மாலதியின் அப்பா
கைகுலுக்கவே தயங்கினார்.
அச்சத்தோடு பார்த்தார்
அவளது அம்மா,
கண்டு கொள்ளாமல்
சென்றான் அவள் அண்ணன்.
வேட்டியை மடித்துக் கட்டியபடி
வெளியேறினார்
அரசியல்வாதிபோலிருந்த
அவள் சித்தப்பா.
தேசமிழந்த அகதியைப் போல்
கேட்பாரற்று கிடந்தேன்
நாற்காலி ஒன்றில் நான்.
ஊழல் நாயகனாகவோ...
கூலிப்படை கொலையாளியாகவோ...
எப்படித் தெரிந்தேனோ........
அவரவர் பார்வைக்கு.....
என்னதான் சொல்லித் தொலைத்திருப்பாள்
இந்த மாலதி..........?
என் நண்பன்...... என்பதைத் தவிர !

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.