வயலோர நீர்த்தொட்டியின்
நிழலும்
கலங்கிய குளத்து நீரின்
சுவையும்
பாதங்களை கறையாக்கும்
செம்மண் பாதைகளும்
தின்னத் தின்னத் திகட்டாத
பனங்கிழங்கும், பனஞ்சுளையும்
பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன
கோடை விடுமுறையின்
வெக்கையான பொழுதுகளும்
நட்சத்திரங்கள் வந்து குதித்து
விளையாட ஆசைப்படும்
கண்ணாமூச்சி ஆட்டங்களும்
பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில்
பேரின்ப பேரானந்தத்தை
அடைந்துவிடும் ஐம்பொறிகளும்
பணத்தை வைத்து
எவரையும் எடைபோடத் தெரியாத
பளிங்குகளாய் உருளும்
பால்யவெளிப் பயணங்களும்
அனைவரையும் பிள்ளையாராய்
பிடிக்க நினைத்து
குரங்காக்கிய
பள்ளியும், சமூகமும், ஊரும், நாடும்
ஒரு சில பிள்ளையாருக்காக
குரங்கான நாங்களும்....
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
அடவி - அக்டோபர் 2009
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கருக்கல் விடியும் - மே 2012