தோழர் பெரியார்தாசன் இவ்வாரம் வெளிவந்த இசுலாமிய இதழ்கள் அனைத்திலும் கதாநாயகனாகிவிட்டார். கடந்த மார்ச் 12 ஆம் தேதி அரபு நாடுகளில் ஒன்றான ரியாத்தில், அவர் இசுலாத்தைத் தழுவியதாக அறிவித்ததே இதற்குக் காரணம். பெரியார்தாசனின் இந்த முடிவுகள் எல்லாம், நமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. பெரியார் இயக்கத்தினர், தோழர் பெரியார்தாசனை நன்றாகவே புரிந்தவர்கள் தான். பெரியார் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த அவருக்கு, தமிழகம் முழுதும் பெரியார் இயக்கத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு என்பதும், எல்லோரிடமும் இனிமையாகவும், தோழமையாகவும் பழகக் கூடியவர் என்பதும் எல்லோருக்குமே தெரியும். பகைமை பாராட்டாத நண்பர். மக்களிடம் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் தன்னுடைய பேச்சுத் திறமையை வலிமையாகப் பயன்படுத்தியதால், பெரியார் இயக்கத் தோழர்கள் அவரை விரும்பி கூட்டங்களுக்கு அழைத்தார்கள். இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய்விட்டாரே என்று ஆதங்கப்பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது என்பது தான் நமது கருத்து.
அவர் எப்போது பெரியார்தாசன் ஆனார் என்ற கேள்விக்கு அவரே இப்போது ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலத்தில், பெரியார் பேச வந்தபோது, ஒரு கவிதையை எழுதிப் படிக்க விரும்பியிருக்கிறார். அப்போது அவரது உண்மைப் பெயர் சேஷாசலம். பட்டை சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்தி பழமாகக் காட்சியளித்தவர். அந்தக் கவிதையை தனது பேராசிரியர் ஒருவரிடம் அவர் படித்துக் காட்டியபோது, பேராசிரியரோ மாணவர் பெயர் ‘சேஷாசலம்’ என்று இருக்கிறதே என்று தயங்கியிருக்கிறார். உடனே, அடுத்த விநாடியே, தன்னுடைய கவிதையை பெரியாருக்கு முன் படிக்க வேண்டும் என்ற துடிப்பில், பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
“அன்று பெரியார்தாசன் என்று பெயரிட்டபோது, என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்திப்பழம் போன்று காட்சி தந்தேன்” என்று அந்தப் பேட்டியில் (மக்கள் உரிமை, இதழ்,மார்ச். 19) அவர் கூறுகிறார். ஆக, பெரியார் கொள்கையை ஏற்காத காலத்திலே, தனது கவிதையை பெரியார் முன் படிக்கும் ஆர்வத்துக்காக ‘பெரியார்தாசனாக’ பெயர் மாற்றிக் கொண்டவர் தான் பெரியார்தாசன்.
சென்னை பெரியார் திடலில் 1980-களில் நடந்த பயிற்சி முகாமில் மாணவராக பங்கேற்று, திராவிடர் கழகத்தின் பிரச்சாரகராக மேடை ஏறிய பெரியார்தாசன், படிப்படியாக தனது பேச்சாற்றலை வளர்த்து, மக்கள் செல்வாக்கைப் பெற்ற நிலையில், திராவிடர் கழகத்துடன் கருத்து வேறுபாடு எழுந்தது. செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த பெரியார் சமதர்மம் இயக்கத்தில் இணைந்து செஞ்சட்டைப் போட்டு, ‘சமதர்மம்’ பேசலானார்.
அதன் பிறகு, தலித் இயக்கங்களோடு நெருங்கி, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்புவதில் தீவிரம் காட்டினார். அதே காலகட்டத்தில் தன்னை புத்த மார்க்கத்தில் இணைத்துக் கொண்டு தனது பெயரை சித்தார்த்தன் என்று மாற்றிக் கொண்டார். சில காலம் சித்தார்த்தன் என்ற பெயரோடு கூட்டங்களில் பேசிய அவர், மீண்டும், தனது பெயரை பெரியார்தாசன் என்றே போடுமாறும், சித்தார்த்தனை தவிர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து, பெரியார்தாசன் ஆனார்.
