உறவு முறைச் சொல்லி
உரிமையுடன் பேசுவது
ஒரு சிலர் பழக்கம்.
அவர்கள் பேசுவது கேட்கவே
ஆசையாக இருக்கும்
அப்படியே பேசுவாள்
எங்கள் தெரு பாட்டி.
அவள் வயதொத்தவளைக் கண்டால்
“அண்ணி கண்டுக்கவே மாட்டிங்கறியே”
என்பாள்.
இளையவர்களிடம் பேசும் போது
“என்னடி மவளே
மருமவன் நல்லா வைச்சிருக்கானா”
அக்கறையுடன் விசாரிப்பாள்.
விளையாடும் பையன்களிடம்
"பாட்டிகிட்ட
பேசமாட்டியா பேரான்டி'
என்பாள்.
தெருவில் இருப்போர், கடப்போர் என
எல்லோரையும் உறவாகவே
உரிமையுடன் பேசும் பாட்டி
பிள்ளைகளிடமிருந்து
கைவிடப்பட்டு தனித்தே
வாழ்கிறாள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
கருக்கல் விடியும் - ஜூன் 2013
- விவரங்கள்
- பொன்.குமார்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஜூன் 2013