Women
காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்


வெறிச்சோடிய தெருக்களின்
மருங்குகளெங்கும்
வெறியுடன் அலைகிறது வன்முறை
உக்கிரமான வெயிலென

காஷ்மீர் பூக்களைப்
பறித்து நுணுக்கி
துப்பாக்கி குழல்களின் வெற்றிடத்தை
நிரப்புகின்றன அதிகார முனைகள்

பயந்த மக்களின் விழிகளை
குண்டுகளாக்கும் தந்திரம்
வாய்க்கவில்லை இன்னும் எவருக்கும்

ரொட்டித் துண்டுகளின் மீது உயிர்களைத் தடவி
சாப்பிடும் யாருக்கும் தெரிவதில்லை
பசியின் கைகள்
ஏங்கித் தவிப்பது

மிரட்சியின் குடியிருப்பில்
மலிந்து கிடக்கின்றன
பேசுவதற்கான ஒரு மேசையும்
வாழ்வதற்கான மிச்ச காலமும்
Pin It