பெரியார்தாசனை அழைத்துக் கூட்டங்களை நடத்துவதற்கு பெரியார் இயக்கத் தோழர்கள் மிகவும் விருப்பமாகவே இருந்தாலும், குறைந்த செலவில் பரப்புரை நடத்தும் தோழர்களின் பொதுக் கூட்ட வரவு செலவுகளுக்குள் பெரியார்தாசனை அடக்க முடியாத நிலை வந்ததால், அவரை வைத்து கூட்டங்கள் நடத்துவது குறைந்தது.
அது மட்டுமல்ல, அனைவரிடமும் அன்பு பாராட்டும் அவர், மறுக்காமல் ஒரே தேதியை ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு தந்துவிடும் போது, எந்த ஊருக்கு அவர் வரப்போகிறார் என்ற குழப்பத்திலும் தோழர்கள் தடுமாறும் நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்ச் சான்றோர் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழகம் முழுதும் ஒரு சுற்று வந்தார். அப்போது ஆதி சங்கரர் தத்துவம், மிகவும் முற்போக்கானது; புரட்சிகரமானது என்று ‘நந்தன்’ பத்திரிகையில் எழுதினார்.
ஒரு கட்டத்தில் பேரவைக் கூட்டங்களும் மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தன்னம்பிக்கைக்கான கருத்தரங்குகளை ஒரு வர்த்தக நிறுவனத்துக்காக பேசக் கிளம்பினார். தன்னம்பிக்கைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினார். அப்படித் தன்னம்பிக்கையை விதைத்து வரும்போது, எந்த நிறம் கொண்ட ‘கல்லை’ நகைகள் வழியாக அணிந்தால், ‘ராசி’ கிடைக்கும் என்று தொலைக்காட்சியில் ‘ராசிக் கல்’ பரப்புரையில் இறங்கினார். பெரியார் தொண்டர்கள், “என்ன, இப்படி, நமது பெரியார் தாசனா?” என்று கேட்டார்கள். ராஜராஜன் என்ற தன்னுடைய நண்பர் ஒருவருக்காக, அப்படி தொலைக்காட்சியில் பேச நேரிட்டது என்றும், அதற்காக என்னை பெரியார் இயக்கம் புறக்கணிக்க வேண்டுமா? என்று வேதனைப்பட்டதோடு, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்திலும் இதை வெளிப்படையாகவே பேசினார்.
அதன் பிறகு, பெரியாரும், சிங்காரவேலரும் சேர்ந்து தொடங்கிய சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், தான் அதன் பொது செயலாளர் என்றும் கூறி வந்தார். பதவி ஓய்வுக்குப் பிறகு மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை மய்யங்களைத் தொடங்கி நடத்தி வந்தவர், இப்போது இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்திருக்கிறார். ஆக, சேஷாச்சலம் - பெரியார் தாசன் - கவுதமன் - மீண்டும் பெரியார் தாசன் - என்ற அவரது பரிணாம "வளர்ச்சி”, ‘அப்துல்லாஹ்’ என்ற கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போது இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.
அவரோடு 11வது வகுப்பு வரை படித்த பள்ளித் தோழர் சிராஜ்தீன் என்பவரை, 2000 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் சந்தித்துப் பேசினாராம். சிராஜ்தீன் எழுப்பிய கேள்விகள் அவரை அன்று இரவு முழுதும் தூக்கம் வராமல் செய்து விட்டது என்கிறார். அப்படி,பெரியார்தாசனை தூக்கம் வராமல் செய்துவிட்ட ‘பொருள் பொதிந்த’ கேள்வியையும் பெரியார் தாசன் கூறியிருக்கிறார். “நீ இறை மறுப்பாளனாக பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது” என்ற சிராஜ்தீன் சிந்தனைதான், பெரியார்தாசனின் தூக்கத்தைக் கலைத்து விட்டதாம். அந்த இரவு - அந்த கேள்விதான் அவரை இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்குக் கொண்டு வந்த மகத்தான இரவு ஆகும். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முற்றாகத் தாம் நிறுத்திக் கொண்டுவிட்டதாக பெரியார் தாசன் கூறுகிறார். ஆனாலும் ஆறு ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தான், அந்த ‘ரகசியத்தை’ நாட்டுக்கு வெளியிட்டிருக்கிறார். ஆக, பெரியாரிஸ்டாக இருந்து அவர் இசுலாமைத் தழுவவில்லை. அவர் கடவுள் மறுப்பை விட்டு 6 ஆண்டுகளாகிவிட்டது. கடவுள் நம்பிக்கையாளராக மாறிய பிறகே இசுலாத்தை தழுவியிருக்கிறார்.
“இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து” என்று பெரியாரே கூறியிருப்பதாக ஒரு பேட்டியில் பெரியார் தாசன் கூறியிருப்பதால்,நாம், சில விளக்கங்களைக் கூற வேண்டியிருக்கிறது. இந்த விளக்கங்கள்கூட, பெரியார்தாசனுக்கு அல்ல. காரணம்,தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே இசுலாத்திற்கு மாறலாம் என்று பெரியார் கூறியதும், அதுவும், அந்த ஆலோசனை சுயமரியாதை இயக்கத்தினருக்கு அல்ல. தீண்டாமையால் பாதிக்கப்படும் வெகுமக்களுக்குத் தான் என்பதும், பெரியார் தாசன் அறிந்தவர் தான்! (பெரியாரின் அந்தக் கட்டுரை, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது) இறைவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட முன்னாள் பெரியார் தாசன், இனி டார்வின் பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் கொள்கையை மறுக்க வேண்டும். மார்க்சின் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைப் பொய் என்று கூற வேண்டும். பெரியாரின் கடவுள் மறுப்பு அர்த்தமற்றது என்றெல்லாம் பேச வேண்டும்.
“1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம், திருக்குர்ரான் தான்” என்று அவர் பேட்டியில் கூறியுள்ளதை நியாயப்படுத்தி விளக்க வேண்டும்.
இப்படி எல்லாம் பேச வேண்டிய சுமையை நமது முன்னாள் தோழர் தமது தோள் மீது சுமக்க வந்திருக்கிறாரே என்ற கவலைதான், நமக்கு! 1400 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு கருத்தை, அதை இறைவன், நேரடியாக சொல்லிய ஒரே காரணத்துக்காக 1400ஆண்டுகால இடைவெளியில் சமூகத்தில் நடந்த மாற்றங்கள், உலகில் நடந்த திருப்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி, அத்தனைகளையும் ஓரமாக தூக்கிக் கடாசி எறிந்து விட்டு, பெரியார் தாசன் எப்படித்தான், நியாயப்படுத்தப் போகிறாரோ தெரியவில்லை. ஆனாலும் அவர் சமாளிப்பார். இனி மேல் அவர் மதக் கூட்டங்களிலே மட்டும் தானே பேச வேண்டியிருக்கும்? அதனால் பிரச்சினையில்லை. அவர்களிடம் கைதட்டல் வாங்கும் திறமை அவருக்குத்தான் நன்றாக உண்டே! என்ன இருந்தாலும் நல்ல பேச்சாளர் அல்லவா? ஆனாலும், நமக்கு ஒரு வருத்தம் உண்டு. தனது பிரச்சாரத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை பெரியார் கொள்கைக்குத் திருப்பியதாக கூறும் பெரியார் தாசன், இப்போது பெரியார் கொள்கைக்கு விடைக் கொடுத்துத் திரும்பும்போது ‘ஒற்றை’ தனி மனிதராகத் தானே போக வேண்டியிருக்கிறது என்ற அந்த ஒரு வருத்தம் தான்! வேறு ஒன்றுமில்லை!
- பெரியாரிஸ்ட்
இத்தனை நாள் தொியாத உண்மை தங்களால் தொிய வந்தது பொியாா் தாசனை வைத்து கூட்டம் நடத்திய முட்டாள்களில் நானும் ஒருவன் பொியாா் தாசனை வைத்து கூட்டம் போடக்கூடாது என்று என்னுடன் சண்டையிட்ட என்நன்பா்களின் எதிா்ப்பையும் மீறி கூட்டம் நடத்தி என் நன்பா்களின் நட்பை இழந்தேன் பரவாயில்லை தன் கொள்கையில் பிடிப்பில்லாமல் இருந்த ஒருவரை இத்தனை நாட்களாக நம்பி இருக்கிறேன் அவரது கேசட்டுகளை தொடா்ந்து கேட்டும் வருகிறேன் தங்கள் கட்டுரையை படித்த பின்புதான் உண்மை புாிந்தது வாழ்க பொியாா் தாசன் வாழ்க அவா்தம் வருமான தொண்டு
