகளை பொதுமக்கள், வணிகர்களிடம் வழங்கி தமிழ்த் தேசிய நாளினைக் குறித்து விளக்கி பேசினர்.

இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி துணைப்பொதுச் செய லாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணியசிவா, தோழர்கள் பா.பிரபாகரன், மு.சம்பந்தம், ஆ.யவனராணி, செ.மணிமாறன், பா.கா.கார்த்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 4.30 மணி அளவில் தமிழக மாணவர் முன்னணி சார்பில் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் தோழர் அ.தனராஜ் தலைமையேற்றார். தோழர் வே.சுப்பிர மணிய சிவா தமிழ்த் தேசிய நாள் குறித்தும், தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் புலம், வேளாண் புலம், வணிகவியல், பொருளி யல் மற்றும் தமிழ் உள்ளிட்ட கலைத்துறை மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்த் தேசிய நாளையொட்டி சிதம்பரம் நகரில் ஒட்டப்பட்ட

”எமது தேசிய இனம் தமிழர்!

எமது தேசிய மொழி தமிழ்!

எமது தேசம் தமிழ்த் தேசம்!

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு’’

என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் உணர்வாளர்கள், பொது மக்களி டையே பரவலான வரவேற்பை பெற்றது.

samymalaiசாமிமலை

சாமிமலை கோயில் சன்னதியின் காலை 10:00 மணியளவில் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையில், குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியேற்றி வைத்தார் .

இந்நிகழ்வில் த.தே.பொ.க தோழர்கள் த.சிவகுமார், இர.சிவகுமார், க.தீந்தமிழன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் கு.வெங்கடேசு, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர்கள் இர.அருள், கு.தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தேவராயன் பேட்டை

தேவராயன் பேட்டை கடைவீதியில் காலை 12.00 மணிக்கு தமிழக இளைஞர் முன்னணி கொடியை கிளை தலைவர் தோழர் மனோகர் ஏற்றி வைத்தார், செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் கிளைத் தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

மதுரை:

செல்லூர், மதுரை தாகூர் நகரில் த.தே.பொ.க. சார்பில் கொடியேற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ஆனந்தன் (தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க.) தலைமையில் நடைபெற்றது. தோழர் செரபினா (மகளிர் ஆயம்) கொடியேற்றினார்.

இக்கூட்டத்தில் தோழர் பே.மேரி (மகளி ஆயம்) வழக்கறிஞர் சு. அருணாச் சலம் (மக்கள் உரிமைப் பேரவை) தோழர் இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுநர்கள் சங்கம்) தோழர் ரெ.இராசு (மாநகரச் செயலாளர், த.தே.பொ.க.) உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கின்றனர். தோழர் மு. அழகர் சாமி (த.தே.பொ.க.) வரவேற்புரையாற்றினார். தோழர் ப. தியாகலிங்கம் (த.தே.பொ.க.) நன்றி கூறினார்.

எழுச்சி முழக்கம் எழுப்பி நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்ட னர்.

திருச்சி :

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இராமச்சந்திரா நகர் சாலை அருகில் தமிழ்த் தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தோழர் வே.பூ. இராமராஜ் தலைமையேற்றார். தோழர் மனுவேல் (த.தே.பொ.க.) கொடியேற்றினார். திரு கதிரவன்( ம.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்) திரு பாஸ்கர் (ஈசுவரி டிடேரஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் இராசாரகுநாதன் (த.க.இபே.) தோழர் கவித்துவன் (மாநகரச் செயலாளர், த.தே.பொ.க.) உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

தோழர்கள் கருப்புசாமி, முருகேசன், சத்யராக், வெங்கடாசலபதி, பட்டுராஜா, குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முருகன் குடி:

முருகன் குடி பேருந்து நிலையம் அருகில் கொடி யேற்ற நிகழ்வு நடைபெற்றது. தோழர் முருகன் (தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க.) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியர் பழனிவேல் கொடியேற்றி உரை நிகழ்த்தினார். தோழர் சி.பிரகாசு (நடுவண் குழு உறுப்பினர், த.இ.மு.) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சாத்துக்கூடலில் த.இ.மு. சார்பில் தோழர்இளைய நிலா தலைமையில் கொடி யேற்ற நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

ஓசூர்:

தமிழ்த்தேசியநாள் பரப்புரை துண்டறிக்கை இயக்கம் ஓசூரில் தொடர்வண்டி நிலையம் தொடங்கி பேருந்து நிலையம். கடைவீதியில் என பல பகுதிகளில் வீச்சுடன் நடந்தது.

தோழர்கள் செம்பரிதி முருகபெருமாள், சுப்பிர மணியன், முருகானந்தம், செந்தில் மாறன்., துரைராசு, தமிழ் மாறன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

pulikudiபுளியங்குடி

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்வழிக் கூட்டியக்கம் சார்பில் புளியங்குடி காமராசர் சிலையிலிருந்து வாகனப் பரப்புரை பயணம் தொடங் கியது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் க.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரையை தோழர் நெடுஞ்சேரலாதன் (உலகத் தமிழர் பேரமைப்பின் மாநில பொருளாளர்) தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலை, காந்தி பசார், மேலத்தைக்கா பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடை பெற்றது.

இந்நிகழ்வில் தோழர் இசக்கி ஆடுபெருமாள் (புளியங்குடி நகரச் செயலாளர்), திரு இளங்கண்ணன் (முறம்பு பாவாணர் கோட்ட தலைவர்) தோழர் கடையநல்லூ பசும்பொன் ( நாம் தமிழர் கட்சி கலை இலக்கிய பேரவை, மாவட்டத்தலைவர்) உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

அன்று இரவு புளியங்குடி பேருந்து நிலையத்தில் பரப்புரைக் கூட்டம் முடிவடைந்து. ஈரோடு சமர்ப்பா குமரன் கலைக் குழுவினரின் இசை நிகழ்வு நடந்தேறியது.

இப்பரப்புரைக் கூட்டங்களில் இராசபட்சே குமபலை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத் திடவும், ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும்,

இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே நிறுவிடக் கோரியும், காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் எரிவாயும் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிடக் கோரியும், கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்தும் இப்பரப்புரை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 26.2.2014 அன்று வாசுதே நல்லூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி சிவகிரியில் இப்பரப்புரை பயணம் நிறைவுற்றது. தோழர் வாசு தேவநல்லூர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

குரும்பூர்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் கடைத்தெருவில் தமிழ்த் தேசிய நாள் விழாவையொட்டி கட்சியின் கொடியை த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி ஏற்றிவைத்தார்.

அவரது தலைமையில் தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் கார்த்தி உள்ளிட்ட தோழர்கள் பரப்புரை செய்தனர்.

Pin It