அப்போதெல்லாம்
அதிகபட்ச வசதியாயிருந்தது.
நடுத்தர வர்க்கத்தின்
நாகரிக சின்னமென்றும் சொல்லலாம்.
அதிலேயே தொடங்கியது
அப்பாவின் வாழ்க்கை.
ஆயாவை அடிக்கடி மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றதும்
பள்ளியில் சேர்க்கும் போதும்
பயன்பட்டது.
வாழ்வின் எல்லாவற்றிலும்
பங்கேற்றிருந்தது.
தம்பியும் நானும் பழகிக் கொள்ள
வாய்ப்பாயிருந்தது.
ஏறக்குறைய
என் வயதேயிருக்கும்.
அதன்பின் வாங்கியவை
திருட்டுப் போய் விட்டன.
வாகனங்கள் வந்து விட்ட நிலையில்
பயன்படுத்தப் படாமலிருந்தது பத்திரமாக.
ஓடுவதே சைக்கிளுக்கு
அழகு.
நிற்பதைப் பார்த்தால்
நெஞ்சு துடிக்கும்.
விற்க முடிவெடுக்கப்பட்டதன்
விளைவு விலை பேசப்பட்டது.
வாங்கியவன் ஓட்டிப் போக
விடாமல் பார்த்துக்கொண்டிருந்தன விழிகள்
தூரம் சென்றும்
மறையவில்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
- விவரங்கள்
- பொன்.குமார்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013