உங்களிடமிருந்து போன சகோதரருக்காக வருத்தம் தெரிவித்து கட்டுரை எழுதியுள்ளீர்கள ். இறைக்கொள்கையின் ஒரு பகுதியை ஏற்று மற்றொரு பகுதியையும் ஏற்ற எங்கள் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களை நாங்கள் மனமாற வரவேற்கிறோம். மனித உள்ளங்கள் நிலைதடுமாற்றத்த ிற்கு உட்பட்டவை என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு. அந்த உள்ளத்தை இறையிடமும் இறைக்கொள்கையிலு ம் நிலைத்திருக்கப் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் பெரியார்தாசன் இன்று எங்கள் அப்துல்லாஹ்வாக மாறியதால் எவ்விதத்திலும் அவர் தாழ்ந்துபோகவில் லை. ஒரு சிறந்த கொள்கையை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள் ளார். நீங்கள் குறிப்பிட்டிருப ்பது போல அவர் ஒன்றும் வருமானத்திற்காக வோ பலன்களை அனுபவிப்பதற்காக வே இஸ்லாத்தை ஏற்கவில்லை. மனிதனின் இயற்கை குணம் உடனிருக்கும்போத ு அவனைப் பற்றிய குறைகளைப் பேசுவதில்லை. புறமிருக்கும்போ துதான் பேசுகிறான். அதுதான் புறம் பேசல். ஒரு மனிதனிடம் இல்லாதவற்றைப் பேசுவது அவதூறு. அவனிடம் இருப்பவற்றை அவனல்லாத வேறொருவரிடம் பேசுவதே புறம். எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகள ை அவர் முன்பே எடுத்துவையுங்கள ். அவர் அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்போம். நாளை நாமெல்லாம் ஒன்றிணைவோம். பெரியாரின் கருத்துகள் மதத்தை வெட்டி சாய்ப்பதாக இருந்தாலும், அவருக்குள் இஸ்லாத்தை நேசிக்கும் பண்பு இருந்தது. அது இன்று திராவிடத் தலைவர்களிடம் காணப்படுகிறது. உங்கள் பெரியார்தாசன் எங்களிடம் வந்துவிட்டதால், பெரியார் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டா ர் என்பது பொருளன்று. அவர் மதவாதியாக மாறவில்லை. ஒரு தெளிவான மார்க்கத்தையே ஏற்றுக்கொண்டுள் ளார். நீங்கள் பகுத்தறிவு வாதியாகவே இருந்துகொண்டு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை ஆய்வு செய்து பாருங்கள். ஆம்.. கடவுளே இல்லை என்று முழங்குகின்ற நீங்கள் அந்த ஓர் இறைவனைத் தவிர என்ற முடிவுக்கு வருவீர்கள்.
நீங்கள் பகுத்தறிவு வாதியாகவே இருந்துகொண்டு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை ஆய்வு செய்து பாருங்கள். ஆம்.. கடவுளே இல்லை என்று முழங்குகின்ற நீங்கள் அந்த ஓர் இறைவனைத் தவிர என்ற முடிவுக்கு வருவீர்கள்.
thank muhammad
Vanga paesalam Vanga ....
What about the caste system followed by his society having the aristrocracy at the top, followed by Arabs, Arab orgin locals, Nomadic Bedouin etc in that order.
"குருதி கொதிக்கும் இளமையில் நாத்திகம் பேசுவதும் கொதிப்படங்கிப் போன முதுமையில் இறை நம்பிக்கைக்கு ஆட்படுவதும் உலக இயல்பு" என்று கூறும் உலக மொழியை உண்மையாக்குவதாய ்த் தான் இவர்களின் நடவடிக்கையை நான் பார்க்கிறேன்.
for whose sake you are shedding crocodile tears is very evident. You are concerned that the Periyarites are now commenting on Periyardasan a.ka. Abdullah...you say this is their hypocrisy...
I hope you know what provisions, Koran & Sharia have for someone leaving Islam..!! They can be punished with death..! The day he changes his views on Islam...and tries to leave islam he will die..! Apostate in islam is a "haram" of the highest order..and punishable by death. NO other Religious text or rule is so INTOLERANT like this one..! so you have to do some introspection before commenting on periyarists.. No periyarist is going to kill periyardasan for NOT following Periyar's teachings...can you say the same IF he leaves ISLAM...
IF Islam is such a great Religion why should it prevent ppl from leaving..??
@முஹம்மத்
//இறைக்கொள்கையின் ஒரு பகுதியை ஏற்று மற்றொரு பகுதியையும் ஏற்ற எங்கள் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களை நாங்கள் மனமாற வரவேற்கிறோம்//
Adhu seri...
What will you do if tomorrow he changes and goes to Chrisitianity?? do you have the maturity to accept it as his personal choice or as per Sharia you will hunt for his blood? repeating a lie 100 times will not make it Truth...IF Islam is such a great Religion...then why are ppl leaving and why islam punishes the leavers with death pls explain..??
பெரியார் தாசன், மணிவண்ணன் போன்றோரின் மனமாற்றங்கள் சிந்தனைக்குரியன.
"குருதி கொதிக்கும் இளமையில் நாத்திகம் பேசுவதும் கொதிப்படங்கிப் போன முதுமையில் இறை நம்பிக்கைக்கு ஆட்படுவதும் உலக இயல்பு" என்று கூறும் உலக மொழியை உண்மையாக்குவதாய ்த் தான் இவர்களின் நடவடிக்கையை நான் பார்க்கிறேன்.
இல்லையென்றால், அவரிடம் அதே கேள்விகள் பகிரங்கமாக எழுப்பப்படும்.
முஸ்லீம்கள் திராவிட இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். அது திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு அல்ல. இந்துக்களில் ஒரு சாரார் இந்து மதத்தை திட்டுகிறார்களே என்றுதான்.
இந்து மதத்தை விட கேவலமான ஜாதி பிரச்னைகளும் இனவெறியும் கொண்டது இஸ்லாம். பெண்ணுரிமையை இன்றும் பகிரங்கமாக மறுக்கும் மதம் அதுதான். குழந்தை திருமணத்தை பகிரங்கமாக ஆதரிக்கும் மதமும் அதுதான். மதத்தை பரப்ப வன்முறையை கையிலெடுக்கும் மதமும் அதுதான். முஸ்லீம் நாடுகளில் பகிரங்கமாக இந்து, கிறிஸ்துவர்களுக ்கு மத உரிமையை மறுக்கும் மதமும் அதுதான். நாஸ்திகர்களை பகிரங்கமாக அரசாங்கமே கொலை செய்யும் மதமும் அதுதான். இந்தியாவில் இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தினரும் இவர்களது உண்மை சொரூபம் தெரியாமல், இந்துமதத்துக்கு மாற்று என்று ஏமாந்தார்கள். இன்றும் ஏமாறிக்கொண்டிரு க்கிறார்கள்.
If ex-periyaardhas an , or even karunaanidhi comes to Islam, Islam is not going to get anything or lose anything. Its by its nature always pure. It does not depend on pupil coming and going.
Men's mind is like a monkey,it jumps at times. Sometimes it jumps to the right path and sometimes it does not. But the only difference between monkey and man is to recoqnize the right path and so we are give the 6th scence.
And as we have "right to speech" rule everyone has the right to speak almost anything and can justify it. But the matter is no one really gets into the thought to find the concequences and the outcome of it.
What actually we are looking in this article.? Is that Fear..!!! that people will go behind him??
Being a muslim is not going to change the tolerence or inner thought of any person. And moreover Islam does not deal with changing names and living in muslim society. Its completly depends on one mind, which God only knows. U and i cannot complety prove that one is a muslim.
As a periyaarist what u are expecting?
Stand against Caste system - If so we as a educated muslims are always against caste.
Stand against blind beliefs - If so we as a muslim are always againts blind beliefs.
Stand against the injustice in the society - If so we as a muslim always to it.
What else are u expecting?
The ultimate goal to serve the society. If a person, when he changes belief, is going to destroy the society then this article is very much necessary.But its not so....
Beliving in God or not is not going to change a mans mind if really he is having the mentality to serve this society.
Whatever belief one may be, but if he is giving trouble to the society then its a problem.But when he serves the society then whats the problem.....? When people gets benifitted from him then what is the problem...? Think for a moment.
//If ex-periyaardhas an , or even karunaanidhi comes to Islam, Islam is not going to get anything or lose anything. Its by its nature always pure. It does not depend on pupil coming and going. //
IF this is true then why are Ex-Muslims hunted and killed in Arab countires esp. Iran. As per the Sharia, apostasy is punishable by death. No other Religion sanctions such draconian provisions simply because a human being used their own judegement and refused to believe any religion. So what makes Islam pure? Pls explain so that we can also understand.
We periyarites don't go and kill anyone for not believing in what we believe. However we definitely have a right to analyse and critic anyones action as any rationale human being would do. Why does this bother you when you are fine with the Sharia which allows killing for someone who changed his believes??
//And as we have "right to speech" rule everyone has the right to speak almost anything and can justify it. But the matter is no one really gets into the thought to find the concequences and the outcome of it.What actually we are looking in this article.? Is that Fear..!!! that people will go behind him?? //
You have used words like "Right to speech", consequences of speech, etc..let me ask you this. When Periyardasan explained his stand on becoming Abdullah to a Muslim gathering, the first thing he did was to attack the Hindu beliefs. Then he attacked the Bible and Christians and then he goes on to prove that Islam is the greatest of all. IF he was honest he should have studied every other Religon of the world and then come to that conclusion. But clearly he hasn't. what about Judaism, Bahaism and several thousand other Religious thoughts. Without analyzing all those relgious texts how can he or anyone say Islam is the greatest? The reason is quite simple. This talk is funded by wahabists in Arabia and meant to appease the Muslims in TN. Nobody else believes this gibberish he talked.
Think about this…you are a Muslim because your Parents are Muslims. Did you analyze and accept this Religion? You grew up with this Religion and all preaching you heard since childhood says this Religion is great. So you believed in it. This is true for every Religious person. Ofcourse fanatics will take a hard-line position to serve their financial goals. Periyardasan is one such person. He has taken Islam so that he can earn talking about it. If they give money he will also go to Shankara mutt or Catholic church. So we have to expose that..! What's wrong in it? Except that because he is now a Muslim it hurts you. When he claimed to be a follower of Periyar did you come and support him. No!
Nobody, most certainly the Followers of periyar are definitely NOT fearing anything. But it is our responsibility to expose the logical contradictions and real intent behind this sudden realisation of our friend Periyardasan. That is the only way we can abolish the filth called Religious, caste and sectoral differences in this society.
//Being a muslim is not going to change the tolerence or inner thought of any person. And moreover Islam does not deal with changing names and living in muslim society. Its completly depends on one mind, which God only knows. U and i cannot complety prove that one is a muslim.//
Exactly.!! No Religion makes any man great or better human being. So why bother with it or try to defend it. Infact conceivably it makes one worse with fanatical ideas and hate to fellow human beings. Tell me why does a Shia want to kill a Sunni? Why do you hate jews? Why are the innocent blacks killed in Darfur sudan? Why were the kurds massacared by Shias?You are doing all this to defend imaginary glories of Islam. All because you were born to Muslim parents. In a different place and different parents you are going to be arguing exactly the opposite…rememb er you were given Religion as a kid when you were least prepared to think and analyse. All we are saying is, think now atleast..!!
//As a periyaarist what u are expecting?
Stand against Caste system - If so we as a educated muslims are always against caste.//
I don't know which Planet you live in: but tell me about Afzals, Ashrafs, Sheiks, Nayaks, Khans, Labbays, Ravthars, Marakkayra, Sunnis, Shias…why does a Ashraf NOT marry a Afzal if all of you are muslims? Is it not enough that the other person is a human being to be considered for marriage? Why don't we look for the good qualities in the person? How will birth determine quality?
//Stand against blind beliefs - If so we as a muslim are always againts blind beliefs.//
Really? Why do Muslims hate Pigs? Definietly it is not more unholy than human bombs killing innocents in the name of Religion!!
Why do you get circumscision done and do it to young kids who cannot express whether they want to go through the procedure or not?
Why do you force women into parda? Why not send men also inside Parda? For sure chastity is a virtue needed in both men and women..!
How will killing a Goat on Bakrid equate to willingness to sacrifice the son as Abraham did? Isn't this a blind belief??
//Stand against the injustice in the society - If so we as a muslim always to it.//
Really? Has the sunni HQ or shia HQ called Jihad and killing of innocents in the name of Jihad a Haram? No. All have tried to justify the gory acts of violence & bomb blasts. What kind of justice is being given to the Black community in Darfur, Sudan? By repeating lies you can't make them a truth.
//What else are u expecting?//
- We want ALL religions including Islam to stop bossing around its innocent followers.
- We want Islam specifically to speak against this mindless violence in the name of Jihad.
- We want muslim women to be progressive and participate in the development of the world.
- We want the Muslim community to fight against its casteist divisions and treat all men as the same.
மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கா ன இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூ ட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.
நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.
பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ந்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது . அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.
நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.
இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது , நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.
தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.
இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவன ாகவோ, தீண்டத்தகாதவனாக வோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலு மே சமத்துவத்தை அடைய முடியும்.
இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.
மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், öவஸ்லிம்களையும் கிறித்துவர்களைய ும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?
1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை
RSS feed for comments to this post